[Term-2] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.1 Oru Vendukol Book Back Solution

இயல் மூன்று – ஒரு வேண்டுகோள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 3.1 ‘Oru Vendukol’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 2 Lesson 3.1 ஒரு வேண்டுகோள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 3.1 Oru Vendukol Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

ஒரு வேண்டுகோள் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Oru Vendukol’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Oru Vendukol subject.

Next Lesson: ஓரெழுத்து ஒரு மொழி, பகுபதம், பகாப்பதம்

ஒரு வேண்டுகோள் பாடல்

கலையுலகப் பிரும்மாக்களே
மண்ணின் வனப்புக்குப்
புதிய அழகுகள் சேர்ப்பவர்களே
ஒரு மானுடத்தின் வேண்டுகோள்நீங்கள் சிற்பிகளாகப்
பாறை உடைப்பவனின்
சிலை வடித்தால்
வியர்வை நெடி வீசட்டும் அதில்வயல்வெளி உழவனின்
உருவ வார்ப்பெனில்
ஈரமண் வாசம்
இருக்க வேண்டும் அதில்

ஓவியர்களாகத்
தாய்மையின் பூரிப்பைச் சித்திரமாக்கினால்
அவள் முகப்பொலிவில்
வழித்தெடுக்குமாறு இருக்கட்டும்
கரிசன பாச உணர்வுகள்

ஒரு சின்ன மழலைச் சித்திரமா
பால் மணம் கமழ வேண்டும்
அதன் பளிங்கு மேனியில்

ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களா
அட்லாண்டிக் சமுத்திர அலைகளா
அமேசான் காடுகளா
பனிபடர் பள்ளத்தாக்குகளா
தொங்கும் அதிசயத் தோட்டங்களா
இயற்கையின் பிரமிப்பு எதுவும்
கலைவடிவு கொள்ளலாம்

ஏதாயினும் இதை நினைவில் கொள்ளுங்கள்
மானுட அடையாளம் ஒன்று
இருக்கவேண்டும் அதில் கட்டாயம்
மனிதன் இல்லாத – இணையாத
எந்த வனப்பும் வனப்பில்லை
அவன் கலவாத எதிலும்ஜீவ உயிர்ப்பில்லை…

-தேனரசன்

பாடலின் பொருள்

கலையுலகப் படைப்பாளர்களே! மண்ணின் அழகுக்கு அழகு சேர்ப்பவர்களே உங்களுக்கு ஒரு மனித சமுதாயத்தின் வேண்டுகோள்!

நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீசவேண்டும். உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.

தாயின் மகிழ்ச்சியான உருவத்தை ஓவியமாக வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும். சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும்.

ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள், அமேசான் காடுகள், பனிபடர் பள்ளத்தாக்குகள், தொங்கும் தோட்டங்கள் என இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலைவடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயமாக இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.

நூல் வெளி

  • தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
  • இவர் வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.
  • இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.
  • மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
  • பாடப்பகுதியிலுள்ள கவிதை பெய்து பழகிய மேகம் என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

சொல்லும் பொருளும்

  • பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
  • வனப்பு – அழகு
  • நெடி – நாற்றம்
  • பூரிப்பு – மகிழ்ச்சி
  • மழலை – குழந்தை
  • மேனி – உடல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மயிலும் மானும் வனத்திற்கு _________ தருகின்றன.

  1. களைப்பு
  2. வனப்பு
  3. மலைப்பு
  4. உழைப்பு

விடை : வனப்பு

2. மிளகாய் வற்றலின் _________ தும்மலை வரவழைக்கும்.

  1. நெடி
  2. காட்சி
  3. மணம்
  4. ஓசை

விடை : நெடி

3. அன்னை தான் பெற்ற ______ சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.

  1. தங்கையின்
  2. தம்பியின்
  3. மழலையின்
  4. கணவனின்

விடை : மழலையின்

4. வனப்பில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

  1. வனம் + இல்லை
  2. வனப்பு + இல்லை
  3. வனப்பு + யில்லை
  4. வனப் + பில்லை

விடை : வனப்பு + இல்லை

5. வார்ப்பு + எனில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. வார்ப்எனில்
  2. வார்ப்பினில்
  3. வார்ப்பெனில்
  4. வார்ப்பு எனில்

விடை : வார்ப்பெனில்

நயம் அறிக

ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும் இயைபுச் சொற்களைப் பாடலில் இருந்து எடுத்து எழுதுக.

