[Term-2] Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.2 Kadalodu Vilayadu Book Back Solution

இயல் 3.2 – கடலோடு விளையாடு

கடலோடு விளையாடு: Welcome! We provide accurate and in-depth solutions for Samacheer Kalvi 6th Tamil Chapter 3.2 Kadalodu Vilayadu. Our solutions cover all textbook questions and adhere to TNSCERT standards.

கடலோடு விளையாடு வினா விடை

We have provided answers for one-mark and two-mark questions, as well as additional ones to prepare for the lesson ‘Kadalodu Vilayadu’.

Previous Lesson: நானிலம் படைத்தவன்

கடலோடு விளையாடு பாடல்

விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா

விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா

அடிக்கும்அலை நம்தோழன் – ஐலசா

அருமைமேகம் நமதுகுடை – ஐலசா

வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா

விண்ணின்இடி காணும்கூத்து – ஐலசா

பாயும்புயல் நம்ஊஞ்சல் – ஐலசா

பனிமூட்டம் உடல்போர்வை – ஐலசா

காயும்கதிர்ச் சுடரகூரை – ஐலசா

கட்டுமரம் வாழும்வீடு – ஐலசா

மினனல்வரி அரிச்சுவடி – ஐலசா

பிடிக்கும்மீன்கள் நம்பொருள்கள் –ஐலசா

முழுநிலேவ கண்ணோடி – ஐலசா

மூச்சடக்கும்நீச்சல் யோகம் – ஐலசா

தொழுதலைவன் பெருவானம் – ஐலசா

துணிவோடு தொழில்செய்வோம் – ஐலசா

பாடலின் பொருள்

மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மீனவர்கள். அவர்களுக்கு விண்மீன்களே விளக்குகள்; விரிந்த கடலே பள்ளிக்கூடம்; கடல் அலையே தோழன்; மேகமே குடை; வண்மையான மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை; விண்ணின் இடி அவர்கள் காணும் கூத்து; சீறிவரும் புயலே விளையாடும் ஊஞ்சல்; பனிமூட்டம் தான் உடலைச் சுற்றும் போர்வை; அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் மேற்கூரை; கட்டுமரம்தான் அவர்கள் வாழும் வீடு; மின்னல் கோடுகளே அடிப்படைப் பாடம்; வலைவீசிப் பிடிக்கும் மீன்களே அவர்களது செல்வம்; முழு நிலவுதான் கண்ணாடி; மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் தவம்; வானமே அவர்கள் வணங்கும் தலைவன்; இவற்றிற்கு இடையே மீனவர்கள் மன உறுதியோடு தொழில் செய்கின்றனர்.

தெரிந்து தெளிவோம்

நெய்தல் திணை

  • நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும்
  • மக்கள் – பரதவர், பரத்தியர்
  • தொழில் – மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
  • பூ – தாழம்பூ

நூல் வெளி

  • உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும்.
  • காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.
  • ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும்.

சொல்லும் பொருளும்

  • கதிர்ச்சுடர் – கதிரவனின் ஒளி
  • மின்னல்வரி – மின்னல் கோடுகள்
  • அரிச்சுவடி – அகரவரிசை எழுத்துகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. கதிர்ச் + சுடர்
  2. கதிரின் + சுடர்
  3. கதிரவன் + சுடர்
  4. கதிர் + சுடர்

விடை : கதிர் + சுடர்

2. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ________

  1. மூச்சு + அடக்கி
  2. மூச் + அடக்கி
  3. மூச் + சடக்கி
  4. மூச்சை + அடக்கி

விடை : மூச்சு + அடக்கி

3. பெருமை + வானம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. பெருமைவானம்
  2. பெருவானம்
  3. பெருமானம்
  4. பேர்வானம்

விடை : பெருவானம்

4. அடிக்கும் + அலை என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______

  1. அடிக்குமலை
  2. அடிக்கும் அலை
  3. அடிக்கிலை
  4. அடியலை

விடை : அடிக்குமலை

பாடல் வரிகளுக்கு ஏற்ப பொருத்துக

  1. விடிவெள்ளி – பஞ்சுமெத்தை
  2. மணல் – ஊஞ்சல்
  3. புயல் – போர்வை
  4. பனிமூட்டம் – விளக்கு

விடை:- 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

குறுவினா

1. அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்?

மீனவர்கள் அலையத் தாேழனாகவும் மேகத்தைக் குடையாகவும் கருதுகின்றனர்.

2. கடல் பாடலில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன யாவை?

கடல் பாடலில் நிலவு கண்ணாடியாகவும் வானம் தலைவனாகவும் குறிப்பிடப்படுகின்றன.

3. மீனவர்கள் தமது வீடாகவும் செல்வமாகவும் கருதுவன யாவை?

மீனவர்கள் கட்டுமரத்தை தமது வீடாகவும், மீன்களை செல்வமாகவும் கருதுகின்றன.

சிந்தனை வினா

1. நீங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்களில் ஒன்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக.

