[Term-2] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 Inbatamil Kalvi Book Back Solution

இயல் இரண்டு – இன்பத்தமிழ்க் கல்வி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 2.1 ‘Inbatamil Kalvi’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 2 Lesson 2.1 வாழ்விக்கும் கல்வி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 2.1 Inbatamil Kalvi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

இன்பத்தமிழ்க் கல்வி பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Inbatamil Kalvi’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Inbatamil Kalvi subject.

Next Lesson: இலக்கியவகைச் சொற்கள்

இன்பத்தமிழ்க் கல்வி பாடல்

ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
என்னை எழுதென்று சொன்னது வான்
ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக என்றுரைக்கும்
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்
ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க என்றார்சோலைக் குளிர்தரு தென்றல் வரும்பசுந்
தோகை மயில்வரும் அன்னம் வரும்
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சி தரும்
வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்
வெற்பென்று சொல்லி வரைக என்னும்
கோலங்கள் யாவும் மலை மலையாய் வந்து
கூவின என்னை – இவற்றிடையே

இன்னலிலே தமிழ் நாட்டினிலேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்
அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே
இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்
துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில்
தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் !

– பாரதிதாசன்

சொல்லும் பொருளும்

  • எத்தனிக்கும் – முயலும்
  • பரிதி – கதிரவன்
  • வெற்பு – மலை
  • அன்னதோர் – அப்படி ஒரு
  • கழனி – வயல்
  • கார்முகில் – மழைமேகம்
  • நிகர – சமம்
  • துயின்றிருந்தோர் – உறங்கியிருந்தார்

பாடலின் பொருள்

கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன். என்னைக் கவிதையாக எழுதுக என்று வானம் கூறியது. நீரோடையும் தாமரை மலர்களும் “எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக” என்றன. காடும் வயல்களும் கருநிற மேகங்களும் என் கண்களைக் கவர்ந்து, கவிதையில் இடம்பெற முயன்றன. ஆடும் மயில் போன்ற பெண்கள் “அன்பினைக் கவிதையாக எழுதுக” என்றனர்.

சோலையின் குளிர்ந்த தென்றல் வந்தது. பசுமையான தோகையையுடைய மயில் வந்தது. அன்னம் வந்தது. மாணிக்கம் போல் ஒளி வீசி மாலையில் மேற்குத் திசையில் மறைகின்றகதிரவனும் வந்தான். வேல் ஏந்திய வீரர்கள், “மலை போன்ற எங்களது தோள்களின் அழகினை எழுதுங்கள்” என்றனர். இவ்வாறு அழகிய காட்சிகள் எல்லாம் பெருந்திரளாக வந்து தங்களைக் கவிதையாக எழுதுமாறு கூறின.

ஆனால், துன்பத்தில் கிடக்கும் என் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள். அந்தக் காட்சி என் மனத்தில் இரக்கத்தை உண்டாக்கி, என் உயிரில் வந்து கலந்து விட்டது. இத்துன்பம் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்பட வேண்டும். அந்நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கிடும். நெஞ்சில் தூய்மை உண்டாகிடும். வீரம் வரும்.

நூல் வெளி

  • கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன்.
  • இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர்.
  • பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
  • இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடகநூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.
  • பாரதிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் உள்ள பாடல் இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ________.

  1. மயில்
  2. குயில்
  3. கிளி
  4. அன்னம்

விடை : மயில்

2. பின்வருவனவற்றுள் மலையைக் குறிக்கும் சொல்

  1. வெற்பு
  2. காடு
  3. கழனி
  4. புவி

விடை : வெற்பு

3. ஏடெடுத்தேன் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. ஏடெடு + தேன்
  2. ஏட்டு + எடுத்தேன்
  3. ஏடு + எடுத்தேன்
  4. ஏ + டெடுத்தேன்

விடை : ஏடு + எடுத்தேன்

4. துயின்றிருந்தார் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. துயின்று + இருந்தார்
  2. துயில் + இருந்தார்
  3. துயின்றி + இருந்தார்
  4. துயின் + இருந்தார்

விடை : துயின்று + இருந்தார்

5. என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.

  1. என்றுஉரைக்கும்
  2. என்றிரைக்கும்
  3. என்றரைக்கும்
  4. என்றுரைக்கும்

விடை : என்றுரைக்கும்

பொருத்துக

  1. கழனி – கதிரவன்
  2. நிகர் – மேகம்
  3. பரிதி – சமம்
  4. முகில் – வயல்

விடை : 1 – ஈ, 2 -இ , 3 – அ, 4 – ஆ

குறு வினா

1. பாரதிதாசனின் மனத்தைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?

