[Term-3] Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.4 Naal Vagai Sorkal Book Back Solution

இயல் ஒன்று – நால்வகைச் சொற்கள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 1.4 ‘Naal Vagai Sorkal’ Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 3 Lesson 1.4 நால்வகைச் சொற்கள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 6th Tamil Chapter 1.4 Naal Vagai Sorkal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 6th Tamil Guide PDF.

நால்வகைச் சொற்கள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Naal Vagai Sorkal’ which is the first subject of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the Naal Vagai Sorkal subject.

Next Lesson: தமிழ்க்கும்மி

கற்பவை கற்றபின்

பின்வரும் தாெடர்களில் உள்ள நால்வகைச் சாெற்களை வகைப்படுத்துக.

1. வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்.

வளவனும் வளவன் பெயர்ச்சொல்
உம் இடைச்சொல்
தங்கையும் தங்கை பெயர்ச்சொல்
உம் இடைச்சொல்
மாநகரப் நகரம் பெயர்ச்சொல்
மா உரிச்சொல்
பேருந்தில் பேருந்து பெயர்ச்சொல்
ஏறினர் வினைச்சொல்

2. நாள்தாேறும் திருக்குறளைப் படி.

நாள்தோறும்

  • நாள் – பெயர்ச்சொல்
  • உம் – இடைச்சொல்

திருக்குறளைப்

  • திருக்குறள் – பெயர்ச்சொல்
  • ஐ – இடைச்சொல்

படி – வினைச்சொல்

3. ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது என்றார் ஆசிரியர்.

ஏழைக்கு ஏழை பெயர்ச்சொல்
ஏழைக்கு கு இடைச்சொல்
உதவுதல் வினைச்சொல்
சாலச் சிறந்தது சால உரிச்சொல்
ஆசிரியர் பெயர்ச்சொல்

4. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சாெல்லை எழுதுக.

மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

இடைச்சொல் – கு (செவிக்கு), மற்று

மதிப்பீடு

சாெல்வகையை அறிந்து பொருந்தாச் சாெல்லை தேர்ந்தெடு

1. அ) படித்தாள் ஆ) இ) மற்று ஈ) கு

விடை : படித்தாள்

2. அ) மதுரை ஆ) கால் இ) சித்திரை ஈ) ஆல்

விடை : ஆல்

3. அ) சென்ற ஆ) வந்த இ) சித்திரை ஈ) நடந்த

விடை : சித்திரை

4. அ) மாநாடு ஆ) இ) உம் ஈ) மற்று

விடை : மாநாடு

குறு வினா

1. சாெல் என்றால் என்ன?

தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தாெடரந்து வந்தும் பொருள் தரும். இவவாறு பொருள் தருபவை சாெல் எனப்படும்.

2. சாெற்களின் வகைகளை எழுதுக.

இலக்கண அடிப்படையில் சாெற்கள்

  • பெயரச்சாெல்
  • வினைச்சாெல்
  • இடைச்சாெல்
  • உரிச்சாெல்

என நான்கு வகைப்படும்.

3. பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சாெற்களை எவ்வாறு வழங்குகிறோம்?

பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சாெற்களை இடைச்சொல் என்று வழங்குகிறோம். இது தனித்து இயங்காது.

 

மொழியை ஆள்வோம்

கீழ்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தாெழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தாெடங்கியவர்.

1906 ஆம் ஆண்டு அக்டாேபர் 16ஆம் நாள் ”சுதேசி நாவாய்ச் சங்கம் ” என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.

1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?

சுதேசி நாவாயச் சங்கத்தை நிறுவியவர் வ.உ.சிதம்பரனார்.

2. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?

வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்

3. வ. உ.சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்?

வ. உ.சி. அவர்கள் பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.

4. வ. உ. சி. அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை?

  • வழக்கறிஞர்
  • எழுத்தாளர்
  • பேச்சாளர்
  • தாெழிற்சங்கத் தலைவர்

5. வ. உ. சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மாெழிகள் யாவை?

வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.

இடம் அறிந்து பயன்படுத்துவோம்

ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.)

  • ஓர் ஊர் ஓர் ஏரி
  • ஒரு நகரம் ஒரு கடல்

இவை போலவே, உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.)

  • அஃது இங்கே உள்ளது.
  • அது நன்றாக உள்ளது.

கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக

1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.

விடை : ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.

விடை : ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.

3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

விடை : அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.

விடை : அது நகரத்திற்குச் செல்லும் சாலை.

5. அது ஒரு இனிய பாடல்.

விடை : அஃது அது ஒரு இனிய பாடல்.

அகரவரிசைப்படுத்து

பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பையன், போக்குவரத்து, பின்னிரவு.

விடை :

பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து,

மொழியோடு விளையாடு

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்கு.

எனக்கு உண்டு எனக்குண்டு
இல்லை எனக்கில்லை
வடக்கு உண்டு வடக்குண்டு
இல்லை வடக்கில்லை
பந்து உண்டு பந்துண்டு
இல்லை பந்தில்லை
பாட்டு உண்டு பாட்டுண்டு
இல்லை பாட்டில்லை

கட்டங்களில் உள்ள சொற்களை கொண்டு தொடர்களை உருவாக்குக

பாரி வீட்டுக்கு வந்தன
எழிலி வந்தான்
மாணவர்கள் வந்தது
மாடு வந்தார்கள்
மாடுகள் வந்தாள்
  • பாரி வீட்டுக்கு வந்தான்.
  • எழிலி வீட்டுக்கு வந்தாள்.
  • மாணவர்கள் வீட்டுக்கு வந்தார்கள்.
  • மாடு வீட்டுக்கு வந்தது.
  • மாடுகள் வீட்டுக்கு வந்தன.

கட்டங்களில் மறைந்துள்ள நால்வகைச் சொற்களை எழுதுக

கு ம் பே சி ன்
ரு ண் தா
ந் று டி ய்
ன் து ம் செ
மா டு ற் று
க் கி றா ன்

பெயர்ச்சொல்

  • குமரன், கரம், மாடு, பேருந்து, சிவன், தாய், வண்டி, செறு, பண், பசி, நகரம்

வினைச்சொல்

  • நடக்கிறாள், செய்தான்

இடைச்சொல்

  • கு, ஐ, உம், மற்று, தான்

உரிச்சொல்

  • உறு, மாநகரம்

நிற்க அதற்குத் தக

கலைச்சொல் அறிவோம்

  • நட்டுப்பற்று – Patriotism
  • இலக்கியம் – Literature
  • கலைக்கூடம் – Art Gallery
  • மெய்யுணர்வு – Knowledge of Reality

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “நால்வகைச் சொற்கள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வினை என்னும் சொல்லுக்குச் _________ என்பது பொருள்.

  1. பணி
  2. பனி
  3. செயல்
  4. புறிதல்

விடை : செயல்

2. இடைச்சொல் _________ இயங்காது.

  1. சேர்ந்து
  2. தனித்து
  3. திரிந்து
  4. கெட்டு

விடை : தனித்து

2. வ.உ.சி சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்த நாள்

  1. 16.01.1906
  2. 16.10.1906
  3. 17.10.1906
  4. 17.01.1906

விடை : 16.10.1906

குறுவினா

1. பெயர்ச்சொல் சான்றுடன் விளக்குக

ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

சான்று: பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.

2. வினைச்சொல் என்தனை சான்றுடன் கூறுக

வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

சான்று: வா, போ, எழுது, விளையாடு.

3. இடைச்சொல் என்றால் என்ன?

பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.

4. உரிச்சொல் என்பது என்ன?

பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்.

Leave a Comment