[Term-2] Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 Valarum Vanigam Book Back Solution

இயல் 3.3 – வளரும் வணிகம்

Hello students! Welcome to our guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 3.3 ‘Valarum Vanigam’. Here, you will find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 2 Lesson 3.3 ‘வளரும் வணிகம்’.

வளரும் வணிகம் வினா விடை

On this page, you will find the answers to the questions for the first subject of Class 6 Tamil, “Valarum Vanigam.” You can also access additional questions related to this subject.

Previous Lesson: கடலோடு விளையாடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பாெருள் வாங்குபவர்_______

  1. நுகர்வோர்
  2. தொழிலாளி
  3. முதலீட்டாளர்
  4. நெசவாளி

விடை: நுகர்வோர்

2. வணிகம் + சாத்து என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. வணிகசாத்து
  2.  வணிகம்சாத்து
  3. வணிகச்சாத்து
  4. வணிகத்துசாத்து

விடை: வணிகச்சாத்து

3. பண்டம் + மாற்று என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. பண்டமாற்று
  2. பண்டம்மாற்று
  3. பண்மாற்று
  4. பண்டுமாற்று

விடை: பண்டமாற்று

4. வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. வண்ணம்+படங்கள்
  2. வண்ணப்+படங்கள்
  3. வண்ண+படங்கள்
  4. வண்ணமான+படங்கள்

விடை: வண்ணம்+படங்கள்

5. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. விரி + வடைந்த
  2. விரி + அடைந்த
  3. விரிவு + அடைந்த
  4. விரிவ் + அடைந்த

விடை: விரிவு + அடைந்த

சொற்களை சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. வணிகம்

விடை : ஒரு பொருளை பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும்  வணிகம் ஆகும்.

2. ஏற்றுமதி

விடை : ஒரு நாட்டில் தேவைகளுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

3. சில்லறை

விடை : சில்லறை கொள்முதல் செய்வது சிறுவணிகம் ஆகும்

4. கப்பல்

விடை : ஒட்டகம் பாலைவன கப்பல் என அழைக்கப்படுகிறது.

குறு வினா

1. வணிகம் என்றால் என்ன?

மனிதன் தனக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. தனக்குத் தேவையான சில பொருள்களை பிறரிடமிருந்து வாங்குவான்.

தன்னிடம் உள்ள சில பொருள்களை பிறருக்கு தருவான். இவ்வாறு ஒரு பொருளை பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும்  வணிகம் ஆகும்.

2. பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டு தருக?

நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களை பிறருக்க கொடுத்து, தனக்கு தேவையான பொருள்களை பிறரிடம் இருந்து பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகமுறை ஆகும்.

எ.கா.

  • நெல்லை கொடுத்து அதற்குப் பதிலாக உப்பை பெறுதல்
  • ஆட்டின் பாலைக் கொடுத்து தானியத்தை பெறுதல்

3. சிறுவணிகப் பொருட்கள் யாவை?

சிறு முதலீட்டல் பொருட்களை வாங்கி வந்து வீதிகளில் வைத்து விற்பனை செய்வதும்; தலையில் சுமந்து சென்று விற்பதும்; தரைக்கடை அமைத்து விற்பதும்; தள்ளுவண்டியின் மூலம் விற்பதும்; போன்ற முறைகளில் விறகும் பொருட்கள் சிறுவணிகப் பொருட்கள் ஆகும்.

சிறு வினா

1. சிறுவணிகம், பெருவணிகம் வேறுபடுத்துக

சிறு வணிகம் பெரு வணிகம்
1. சிறு முதலீட்டில் பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்வது பெரு முதலீட்டில் அதிக அளவு பொருட்களை வாங்கி விற்பனை செய்வது
2. வீதியில் கொண்டு சென்று விற்பது பெரிய அளவில் கடைகள் அமைத்து விற்பது
3. சில்லறை கொள்முதல் செய்வது மொத்தமாக கொள்முதல் செய்வது
4. பெருவணிகர்களிடம் பொருட்களை வாங்குவார்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் பொருட்களை வாங்குவார்கள்
5. சிறு லாபம் கிடைக்கும் பெரு லாபம் கிடைக்கும்
6. நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்வது அதிகம் நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்வது குறைவு

2. பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?

  • பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவைகளை பிறநாட்டுக்கு ஏற்றுமதி செய்தனர்.
  • பழங்காலத்தில் சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. அரேபியாவில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன

சிந்தனை வினா

1. வணிகப் பொருள்கள் தற்காலத்தில் எவ்வாறெல்லாம் மக்களை வந்தடைகின்றன?

வணிகப் பொருள்கள் தற்காலத்தில் தரைவழி மார்க்கமாவும், கடல்வழி மார்க்கமாகவும், வான்வெளி மார்க்கமாவும், இணையவழி மக்களை வந்தடைகின்றன.

2. உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்களைப் பட்டியலிடுக.