வானம், நீரோடை, தாமரை, காடு, வயல், மேகம், தென்றல், மயில், அன்னம், கதிரவன்

2. தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்?

தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள்

  • தமிழ்நாட்டு மக்கள் அறியாமை தூக்கம் களையும்
  • வாழ்வின் துன்பங்கள் நீங்கும்
  • நெஞ்சில் தூய்மை உண்டாகும்.
  • வீரம் வரும்

சிறு வினா

இன்பத்தமிழ்க் கல்வி பாடலின் மையக்கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக.

  • பாரதிதாசன் கவிதை எழுத ஏட்டினை எடுத்தார். வானம் தன்னைக் கவிதையாக எழுதும்படிக் கூறியது.
  • நீரோடை, தாமரை, காடு, வயல், மேகம் ஆகியன அவரைக் கவர்ந்து தங்களைக் கவிதை எழுதும்படி அவரிடம் வேண்டியது.
  • மயில் போன்ற பெண்கள் அன்பைக் கவிதையாக எழுதும்படிக் கூறினர்.
  • தென்றல், மயில், அன்னம், கதிரவன், வீரர்கள் ஆகியனவும் அவரிடம் கவிதை எழுத வேண்டின.
  • ஆனால் துன்பத்தில் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கொண்டு  இருக்கின்றார்கள்.
  • அதனை நீங்க இன்பத்தமிழ் கல்வி கற்க வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பம் நீங்கும்.
  • மனதில் தூய்மை உண்டாகும், வீரம் வரும்.

சிந்தனை வினா

தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

  • எளிதில் பொருள் விளங்கி நன்கு பாடப்புரிதல் ஏற்படும்.
  • பழந்தமிழ் கலை, பண்பாடு, மரபு ஆகியன காக்கப்படும்.
  • தொன்மையும், வரலாற்றையும் நன்கு உணரலாம்.
  • விழுமிய தமிழ்ச் சிந்தனைகளை அறியலாம்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “வாழ்விக்கும் கல்வி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிசிராந்தையார் என்னும் நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்

  1. பாரதிதாசன்
  2. க.சமுத்திரம்
  3. ராஜம் கிருஷ்ணன்
  4. ம.பொ.சி

விடை : பாரதிதாசன்

2. பாரதிதாசன் நூல்களில் பொருந்தாதது

  1. பாண்டியன் பரிசு
  2. அழகின் சிரிப்பு
  3. இசையமுது
  4. வெளிச்சம் தரும் விளக்கு

விடை : வெளிச்சம் தரும் விளக்கு

3. கண்ணகி புரட்சிக் காப்பியம் நூலின் ஆசிரியர்

  1. பாரதிதாசன்
  2. க.சமுத்திரம்
  3. ராஜம் கிருஷ்ணன்
  4. ம.பொ.சி

விடை : பாரதிதாசன்

5. பரிதி என்ற சொல்லின் பொருள்

  1. சூரியன்
  2. நிகர்
  3. முகில்
  4. கழனி

விடை : பரிதி

5. எழுதென்று என்ற சொல்லினை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. எழுது + என்று
  2. எழுத்து + என்று
  3. எழுது + தென்று
  4. எழு + தென்று

விடை : எழுது + என்று

6. என்றுரைக்கும் என்ற சொல்லினை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. என்று + யுரைக்கும்
  2. என்று + உரைக்கும்
  3. என்ற்று + யுரைக்கும்
  4. என்று+ உரைகும்

விடை : என்று + உரைக்கும்

7. வெற்பு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. வெற்என்று
  2. வெற்பென்று
  3. வெற்பு என்று
  4. வெற்பு அன்று

விடை : வெற்பென்று

8. பெண்கள் + எல்லாம்என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. பெண்கள் எல்லாம்
  2. பெண்களெல்லாம்
  3. பெண்கள் ஏல்லாம்
  4. பெண்களெலாம்

விடை : பெண்களெல்லாம்

9. சித்திரம் என்ற சொல்லின் பொருள்

  1. நாடகம்
  2. ஓவியம்
  3. இசை
  4. பாடல்

விடை : ஓவியம்

குறு வினா

1. பாரதிதாசன் இயற்றியுள்ள நூல்கள் யாவை?

பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம்

2. பாரதிதாசன் குறிப்பு வரைக

  • இயற்பெயர் – சுப்புரத்தினம்
  • பன்முக ஆற்றல் – கவிஞர், இதழாளர், தமிழாசிரியர்
  • படைப்புகள் – பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம்
  • விருது – சாகித்திய அகாடமி விருது (பிசிராந்தையார் – 1969)

Leave a Comment