எங்கள் பகுதியில் நெசவுத்தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொழிலினால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை பெறுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் பல மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதனால் பொருளாதாரத்தில் எங்கள் ஊரின் நெசவாளர்கள் உயர்ந்து காணப்படுகின்றன. சிலரின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் விரும்பும் வண்ணத்திலும், விலையும் நெசவு செய்து தருகின்றன. இதன் காரணமாக பல ஊரிலிருந்து வந்து விருப்பத்துடன் வாங்கி செல்கின்றன. உயர்தரமான நூலிழைகளால் நெய்யப்படுவதால் தரமாகவும், நீண்ட நாள் உழைக்கக் கூடியனவாகவும் இருக்கின்றன. மேலும் விலை குறைவாக உள்ளதால் அதிகமாக விற்பனை ஆகின்றன. ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பதை மாற்றுவது அவர்களின் இலட்சியமாகும்.

2. நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன?

நாட்டுப்புற மக்களின் எண்ணங்கள், ஏக்கங்கள், எழுச்சிகள், குறிக்கோள்கள், நம்பிக்கைகள், இன்பதுன்பங்கள் முதலியவற்றை இசையோடு எளிய இனிய நடையில் படம் பிடித்து காட்டுவனவே நாட்டுப்புற இலக்கியம். பாமர மக்களுடைய பட்டறிவின் கருவூலமாக, சிந்தனைச் செல்லாக்குப் பெற்று எழுதா இலக்கியங்களாக வலம் வருகின்றன.

வாய்மொழிப் பாடல்கள் சாதாரண மக்களின் பாடல்கள் படிப்பு இல்லாத கிராமவாசிகள், வயிலில் உழுகிறவர்கள், நாற்று நடுகிறவர்கள், கிணறு ஓடம் விடுகிறவர்கள், வண்டி ஓட்டுபவர்கள் முதலிய மக்கள் பாடுகின்ற பாட்டுதான் நாட்டுப்புற ப்பாடல் எனப்படுகிறது. எழுத்தறிவில்லாத இத்தகைய தொழில் மாந்தரின் இதயத்தில் உணர்ச்சி பொங்கி, அதுவே பாட்டாக பெருகுவதுண்டு. அத்தகைய பாட்டில் உணர்ச்சி இருக்கும். சொல், தொடையழகு இருக்கும். எனினும் இலக்கண வரம்பிற்கு உட்படாமலும் இருக்கும். இந்நாட்டுப் பாடலை ஓலையில் எழுத்தாணி கொண்டோ காகிதத்தில் பேனாவினாலோ எழுதியிருக்க மாட்டார்கள். தலைமுறை தலைமுறையாக நாட்டு மக்கள் இப்பாட்டுகளை பாடியும், ஆடியும் கேட்டுமே வழங்கி வந்துள்ளனர். ஆகவே, நாட்டுப்புற இலக்கியங்ககளை வாழ்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணமாகும்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “கடலோடு விளையாடு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வெண்மணல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. வெண் + மணல்
  2. வெண்ம + ணல்
  3. வெண்மை + மனல்
  4. வெண்மை + மணல்

விடை : வெண்மை + மணல்

2. உடல் + போர்வை என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது _______

  1. உடல்போர்வை
  2. உடல்போற்வை
  3. உடற்போற்வை
  4. உடற்போர்வை

விடை : உடற்போர்வை

3. வரி என்பதன் பொருள் தருக

  1. பாடு
  2. காேடு 
  3. காடு
  4. இடு

விடை : காேடு

4. நெய்தல் திணைக்கு உரிய பூ.

  1. தும்பை பூ
  2. வேப்பம் பூ
  3. கொன்றை பூ
  4. தாழம்பூ

விடை : தாழம்பூ

5. மீனவர்களுக்கு  _______________ தோழனாக இருப்பது

  1. இடி
  2. கடல் அலை
  3. மின்னல்
  4. மணல்

விடை : தோழன்

6. கதிர்ச்சுடர் என்பதன் பொருள்

  1. சந்திரனின் ஒளி
  2. மின்னலினின் ஒளி
  3. கதிரவனின் ஒளி
  4. கதிரவனின் ஒளி

விடை : வீடு

7. மின்னல்வரி என்பதன் பொருள்

  1. மின்னல் காேடு 
  2. மின்னல் ஒளி
  3. கதிரவன் காேடு
  4. கதிரவன் ஒளி

விடை : மின்னல் காேடு

குறு வினா

1. விண்மீன்கள் மீனவர்களுக்கு எதுவாக விளங்குகிறது?

விண்மீன்கள் மீனவர்களுக்கு விளக்காக விளங்குகிறது

2. கதிரவனின் ஒளிச்சுடராக எவ்வாறு திகழ்கிறது?

அலை வீசும் கதிரவனின் ஒளிச்சுடர் மீனவர்களுக்கு மேற்கூரையாக திகழ்கிறது.

3. மீனவர்கள் வீடாக கருப்படுவது எது?

கட்டுமரம் மீனவர்கள் வாழும் வீடாக கருதப்படுகிறது.

4. நாட்டுப்புறப்பாடல் வகைகளை கூறு

ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில் பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள்

5. வாய்மொழி இலக்கியம் என்பதன் விளகத்தினை கூறு

காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டுவரும் நாட்டுப்புறப் பாடல்கள் வாய்மொழி இலக்கியம் எனப்படும்

6. க.சக்திவேல் தொகுத்த நூலின் பெயர் என்ன?

நாட்டுப்புற இயல் ஆய்வு

6th Tamil Text Books Pdf

Leave a Comment