Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.1 Ariviyal Aathichidi Book Back Solution

இயல் 3.1 – அறிவியல் ஆத்திசூடி

அறிவியல் ஆத்திச்சூடி: Welcome, students! We present to you a thorough guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 3.1, titled ‘Ariviyal Aathichidi’. This guide provides solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 1 Lesson 3.1, அறிவியல் ஆத்திசூடி.

அறிவியல் ஆத்திசூடி பாட வினா விடைகள்

On this page, you can find the question and answer section for the ‘Ariviyal Aathichidi’ lesson. Furthermore, you can also access supplementary questions related to this topic.

அறிவியல் சிந்தனை கொள்

ஆய்வில் மூழ்கு

இயன்றவரை புரிந்துகொள்

ஈடுபாட்டுடன் அணுகு

உண்மை கண்டறி

ஊக்கம் வெற்றி தரும்

என்றும் அறிவியலே வெல்லும்

ஏன் என்று கேள்

ஐயம் தெளிந்து சொல்

ஒருமித்துச் செயல்படு

ஓய்வற உழை

ஔடதமாம் அனுபவம்

நூல் வெளி

  • ”தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து.
  • இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர்.
  • விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.
  • அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார்.
  • என்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

சொல்லும் பொருளும்

  • இயன்றவரை – முடிந்தவரை
  • ஒருமித்து – ஒன்றுபட்டு
  • ஔடதம் – மருந்து

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. உடல் நோய்க்கு ____________ தேவை.

  1. ஔடதம்
  2. இனிப்பு
  3. உணவு
  4. உடை

விடை : உணவு

2. நண்பர்களுடன் _____________ விளையாடு

  1. ஒருமித்து
  2. மாறுபட்டு
  3. தனித்து
  4. பகைத்து

விடை : ஒருமித்து

3. கண்டறி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______

  1. கண் + அறி
  2. கண்டு + அறி
  3. கண்ட + அறி
  4. கண் + டற

விடை : கண்டு + அறி

4. ஓய்வற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. ஓய்வு + அற
  2. ஓய் + அற
  3. ஓய் + வற
  4. ஓய்வு + வற

விடை : ஓய்வு + அற

5. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________

  1. ஏன்என்று
  2. ஏனென்று
  3. ஏன்னென்று
  4. ஏனன்று

விடை : ஏனென்று

6. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________

  1. ஔடதமாம்
  2. ஔடதம்ஆம்
  3. ஔடதாம்
  4. ஔடதஆம்

விடை : ஔடதமாம்

எதிர்ச்சொற்களைப் பொருத்துக

  1. அணுகு – தெளிவு
  2. ஐயம் – சோர்வு
  3. ஊக்கம் – பொய்மை
  4. உண்மை – விலக

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

பாடல் வரிகளுக்கேற்றவாறு முறைப்படுத்துக.

1. சிந்தனை கொள் அறிவியல்

விடை : அறிவியல் சிந்தனை கொள்

2. சொல் தெளிந்து ஐயம்

விடை : ஐயம் தெளிந்து சொல்

3. கேள் ஏன் என்று

விடை : ஏன் என்று கேள்

4. வெல்லும் என்றும் அறிவியல்

விடை : என்றும் அறிவியல் வெல்லும்

குறுவினா

மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?

மனிதர்களுக்கு மருந்தாக அமைவது அவர்களுடைய அனுபவங்களே ஆகும்

சிறுவினா

பாடலின் கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக.

  • மாணவர்கள், அறிவியல் நாட்டம் கொள்ள வேண்டும். காரண காரியங்களை அறிய ஆய்வில் மூழ்குதல் வேண்டும்.
  • அறிவியல் மாற்றங்களையும், உண்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டும், எந்தவொரு செயலையும் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.
  • அறிவின் துணை கொண்டு அறிவியல் உண்மைகளை கண்டறிய வேண்டும். நாம் எடுக்கிறன்ற முயற்சிகள் கட்டாயம் ஒரு நாள் வெற்றியைத் தரும். இவ்வுலகில் அறிவியலே என்றும் வென்று நிற்கும். தெளிவுபடுத்திக் கொள்ள ஏன் என்று கேட்டல் வேண்டும்.
  • பிறருக்குச் சொல்லும் போது தெளிவாகச் சொல்ல வேண்டும். நட்புடன் செயல்பட வேண்டும். எடுத்த முயற்சியில் வெற்றி பெறும் வரை அயராது உழைத்தல் வேண்டும். அனுபவமே நமக்கு அருமருந்து.

சிந்தனை வினா

உங்களுக்குத் தெரிந்த மருத்துவ முறைகள் யாவை?

சித்த மருத்துவம்,  இயற்கை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ரெய்கி மருத்துவம், வர்ம மருத்துவம், அலோபதி மருத்துவம், ஓமியோபதி மருத்துவம், காந்த மருத்துவம், அக்குபஞ்சர் மருத்துவம், அக்குபிரஷர் மருத்துவம், நாட்டு மருத்துவம்,  மசாஜ் மருத்துவம், மூலிகை மருத்துவம், நவமணி மருத்துவம், சிரிப்பு மருத்துவம், உளவியல் மருத்துவம் 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “அறிவியல் ஆத்திச்சூடி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையை தேர்ந்தெடு

1. நெல்லை சு.முத்துவை, தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் எனறு  பாராட்டியவர்?

  1. கலைஞர் கருணாநிதி
  2. எம்.ஜி.ஆர்
  3. ஜெயலலிதா
  4. அப்துல்காலம்

விடை : அப்துல்கலாம்

2. ஆத்திசூடியின் ஆசிரியர்

  1. பாரதியார்
  2. ஔவையார்
  3. பாரதிதாசன்
  4. நெல்லை சு.முத்து

விடை : ஔவையார்

3. புதிய ஆத்திசூடியை எழுதியவர் ________________

  1. பாரதியார்
  2. ஔவையார்
  3. பாரதிதாசன்
  4. நெல்லை சு.முத்து

விடை : பாரதியார்

4. செயற்கைக்கோள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. செயற்கைக் + கோள்
  2. செயற்கை + க்கோள்
  3. செயற்கை + கோள்
  4. செயற்க + கோள்

விடை : செயற்கை + கோள்

5. ஈடுபாடு + உடன் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________

  1. ஈடுபாட்டுடன்
  2. ஈடுபாடுடன்
  3. ஈடுபாட்டுஉடன்
  4. ஈடுபாட்உடன்

விடை : ஈடுபாட்டுடன்

6. பணி + ஆற்றியவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________

  1. பணி ஆற்றியவர்
  2. பணியற்றியவர்
  3. பணிஆற்றியவர்
  4. பணியாற்றியவர்

விடை : பணியாற்றியவர்

குறு வினா

1. நெல்லை சு.முத்து. பணியாற்றிய நிறுவனங்கள் எவை?

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம்

2. நெல்லை சு.முத்துவின் பன்முகத்தன்மையை எழுதுக

  • அறிவியல் அறிஞர்
  • கவிஞர்

6th Tamil Text Books Pdf

Leave a Comment