Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 Periyarin Sinthanaigal Book Back Solution

இயல் 8.1 – பெரியாரின் சிந்தனைகள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 8.1 ‘Periyarin Sinthanaigal’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 8.1 பெரியாரின் சிந்தனைகள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 8.1 Periyarin Sinthanaigal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

பெரியாரின் சிந்தனைகள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Periyarin Sinthanaigal’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Periyarin Sinthanaigal Subject.

Previous Lesson: ஆகுபெயர்

பலவுள் தெரிக

கூற்று பெரியார் உயிர் எழுத்துக்களில் என்பதனை அய் எனவும், “ஒள” என்பதை அவ் எனவும் சீரமைத்தார்
காரணம் சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாக தமிழ் எதுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
  1. கூற்று சரி, காரணம் தவறு
  2. கூற்று, காரணம் இரண்டும் சரி
  3. கூற்று, காரணம் இரண்டும் தவறு
  4. கூற்று தவறு, காரணம் சரி

விடை : கூற்று, காரணம் இரண்டும் சரி

குறு வினா

பகுத்தறிவு எனறால் என்ன?

எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எப்படி? எதற்கு? என்ற வினாக்கள் எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும்.

சிறு வினா

சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துக்களை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.

  • விழாக்கள் மற்றும் சடங்குகளால் மூடப்பழக்கம் வளர்வதோடு, வீண் செலவும் ஏற்படுவதால் தேவையற்ற விழாக்கள் மற்றும் சடங்குளைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
  • திருமணத்தை எளிமையாக சீர்திருத்த முறையில் நடத்த வேண்டும் என்றார்.
  • விழாக்கள், திருமணங்கள் மற்றும் சடங்குகள் நடத்த கடன் வாங்கி செலவு செய்து கடன்காரர்களிடம் மாட்டிக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
  • பெரியார் சொன்னதைக் கடைபிடித்திருந்தால் இந்நிலை வராது.

நெடு வினா

மொழியிலும், இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக

  • இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்க வேண்டும்.
  • மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்.
  • மதம், கடவுள் தொடரபற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான அறிவைத் தரும் இலக்கியம், அறிவியல் பற்றிய இலக்கியம் ஆகியவற்றின் மூலமே மொழியும் இலக்கியமும் மேன்மை அடையும்.
  • திருக்குறளைப் பெரியார் மதிப்பு மிக்க நூலாகக் கருதுகிறார்.
  • இந்நூலில் அறிவியல் கருத்துகளும், தத்துவக் கருத்துகளும் அனைவருக்கும் பொதுவான முறையில் அமைந்திருப்பதே காரணம் என்றார் பெரியார்.
  • தமிழில் “ஐ” என்பத “அய்” எனவும், “ஒள” என்பதை “அவ்” எனவும் சீரமைத்தார். இவற்றுக்கான மாற்று வரிவடிவத்தையும் கொண்டு வந்தார்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “பெரியாரின் சிந்தனைகள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. பெரியாரின் சிறப்பு பெயர்களில் பொருந்தாத ஒன்று

  1. வெண்தாடி வேந்தர்
  2. பகுத்தறிவுப் பகலவன்
  3. வைக்கம் வீரர்
  4. சேலத்துச் சிங்கம

விடை : சேலத்துச் சிங்கம

2. பெண்ணினப் போர்முரசென ____________ புகழப்பட்டவர்

  1. நேரு
  2. பெரியார்
  3. பாரதியார்
  4. காந்தியடிகள்

விடை : பெரியார்

3. சமூக வளர்ச்சிக்குக் கல்வியை மிகச்சிறந்த கருவியாக கருதியவர்.

  1. பெரியார்
  2. நேரு
  3. பாரதியார்
  4. காந்தியடிகள்

விடை : பெரியார்

5. பெரியார் விதைத்த விதைகள் பொருந்தாதவற்றை தேர்ந்தெடுக்க

  1. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு
  2. பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  3. பெண்களுக்கான சொத்துரிமை
  4. குழந்தைத் திருமணம்

விடை : குழந்தைத் திருமணம்

6. சென்னையில் ___________ நாளில் பெண்கள் மாநாடானது நடைபெற்றது

  1. 13.01.1938
  2. 13.11.1938
  3. 12.11.1938
  4. 12.01.1938

விடை : 13.11.1938

6. சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் __________ பட்டமானது ஈ.வெ.ராவுக்குக் அளிக்கப்பட்டது.

