Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 Pa-vagai Alagiduthal Book Back Solution

இயல் 8.5 – பா-வகைகள் அலகிடுதல்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 ‘ Pa-vagai Alagiduthal’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 8.5 பா-வகைகள் அலகிடுதல்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 8.5 Pa-vagai Alagiduthal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

பா-வகைகள் அலகிடுதல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘ Pa-vagai Alagiduthal’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: இராமானுசர் – நாடகம்

பலவுள் தெரிக

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்

  1. அகவற்பா
  2. வெண்பா
  3. வஞ்சிப்பா
  4. கலிப்பா

விடை : அகவற்பா

குறு வினா

1. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

  • குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும்.
  • முதலடி நான்கு சீராகவும், இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்

எ.கா.:-

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

2. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

வஞ்சிப்பா தூங்கல் ஓசையும், கலிப்பா துள்ளல் ஓசையும் பெற்று வரும்

சிறு வினா

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

  • அகவல் ஓசை பெற்று வரும்.
  • ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
  • ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.
  • மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
  • ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு.

மொழியை ஆள்வோம்!

மொழிபெயர்க்க

Once upon a time there were two beggars in Rome. The first beggar used to cry in the streets of the city, “He is helped whom God helps”. The Second beggar used to cry, “He is helped who the king helps”. This was repeated by them everyday. The Emperor of Rome heard it so often that he decided to help the beggar who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the beggar felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour, the Emperor summoned him to his presence and asked him, “What have you done with the loaf of bread that I had sent you lately?” The man replied, “I sold it to my friend, because it was heavy and did not seem well baked” Then the Emperor said, “Truly he whom God helps is helped indeed,” and turned the beggar out of his palace.

முன்பொருநாள் ரோம் நகரில் இரண்ட பிச்சைக்காரார்கள் இருந்தனர். முதல் பிச்சைக்காரன் கடவுள் எப்படியாவது யார் மூலமாவது எனக்கு உதவுவார் என்று கண்ணீர் விட்டான். இரண்டாம் பிச்சைக்காரன் மன்னனைப் புகழந்து பாடினால் மன்னன் காப்பான் என்றான். தினமும் இருவரும் இப்படியே சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

ரோம் அரசன் தன்னைப் பற்றி பேசிப் புகழந்து எப்படியாவது தான் பாதுகாப்பேன் என்று நம்புகிற பிச்சைக்காரனுக்கு உதவ விரும்பினார்.

நீளமான ரொட்டிப் பொட்டலத்தில், ரொட்டித் துண்டுகள் நடுவே சில பொற்காசுகளை வைத்து கொடுத்தான்.

இரண்டாம் பிச்சைக்காரன் ரொட்டித்துண்டுகள் கனமாக இருக்கிறது விற்றால் பணம் சம்பாதிக்கலாம் என்று முதல் பிச்சைக்காரனான நண்பனிடம் விற்றுவிடுகிறான்.

இப்படியே ரொட்டித் துண்டை தினமும் விற்கிறான். அதனை வாங்கும் முதலாம் பிச்சைக்காரன் ரொட்டித்துண்டை வெண்டிப்பார்த்தால் தினமும் பொற்காசுகள் மின்னின.

தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லி பொற்காசுகளை எடுத்து வைத்து சேர்த்து வைத்தான். பிச்சை எடுப்பதை நிறுத்தி விடுகிறான்.

இரண்டாம் பிச்சைக்காரன் தொடர்ந்து வீதியில் பிச்சை எடுத்துக்கொண்டே இருக்கிறான். மன்னன் அவனை அழைத்து நான் கொடுத்த ரொட்டி பொட்டலங்களை என்ன செய்தாய் என்று கேட்டார்.

அது எடுத்து செல்ல கடினமாக இருந்தபடியால் என் பிச்சைக்கார நண்பனிடம் அதனை விற்று விட்டேன் என்றான்.

மன்னர் தனக்குள் நினைத்துக் கொண்டார். “கடவுள் தன்னைத் தேடுபவர்களுக்கு உண்மையிலே யார் மூலமாவது உதவுகிறார்” இரண்டாம் பிச்சைக்காரனிடம் திரும்பி, ‘சரி நீ போகலாம்’ என்று அரண்மனையில் இருந்து வெளியேறச் சொன்னார்.

மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

1. மனக்கோட்டை

விடை: முயற்சி இல்லாமல் முன்னேறலாம் என சிலர் மனக்கோட்டை கட்டுகிறார்கள்.

2. கண்ணும் கருத்தும்

விடை: கண்ணும் கருத்தாய் கவனமுடன் படிக்க வேண்டும்.

