Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 Yugathin Padal Book Back Solution

இயல் 1.1 – யுகத்தின் பாடல்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 1.1 ‘Yugathin Padal’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 1.1 யுகத்தின் பாடல்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 1.1 Yugathin Padal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

யுகத்தின் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Yugathin Padal’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

என் அம்மை, ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே!
வழிவழி நினதடி தொழுதவர்,
உழுதவர், விதைத்தவர்,
வியர்த்தவர்க்ககெல்லலாம்
நிறைமணி தந்தவளே!
உனக்குப்
பல்லாண்டு
பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டுபாடத்தான் வேண்டும்!
காற்றிலேறிக்
கனைகடலை, நெருப்பாற்றை,
மலைமுகடுகளைக் கடந்து
செல் எனச் செல்லுமோோர் பாடலை
கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும்
காலத்ததால் சாகாத தொல் கனிமங்களின்
உரமெலாம் சேரப்
பாடத்தான் வேண்டும்!

ஏடு தொடக்கி வைத்து என்னம்மமை
மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த
விரல்முனையைத் தீயிலே தோய்த்து
திசைகளின் சுவரெலாம்
எழுதத்ததான் வேண்டும்
எழுகின்ற யுகத்தினோர் பாடலை.

சு. வில்வரத்தினம்

தெரியுமா?

புதுக்கவிதை – விளக்கம்

மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிைகளைப் புதுக்கவிதை என்பர். படிப்போரின் ஆழ்மனத்தில் புதுக்கவிதை ஏற்படுத்தும் தாக்கமே முதன்மையானது. இது படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது. எளியவர்களும் தம் உணர்ச்சிகளைக் கவிதை வாயிலாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தந்தது புதுக்கவிதை எனலாம்.

நூல் வெளி

  • சு. வில்வரத்தினம் யாழ்பாணத்தின் புடுங்குத் தீவில் பிறந்தார்
  • இவர் கவிதைகள் “உயிர்த்தெழும் காலத்துக்காக” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன
  • இவர் கவிதைகள் இயற்றுவதிலும், சிறப்பாக பாடுவதிலும் திறன் பெற்றவர்.
  • வில்வரத்தினத்தின் இரண்டு கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் பாடப்பகுதியில் இடம் பெறுகின்றன.
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை.

– இரசூல் கம்சதோவ்

பலவுள் தெரிக

1. கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்
   காலத்தால் சாகாத தொல் கனிமங்கள் அடிமோனையை தெரிவு செய்க

  1. கபாடபுரங்களை – காவுகொண்ட
  2. காலத்தால் – கனிமங்கள்
  3. கபாடபுரங்களை – காலத்தால்
  4. காலத்தால் – சாகாத

விடை : கபாடபுரங்களை – காலத்தால்

குறு வினா

1. என் அம்மை ஒற்றியெடுத்த
    நெற்றிமண் அழகே!
    வழிவழி நினதடி தொழுதவர்,
    உழுதவர், விதைத்தவர்,
    வியர்த்தவர்க்கெல்லாம்
    நிறைமணி தந்தவளே! – இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.

தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்

2. இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையை குறிப்பிடுக

“தன் இனத்தையும், மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை”

சிறு வினா

சு.வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எற்றைக் குறிப்பிடுகிறார்?

  • பல தலைமுறை கடந்தும் தனது திருவடிகளைத் தொழச் செய்தவள். தமிழ்ப்பயிர் தழைத்தோங்க காலந்தோறும் வியர்வை சிந்த உழைத்து, கலைச் செல்வங்களைப் படைக்கச் செய்து, நிறைமணி தந்தவர். தமிழ் மொழியாகிய வயலினை அறிவு கொண்டு உழுது, நற்பருத்துகளை விளைவித்துத் தமிழ் நிலத்தில் ஊன்ற உதவியவள்.
  • ஒலிக்கும் கடலையும், நெருப்பாற்றையும், மலை உச்சிகளையும் காற்றில் ஏறிக் கடந்துசெல் என்னும் பாடலை, தொன்மையான கபாடபுரங்களைப் பலி கொண்ட பிறகும், காலத்தால் அழியாத செல்வங்களின் வலிமைச் சேரச் செய்தவள். ஏடு தொடக்கி வைத்து, விரலால் மண்ணில் தீட்டித்தீட்டி எழுதக் கற்பித்தவள்.
  • ஆதலால், தமிழன்னை பல்லாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என பாடத்தான் வேண்டும் என்கிறார் சு.வில்வரத்தினம்

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “யுகத்தின் பாடல்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

இலக்கணக்குறிப்பு

  • வழிவழி, தீட்டித்தீட்டி – அடுக்குத்தொடர்கள்
  • தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர் – வினையாலணையும் பெயர்கள்
  • நிறைமணி, கனைகடல் – வினைத்தொகைகள்
  • சாகாத, எழுகின்ற, எழுத்துவித்த – பெயரச்சங்கள்
  • உரமெல்லாம்  – தொகுத்தல் விகாரம்
  • தொல்கனிமங்கள் – பண்புத்தொகை
  • மலைமுகடு – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • விரல் முனை – ஆறாம் வேற்றுமைத் தொகை
  • தந்தவளே – விளித்தொடர்

புணர்ச்சி விதிகள்

1. சுவரவெல்லாம் = சுவர் + எல்லாம்

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி சுவரவெல்லாம் என்றாயிற்று.

2. பல்லாண்டு = பல + ஆண்டு

  • “பல சில எனும் இவைமுன் பிறவரின் அகரம் ஏகலும்” விதிப்படி பல் + ஆண்டு என்றாயிற்று.
  • “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” விதிப்படி பல்ல் + ஆண்டு என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பல்லாண்டு என்றாயிற்று.

2. நினதடி = நினது + அடி

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” விதிப்படி நினத் + அடி என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி நினதடி என்றாயிற்று.

3. ஒற்றியெடுத்து = ஒற்றி + எடுத்து

  • “இ, ஈ, ஐ வழி யவ்வும்” விதிப்படி ஒற்றி + ய் + எடுத்து என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி ஒற்றியெடுத்து என்றாயிற்று.

4. காற்றிலேறுதல் = காற்றில் + ஏறுதல்

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி காற்றிலேறுதல் என்றாயிற்று.

5. நெருப்பாற்றல் =  நெருப்பு + ஆற்றல்

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” விதிப்படி நெருப்ப் + ஆற்றல் என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி நெருப்பாற்றல் என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. உயிர்த்தெழும் காலத்துக்காக என்னும் கவிதைத்தொகுப்பின் ஆசிரியர்

  1. இந்திரன்
  2. பவணந்தி முனிவர
  3. சு.வில்வரத்தினம்
  4. முத்துலிங்கம்

விடை : வில்வரத்தினம்

2. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லா மரம், கூடில்லா பறவை என்ற வரிகளினை கூறியவர்

  1. பாரதிதாசன்
  2. சு.வில்வரத்தினம்
  3. அப்துல் ரகுமான்
  4. இரசூல் கம்சதோவ்

விடை : இரசூல் கம்சதோவ்

3. மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுபாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளை __________ எனக் கூறுவர்.

  1. புதுக்கவிதை
  2. மரபுக்கவிதை
  3. செய்யுள்
  4. பாடல்

விடை : புதுக்கவிதை

4. கவிஞர் சு.வில்வரத்தினம் யாழ்ப்பாணத்தில் _______________  பிறந்தவர்

  1. காங்சேன் துறை
  2. புங்குடுத்தீவு
  3. நீர்வேலி
  4. பன்னாலை

விடை : புங்குடுத்தீவு

5. கவிஞர் சு.வில்வரத்தினம் ________ நாட்டில் பிறந்தவர்

  1. அமெரிக்கா
  2. இலங்கை
  3. அந்தாமான் தீவு
  4. பிரேசில்

விடை : இலங்கை

7. காவு என்ற சொல்லின் பொருள் தருக

  1. வலிமை
  2. திண்மை
  3. வலி
  4. பலி

விடை : பலி

குறு வினா

1. கவிஞர் சு.வில்வரத்தினம் பற்றி எழுதுக

  • சு.வில்வரத்தினம் யாழ்பாணத்தின் புடுங்குத் தீவில் பிறந்தார்
  • இவர் கவிதைகள் “உயிர்த்தெழும் காலத்துக்காக” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன
  • இவர் கவிதைகள் இயற்றுவதிலும், சிறப்பாக பாடுவதிலும் திறன் பெற்றவர்

Leave a Comment