Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.4 Kanavu palithathu Book Back Solution

இயல் 1.4 – கனவு பலித்தது

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 1.4, Kanavu Palithathu. Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 1 Lesson 1.4 கனவு பலித்தது

Previous Chapter: வளர்தமிழ்

கனவு பலித்தது பாட வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘ Kanavu Palithathu,’ which is the fourth lesson of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the Kanavu Palithathu subject.

அத்தையின் கடிதக் கருத்துக்களைச் சுருக்கி எழுதுக

முன்னுரை

அத்தை இன்சுவைக்கு எழுதிய கடித்தத்தின் சுருக்கத்தை நோக்குவோம்.

மொழி கடையில்லை

தமிழில் படித்தால் சாதிக்க முடியாது என்பது  தவறான எண்ணம். சாதனைக்கு மொழி தடையே இல்லை. நீண்ட நெடுங்காலமாகவே அறிவியல் சிந்தனைகளோடு விளங்கியவர்கள் தமிழர்கள், தமிழி இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் பல காணப்படுகின்னறன.

அறிவியல் சிந்தனைகள்

தொல்காப்பியர் தன் நூலில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்து இவ்வுலகம் என்றும், உலக உயிர்களை ஒரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியுள்ளதையும் காணலாம்.

கடல் நீர் ஆவியாகி மேகமாவும், பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். இதனை முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை போன்ற இலங்கியங்களில் காண முடிகிறது.

திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது என்பதை ஒளவையார் தனது பாடலில் கூறியுள்ளார்.

வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியைப் பதிற்றுப்பத்து நூலில் கூறுகிறது. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியை நற்றிணை நூல் கூறுகிறது. இதன் வழி இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள அறுவை மருத்துவம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம் பெற்றுள்ளது.

முடிவுரை

சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொள்; நூலகம் செல்; நூல் வாசி; தொடர்ந்து முயற்சி செய்; நீ வெல்வாய்!

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “கனவு பலித்தது” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
    நாழி முகவாது நால் நாழி பாடல் வரிகளின் ஆசிரியர்

  1. கபிலர்
  2. தொல்காப்பியர்
  3. திருவள்ளுவர்
  4. ஒளவையார்

விடை: ஒளவையார்

2. காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம் பெற்றுள்ள நூல்

  1. பரிபாடல்
  2. திருக்குறள்
  3. பதிற்றுப்பத்து
  4. கார்நாற்பது

விடை: பதிற்றுப்பத்து

3. போர்க்களம் இச்சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது

  1. போர்க் + களம்
  2. போர் + களம்
  3. போர் + க்களம்
  4. போர் + அளம்

விடை: போர் + களம்

4. நெடுமை + காலம் இச்சொல்லை சேர்த்தெழுக் கிடைப்பது

  1. நெடுமைகாலம்
  2. நெடுங்காலம்
  3. நெடுமைக்காலம்
  4. நெடுங்க்காலம்

விடை: போர் + களம்

5. வடு சொல்லின் பொருள்

  1. புண்
  2. மருந்து
  3. ஊசி
  4. நரம்பு

விடை: புண்

பொருத்துக

  1. கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி…. – நற்றிணை
  2. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு – கார்நாற்பது
  3. கோட்சுறா எறிந்ததெனச் சுருங்கிய
    நரம்பின் முடிமுதிர் பரதவர் – பதிற்றுப்பத்து

விடை: 1 – ஆ, 2 – இ, 3 – அ

வினாக்கள்

1. தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள் சிலரை கூறுக?

  • மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல்கலாம்
  • இஸ்ரோ அறிவியல் அறிஞர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.
  • இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கை. சிவன்.

2. இவ்வுலகம் எவையெல்லாம் கலந்தென தொல்காப்பியர் கூறுகிறார்?

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்து இவ்வுலகம் என்று தொல்காப்பியர் கூறுகிறார்.

3. தொல்காப்பியர் உலக உயிர்களை எவ்வாறு வகைப்படுத்தி உள்ளார்?

மேலும் உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியும் உள்ளார்.

4. சுறா தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தியை பற்றி நற்றிணையின் பாடல் வரிகளை எழுதுக

கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய
நரம்பின் முடிமுதிர் பரதவர்

5 திருவள்ளுவமாலை நூலின் ஆசிரியரின் பெயர் தருக

திருவள்ளுவமாலை நூலின் ஆசிரியரின் கபிலர்

மேலும் உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியும் உள்ளார்.

6. கடல் நீர் ஆவியாகி மழையாக பொழிவதை எந்த நூல்களிலெல்லாம் காணலாம்?

கடல் நீர் ஆவியாகி மேகமாவும், பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். இதனை முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை போன்ற இலங்கியங்களில் காண முடிகிறது.

7. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை நிறுவியவர் யார்?

அறிவியல் அறிஞர் கலீலியோ

6th Tamil Text Books Pdf

Leave a Comment