3. அள்ளி இறைத்தல்

விடை: பணத்தைக் கணக்குப் பார்க்காமல் அள்ளி இறைத்தல் நம்மை வறுமை நிலைக்கு தள்ளவிடும்.

4. ஆறப்போடுதல்

விடை: பிரச்சனைகளை பெரிதாக்கமல் ஆறப்போடுதல் நல்லது

பின்வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

“தம்பீ? எங்க நிக்கிறே?”

“நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”

“அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு… நா வெரசா வந்துருவேன்”

“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு!”

“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”

“ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”

“இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம்

பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்…”

“சரிங்கண்ண

“தம்பி எங்கே நிற்கிறாய்?”

“நீங்கள் சொன்ன இடத்தில் தான் அண்ணா! எதிர்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது”

“அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் படித்துக்கொண்டிரு, நான் விரைாக வந்து விடுகிறேன்”

“அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து அதிக நாடகளாகிவிட்டன.”

“அவன் பாட்டியுடன் வெளியூர் சென்றிருக்கிறான். உங்கள் ஊருக்கே அவனைக் கூடிக்கொண்டு வருகிறேன்.”

“நிறைய நாளுக்கு முன்னால் சின்ன வயதில் பார்த்தது அண்ணா. அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும்”

“இப்போது உயரமாக வளர்நது விட்டான். உனக்கு அடையாளமே தெரியாது. ஊருக்கு என்னுடன் வருவான். பார்த்துக்கொள். சரி. தொலைபேசியை வைத்துவிடு. நான் புறப்படுகிறேன்.”

“சரி அண்ணா!”

மொழியோடு விளையாடு

கண்டுபிடித்து எழுதுக

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம் பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக…

ஒன்று

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

இரண்டு

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்

மூன்று

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

நான்கு

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

ஐந்து

பொறிவாயில் ஐந்துவித்தான் பொய்நீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்

ஆறு

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

ஏழு

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

எட்டு

கோயில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

பத்து

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக.

1. கானடை

  • கான் + அடை – காட்டைச் சேர்
  • கான் + நடை – காட்டுக்கு நடத்தல்
  • கால் + நடை – காலால் நடத்தல்

2. வருந்தாமரை

  • வரும் + தாமரை – தாமரை மலர்
  • வரும் + தா + மரை – தாவும் மான் வருகிறது
  • வருந்தா + மரை – துன்புறாத மான்

3. பிண்ணாக்கு

  • பிண்ணாக்கு – எள், கடலை ஆட்டும்போது கிடைப்பது
  • பிள் + நாக்கு – பிளவுபட்ட நாக்கு

4. பலகையொலி

  • பலகை + ஒலி – பலகையால் ஏற்படும் ஒலி
  • பல + கை + ஒலி – பல கைகள் தட்டும் ஒலி

அகராதியில் காண்க

1. ஆசுகவி

கொடுத்த பொருளை உடனே பாடும் பாட்டு
அப்பாடலைப் பாடும் புலவன்

2. மதுரகவி

இனிமை பெருகப் பாடும் கவி
சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு

3. சித்திரகவி

சித்திரத்தில் அமைத்தற்கு ஏற்ப பாடும் இறைக்கவி
21 நயங்களில் கவிதை ஏற்றுபவர்

4. வித்தாரகவி

விரித்துப் பாடப்பெறும் பாட்டு
விரிவாக பாடும் நூல்

கலைச்சொல் அறிவோம்

  • Belief – நம்பிக்கை
  • Philosopher – மெய்யியலாளர்
  • Renaissance – மறுமலர்ச்சி
  • Revivalism – மீட்டுருவாக்கம்

அறிவை விரிவு செய்

  • அறமும் அரசியலும் – மு. வரதராசனார்
  • அபி கவிதைகள் – அபி
  • எண்ணங்கள் – எம்.எஸ். உதயமூர்த்தி

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “பா – வகைகள் அலகிடுதல்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. யாப்பு உறுப்புகளின் எண்ணிக்கை

  1. 5
  2. 4
  3. 3
  4. 6

விடை: 6

2. பா வகைகள்

  1. 3
  2. 2
  3. 4
  4. 1

விடை: 4

3. செப்பலோசை ____________க்கு உரியது

  1. ஆசிரியப்பா
  2. கலிப்பா
  3. வஞ்சிப்பா
  4. வெண்பா

விடை: வெண்பா

4. செப்பலோசை அமைந்துள்ள நூல்கள்

  1. இன்னா நாற்பது, இனியவை நாற்பது
  2. திருக்குறள், நாலடியார்
  3. சிலப்பதிகாரம், மணிமேகலை
  4. கம்பராமாயணம், மகாபாரதம்

விடை: திருக்குறள், நாலடியார்

5. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் __________ அமைந்துள்ளது.

