Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 Nannul Payiram Book Back Solution

இயல் 1.3 – நன்னூல் – பாயிரம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 1.3 ‘Nannul Payiram’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 1.3 நன்னூல் – பாயிரம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 1.3 Nannul Payiram Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

நன்னூல் – பாயிரம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Nannul Payiram’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: பேச்சுமொழியும் கவிதைமொழியும்

சொல்லும் பொருளும்

  • பால் – வகை
  • இயல்பு – பண்பு
  • மாடம் – மாளிகை
  • அமை – மூங்கில்

இலக்கணக்குறிப்பு

  • மாநகர் – உரிச்சொல்தொடர்
  • காட்டல், கோடல் – தொழிற்பெயர்கள்
  • கேட்போர் – வினையாலணையம் பெயர்
  • ஐந்தும் – முற்றுமை

பகுபத உறுப்பிலக்கணம்

வைத்தார் = வை + த் + த் + ஆர் 

  • வை = பகுதி
  • த் = சந்தி
  • த் = இறந்தகால இடைநிலை
  • ஆர் = பலர்பால் வினைமுற்று விகுதி

புணர்ச்சி விதிகள்

1. அணிந்துரை = அணிந்து + உரை

  • “உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்” விதிப்படி அணிந்த் + உரை என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி அணிந்துரை என்றாயிற்று.

2. பொதுச்சிறப்பு =  பொது + சிறப்பு

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” விதிப்படி பொதுச்சிறப்பு என்றாயிற்று.

நூல் வெளி

  • நன்னூல் தொல்காப்பியத்தை முதன் முதலாக கொண்ட வழிநூல் ஆகும்.
  • இது கி.பி. 13-ம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுத்தப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்.
  • இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு அதிகாரங்களாகப் பகுகக்கப்பட்டது.
  • எழுத்ததிகாரம் எழுத்தியல், பதவியில், உயிரீற்றுப் புணரியியல், மெய்யீற்றும் புணரியில், உருபுப்புணரியல் என 5 பகுதியாக அமைந்துள்ளது.
  • சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என 5 பகுதியாக அமைந்துள்ளது.
  • சீயங்கன் என்ற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனவர் நன்னூலை இயற்றினார் என்று பாயிரம் குறிப்பிடும்.
  • ஈரோடு மாவட்டம், மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரான சந்திரப் பிரபாவின் கோயில் உள்ளது. இங்கோ பவணந்தியாரின் உருவச் சிற்பம் இன்றும் உள்ளது.

பலவுள் தெரிக

பாயிரம் இல்லது ____________ அன்றே

  1. காவியம்
  2. பனுவல்
  3. பாடல்
  4. கவிதை

விடை : பனுவல்

குறு வினா

பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும். 

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “நன்னூல் – பாயிரம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

இலக்கணக்குறிப்பு

  • நுவல்வோன், கொள்வோன், ஆக்கியோன், மொழிநர், வைத்தார் – வினையாலணையும் பெயர்கள்
  • ஆடமை – வினைத்தொகை
  • அமைதோள் – உவமைத்தொகை
  • நூன்முகம், நூற்பெயர் – ஆறாம் வேற்றுமைத் தொகை

புணர்ச்சி விதிகள்

1. மூவகை = மூன்று + வகை

  • “ஆறு ஏழு அல்லவற்றின் ஈற்று உயிர்மெய் கெடும்” விதிப்படி மூன் + வகை என்றாயிற்று.
  • “எட்டன் உறுப்பு ணவ்வாகும்” விதிப்படி மூவகை  என்றாயிற்று.

2. நூற்பெயர் = நூல் + பெயர்

  • “லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” விதிப்படி நூற்பெயர் என்றாயிற்று

3. நன்னூல் = நன்மை + நூல்

  • “ஈறுபோதல்” விதிப்படி நன் + நூல் என்றாயிற்று
  • “னலமுன் றனவும் ஆகும் தநக்கள்” விதிப்படி நன் + னூல் என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. பொருந்தாத இணையை தேர்க

  1. மாடங்கள் – ஓவியங்கள்
  2. நகரங்கள் – கோபுரங்கள்
  3. மகளிர் – அணிகலம்
  4. தோள்கள் – காவியங்கள்

விடை: தோள்கள் – காவியங்கள்

2. வைத்தார் என்னும் சொல்லின் விகுதி

  1. வை
  2. தார்
  3. ஆர்
  4. அர்

விடை: ஆர்

3. _____________ தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூலாகும்

  1. நன்னூல்
  2. அகத்தியம்
  3. இலக்கண விளக்கம்
  4. தொல்காப்பியம்

விடை : தொல்காப்பியம்

4. பாயிரம் _______ வகைப்படும்

  1. நான்கு
  2. ஐந்து
  3. இரண்டு
  4. ஆறு

விடை : இரண்டு

4. பொதுப்பாயிரத்தில் கூறப்படும் செய்திகள்

  1. மூன்று
  2. நான்கு
  3. ஐந்து
  4. ஆறு

விடை : ஐந்து

5. சிறப்புப்பாயிரத்தில் கூறப்படும் செய்திகள்

  1. ஆறு
  2. நான்கு
  3. ஐந்து
  4. எட்டு

விடை : எட்டு

6. நன்னூலின் ஒரு ___________

  1. முதல் நூல்
  2. வழி நூல்
  3. சார்பு நூல்
  4. மொழிபெயர்ப்பு நூல்

விடை : வழி நூல்

7. நன்னூலின் ஆசிரியர் ___________

  1. பாரதியார்
  2. பவணந்தி முனிவர்
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : பவணந்தி முனிவர்

