[Term-3] Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.1 Bharatham Andraya Natrangal Book Back Solution

இயல் ஒன்று – பாரதம் அன்றைய நாற்றங்கால்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 1.1 ‘Bharatham Andraya Natrangal’ Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 3 Lesson 1.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 6th Tamil Chapter 1.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 6th Tamil Guide PDF.

பாரதம் அன்றைய நாற்றங்கால் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Bharatham Andraya Natrangal’ which is the first subject of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the Bharatham Andraya Natrangal subject.

Next Lesson: தமிழ்க்கும்மி

பாரதம் அன்றைய நாற்றங்கால் பாடல்

புதுமைகள் செய்த தேசமிது
பூமியின் கிழக்கு வாசலிது!

தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான்
தேசம் உடுத்திய நூலாடை!
மெய்களைப் பற்றிய இந்தியத் தாய்க்கு
மெய்யுணர்வு என்கிற மேலாடை! (புதுமைகள்)

காளி தாசனின் தேனிசைப் பாடல்கள்
காவிரிக் கரையில் எதிரொலிக்க
கம்பனின் அமுதக் கவிதை களுக்குக்
கங்கை அலைகள் இசையமைக்க (புதுமைகள்)

கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக்
காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்!
மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக்
கிழக்குக் கரையின் நலம்கேட்கும்! (புதுமைகள்)

புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்
புன்னகை செய்த பொற்காலம்!
கல்லைக் கூட காவிய மாக்கிக்
கட்டி நிறுத்திய கலைக்கூடம்! (புதுமைகள்)

அன்னை நாட்டின் அமுத சுரபியில்
அன்னிய நாடுகள்பசிதீர
அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி
அறத்தின் ஊன்று கோலாக

புதுமைகள் செய்த தேசமிது
பூமியின் கிழக்கு வாசலிது!

– தாராபாரதி

பாடலின் பொருள்

பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு. திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது. காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.

குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன. மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன. புல்வெளிகள் எல்லா ம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன.

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.

நூல் வெளி

  • தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.
  • கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.
  • புதிய விடியல்கள் , இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்.

சொல்லும் பாெருளும்

  • மெய் – உண்மை
  • தேசம் – நாடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிபபிடும் நூல் __________________

  1. திருவாசகம்
  2. திருக்குறள்
  3. திரிகடுகம்
  4. திருப்பாவை

விடை : திருக்குறள்

2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் __________________

  1. காவிரிக்கரை
  2. கங்கைக்கரை
  3. கங்கைக்கரை
  4. யமுனைக்கரை

விடை : காவிரிக்கரை

3. கலைக்கூடமாகக் காட்சி தருவது __________________

  1. சிற்பக்கூடம்
  2. ஓவியக்கூடம்
  3. பள்ளிக்கூடம்
  4. சிறைக்கூடம்

விடை : சிற்பக்கூடம்

4. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________

  1. நூல்+ஆடை
  2. நூலா+ டை
  3. நூல்+ லாடை
  4. நூலா+ஆட

விடை : நூல்+ஆடை

5. எதிர் + ஒலிக்க என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது __________________

  1. எதிரலிக்க
  2. எதிர்ஒலிக்க
  3. எதிரொலிக்க
  4. எதிர்ரொலிக்க

விடை : எதிரொலிக்க

நயம் அறிக

1. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகைச் சாெற்களை எடுத்து எழுதுக.

  • மெய்களைப் – மெய்யுணர்வு
  • ன்னை – அன்னிய

2. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள மோனைச் சாெற்களை எடுத்து எழுதுக

  • புதுமைகள் – பூமியின்
  • காளிதாசனின் –  காவிரிக் கரையில்
  • புல்வெளி – புன்னகை
  • ன்னை – ன்னிய
  • ல்லை – ட்டி
  • ண்ணல் – றத்தின்

3. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள இயைபுச் சாெற்களை எடுத்து எழுதுக

  • தேசமிது – வாசலிது
  • நூலாடை – மேலாடை
  • எதிரொலிக்க – இசையமைக்க
  • பூத்தொடுக்கும் – நலம்கேட்கும்

குறு வினா

1. தாராபாரதியின் பாடலில் இடம்பெற்று கவிஞர்களின் பெயர்களை குறிப்பிடுக

திருவள்ளுவர், காளிதாசர், கம்பர் ஆகியோர் தாராபாரதியின் பாடலில் இடம் பெற்றள்ள கவிஞர்கள் ஆவார்கள்

2. இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைநத்து கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.

மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து உருவாகும் ஆறுகள் கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலப்பதை “மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக் கிழக்கு கரையில் நலம் கேட்கும்!” என்று காட்சிப்படுத்துகிறார் கவிஞர்

சிந்தனை வினா

நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பார் திருநாவுக்கரசர். ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக மாணவர் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வு உடையவர்களாய் வளர்ந்தால் தான் வீடும் நாடும் நலம் பெறும் மாணவர்கள் தம் பள்ளிப்பருவத்தில் தொண்டு செய்வதற்கு வாய்ப்பாக  பள்ளிகளில் செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித்திட்டம் போன்ற அமைப்புகள் உள்ளன. மாணவர்கள் இவ்வமைப்புகளில் சேர்ந்து தொண்டாற்றலாம்.

இவ்வாறெல்லாம் செய்தால் நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் நன்மக்களாக மாணவர்கள் மாற முடியும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “பாரதம் அன்றைய நாற்றங்கால்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தாராபாரதியின் இயற்பெயர் 

  1. இராமகிருஷ்ணன்
  2. இராஜகிருஷ்ணன்
  3. இராதாகிருஷ்ணன்
  4. இராமகோபாலன்

விடை : இராதாகிருஷ்ணன்

2. தாராபாரதியின் அடைமொழி பெற்ற கவிஞர் ____________

  1. மொழிஞாயிறு
  2. கவிஞாயிறு 
  3. மக்கள் ஞாயிறு
  4. மணி ஞாயிறு

விடை : கவிஞாயிறு

3. தாராபாரதியின் கவிதை நூல்

  1. விரல் நுனி வெளிச்சங்கள்
  2. ஊரும் பேரும்
  3. இன்பத்தமிழ்
  4. துறைமுகம்

விடை : விரல் நுனி வெளிச்சங்கள்

4. மெய்யுணர்வு என்ற சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது

  1. மெய் + உணர்வு
  2. மெய்யு + உணர்வு
  3. மெய்யு + ணர்வு
  4. மெய்யான + உணர்வு

விடை : மெய் + உணர்வு

5. பூ + காடு என்பதனை சேர்த்தெழுதக் கிடைப்பது

  1. பூக்காடு
  2. பூங்காடு
  3. பூகாடு
  4. பூ காடு

விடை : பூக்காடு

6. கை + தடி என்பதனை சேர்த்தெழுதக் கிடைப்பது

  1. கைதடி
  2. கைத்த்டி
  3. கைத்தடி
  4. கை தடி

விடை : கைத்தடி

எதிர்ச் சொல்லினை பொருத்துக

  1. மெய் – நஞ்சு
  2. பழமை – பொய்
  3. அமுதம் – புதுமை

விடை: 1 – ஆ, 2 – இ, 3 – அ

பொருத்துக

  1. மெய் – நாடு
  2. தேசம் – கம்பு
  3. அமுதம் – உண்மை
  4. கோல் – அமிர்தம்

விடை: 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

குறுவினா

1. இந்திய நாடு எவ்வாறு திகழ்வதாக தாராபாரதி கூறுகிறார்?

இந்திய நாடு பூமியின் கிழக்கு வாசலாகத் திகழ்வதாக தாராபாரதி கூறுகிறார்

2. எவை ஆடையாகவும், மேலாடையாகவும் விளங்குகிறது?

திருக்குறள் ஆடையாக விளங்குகின்றது. மெய்யுணர்வு மேலாடையாக விளங்குகின்றது.

சிறுவினா

தாராபாரதி – குறிப்பு வரைக

  • இயற்பெயர்: இராதாகிருஷ்ணன்
  • அடைமொழி: கவிஞாயிறு
  • நூல்கள்: புதிய விடில்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள்

Leave a Comment