கைத்தறி, நெசவு, தீப்பெட்டி, பட்டாசு, பால்பண்ணை, அரிசி, எண்ணெய் உற்பத்தி செய்தல், சிமெண்ட் ஆலை, சுண்ணாம்பு உற்பத்தி செய்தல், சர்க்கரை ஆலை, பீடித் தொழிற்சாலை, நூற்பாலை, நார், கயிறு ஆலை, பீடித் தொழிற்சாலை, நூற்பாலை, நார், கயிறு ஆலை, சோப்பு தயாரித்தல், உழவுத்தொழில், இனிப்பு மிட்டாய் ஆலை, பாய் முடைதல், செருப்பு தயாரித்தல், மீன் பிடித்தல், காகித அட்டை தயாரிப்பு, பின்னலாடைகள் போன்ற பல தொழில்கள் எங்கள் பகுதியல் நடைபெறுகின்றன.

ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக

(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரவோலை, வங்கி, மின்னணு மயம், பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)

ஆங்கிலச் சொல் தமிழ்ச்சொல்
கரன்சிநோட் பணத்தாள்
பேங்க் வங்கி
செக் காசோலை
டிமாண்ட் டிராப்ட் வரவோலை
டிஜிட்டல் மின்னணு மயம்
டெபிட் கார்டு பற்று அட்டை
கிரெடிட் கார்டு கடன் அட்டை
ஆன்லைன் ஷாப்பிங் இணையத்தள வணிகம்
ஈ-காமர்ஸ் மின்னணு வணிகம்

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “வளரும் வணிகம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தமிழ்நாட்டின் தலைசிறந்த காப்பிய கால துறைமுகம் ______________

  1. சென்னை
  2. நாகப்பட்டினம்
  3. பூம்புகார்
  4. எண்ணூர்

விடை : பூம்புகார்

2. குதிரைகள் ______________ இருந்து வாங்கப்பட்டவை 

  1. சீனா
  2. அரேபியாவில்
  3. எகிப்து
  4. இலங்கை

விடை : அரேபியாவில்

3. நடுவு நின்ற நன்னெஞ்சினோர் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. திருக்குறள்
  2. குறுந்தொகை
  3. பட்டினப்பாலை
  4. அகநானூறு

விடை : பட்டினப்பாலை

4. வணிகர் என்பவர் _______________. நுகர்வோர்  ________________

  1. பொருட்களை விற்பவர், பொருட்களை வாங்குபவர்
  2. பொருட்களை வாங்குபவர், பொருட்களை விற்பவர்
  3. பொருட்களை உற்பத்தி செய்பவர், பொருட்களை விற்பவர்
  4. பொருட்களை வாங்குபவர், பொருட்களை உற்பத்தி செய்பவர்
  5. உற்பத்தியாளர், நுகர்வோர்

விடை : பொருட்களை விற்பவர், பொருட்களை வாங்குபவர்

5. கொள்வதும் மிகை கொள்ளாது
    கொடுப்பதும் குறைபடாது பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. திருக்குறள்
  2. குறுந்தொகை
  3. அகநானூறு
  4. பட்டினப்பாலை

விடை : பட்டினப்பாலை

6. தமிழ்நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பொருந்தாது

  1. தேக்கு
  2. மயில்தோகை
  3. சந்தனம்
  4. கற்பூரம்

விடை : கற்பூரம்

6. சீனத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவதில் பொருந்தாததை எழுதுக

  1. அரிசி
  2. கண்ணாடி
  3. கற்பூரம்
  4. பட்டு

விடை : அரிசி

பொருத்துக

1. நற்றிணை பாலோடு வந்து கூழொடு பெயரும் ……
2. குறுந்தொகை பொன்னோடு வந்து கறியோடு பெயரும் ……
3. அகநானூறு தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி
………. உமணர் போகலும்
விடை: 1 – இ, 2 – அ, 3 ஆ

சிறு வினா

1. பண்டைய காலங்களில் துறைமுக நகரங்களை எப்படியெல்லாம் குறித்தனர்?

பண்டைய காலங்களில் துறைமுக நகரங்களை பட்டினம் என்றும், பாக்கம் என்றும் குறித்தனர்

2. வணிக வகைகளை கூறுக

தனிநபர் வணிகம், நிறுவன வணிகம்

3. தனிநபர் வணிகம் என்றால் என்ன?

தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் தனிநபர் வணிகம் எனப்படும்

4. நிறுவன வணிகம் எனபது என்ன?

ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகம் நடத்தவது நிறுவன வணிகம் ஆகும்

5. வணிகத்திற்காக வெளியூர் செல்லும் குழவிற்கு இடப்படுள்ள பெயர் என்ன?.

வணிகர்கள் வணிகத்திற்காக வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூர்களுக்குச் குழுவாகவே செல்லுவதற்கு வணிகசாத்து எனப் பெயரிட்டுள்ளன.

6. சிறுவணிகர்கள் என்தற்கு விளக்கம் தருக

நம் அன்றாடத் தேவைகளான பால், கீரை, காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் சிறு வணிகர்கள் ஆவர்.

6th Tamil Text Books Pdf

Leave a Comment