  1. பெரியார்
  2. வைக்கம் வீரர்
  3. வெண்தாடி வேந்தர்
  4. பகுத்தறிவு பகலவன்

விடை : பெரியார்

7. தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தை பெரியாருக்குத் வழங்கிய அமைப்பு

  1. உலகத் தமிழ்ப்பேரவை
  2. சாகித்ய அகெதமி
  3. பெண்கள் மாநாடு
  4. யுனெஸ்கோ

விடை : யுனெஸ்கோ

8. பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்த உயிரெழுத்துகள்

  1. அ, ஆ
  2. இ, ஈ
  3. ஏ, எ
  4. ஐ, ஓள

விடை : ஐ, ஓள

9. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு நடைமுறை கொண்டு வந்த ஆண்டு

  1. 1976
  2. 1977
  3. 1978
  4. 1979

விடை : 1978

10. பெரியாரால் நடத்தப்பட்ட ஆங்கில இதழ்

  1. ரிவோல்ட்
  2. விடுதலை
  3. குடியரசு
  4. உண்மை

விடை : ரிவோல்ட்

11. 1925-ல் பெரியார் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்

  1. திராவிடக் கழகம்
  2. சுயமரியாதை இயக்கம்
  3. நீதிக்கட்சி
  4. திராவிட முன்னேற்ற கழகம்

விடை : சுயமரியாதை இயக்கம்

12. பெரியாரின் இதழ்களில் வேறுபட்ட ஒன்று

  1. ரிவோல்ட்
  2. விடுதலை
  3. குடியரசு
  4. உண்மை

விடை : ரிவோல்ட் (ஆங்கில இதழ்)

13. நாட்டு விடுதலையை விட பெண் விடுதலைதான் முதன்மையானது என்று கூறியவர்

  1. நேரு
  2. பாரதியார்
  3. பெரியார்
  4. காந்தியடிகள்

விடை : பெரியார்

14. பெரியார் மதிப்பு மிக்க நூலாகக் குறிப்பிடும் நூல்

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. திருக்குறள்
  4. நாலடியார்

விடை : திருக்குறள்

15. பெரியார் __________ நூலினை ஊன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார் என குறிப்பிடுகிறார்

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. திருக்குறள்
  4. நாலடியார்

விடை : திருக்குறள்

16. பெரியார் ___________ நகர சபை தலைவராக பதவி வகித்துள்ளார்

  1. சேலம்
  2. திருப்பூர்
  3. ஈரோடு
  4. கோயம்புத்தூர்

விடை : ஈரோடு

16. பெரியார் குழாய் மூலம் குடிநீர் விநியோக முறையினை அறிமுகம் செய்த ஆண்டு

  1. 1917
  2. 1916
  3. 1918
  4. 1919

விடை : 1919

குறு வினா

1. பெரியாரின் வழங்கப்பட்ட சிறப்பு பெயர்கள் சிலவற்றை கூறுக

  • வெண்தாடி வேந்தர்
  • சுயமரியாதைச் சுடர்
  • பகுத்தறிவுப் பகலவன்
  • வைக்கம் வீரர்
  • ஈரோட்டுச் சிங்கம்
  • தெற்காசியாவின் சாக்ரடீஸ்
  • பெண்ணினப் போர்முரசு
  • புத்துலகத் தொலைநோக்காளர்

2. பெரியாரின் சிந்தனையால் புரட்சியை உருவாக்கிய துறைகள் யாவை?

சமூகம், பண்பாடு, மொழி, கல்வி, பொருளாதாரம்

3. ஈ.வெ.ரா-வால் பெரியார் எதிர்க்கப்பட்டவற்றில் சிலவற்றை கூறுக

  • இந்தி திணிப்பு
  • குலக்கல்வித் திட்டம்
  • தேவதாசி முறை
  • கள்ளுண்ணல்
  • குழந்தைத் திருமணம்
  • மணக்கொடை

4. பெரியார் தோற்றுவித்த இயக்கத்தின் பெயர் யாது

சுய மரியாதை இயக்கம் (1925)

5. தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட இதழ்களை கூறுக

குடியரசு, உண்மை, விடுதலை, ரிவோல்ட் (ஆங்கில இதழ்)

6. பெரியார் விதைக்கப்பட் விதைகளென குறிப்பிடப்படுபவற்றை கூறுக

  • கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்களுக்கு சொத்துரிமை
  • குடும்ப நலத் திட்டம்
  • கலப்புத் திருமணம்
  • சீர்திருத்தத் திருமணச் சட்டம்

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment