Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.5 Eluthu Sol Book Back Solution

இயல் 1.5 – எழுத்து, சொல்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 ‘Eluthu Sol’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 1.5 எழுத்து, சொல்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 1.5 Eluthu Sol Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

எழுத்து, சொல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Eluthu Sol’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Eluthu Sol Subject.

Previous Lesson: உரைநடையின் அணிநலன்கள்

பலவுள் தெரிக

கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே

  1. பாடிய; கேட்டவர்
  2. பாடல்; பாடிய
  3. கேட்டவர்; பாடிய
  4. பாடல்; கேட்டவர்

விடை : பாடல்; கேட்டவர்

குறு வினா

I. வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும், பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

  • வேங்கை : வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும் (தனி மொழி)
  • வேம்+கை : வேகின்ற கை எனவும் பொருள் தருகிறது (தொடர் மொழி)

2. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ் இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக

  • உடுப்பதூம் உண்பதூஉம் : இன்னிசை அளபெடை வந்துள்ளது.
  • செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடையாகும்.

சிறு வினா

அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாது இவை அனைத்தையும் யாம் அறிவோம். ஆதுபற்றி உமது அறிவுரை எமக்கு தேவை இல்லை, எல்லாம் எமக்குத் தெரியும்,

இக்கூற்றில் வண்ண எழுத்தக்களில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

தொழிற்பெயர் எதிர்மறைத் தொழிற்பெயர்
அறிதல் அறியாமை
புரிதல் புரியாமை
தெரிதல் தெரியாமை
பிறத்தல் பிறவாமை

கற்பவை கற்றபின்…

1. தேன், நூல், பை, மலர், வா – இத் தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழிகளாக்குக.

  • தேன் –  தேன் மருந்துப் பொருளாக பயன்படுகிறது
  • நூல் –  நூல் பல கல்
  • பை –  பை நிறைய பணம் இருந்தது
  • மலர் –  மலர் பறித்து வந்தேன்
  • வா –  விரைந்து வா

2. வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.

காண், சிரி, படி, தடு

காண் 

  • காட்சி
  • காணுதல்
  • காணல்
  • காணாமை

சிரி

  • சிரிப்பு
  • சிரித்தல்
  • சிரிக்காமை

படி

  • படிப்பு
  • படித்தல்
  • படிக்காமை

தடு 

  • தடுப்பு
  • தடுத்தல்
  • தடுக்காமை

3. தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க.

அண்ணன் : எங்கே செல்கிறாய்? (தொடர் மொழி)

தம்பி : கடைக்கு (தனி மொழி)

அண்ணன் : இப்போது என்ன வாங்குகிறாய்? (தொடர் மொழி)

தம்பி : பருப்பு வாங்குகிறேன். (தொடர் மொழி)

அண்ணன் : எதற்கு? (தனி மொழி)

தம்பி : பருப்பு சோறு செய்ய அம்மா வாங்கி வரச் சொன்னார்கள் (தொடர்மொழி)

அண்ணன் : இன்று பருப்பு சோற வேண்டாமென்று அம்மாவிடம் சொல்வோம் (தொடர் மொழி)

தம்பி : சரி இன்று அம்மாவை பிரியாணி செய்து தரச்சொல்வோம் (தொடர் மொழி)

4. மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது ஏறுவேன் ; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்.’

இத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக மாற்றுக.

வினைமுற்று தொழில் பெயர்
அழைக்கும் அழைத்தல்
ஏறுவேன் ஏறுதல்
அமர்வேன் அமர்தல்
பார்ப்பேன் பார்த்தல்
எய்தும் எய்தல்

5. கட்டு, சொட்டு, வழிபாடு, கேடு, கோறல் – இத்தொழிற்பெயர்களை வகைப்படுத்துக.

  • கட்டு – முதனிலைத் தொழிற்பெயர்
  • சொட்டு – முதனிலைத் தொழிற்பெயர்
  • வழிபாடு – விகுதி பெற்ற தொழிற்பெயர்
  • கேடு –  முதனிலைத் தொழிற்பெயர்
  • கோறல் – விகுதி பெற்ற தொழிற்பெயர்

மொழியை ஆள்வோம்!