  1. கலிப்பா
  2. வெண்பா
  3. அகவற்பா
  4. வஞ்சிப்பா

விடை: அகவற்பா

6. ஆசிரியப்பாவின் வேறுபெயர்

  1. கலிப்பா
  2. வெண்பா
  3. அகவற்பா
  4. வஞ்சிப்பா

விடை: அகவற்பா

7. சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களும் ____________-ல் அமைந்தவை.

  1. கலிப்பா
  2. வெண்பா
  3. அகவற்பா
  4. வஞ்சிப்பா

விடை: அகவற்பா

8. செய்யுளில் இடையிடைேய உயர்ந்து வருவது _____________ ஓசை

  1. செப்பலோசை
  2. துள்ளலோசை
  3. அகலோசை
  4. தூங்கலோசை

விடை: துள்ளலோசை

9. பொருந்தியவற்றை தேர்க்

  1. ஆசிரியப்பா – செப்பலோசை
  2. கலிப்பா – துள்ளலோசை
  3. வெண்பா – அகலோசை
  4. அகவற்பா – தூங்கலோசை

விடை: கலிப்பா – துள்ளலோசை

10. வெண்பாவில் ______________ வகைகள் உள்ளன

  1. 8
  2. 5
  3. 6
  4. 7

விடை: 5

11. ஆசிரியப்பாவில் ______________ வகைகள் உள்ளன

  1. 8
  2. 4
  3. 5
  4. 9

விடை: 4

12. யாப்போசை தரும் பாவோசைகளை வகைப்படுத்தியவர்

  1. தொல்காப்பியர்
  2. அகத்தியர்
  3. நன்னூலார்
  4. புலவர் குழந்தை

விடை: புலவர் குழந்தை

13. புலவர் குழந்தை யாப்போசை தரும் பாவோசைகளை _______________ நூலில் வகைப்படுத்தியுள்ளார்

  1. தொல்காப்பியம்
  2. யாப்பதிகாரம்
  3. அகத்தியம்
  4. நன்னூல்

விடை: யாப்பதிகாரம்

14. நான்கு சீர்களாய் வரும் அடிகளை _________ எனக் கூறுவர்

  1. அளவடி
  2. சிந்தடி
  3. நெடிலடி
  4. கழிநெடிலடி

விடை: அளவடி

15. மூன்று சீர்களாய் வரும் அடிகளை _________ எனக் கூறுவர்

  1. அளவடி
  2. நெடிலடி
  3. கழிநெடிலடி
  4. சிந்தடி

விடை: சிந்தடி

குறு வினா

1. யாப்பின் உறுப்புகளை எழுதுக

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளைக் கொண்டது யாப்பு.

2. பாக்களின் வகைகளை எழுதுக

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

3. வெண்பாவின் ஐந்து வகைகளை கூறுக

  • குறள் வெண்பா
  • சிந்தியல் வெண்பா
  • நேரிசை வெண்பா
  • இன்னிசை வெண்பா
  • பஃறொடை வெண்பா

4. ஆசிரியப்பாவின் நான்கு வகைகளை கூறுக

  • நேரிசை ஆசிரியப்பா
  • இணைக்குறள் ஆசிரியப்பா
  • நிலைமண்டில ஆசிரியப்பா
  • அடிமறி மண்டில ஆசிரியப்பா

5. குறள் வெண்பா எவ்வாறு வரும்?

குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும்.

6. ஓரசைச் சீர்களை எழுதுக

  • நேர் – நாள்
  • நிரை – மலர்
  • நேர்பு – காசு
  • நிரைபு – பிறப்பு

7. ஈரசைச் சீர்களை எழுதுக

  • நேர் நேர் – தேமா
  • நிரை நேர் – புளிமா
  • நிரை நிரை – கருவிளம்
  • நேர் நிரை – கூவிளம்

8. யாப்போசை தரும் பாவோசைகள் பற்றி புலவர் குழந்தை குறிப்பிடுவன பற்றி எழுதுக

செப்பல் ஓசை:-

இருவர் உரையாடுவது போன்ற ஓசை.

அகவல் ஓசை:-

ஒருவர் பேசுதல் போன்ற – சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை

துள்ளல் ஓசை:-

கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து வரும்

தூங்கல் ஓசை:-

சீர்தோறும் துள்ளாது தூங்கி வரும் ஓசை. தாழ்ந்தே வரும்.

Leave a Comment