Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 Varumun Kappom Book Back Solution

இயல் 3.2 – வருமுன் காப்போம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 3.2 ‘Varumun Kappom ‘ Here, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 3.2 வருமுன் காப்போம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 3.2 Varumun Kappom Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

வருமுன் காப்போம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Varumun Kappom’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Varumun Kappom subject.

Previous Lesson: நோயும் மருந்தும்

வருமுன் காப்போம் பாடல்

உடலின் உறுதி உடையவரே
உலகில் இன்பம் உடையவராம்;
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?


சுத்தம் உள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீயதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே!

காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே!

கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடியப்பா
ஏழை யேநீ ஆனாலும்,
இரவில் நன்றாய் உறங்கப்பா!

மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல்
திட்டு முட்டுப் பட்டிடுவாய்!
தினமும் பாயில் விழுந்திடுவாய்!

தூய காற்றும் நன்னீரும்,
சுண்டப் பசித்த பின்உணவும்
நோயை ஓட்டி விடும்அப்பா!
நூறு வயதும் தரும்அப்பா!

அருமை உடலின் நலமெல்லாம்
அடையும் வழிகள் அறிவாயே!
வருமுன் நோயைக் காப்பாயே!
வையம் புகழ வாழ்வாயே!

-கவிமணி தேசிக விநாயகனார்

பாடலின் பொருள்

உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது. சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தல் நீடித்த வாழ்நாளைப் பெயலாம்.

காலையும், மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது. அவர் உயிரைக் கவர எமனும் அணுக மாட்டான். எனவே நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும்! நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும்.

அளவாக உண்ணாமல் அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள். தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும். அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வரும் முன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!

நூல்வெளி

  • கவிமணி எனப் போற்றப்படும் தேசிய விநாயகனார் குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்.
  • முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • இவர் ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.
  • மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

சொல்லும் பொருளும்

  • நித்தம்  நித்தம் -நாள்தோறும்
  • வையம் – உலகம்
  • மட்டு – அளவு
  • பேணுவயல்  -பாதுகாத்தல்
  • சுண்ட – நன்கு
  • திட்டுமுட்டு – தடுமாற்றம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. காந்தியடிகள் __________ போற்ற வாழ்ந்தார்.

  1. நிலம்
  2. வையம்
  3. களம்
  4. வானம்

விடை : வையம்

2. நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. நலம் + எல்லாம்
  2. நலன் + எல்லாம்
  3. நலம் + எலாம்
  4. நலன் + எலாம்

விடை : நலம் + எல்லாம்

3. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

  1. இடவெங்கும்
  2. இடம்எங்கும்
  3. இடமெங்கும்
  4. இடம்மெங்கும்

விடை : இடமெங்கும்

வருமுன்காப்போம் இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனை சொற்கள்

  • டமும் – னிய
  • காலை – காற்று
  • ருமை – அடையும்
  • சுத்தமுள்ள  – சுகமும்
  • டலின் – லகில்
  • திட்டு – தினமும்

எதுகை சொற்கள்

  • லின் – இமும்
  • கூழை – ஏழை
  • சுத்தமுள்ள – நித்தம்
  • திட்டு – மட்டு
  • ருமை – வருமுன்
  • ட்டிடுவாய் – ஓட்டிவிடும்

இயைபு சொற்கள்

  • தினமும் – இடமும்
  • கூழை – ஏழை
  • திட்டு – மட்டு
  • குடியப்பா – உறங்கப்பா
  • உணணாமல் – தின்பாயேல்

குறு வினா

1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை யாவை?

நடைப்பயிற்சியும், நல்ல காற்றும் நம்மை நோய் அணுகாமல் காப்பவை ஆகும்

2. அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமையாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?

அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள் என கவிமணி குறிப்பிடுகிறார்.

சிறு வினா

உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக

  • உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது.
  • சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தல் நீடித்த வாழ்நாளைப் பெயலாம்.
  • காலையும், மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது.
  • அவர் உயிரைக் கவர எமனும் அணுக மாட்டான். எனவே நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும்.
  • நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
  • அளவாக உண்ணாமல் அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள்.
  • தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும்.
  • அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வரும் முன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!

சிந்தனை வினா

நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?

  • உடலின் வலிமைக்கம், நோய் வராமல் தடுப்பதற்கு உடற்பயிற்சி அவசியமானது. உடற்பயிற்சியால் இரத்த ஓட்டம் சீராகும்.
  • உடலின் கழிவுப் பொருட்கள் வெளியேறும். துணிவும், தெம்பும், சுறுசுறுப்பும் ஏற்படும். அதனால் விளையாட்டு தண்டால், நீச்சல், உலாவுதல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.
  • நாம் வாழும் வீடும், சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். காற்றும் கதிரொளியும் தாராளமாக உள்ளே புகும் வகையில் வீடும், உறங்கும் இடமும் அமைய வேண்டும்.
  • உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் உட்கொள்ளம் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் சேர்ந்தே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “வருமுன் காப்போம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. உடலின் உறுதி உடையவரே
உலகில் இன்பம் உடையவராம் – பாடல் வரிகளின் ஆசிரியர்

  1. பெருஞ்சித்திரனார்
  2. திருமூலர்
  3. கவிமணி
  4. வள்ளலார்

விடை: கவிமணி

2. மட்டு என்பதன் பொருள் தருக

  1. அளவு
  2. நன்கு
  3. மட்டும்
  4. நீர் மட்டம்

விடை : அளவு

3. கவிமணி எனப் போற்றப்படுபவர்

  1. பாரதிதாசன்
  2. சுரதா
  3. தேசிய விநாயகனார்
  4. பாதியார்

விடை : தேசிய விநாயகனார்

5. கவிமணி பிறந்த ஊர்

  1. போரூர்
  2. பேரூர்
  3. தேரூர்
  4. கரூர்

விடை : தேரூர்

6. தேசிய விநாயகனாரின் மொழிபெயர்ப்பு நூல்

  1. உமர்கய்யாம் பாடல்கள்
  2. ஒரு நதியின் கதை
  3. நல்மொழி
  4. முள்ளும் மலரும்

விடை : உமர்கய்யாம் பாடல்கள்

7. கவிமணி தேசிய விநாயகனார் ________ ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

  1. 24
  2. 22
  3. 33
  4. 36

விடை : 36

9. தேசிய விநாயகனார் எழுதிய நூல்களில் பொருந்தாது

  1. ஆசியஜோதி
  2. மருமக்கள் வழி மான்மியம்
  3. கதர் பிறந்த கதை
  4. ஒரு வேண்டுகோள்

விடை : ஒரு வேண்டுகோள்

10. மலரும் மாலையும் நூலின் ஆசிரியர்

  1. புரட்சிக்கவி
  2. தமிழ் தென்றல்
  3. கவிமணி
  4. காந்தியக்கவிஞர்

விடை : கவிமணி

குறு வினா

கவிமணி தேசியவிநாயகனார் பற்றி குறிப்பு வரைக

பிறப்பு தேரூர் (குமரி மாவட்டம்)
பெற்றோர் சிவதாணுபிள்ளை – ஆதிலட்சுமி
காலம் 27.08.1876 – 26.09.1954
பட்டம் கவிமணி (1940)
பணி ஆசிரியர் (36 ஆண்டுகள்)
கவிதை நூல்கள் ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை
மொழிபெயர்ப்பு நூல் உமர்கய்யாம் பாடல்கள்

Leave a Comment