மாெழிபெயர்ப்பு

1. If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mandela

நீங்கள் ஒரு மனிதனிடம் ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அதை அவன் புரிந்து கொண்டு அவன் மூளைக்குச் செல்கிறது. ஆனால் அவனுடைய மொழியல் பேசினால் அது அவன் நெஞ்சத்தை தொடும் – நெல்சன் மண்டேலா

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

மொழியே கலாச்சாரத்தில் வழிகாட்டி. அதுவே மக்கள் எங்கிருந்து வந்தார்கள் மற்றும் எங்குப் போகிறார்கள் என்பதைச் சொல்லும் – ரிட்டா மே பிரவுண்

சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத திருத்துக

“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பத் காறமதை
ஊனிர்லே எம்முயிர் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்நதின புருமவாமே”

– கவிமணி தேசிக விநாயகனார்

விடை:-

“தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேறும் சிலப்பத் காமதை
ஊனிலே எம்முயிர் உள்ளவும் – நிதம்
ஓதி யுர்நதின புறுமவாமே”

– கவிமணி தேசிக விநாயகனார்

கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

(குவியல், குலை, மந்தை, கட்டு)

  • கல் – கற்குவியல்
  • பழம் – பழக்குலை
  • புல் – புற்கட்டு
  • ஆடு – ஆட்டுமந்தை

வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

விடை: கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

விடை: ஊட்டமிகு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்

3. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.

விடை: நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்

4. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.

விடை: பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.

1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

விடைபுவியில் வாழும் மானுடர்கள் சிலர் பழயிருக்கக் காய் உண்பதைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.

2. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

விடை: வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த அறிஞர்களுத் தனது தலையைக் ஈந்து மங்காப் பெருமை பெற்றான்.

3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்

விடை: நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போலக் மகிழ்ச்சி கொண்டனர்.

4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

விடை: நந்தவனத்தில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேனைவுண்டன.

5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

விடை: “ஆ”ப்போல் அமைதியும் வேங்கைபோல் வீரமும் களிறு போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்

மொழியோடு விளையாடு!

சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ

  • பூமணி
  • மழைத்தேன்
  • விண்மணி
  • செய்வான்
  • பூவிலங்கு
  • பொன்விளக்கு
  • பூமழை
  • மணிமேகலை
  • தேன்மழை
  • மணிவிளக்கு
  • வான்மழை
  • பொன்மணி
  • பொன்விலங்கு

வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க.

(குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்)

1. குறளின்பம்

விடை: குறளின்பத்தில் திளைக்காத தமிழன் உண்டா?

2. சுவைக்காத இளநீர்

விடை: மனிதர்கள் சுவைக்காத இளநீர் உண்டோ?

3. காப்பியச் சுவை

விடை: நீ காப்பியச் சுவையை அறிந்துள்ளாயா?

4. மனிதகுல மேன்மை

விடை: இக்காலங்களில் மனிதகுல மேன்மை சிறப்புற உள்ளதா?

5. விடுமுறை நாள்

விடை: தேரோட்டம் அன்ற உள்ளூர் விடுமுறை நாள் என அறிவிக்கப்படுமா?

எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.

செய்யுள் அடி எண்ணுப்பெயர் தமிழ் எண்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை நான்கு
எறும்புந்தன் கையால் எண்சாண் எட்டு
ஐந்துசால்பு ஊன்றிய தூண் ஐந்து ரு
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி நான்கு, இரண்டு ௪, உ
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி ஆயிரம் க000

அகராதியில் காண்க.

1. அடவி

விடை: காடு

2. அவல்

விடை: பள்ளம்

3. சுவல்

விடை: பிடரி, முதுகு

4. செறு

விடை: வயல், கோபம்

5. பழனம்

விடை: வயல்

6. புறவு 

விடை: சிறுகாடு

கலைச்சொல் அறிவோம்

  • Vowel – உயிரெழுத்து
  • Consonant – மெய்யெழுத்து
  • Homograph – ஒப்பெழுத்து
  • Monolingual – ஒரு மொழி
  • Conversation – உரையாடல்
  • Discussion – கலந்துரையாடல்

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “எழுத்து, சொல்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. உயிரளபெடை மூன்று வகைப்படும்.

  1. 2
  2. 4
  3. 5
  4. 3

விடை: 3

2. செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயர்

  1. இசைநிறை அளபெடை
  2. இன்னிசை அளபெடை
  3. சொல்லிசை அளபெடை
  4. பண்ணிசை அளபெடை

விடை: இசைநிறை அளபெடை

3. செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளபெடுப்பது ___________ ஆகும்.

