Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 Tamiloviyam Book Back Solution

இயல் 1.2 – தமிழாேவியம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 1.2 ‘Tamiloviyam’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 1.2 தமிழாேவியம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 1.2 Tamiloviyam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

தமிழாேவியம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Tamiloviyam’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Tamiloviyam Subject.

Previous Lesson: திராவிட மொழிக்குடும்பம்

தமிழாேவியம் பாடல்

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை
அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்
நிகரிலாக் காப்பியப் பூவனங்கள் – உன்
நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்!

– காலம் பிறக்கும் முன்….

ஏனிவ் விருட்டெனக் கேட்டுவரும் – நீதி
ஏந்திய தீபமாய்ப் பாட்டுவரும்
மானிட மேன்மையைச் சாதித்திடக் – குறள்
மட்டுமே போதுமே ஓதி, நட…

– காலம் பிறக்கும் முன்….

எத்தனை எத்தனை சமயங்கள் – தமிழ்
ஏந்தி வளர்த்தது தாயெனவே
சித்தர் மரபிலே தீதறுக்கும் – புதுச்
சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே…

– காலம் பிறக்கும் முன்…

விரலை மடக்கியவன் இசையில்லை – எழில்
வீணையில் என்று சொல்வதுபோல்
குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக்
கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்!

நூல் வெளி

  • ஈரோடு தமிழன்பன் எழுதிய “தமிழோவியம்” என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது.
  • இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொளள் அகராதிகள் தேவைப்படுவதில பாடலும் அப்படித்தான்! என்று குறிப்பிட்டுள்ளார்.
  • ஈரோடு தமிழன்பன் சிறுகதை, புதுக்கவிதை முதலிய படைப்புகள் வெளியிட்டுள்ளார்
  • ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ புது வடிவங்களில் கவிதை நூல்களில் தந்துள்ளார்.
  • இவரது “வணக்கம் வள்ளுவ” கவிதை நூலுக்கு 2004-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
  • “தமிழன்பன் கவிதைகள்” தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்.
  • இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கில் உள்ளிட்ட மொழியில் மொழி பெயர்க்கப்ட்டுள்ளன.

இலக்கணக்குறிப்பு

  • எத்தனை எத்தனை – அடுக்குத்தொடர்
  • விட்டு விட்டு – அடுக்குத்தொடர்
  • ஏந்தி – வினையெச்சம்
  • காலமும் – முற்றுமரம்

பகுபத உறுப்பிலக்கணம்

வளர்ப்பாய் – வளர் + ப் + ப் + ஆய்

  • வளர் – பகுதி
  • ப் – சந்தி
  • ப் – எதிர்கால இடைநிலை
  • ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே!
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!……….. இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

  1. முரண், எதுகை, இரட்டைத் தொடை
  2. இயைபு, அளபெடை, செந்தொடை
  3. எதுகை, மோனை, இயைபு
  4. மோனை, முரண், அந்தாதி

விடை : எதுகை, மோனை, இயைபு

குறு வினா

1. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்
காலமும் நிரலோய் இருப்பதும் தமிழே!

என்ற அடி  என்னைக் கவர்ந்த அடிகளாகும். பழைமையான மொழியாக இருந்தாலும், காலம் கடந்து நிற்கும் மொழியாகும் என்பதை இத் தொடர் வழி அறியலாம்.

2. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் – இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வரிகள் உணர்த்துவன யாவை?

இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வரிகள்  அகப்பொருள், புறபொருள் ஆகியவற்றை உணர்த்துகின்றன.

சிறு வினா

1. காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

சங்க இலக்கியத்தில் எண்ணற்ற தமிழ்ச்சொற்கள் காலத்திற்கேற்றப்படி புதுபித்துக் கொள்ளும் வகையில் உள்ளன.

மேலும், ” கடி சொல் இல்லைக் காலத்துப்படினே” என்ற தொல்காப்பிய நூற்பா வரிகள் புதிய சொல்லுருவாக்கத்திற்கு வழி செய்வதாலும் காலந்தோறும் தமிழ்மொழி தன்னை புதுப்பித்துக் கொள்கின்றது.

2. புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் – உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

  • தமிழில் உள்ள அறிவியல் செய்திகளை மேலும் வெளிக் கொணர்வோம்
  • கன்னித் தமிழ் மாறாது கண்ணித் தமிழ் ஆக்குவோம்.
  • அயல்மொழி மோகம் கொண்டு திரிவோரை அன்னைத் தமிழ் மோகம் கொள்ள வைப்போம்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “தமிழாேவியம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

  1. வணக்கம் வள்ளுவ
  2. பிங்கல நிகண்டு
  3. தமிழோவியம்
  4. தமிழன்பன் கவிதைகள்

விடை : பிங்கல நிகண்டு

2. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதது எங்கும் காணோம் என்ற வரிகளை எழுதியவர்

  1. சுரதா
  2. பாரதியார்
  3. சுப்புரத்தினம்
  4. காளமேகம்

விடை : பாரதியார்

3. சென்றியு, சென்ரியு, லிமரைக்கூ என்னும் புதுப்புது வடிவங்களில் கவிதைகளைத் தந்தவர்

  1. சுரதா
  2. ஈரோடு தமிழன்பன்
  3. சுப்புரத்தினம்
  4. காளமேகம்

விடை : ஈரோடு தமிழன்பன்

5. உலகத் தாய்மொழி நாள்

  1. மார்ச் 21
  2. ஏப்ரல் 21
  3. பிப்ரவரி 21
  4. ஜனவரி 21

விடை : பிப்ரவரி 21

6. தமிழன்பன் _____________ என்ற நூலுக்குச் சாகித்ய அகாடமி விருது கிடைத்த ஆண்டு 

  1. பிசிராந்தையர்
  2. சேரமான் காதலி
  3. வேரில் பழுத்த பலா
  4. வணக்கம் வள்ளுவ

விடை : வணக்கம் வள்ளுவ

7. தமிழ் ஆட்சி மொழியாக கொண்டுள்ள நாடுகள்

  1. இலங்கை, தென்னாப்பிரிக்கா
  2. தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர்
  3. இலங்கை, கோலாலம்பூர்
  4. இலங்கை, சிங்கப்பூர்

விடை : இலங்கை, சிங்கப்பூர்

8. தமிழோவியம் என்னும் நூலினை எழுதியவர்

  1. சுரதா
  2. ஈரோடு தமிழன்பன்
  3. சுப்புரத்தினம்
  4. காளமேகம்

விடை : ஈரோடு தமிழன்பன்

9. தமிழன்பனின் ____________ தமிழக அரசு பரிசு பெற்ற நூல்

  1. தமிழன்பன் கவிதைகள்
  2. தமிழன்பன் சிறுகதைகள்
  3. தமிழன்பன் உரைநடைகள்
  4. தமிழன்பன் நாடகங்கள்

விடை : தமிழன்பன் கவிதைகள்

10. இசையில்லை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. இசை + யில்லை
  2. இசை + இல்லை
  3. இசை + அல்லை
  4. இசை + இலை

விடை : இசை + இல்லை

11. தீதறுக்கும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. தீது + தறுக்கும்
  2. தீது + அறுக்கும்
  3. தீதூ + அறுக்கும்
  4. தீதூ + யறுக்கும்

விடை : தீது + அறுக்கும்

12. அகம்புறம் இலக்கணக்குறிப்பு தருக

  1. எண்ணுமை
  2. உம்மைத்தொகை
  3. உவமைத்தொகை
  4. முற்றுமை

விடை : உம்மைத்தொகை

13. விட்டுவிட்டு இலக்கணக்குறிப்பு தருக

  1. இரட்டைக்கிளவி
  2. பெயரெச்சம்
  3. அடுக்குத்தொடர்
  4. வினையெச்சம்

விடை : அடுக்குத்தொடர்

குறு வினா

ஈரோடு தமிழன்பன் குறிப்பு வரைக

  • சிறுகதை, புதுக்கவிதை முதலிய படைப்புகள் வெளியிட்டுள்ளார்
  • ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ புது வடிவங்களில் கவிதை நூல்களில் தந்துள்ளார்.
  • 2004-ல் அவரின் வணக்கம் வள்ளுவ நூல் சாகித்திய அகாடமி விருது பெற்றது.
  • தமிழன்பன் கவிதைகள் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment