Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.4 Urainadai Aninalangal Book Back Solution

இயல் 1.4 – உரைநடையின் அணிநலன்கள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 1.4 ‘Urainadai Aninalangal’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 1.4 உரைநடையின் அணிநலன்கள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 1.4 Urainadai Aninalangal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

உரைநடையின் அணிநலன்கள் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Urainadai Aninalangal’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Urainadai Aninalangal Subject.

Previous Lesson: இரட்டுற மொழிதல்

நூல் வெளி

  • ம.இராமலிங்கம் (எ) எழில்முதல்வன் மாநிலக் கல்லூரியல் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடர்ந்தவர்.
  • குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராக பணி செய்தவர்.
  • மரபுக்கவிதை, புதுக்கவிதை படைப்பதில் வல்லவர்
  • இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய் முதலிய நூல்களை இயற்றிய பெருமைக்குரியவர்.
  • “புதிய உரைநடை” என்னும் நூலுக்காக “சாகித்திய அகாதெமி விருது” பெற்றவர்.
  • எழில்முதல்வன் எழுதிய “புதிய உரைநடை” என்னும் நூலிலுள்ள “உரைநடையின் அணிகலன்கள்” என்னும் கட்டுரையின் சுருக்கம், இங்கு உரையாடல் மாற்றித் தரப்பட்டுள்ளது.
தொன்று தொட்டு இன்றுவரை நின்று நிலவும் ஊர்கள்,
தொன்மைத் தமிழ் நாகரிகத்தின் வேர்கள்! இலக்கியத்தின் சீர்களில்…முன்தோன்றிய மூத்தகுடி

வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்

சிலப்பதிகாரம், காடுகாண் காதை: 53-55

திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலை

நெடு வினா

ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.

சூழல் – வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்பு பற்றி உரையாடுதல்.

உறவினர் மகள் வணக்கம் ஐயா
தமிழன் வணக்கம்
உறவினர் மகள் உரையாடல், உரைநடை என்றால் என்ன?
தமிழன் நீயும் நானும் பேசினால் உரையாடல். அதையே எழுதினால் உரைநடை.
உறவினர் மகள் உரை நடை வளர்ச்சி பற்றி உங்கள் கருத்து யாது?
தமிழன் உரைநடையில் எதுகை, மோனை போன்ற அணிகளோ இல்லை. ஆனால் அடுக்கு மொழிகள் உண்டு. கவிதையானது செயற்கைத் தன்மை கொண்டது. உரைநடையோ இயல்பான ஒழுங்கில் அமையும்.
உறவினர் மகள் தமிழ் உரை நடையின் வேறு வகைகள் உண்டா?
தமிழன் உண்டு. பொதுவாக உரைநடையினை ஆறு பிரிவுகளாக பிரிக்கலாம். விளக்க உரைநடை, அளவை உரைநடை, எடுத்துரை உரைநடை, வருணை உரைநடை, நாடக உரைநடை, சிந்தனை உரைநடை
உறவினர் மகள் எனக்கு வருணனை உரைநடைப் பற்றி கூற முடியுமா?
தமிழன் கூறுகிறேன். வருணனை உரைநடை என்பது புலனுணர்வு அனுபவங்களை வருணனையாக விவரிப்பது. மக்கள், உயிரினங்கள், பொருள்கள் ஆகியவற்றை வருணிப்பது.
உறவினர் மகள்  உரைநடையில் ஓசை இன்பம் ஏற்படுமா?
தமிழன் எதுகை, மோனை சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தி உரையாசிரியர்கள் பலர் உரையெழுதி உள்ளனர். எடுத்துக்காட்டாக இரா.பி. சேதுபிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலைக் கூறலாம்.
உறவினர் மகள் உரைநடையில் இலக்கிய உத்திகள் உண்டா?
தமிழன் உண்டு. மு.வ. உரைநடையில் உவமை, எதுகை, மோனை சொல்லாட்சி போன்ற நான்கு உலக உத்திகளைக் கையாண்டுள்ளார்.
உறவினர் மகள் உரைநடையில் மோனை நயம் உள்ளதா?
தமிழன் உள்ளது சான்றாக, இரா.பி. சேதுபிள்ளையின் “தமிழ் விருந்து” என்னும் நூலில் “கலையும் கற்பனையும்” என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில்

லையிலே ழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது.
ருவியாய் விழந்து றாய் பாய்கிறது” – என்பதை அறிய முடிகிறது.