  1. இசைநிறை அளபெடை
  2. இன்னிசை அளபெடை
  3. சொல்லிசை அளபெடை
  4. செய்யுளிசை அளபெடை

விடை: இன்னிசை அளபெடை

4. செய்யுளில் ஒரு பெயர்சச்சொல் எச்சச்
சொல்லாக த் திரிந்து அளபெடுப்பது ___________ ஆகும்.

  1. இசைநிறை அளபெடை
  2. இன்னிசை அளபெடை
  3. சொல்லிசை அளபெடை
  4. செய்யுளிசை அளபெடை

விடை: சொல்லிசை அளபெடை

5. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது _____________ எனப்படும்.

  1. தொடர்மொழி
  2. தனிமொழி
  3. நிலைமொழி
  4. வருமொழி

விடை: தனிமொழி

6. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது _____________ எனப்படும்.

  1. தொடர்மொழி
  2. தனிமொழி
  3. நிலைமொழி
  4. வருமொழி

விடை: தொடர்மொழி

7. தொடர்மொழிக்கு சான்று தருக

  1. கண்
  2. படி
  3. படித்தான்
  4. எட்டு

விடை: எட்டு

8. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ______________ ஆகும்.

  1. எதிர்மறைத் தொழிற்பெயர்
  2. முதனிலைத் தொழிற்பெயர்
  3. விணையாலணையும் பெயர்
  4. விகுதி பெற்ற தொழிற்பெயர்

விடை: விகுதி பெற்ற தொழிற்பெயர்

9. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ______________ ஆகும்.

  1. எதிர்மறைத் தொழிற்பெயர்
  2. முதனிலைத் தொழிற்பெயர்
  3. விணையாலணையும் பெயர்
  4. விகுதி பெற்ற தொழிற்பெயர்

விடை: விகுதி பெற்ற தொழிற்பெயர்

10. எதிர்மறைப் பொருளில் வரும் தொழிற்பெயர்

  1. விகுதி பெற்ற தொழிற்பெயர்
  2. முதனிலைத் தொழிற்பெயர்
  3. எதிர்மறைத் தொழிற்பெயர்
  4. விணையாலணையும் பெயர்

விடை: எதிர்மறைத் தொழிற்பெயர்

11. எதிர்மறைப் பொருளில் வரும் தொழிற்பெயர்

  1. விகுதி பெற்ற தொழிற்பெயர்
  2. முதனிலைத் தொழிற்பெயர்
  3. எதிர்மறைத் தொழிற்பெயர்
  4. விணையாலணையும் பெயர்

விடை: எதிர்மறைத் தொழிற்பெயர்

12. விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் ___________ தொழிற்பெயராகும்.

  1. விகுதி பெற்ற
  2. எதிர்மறைத்
  3. முதனிலைத்
  4. முதனிலைத் திரிந்த

விடை: முதனிலைத்

13. முதனிலைத் திரிந்த தொழிற்பெயருக்கு சான்று

  1. கெடு
  2. சுடு
  3. சூடு
  4. சிறு

விடை: சூடு

குறு வினா

1. சார்பெழுத்துகளின் வகைகளை எழுதுக

  • உயிர்மெய்
  • குற்றியலிகரம்
  • ஆய்தம்
  • ஐகாரக்குறுக்கம்
  • உயிரளபெடை
  • ஔகாரக்குறுக்கம்
  • ஒற்றளபெடை
  • மகரக்குறுக்கம்
  • குற்றியலுகரம்
  • ஆய்தக்குறுக்கம்

2. குறுக்கங்களின் வகைகளை எழுதுக

  • ஐகாரக்குறுக்கம்
  • ஔகாரக்குறுக்கம்
  • மகரக்குறுக்கம்
  • ஆய்தக்குறுக்கம்

3. உயிரளபெடை என்றால் என்ன?

செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை நிறைவு செய்ய , மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.

4. ஒற்றளபெடை என்பது யாது?

செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.

5. மூவகை மொழியினை எழுதுக

தனி மொழி, தொடர்மொழி, பொதுமொழி

6. தொழிற்பெயர் என்றால் என்ன?

ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண் இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.

எ. கா.: ஈதல், நடத்தல்

Leave a Comment