  1. பிரும்மாக்களே – சேர்ப்பவர்களே
  2. உடைப்பவனின் – உழவனின்
  3. சிகரங்களா – அலைகளா – காடுகளா
  4. பள்ளத்தாக்குகளா – தோட்டங்களா
  5. வனப்பில்லை – உயிர்ப்பில்லை

குறு வினா

1. தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை யாவை?

தாய்மையின் ஓவியத்தில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும்.

2. ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?

இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயம் இருக்க வேண்டும்.

மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.

சிறு வினா

1. சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

  • நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையை செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீச வேண்டும்.
  • உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈர மண்ணின் மணம் வீச வேண்டும்.
  • தாயின் மகிழ்ச்சியான உருவத்தை ஓவியமாக வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும், பாசமும் நிறைந்திருக்க வேண்டும்.
  • சிறு குழந்தையின் சித்திரத்தை தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும்.
  • ஆல்பஸ் மலைச் சிகரஙகள் உள்ளிட்ட இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயம் இருக்க வேண்டும்.
  • மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.

சிந்தனை வினா

நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் எத்தகைய படைப்புகளை உருவாக்குவீர்கள்?

நான் ஒரு ஓவியக்கலைஞராக இருந்தால் உயிரோட்டமுள்ள ஓவியங்களையும் மனிதநேயச் சிந்தனைய வெளிப்படுத்தும் வகையில் மக்கள் விழிப்படைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களையும் சமுதாய முன்னேற்றத்திற்கான ஓவியங்களையும் உருவாக்குவேன்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “ஒரு வேண்டுகோள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தேனரசன் எழுதிய கவிதை நூல்களில் பொருந்தாதது

  1. மண்வாசல்
  2. வெள்ளை ராஜா
  3. பெய்து பழகிய மேகம்
  4. ஒரு வேண்டுகோள்

விடை : ஒரு வேண்டுகோள்

2. நெடி என்பதன் பொருள்

  1. ஈரமண்
  2. அழகு
  3. பால்மணம்
  4. நாற்றம்

விடை : நாற்றம்

3. வனப்பு என்ற சொல்லின் பொருள்

  1. அழகு
  2. ஈரமண்
  3. பால்மணம்
  4. நாற்றம்

விடை : அழகு

4. மேனி என்ற சொல்லின் பொருள்

  1. மண்
  2. குழந்தை
  3. உடல்
  4. தலை

விடை : உடல்

5. கலை+ உலகம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. கலையுலகம்
  2. கலை உலகம்
  3. கல் உலகம்
  4. கல்லாவுலகம்

விடை : கலையுலகம்

6. ஈரம் + மண் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. ஈரமண்
  2. ஈரம் மண்
  3. ஈரமான மண்
  4. ஈரமா மண்

விடை : ஈரமண்

7. முகம் + பொலிவு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. முகம் பொலிவு
  2. முகம் ஒலிவு
  3. முகப்பொலிவு
  4. முகப்பபொலிவு

விடை : முகப்பொலிவு

8. சித்திரமாக்கினால் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. சித்திரம் + மாக்கினால்
  2. சித்திரமா + க்கினால்
  3. சித்திரம் + ஆக்கினால்
  4. சித்திரம்மா + க்கினால்

விடை : முகப்பொலிவு

9. உயிர்ப்பில்லை என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. உயிர்பு + இல்லை
  2. உயிர்ப்பு + இல்லை
  3. உயிர்ப்பு + வில்லை
  4. உயிர்ப் + பில்லை

விடை : உயிர்ப்பு + இல்லை

குறு வினா

1. தேனரசனின் படைப்புகளை எழுதுக

  • மண்வாசல்
  • வெள்ளை ரோஜா
  • பெய்து பழகிய மேகம்

2. தேனரசன் தன் கவிதைகளை வெளியிட்டுள்ள இதழ்களை கூறுக

  • வானம்பாடி
  • குயில்
  • தென்றல்

3. தேனரசன் பற்றிய குறிப்பு வரைக 

  • தேனரசன் தமிழாசிரியராகப் யாற்றியவர்.
  • இவர் வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.
  • இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையாேடு வெளிப்படும்.
  • மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்

Leave a Comment