Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 Sirakin Osai Book Back Solution

இயல் 2.3 – சிறகின் ஓசை

சிறகின் ஓசை வினா விடை: Greetings, students! We are pleased to present our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 2.3, titled “Sirakin Osai”. In this guide, you will find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 1 Lesson 2.3, including one-mark to big-mark questions, as well as additional questions for competitive exam preparation. We hope you find this guide helpful!

சிறகின் ஓசை பாட வினா விடைகள்

Here, you can find answers to the questions for the lesson ‘Sirakin Osai’ in the first term of class 6 Tamil. Additionally, there are extra questions available that are related to the same lesson.

உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தட்பவெப்பம் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ____________

  1. தட்பம் + வெப்பம்
  2. தட்ப + வெப்பம்
  3. தட் + வெப்பம்
  4. தட்பு + வெப்பம்

விடை : தட்பம் + வெப்பம்

2. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ____________

  1. வேதி + யுரங்கள்
  2. வேதி + உரங்கள்
  3. வேத் + உரங்கள்
  4. வேதியு + ரங்கள்

விடை : வேதி + உரங்கள்

3. தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____________

  1. தரையிறங்கும்
  2. தரைஇறங்கும்
  3. தரையுறங்கும்
  4. தரைய்றங்கும்

விடை : தரையிறங்கும்

4. வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. வழிதடம்
  2. வழித்தடம்
  3. வழிதிடம்
  4. வழித்திடம்

விடை : வழித்தடம்

5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி _______

  1. துருவப்பகுதி
  2. இமயமலை
  3. இந்தியா
  4. தமிழ்நாடு

விடை : துருவப்பகுதி

Previous Chapter: காணி நிலம் வினா விடை

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை ______________

விடை : ஆர்டிக் ஆலா

2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் ______________

விடை : சத்திமுத்தப் புலவர்

3. பறவைகள் இடம்பெயர்வதற்கு ______________ என்று பெயர்.

விடை : வலசைபோதல்

4. இந்தியாவின் பறவை மனிதர் ______________

விடை : டாக்டர் சலீம் அலி

5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று _____________________

விடை : தட்ப வெப்பநிலை மாற்றம்

சொற்றொடர் அமைத்து எழுதுக.

1. வெளிநாடு

விடை : ராமு வேலைக்காக வெளிநாடு சென்றான்.

2. வாழ்நாள்

விடை : சிட்டுக்குருவியின் வாழ்நாள் 10 முதல் 15 ஆண்டுகள்

3. செயற்கை

விடை : செயற்கை உரங்களால் பறைவகள் அழிகின்றன

பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக.

1. மரங்களை வளர்த்து ______________ யைக் காப்போம். _____________ உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம். (செயற்கை / இயற்கை)

விடை : இயற்கை / செயற்கை

2. வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் ________________. தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை ____________ (குறைந்துள்ளது / மிகுந்துள்ளது)

விடை : மிகுந்துள்ளது / குறைந்துள்ளது

குறு வினா

1. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?

உணவு, இருப்பிடம், தட்பவெப்நிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகப் பறவைகள் இடம் பெயர்கின்றன.

2. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?

வலசையின்போது பறவையின் தலையில் சிறகு வளர்தல், இறகுகளின் நிறம் மாறுதல், உடலில் கற்றையாக முடி வளர்தல் (ஒருவகைப் பறவையை வேறு வகைப் பறவை என்று கருதும்  அளவிற்குக்கூட சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்.) போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது

சிறு வினா

1. சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக.

  • சிட்டுக்குருவி கூடு கட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.
  • கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
  • துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன .
  • இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில்
    4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.
  • தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக் குருவிகளின் உணவாகும்.
  • சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும். அதனால், தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும்.
  • சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும்.
  • சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும்.

2. வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?

  • பறவைகள் கண்டம் விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன;
  • குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன. இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தலை ‘வலசைபோதல் ‘ என்பர். நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.
  • பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன.
  • சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை இனங்கள் போவதற்கும், வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.
  • பயணம் செய்யும்போது சிலவகைப் பறவைகள் இரை , ஓய்வு போன்ற தேவைகளுக்காகத் தரை இறங்கும். இடையில் எங்கும் நிற்காமல் பறந்து, வாழிடம் சேரும் பறவைகளும் உண்டு.
  • வலசையின்போது பறவையின் தலையில் சிறகு வளர்தல், இறகுகளின் நிறம் மாறுதல், உடலில் கற்றையாக முடி வளர்தல் (ஒருவகைப் பறவையை வேறு வகைப் பறவை என்று கருதும்  அளவிற்குக்கூட சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்.) போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது

குறு வினா

1. பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.