8. நன்னூல் கூறும் இலக்கண வகை

  1. எழுத்து, பொருள்
  2. சொல், பொருள்
  3. யாப்பு, சொல்
  4. எழுத்து, சொல்

விடை : எழுத்து, சொல்

9. நன்னூல் விளக்கும் இலக்கண வகைகளின் எண்ணிக்கை

  1. 1
  2. 3
  3. 2
  4. 4

விடை : 2

10. நன்னூலினை ____________ சீயங்கன் வேண்டுதலால் இயற்றினார்.

  1. பவணந்தி முனிவர்
  2. தொல்காப்பியர்
  3. அகத்தியர்
  4. கபிலர்

விடை : பவணந்தி முனிவர்

11. நூலுக்கு முகத்தை போன்று இருப்பது

  1. அணிந்துரை
  2. புறவுரை
  3. புனைந்துரை
  4. முகவுரை

விடை : முகவுரை

12. நூலுக்கு __________ அணியாக அமைந்துள்ளது

  1. முகவுரை
  2. அணிந்துரை
  3. புனைந்துரை
  4. நூன்முகம்

விடை : அணிந்துரை

13. மாடங்களுக்கு அழகாக அமைந்தது

  1. நகரங்கள்
  2. மகளிர்
  3. ஓவியங்கள்
  4. வண்ணங்கள்

விடை : ஓவியங்கள்

14. நன்னூல் எழுத்ததிகாரத்தில் இடம் பெறாத இயல்

  1. எழுத்தியல்
  2. பதவியல்
  3. உருப்புணரியல்
  4. இடையியல்

விடை : இடையியல்

15. எட்டாம் தீர்தங்கரர்

  1. சந்திரப்பிரபா
  2. ரிசபதேவர்
  3. பத்மபிரபா
  4. விமலநாதர்

விடை : சந்திரப்பிரபா

16. நன்னூல் இயற்றப்பட்ட காலம்

  1. கி.பி. 10
  2. கி.பி. 12
  3. கி.பி. 13
  4. கி.பி. 15

விடை : கி.பி. 13

17. தொல்காப்பியத்தினை முதன் நூலாகக் கொண்டு கிபி.13-ல் இயற்றப்பட்ட வழி நூல் ……………….

  1. வீரசோழியம்
  2. அகத்தியம்
  3. தொல்காப்பியம்
  4. நன்னூல்

விடை : தொல்காப்பியம்

குறு வினா

1. நன்னூல் என்னும் தமிழ் இலக்கண நூலை இயற்றியவர் யார்?

பவணந்தி முனிவர்

2. பவணந்தி முனிவர் நன்னூலை இயற்ற காரணம் யாது?

தம்மை ஆதரித்த சீயங்கன் என்னும் சிற்றரசர் வேண்டுகோளுக்கிணங்க பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றியுள்ளார்.

3. பாயிரம் எதற்கெல்லாம் உதவுவதாக நன்னூல் குறிப்பிடுகிறது?

  • நூலை தெரிந்து கொள்ள
  • நூலை புரிந்து கொள்ள
  • நூலின் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்க

4. பாயிரத்தினை குறிக்கும் வேறு பெயர்களை எழுதுக

முகவுரை, பதிகம், அணிந்துரை, நூல்முகம், புறவுரை, தந்துரை, புணர்ந்துரை

5. பாயிரத்தின் வகைகளாக நன்னூல் கூறுபவை யாவை?

  • பொதுப்பாயிரம்
  • சிறப்புப் பாயிரம்

6. எழுத்ததிகாரத்தின் பகுதிகளாக நன்னூல் கூறும் வகைகளை எழுதுக.

  • எழுத்ததிகாரம் எழுத்தியல்
  • பதவியில்
  • உயிரீற்றுப் புணரியியல்
  • மெய்யீற்றும் புணரியில்
  • உருபுப்புணரியல்

6. சொல்லதிகாரத்தின் பகுதிகளா நன்னூல் கூறும் வகைகளை எழுதுக.

  • பெயரியல்
  • வினையியல்
  • பொதுவியல்
  • இடையியல்
  • உரியியல்

7. பவணந்தியாரின் உருவச்சிற்பமானது அமைந்துள்ள இடத்தினை கூறுக?

ஈரோடு மாவட்டம், மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் திருத்தங்கரான சந்திரப்பிரபாவின் கோவிலில் பவணந்தியாரின் உருவ சிற்பம் உள்ளது.

Leave a Comment