Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 Karte Vaa Book Back Solution

இயல் 2.2 – காற்றே வா!

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 2.2 ‘Karte Vaa’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 2.2 காற்றே வா!

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 2.2 Karte Vaa Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

காற்றே வா பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Karte Vaa’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Karte Vaa Subject.

Previous Lesson: கேட்கிறதா என் குரல்

காற்றே வா பாடல்

காற்றே, வா.
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா;
இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த
ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.காற்றே, வா.
எமது உயிர் – நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு
நன்றாக வீசு.சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.
பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.
மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்
நின்று வீசிக் கொண்டிரு.
உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழிபடுகின்றோம்.

– பாரதியார் கவிதைகள்

சொல்லும் பொருளும்

  • மயலுறுத்து – மயங்கச்செய்
  • ப்ராண – ரஸம் – உயிர்வளி
  • லயத்துடன் – சீராக

நூல் வெளி

  • மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்காெரு புலவன் என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்.
  • எட்டையபுர ஏந்தலாக அறியப்பட்டவர்.
  • கவிஞர், கட்டுரையாளர், சிறுகதையாளர், ஆசிரியர், இதழாசிரியர் கேலிச்சித்திரம் – கருத்துப்படங்களை உருவாக்கியவர்
  • சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தம் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்.
  • கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி என குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்.
  • இந்தியா, சுதேசிமித்திரன் ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
  • பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்;
  • இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம் பெற்றுள்ளது.

பலவுள் தெரிக

1. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

  1. உருவகம், எதுகை
  2. மோனை, எதுகை
  3. முரண், இயைபு
  4. உவமை, எதுகை

விடை : மோனை, எதுகை

குறு வினா

வசன கவிதை – குறிப்பு வரைக

  • உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும். விதை வடிவம் வசன கவிதை எனப்படும்
  • ஆங்கிலத்தில் Prose Poetry என்பர்
  • தமிழில் பாரதியார் இதனை அறிமுகம் செய்தார்

சான்று:-

இல்வுலகம் இனியத, இதிலுள் வான் இனிமை
யுடையது காற்றும் இனிது

 – பாரதியார் 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “காற்றே வா!” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா என்று பாரதியாரை பாராட்டியவர்

  1. பாரதிதாசன்
  2. பாரதியார்
  3. கவிமணி
  4. சுரதா

விடை : பாரதிதாசன்

2. சிந்துக்குத் தந்தை என்று பாராட்டப்படுபவர்

  1. பாரதிதாசன்
  2. கவிமணி
  3. பாரதியார்
  4. சுரதா

விடை : பாரதியார்

3. கேலிச்சித்திரம், கருத்துப்படத்தை உருவாக்கியவர்

  1. பாரதிதாசன்
  2. கவிமணி
  3. சுரதா
  4. பாரதியார்

விடை : பாரதியார்

4. காற்று என்னும் கவிதை எழுதியவர்

  1. பாரதிதாசன்
  2. கவிமணி
  3. பாரதியார்
  4. சுரதா

விடை : பாரதியார்

7. ப்ராண-ரஸம் என்பதன் பொருள்

  1. சீராக
  2. அழகு
  3. உயிர்வளி
  4. உடல்உயிர்

விடை : உயிர்வளி

8. புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம்

  1. பாரதியின் வசன கவிதை
  2. ஜப்பானியரின் ஹைக்கூ
  3. வீரமாமுனிவரின் உரைநடை
  4. கம்பரின் கவிநயம்

விடை : பாரதியின் வசன கவிதை

9. இந்தியா, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களின் ஆசிரியர்

  1. பாரதிதாசன்
  2. கவிமணி
  3. சுரதா
  4. பாரதியார்

விடை : பாரதியார்

10. மிகுந்த இலக்கணக்குறிப்பு தருக

  1. வினையெச்சம்
  2. பெயரெச்சம்
  3. பண்புத்தொகை
  4. வினைதொகை

விடை : பெயரெச்சம்

11. நெடுங்காலம் இலக்கணக்குறிப்பு தருக

  1. வினையெச்சம்
  2. பெயரெச்சம்
  3. பண்புத்தொகை
  4. வினைதொகை

விடை : பெயரெச்சம்

12. வீசி இலக்கணக்குறிப்பு தருக

  1. எதிர்மறை பெயரெச்சம்
  2. பெயரெச்சம்
  3. வினையெச்சம்
  4. வினைத்தொகை

விடை : பெயரெச்சம்

12. நல்ல லயத்துடன் இலக்கணக்குறிப்பு தருக

  1. எதிர்மறை பெயரெச்சம்
  2. பெயரெச்சம்
  3. வினைத்தொகை
  4. குறிப்புப்பெயரெச்சம்

விடை : குறிப்புப்பெயரெச்சம்

குறு வினா

1. வசன கவிதை என்றால் என்ன?

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும். விதை வடிவம் வசன கவிதை எனப்படும்

2. பாரதியார் குறிப்பு வரைக

  • மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்காெரு புலவன் என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்
  • கவிஞர், கட்டுரையாளர், சிறுகதையாளர், ஆசிரியர், இதழாசிரியர் கேலிச்சித்திரம் – கருத்துப்படங்களை உருவாக்கியவர்
  • கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி ஆகியன உலகிற்கு தந்த படைப்புகள்
  • இந்தியா, சுதேசிமித்திரன் ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்

Leave a Comment