Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.4 Purananuru Book Back Solution

இயல் 2.4 – புறநானூறு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 2.4 ‘Purananuru’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 2.4 புறநானூறு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 2.4 Purananuru Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

புறநானூறு பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Purananuru’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Purananuru Subject.

Previous Lesson: பெரியபுராணம்

புறநானூறு பாடல்

வான் உட்கும் வடிநீண் மதில்,
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்றுஅதன்
தகுதி கேள்இனி மிகுதி ஆள!நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!

வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே! அதனால்
அடுபோர்ச் செழிய ! இகழாது வல்லே;
நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம ! இவண் தட்டோரே!
தள்ளாதோர் இவண் தள்ளா தோரே!

(புறம் 18: 11 – 30)

(பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது)

திணை: பொதுவியல் துறை: முதுமொழிக்காஞ்சி

நூல் வெளி

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • புறப்பொருள் பற்றிய 400 பாடல்களை கொண்டது.
  • பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள் சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புற வாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது.
  • இந்நூல் பண்டைத் தமிழிர்களின் அரிய வரலாற்று செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.

சொல்லும் பொருளும்

  • யாக்கை – உடம்பு
  • புணரியோர் – தந்தவர்
  • புன்புலம் – புல்லிய நிலம்
  • தாட்கு – முயற்சி, ஆளுமை
  • தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – குறை வில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்

இலக்கணக்குறிப்பு

  • மூதூர், நல்லிசை, புன்புலம் – பண்புத்தொகை
  • நிறுத்தல் – தொழிற்பெயர்
  • அமையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
  • நீரும் நிலமும், உடம்பும் உயிரும் – எண்ணும்மை
  • அடுபோர் – வினைத்தொகை
  • கொடுத்தோர் – வினையாலணையும் பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்

1. நிறுத்தல் – நிறு + த் + தல்

  • நிறு – பகுதி
  • த் – சந்தி
  • அன் – சாரியை
  • தல் – தொழில் பெயர் விகுதி

2. காெடுத்தோர் – காெடு +த் + த் + ஓர்

  • காெடு – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக.

மல்லல் மூதூர் வயவேந்தே கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

  1. மறுமை
  2. பூவரசு மரம்
  3. வளம்
  4. பெரிய

விடை : வளம்

சிறு வினா

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே குறிப்பு தருக.

நீர் இல்லாமல் அமையாத உடல் உணவால் அமையும். உணவே முதன்மையானக உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.

குறு வினா

நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

  • வேந்தனே! நீ மறுமை இன்பத்தை அடையவோ, உலகு முழுவதையும் வெல்லவோ, நிலையான புகழைப் பெற விரும்பினால் நான் சொல்வதைக் கேள்!
  • நெடுஞ்செழியனே! நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமையும். உணவையே முதன்மையாக உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.
  • உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர்.
  • தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனுக்கு சிறிதும் உதவாது. அதனால், நான் கூறியதை விரைவாகக் கடைப்பிடிப்பாயாக!
  • நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.
  • நிலத்துடன் நீரைக் கூட்டியவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும்
    பெறுவர்.
  • இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர்

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “புறநானூறு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாக திகழும் நூல்

  1. பெரியபுராணம்
  2. தமிழ்விடுதூது
  3. தமிழோவியம்
  4. புறநானூறு

விடை : புறநானூறு

2. நீரின்று அமையா யாக்கை என்ற வரிகளை எழுதியவர்

  1. பாண்டியன் நெடுஞ்செழியன்
  2. குடபுலவியனார்
  3. திருவள்ள்ளுவர்
  4. மணிமேகலை

விடை : குடபுலவியனார்

3. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

  1. பெருநாராற்றுப்படை
  2. புறநானூறு
  3. சிறுபாணாற்றுப்படை
  4. சிலப்பதிகாரம்

விடை : புறநானூறு

4. உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. புறநானூறு
  2. அகநானூறு
  3. பதிற்றுப்பத்து
  4. நற்றிணை

விடை : புறநானூறு

5. யாக்கை என்ற சொல்லின் பொருள்

  1. உடம்பு
  2. தந்தவர்
  3. நிலம்
  4. ஆளுமை

விடை : உடம்பு

6. புணரியோர் என்ற சொல்லின் பொருள்

  1. உடம்பு
  2. தந்தவர்
  3. நிலம்
  4. ஆளுமை

விடை : தந்தவர்

7. நீரும் நிலமும் இலக்கணக்குறிப்பு

  1. முற்றுமை
  2. உவமைத்தொகை
  3. எண்ணும்மை
  4. அன்மொழித்தொகை

விடை : எண்ணும்மை

8. கொடுத்தோர் இலக்கணக்குறிப்பு

  1. முற்றுமை
  2. உவமைத்தொகை
  3. அன்மொழித்தொகை
  4. வினையாலணையும் பெயர்

விடை : வினையாலணையும் பெயர்

9. மூதூர் இலக்கணக்குறிப்பு

  1. வினைத்தொகை
  2. வினையெச்சம்
  3. பண்புத்தொகை
  4. பெயரெச்சம்

விடை : பண்புத்தொகை

குறு வினா

1. நீர்நிலைகளை உருவாக்குபவர்களை நம் முன்னோர்கள் எவ்வாறு போற்றினர்?

நீர்நிலைகளை உருவாக்குபவர்கள் நம் முன்னோர்கள் “உயிரை உருவாக்குபவர்கள்” என்று போற்றினர்.

2. பொதுவியல் திணை என்பது என்ன?

வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.

3. பொருண்மொழிக்காஞ்சித் துறை என்பது என்ன?

சான்றோர் தெளிவாய் ஆராய்ந்து தெளிந்த பொருள்களைப் பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்து உரைப்பது பொருண்மொழிக் காஞ்சித்துறையாகும்.

4. யார் நிலைத்த புகழ் அடைவர் என்று குடபுலவியனார் கூறுகிறார்?

நிலம் குழிந்த இடங்களில் நீர்நிலைகளைப் பெருகச் செய்ய வேண்டும் நிலத்துடன் நீரைக் கூட்டியவர் மூவகை இன்பத்தையும் நிலைத்து புகழையும் அடைவர்.

5. புறநானூறு சிறு குறிப்பு வரைக

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • புறப்பொருள் பற்றிய 400 பாடல்களை கொண்டது.
  • பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள் சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புற வாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது.
  • பண்டைய மக்களின் புறவாழ்வைக் காட்டுகின்றது.
  • பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment