[Term-3] Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 Neengal Nallavar Book Back Solution

இயல் இரண்டு – நீங்கள் நல்லவர்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 2.2 ‘Neengal Nallavar’ Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 3 Lesson 2.2 பராபரக்கண்ணி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 6th Tamil Chapter 2.2 Neengal Nallavar Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 6th Tamil Guide PDF.

நீங்கள் நல்லவர் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Neengal Nallavar’ which is the first subject of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the Neengal Nallavar subject.

Next Lesson: தமிழ்க்கும்மி

நீங்கள் நல்லவர் பாடல்

வாழ்க்கை பின்திரும்பிச் செல்லாது
நேற்றுடன் ஒத்துப் போகாது
கொடுப்பவரின் பரிசுடன்
அவருக்குச் சமமாக எழுங்கள்
சிறகுகளின் மீது எழுவது போலஉழைக்கும்போது நீங்கள்
புல்லாங் குழலாகி விடுகிறீர்கள்
அதன் இதயம் காலத்தின் கிசுகிசுப்பை
ஓர் இசையாக மாற்றி விடுகிறது
உங்களுக்குள் இருக்கும்
நன்மையைப்பற்றித்தான்
நான் பேச முடியும்
தீமையைப் பற்றியல்லஉங்கள்சுயத்துடன்
நீங்கள் ஒருமைப்பாடு கொண்டிருக்கும்போது
நீங்கள் நல்லவர்
என்னைப்போல் இரு
பழுத்து உன் உள்ளீடுகளை எல்லாம்
முழுசாய்க்கொடு என்று
பழம் வேரைப் பார்த்து
நிச்சயமாகச் சொல்லாது
கொடுப்பது பழத்தின் இயல்பு
பெறுவது வேரின் இயல்பு

உங்கள் பேச்சின் போது
நீங்கள் விழிப்புணர்ச்சியுடன்
இருப்பது நல்லது
உறுதியாகக் கால்பதித்து
உங்கள் குறிக்கோளை நோக்கி நடக்கையில்
நீங்கள் நல்லவர்

– கலீல் கிப்ரான்

நூல் வெளி

  • கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.
  • கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.
  • இப்பாடப்பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

சொல்லும் பாெருளும்

  • சுயம் – தனித்தன்மை
  • உள்ளீடுகள் – உள்ளே இருப்பவை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பரிசு பெறும்போது நம் மனநிலை ……………… ஆக இருக்கும்

  1. கவலை
  2. துன்பம்
  3. மகிழ்ச்சி
  4. சோர்வு

விடை : மகிழ்ச்சி

2. வாழ்வில் உயர கடினமாக ……………… வேண்டும்.

  1. பேச
  2. சிரிக்க
  3. நடக்க
  4. உழைக்க

விடை : உழைக்க

குறு வினா

1. பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை?

பழுத்து உன் உள்ளீடுகளை எல்லாம் முழுசாய்க் கொடு என்று பழம் வேரைப் பார்த்து நிச்சயமாகச் செல்லாது. கொடுப்பது பழத்தின் இயல், பெறுவது வேரின் இயல்பு

2. உழைக்கும் போது என்னவாக ஆகிறோம்?

உழைக்கும் போது புல்லாங்குழலாக மாறுகிறோம்

சிந்தனை வினா

1. நல்லவர் என்னும் பெயர் பெற நாம் என்ன செய்யலாம்?

  • ஒழுக்கத்தில் உயர வேண்டும்.
  • வாய்மையைப் போற்ற வேண்டும் அல்லது கடைபிடிக்க வேண்டும்.
  • சமூகத் தொண்டின் வழியாக பிறருக்கு உதவ வேண்டும்.
  • உயிர்களிடத்தில் அன்பு காட்ட வேண்டும்.

2. உங்கள் குறிக்கோளை அடைய நீங்கள் செய்யும் முயற்சிகளை எழுதுக.

எனது குறிக்கோள் நல்ல பேச்சாளராக வேண்டும். அதற்கு தினமும் பள்ளிக்கு ஓழுங்காக செல்கிறேன். அதிகமான புத்தகங்களை வாசிக்கின்றேன். அவை உலக வரலாறு, இந்திய வரலாறு, உயிர்களின் தோற்றமும், வளர்ச்சியும் காலத்தை பயன்படுத்துவது எப்படு, அகராதிகள், உலகை வெல்வோம். உலக நாயகர்கள் வரலாறு, சாதனையாளர்கள் வரலாறு, அறிவியல் கண்டுபிடிப்புகள், செய்தித்தாள்கள், இதழ்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், புதுக்கவிதைகள், இலக்கணம், இலக்கிய வரலாறு, சமய வரலாறு, மொழி வரலாறு, உரைநடைகள், அறிவை வளர்ப்பது எப்படி என்று பல புத்தகங்களை வாசித்து வருகின்றேன்.

நான் வாசிப்பது மட்டுமல்லாது என் நண்பர்களையும் வாசிக்க ஊக்கமளிக்கிறேன். நிச்சயம் ஒரு நாள் சிறந்த பேச்சாளராக வருவேன் என்று நம்புகிறேன். இந்த இளமைப் பருவத்தை தக்கவிதமாய்ப் பயன்படுத்தி வருகிறேன்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “நீங்கள் நல்லவர்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புல்லாங்குழலாக மாறுபவர்கள்

  1. சோம்பலாக மனிதர்கள்
  2. தூங்கும் மனிதர்கள்
  3. உழைக்கும் மனிதர்கள்
  4. உழைக்கும் மனிதர்கள்

விடை : புல்லாங்குழலாக

2. காெடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு இவ்வரியின் ஆசரியர்

  1. கண்ணதாசன்
  2. வைரமுத்து
  3. கலீலில் கிப்ரான்
  4. அழ. வள்ளியப்பா

விடை : கலீலில் கிப்ரான்

3. சுயம் என்பதன் பொருள்

  1. முக ஒப்பனை
  2. பாடும் திறன்
  3. கோபம்
  4. தனித்தன்மை

விடை : தனித்தன்மை

4. நீங்கள் நல்லவர் என்ற பாடலைத் தமிழ்மொழியில் மொழி பெயர்த்தவர் _____________

  1. கண்ணதாசன்
  2. வைரமுத்து
  3. புவியரசு
  4. அழ. வள்ளியப்பா

விடை : புவியரசு

5. கலீல் கிப்ரான் ____________ நாட்டைச் சார்ந்தவர்

  1. லெபனான்
  2. ஸ்பெயின்
  3. இஸ்ரேல்
  4. அரபுநாடு

விடை : லெபனான்

6. உழைக்கும்போது நீங்கள்
புல்லாங் குழலாகி விடுகிறீர்கள்
இவ்வரியினை எழுதியவர்

  1. கண்ணதாசன்
  2. வைரமுத்து
  3. அழ. வள்ளியப்பா
  4. கலீலில் கிப்ரான்

விடை : கலீலில் கிப்ரான்

Leave a Comment