Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.1 Inba Tamil Book Back Solution

இயல் ஒன்று – இன்பத்தமிழ்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 1.1, ‘Inba Tamil.’ Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 1 Lesson 1.1 தமிழ்க்கும்மி.

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 6th Tamil Chapter 1.1 இன்பத்தமிழ் Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 6th Tamil Guide PDF.

இன்பத்தமிழ் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Inbatamil,’ which is the first subject of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the Inbatamil/Inbathamizh subject.

இன்பத்தமிழ் பாடல்

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

Next Lesson: தமிழ்க்கும்மி

சொல்லும் பொருளும்

  • நிருமித்த – உருவாக்கிய
  • விளைவு – விளைச்சல்
  • சமூகம் – மக்கள் குழு
  • அசதி – சோர்வு
  • சுடர் – ஒளி

நூல் வெளி மற்றும் ஆசிரியர் குறிப்பு

  • இயற்பெயர் சுப்புரத்தினம்.
  • பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
  • தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார். எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்.
  • இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
  • இப்பாடல், பாரதிதாசன் கவிதைகள் என்ற நூலில் தமிழ் என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஏற்றத் தாழ்வற்ற _________ அமைய வேண்டும்

  1. சமூகம்
  2. நாடு
  3. வீடு
  4. தெரு

விடை: சமூகம்

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு __________ ஆக இருக்கும்

  1. மகிழ்ச்சி
  2. கோபம்
  3. வருத்தம்
  4. அசதி

விடை: அசதி

3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

  1. நிலயென்று
  2. நிலவென்று
  3. நிலவன்று
  4. நிலவுஎன்று

விடை: நிலவென்று

4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

  1. தமிழங்கள்
  2. தமிழெங்கள்
  3. தமிழுங்கள்
  4. தமிழ்எங்கள்

விடை: தமிழெங்கள்

5. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. அமுது + தென்று
  2. அமுது + என்று
  3. அமது + ஒன்று
  4. அமு + தென்று

விடை: அமுது + என்று

6. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. செம்மை + பயிர்
  2. செம் + பயிர்
  3. செமை + பயிர்
  4. செம்பு + பயிர்

விடை: செம்மை + பயிர்

இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக

1. விளைவுக்கு – நீர்

2. அறிவுக்கு – தோள்

3. இளமைக்கு – பால்

4. புலவர்க்கு – வேல்

ஒத்த ஓசையில் முடியும் (இயைபுச்) சாெற்களை எடுத்து எழுதுக

  • பேர் – நேர்
  • பால் – வேல்
  • ர் – நீர்
  • வான் – தேன்
  • தாேள் – வாள்

குறுவினா

1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

  • அமுதம்
  • நிலவு
  • மணம்

2. நீங்கள் தமிழை எதனாேடு ஒப்பிடுவீர்கள்?

நாங்கள் தமிழை உயிரோடு ஒப்பிடுவோம்.

காரணம்:-

உயிர் உள்ளவரைதான் உடலக்கு மதிப்பு அது போல தமிழ் உள்ளவரைதான் தமிழனுக்கு மதிப்பு

சிறுவினா

1. ‘இன்பத்தமிழ்’ – பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டினை எழுதுக.

‘தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்

2. விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

நீரின்றி அமையா உலகு என்பது வள்ளுவன் வாக்கு. உலக உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது நீராகும். அத்தகைய நீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றாங்கரையில் தான் மனித நாகரீகம் வளர்ந்துள்ளது. இதுவே விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு ஆகும்.

சிந்தனை வினா

வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது? உங்கள் கருத்தைக் கூறுக?

  • வேல் என்பது ஓர் ஆயுதம். அது எல்லா உயிர்களையும் ஊடுருவிப் பார்க்கும் தன்மையுடையது.
  • வேல் மனிதர்களின் கரங்களில் இருக்கும்போது மனிதனுக்கு மிகப்பெரிய தைரியத்தை கொடுக்கும்.
  • அதுபோல புலவர்களுக்கு தமிழ் கையிலிருந்தால் தைரியத்தையும். உற்சாகத்தையும் கொடுக்கும். புலவர்களின் பாடல்கள் மனித உள்ளங்களை ஊடுருவிப் பார்க்கும் தன்மையுடையது.
  • அதனால்தான் கவிஞர் வேலையும் தமிழையும் ஒப்பிட்டுப் பாடியுள்ளார்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “இன்பத்தமிழ்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பாரதிதாசனின் இயற்பெயர்?

  1. சுப்புரத்தினதாசன்
  2. ரத்தினதாசன்
  3. சுப்புரத்தினம்
  4. ரத்தினதாசன்

விடை : சுப்புரத்தினம்

2. _________ அமுதென்று பேர்?

  1. தமிழிற்கு
  2. தமிழுக்கு
  3. தமிழுக்கும்
  4. தமிழுக்கே

விடை: தமிழுக்கும்

3. நமது சாேர்வை நீக்குவதில் தமிழ் ___________ போன்றது?

  1. சாேறு
  2. தேன்
  3. நீர்
  4. பால்

விடை: தேன்

4. பாரதிதாசன் ___________யென சிறப்பிக்கப்படுகிறார்?

  1. பாவேந்தர்
  2. பார்வேந்தர்
  3. பாரிவேந்தர்
  4. பாட்டு வேந்தர்

விடை: பாவேந்தர்

5. பாரதியாரின் கவிதைகள் மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம்பெயரை மாற்றிக் கொண்ட கவிஞர்?

  1. தேசிய விநாயகம் பிள்ளை
  2. சுரதா
  3. வள்ளலார்
  4. பாரதிதாசன்

விடை: பாரதிதாசன்

6. _____________ கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார்.

  1. பாரதியார்
  2. ஓளவையார்
  3. பாரதிதாசன்
  4. வள்ளலார்

விடை: பாரதிதாசன்

7. இன்பத்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? 

  1. இன்பத் + தமிழ்
  2. இன்ப + தமிழ்
  3. இன்பம் + தமிழ்
  4. இன்ப + த்தமிழ்

விடை: இன்பம் + தமிழ்

7. மணமென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? 

  1. மணமெ + என்று
  2. மணம் + என்று
  3. மணமெ + ன்று
  4. மணம் + மென்று

விடை: மணம் + என்று

6th Tamil Text Books Pdf

Leave a Comment