  • ஆலமரம், அரசமரம், வேப்பமரம் போன்ற மரங்கள் நம் வீட்டருகில் வளர்க்க வேண்டும். அவ்வாறு வளரத்தால் அம்மரங்களின் கனிகளை உண்ண பல பறவைகள் வரும் பறவைகளுக்கு உணவும், தங்க இடமும் கிடைக்கும்.
  • தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • பல வகையான கனிகளைத் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். தானியப் பயிர்களை வளர்க்க வேண்டும்.
  • பறவை இனங்களை வேட்டையாடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
  • குருவி இனங்கள் கூடுகட்டிக் கொள்ளும் வகையில் மனிதர்கள் தன் வாழிடத்தை அமைத்தல் வேண்டும்.
  • பறவைகளுக்கு நம்மால் முடித்தவரை செய்யாமல் அன்பு செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தண்ணீர், உணவு வழங்கும் பழக்கத்தை தினமும் செய்ய வேண்டும்.
  • பறவையினங்களை உண்பது தவிர்க்கப்பட வேண்டும்.
  • அதிகமான மரங்களை வளர்த்தல் வேண்டும்.
  • காட்டை அழிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • மற்ற உயிர்களும் மனிதனைப் போல் படைக்கப்பட்டது என்பதை உணர்ந்து மனிதர்கள் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  • பறவையினங்கள் வாழ ஏற்ற சூழ்நிலைகளை அமைத்து கொடுத்தல் வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால் பறவையினங்கள் அழியாமல் காப்பாற்றப்படும்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “சிறகின் ஓசை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. “நாராய் நாராய்” எனத்தாெடங்கும் பாடலை எழுதியவர் __________________

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. சத்திமுத்தப்புலவர்
  4. சுரதா

விடை : சத்திமுத்தப்புலவர்

2. உலகச் சிட்டுக் குருவிகள் நாள் __________________

  1. மார்ச் 22
  2. மார்ச் 21
  3. மார்ச் 20
  4. மார்ச் 23

விடை : மார்ச் 20

3. பெருமை + கடல் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____________

  1. பெருங்கடல்
  2. பெருமைகடல்
  3. பெருகடல்
  4. பெருமைக்கடல்

விடை : பெருங்கடல்

4. பறவை + இனம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____________

  1. பறவைஇனம்
  2. பறவைஈனம்
  3. பறவயினம்
  4. பறவையினம்

விடை : பறவையினம்

5. செம்மை + காேல் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____________

  1. செம்மைகாேல்
  2. செங்காேல்
  3. செம்காேல்
  4. செமைகோல்

விடை : செங்காேல்

6. வடதிசை என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ____________

  1. வட + திசை
  2. வடக்கு + திசை
  3. வடக்குத் + திசை
  4. வடக் + திசை

விடை : வடக்கு + திசை

6. இளந்தளிர் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ____________

  1. இளந் + தளிர்
  2. இளந்த + ளிர்
  3. இளமை + தளிர்
  4. இள + த்தளிர்

விடை : வடக்கு + திசை

7. ஆண் குருவியின் தாெண்டைப் பகுதி __________________ நிறத்தில் இருக்கும்.

  1. ஆரஞ்சு
  2. கறுப்பு
  3. சிவப்பு
  4. இளஞ்சிவப்பு

விடை : கறுப்பு

8. சிட்டுக்குருவி ______________ நாள்கள் அடைகாக்கும்.

  1. 10
  2. 12
  3. 14
  4. 16

விடை : 14

குறுவினா

1. குருவிக் குஞ்சுகளுக்கு உணவான புழுபூச்சிகள் கிடைகக்காதற்கு காரணம் யாது?

மனிதர்கள் விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் குருவிக் குஞ்சுகளுக்கு உணவான புழுபூச்சிகள் கிடைப்பதில்லை.

2. ஆர்னித்தாலஜி என்பது யாது?

பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY) எனப்படும்.

3. பறவைகள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு இடம் பெயர்கின்றன?

உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம்,  இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன. நிலவு, விண்மீன்,  புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன.

6th Tamil Text Books Pdf

Leave a Comment