உறவினர் மகள் மோனையும், இயைபும் வருவது போல் உரைநடை சொல்லுங்கள் ஐயா!
தமிழன் சொல்கிறேன். இரா.பி.சேதுபிள்ளையின் “உமறுப்புலவர்” என்னும் கட்டுரையில்

பாண்டிய நாட்டில் ருவமழை பெய்யாது ஒழிந்தது. பஞ்சம் வந்தது. பசி நோயும் மிகுந்தது.

உறவினர் மகள் ஐயா கடைசியாக, முரண் நயம் பற்றி மட்டும் கூறுங்கள் ஐயா!
தமிழன் முரண் என்பது முரண்பட்ட இரண்டு சொற்கள் அருகே அருகே அடுக்கி வருதல். இரா.பி. சேதுபிள்ளையின் “ஊரும் பேரும்” என்னும் நூலில் “வாழ்வும் தாழ்வும்” நாடு நகரங்களும் உண்டு. “சீரும் சிறப்பும்” உற்று விளங்கி சில நகரங்கள் இக்காலத்தில் புகைபடிந்த ஓவியங்கள் போல் பொலிவிழந்து உள்ளது.
உறவினர் மகள் மிக்க நன்றி ஐயா. தங்களிடமிருந்து உரைநடையின் சிறப்பினை நன்கு அறிந்த கொண்டேன்.
தமிழன் வணக்கம்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “உரைநடையின் அணிநலன்கள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. குறிஞ்சி பாட்டு நூலின் ஆசிரியர்

  1. கம்பர்
  2. கபிலர்
  3. சச்சிதானந்தம்
  4. குன்றூர்க்கிழார்

விடை : கபிலர்

2. திருவள்ளூவர் பெயரில் முதல் தமிழ்க்கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு

  1. 1963
  2. 1973
  3. 1983
  4. 1993

விடை : 1983

3. புதிய உரைநடை என்னும் நூலின் ஆசிரியர்

  1. க.அப்பாத்துரை
  2. எழில் முதல்வன்
  3. பாவாணர்
  4. இளங்குமரனார்

விடை : எழில் முதல்வன்

4. எழில் முதல்வன் __________ என்னும் இயற்பெயரை கொண்டவர்

  1. க.அப்பாத்துரை
  2. மா. இராமலிங்கம்
  3. பாவாணர்
  4. இளங்குமரனார்

விடை : மா. இராமலிங்கம்

5. எழில் முதல்வனின் _________ என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்

  1. இனிக்கும் நினைவுகள்
  2. யாதுமாகி நின்றாய்
  3. புதிய உரைநடை
  4. எங்கு காணினும்

விடை : புதிய உரைநடை

6. உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகமாகும் என்று எழுதியவர்

  1. தொல்காப்பியர்
  2. அகத்தியர்
  3. கம்பர்
  4. தண்டி

விடை : தண்டி

6. களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்ததாய்; உன் புன்னகைதான் அதற்குச் சான்று” என்ற உரைநடை வரிகளை எழுதியவர்

  1. பெரியார்
  2. பாரதியார்
  3. அண்ணா
  4. ஜீவானந்தம்

விடை : அண்ணா

6. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் ______________ என்கிறோம்.

  1. உருவகம்
  2. இணை ஒப்பு
  3. உவமை
  4. இலக்கணை

விடை : இணை ஒப்பு

7. Analogy என்பதன் தமிழாக்கம் தருக

  1. இணை ஒப்பு
  2. உருவகம்
  3. உவமை
  4. இலக்கணை

விடை : இணை ஒப்பு

8. மழையும் புயலும் நூலின் ஆசிரியர்

  1. மு.வ.
  2. மீ.ரா
  3. கி.ரா
  4. வ.ராமசாமி

விடை : வ.ராமசாமி

9. மழையும் புயலும் நூலின் ஆசிரியர்

  1. மு.வ.
  2. மீ.ரா
  3. கி.ரா
  4. வ.ராமசாமி

விடை : வ.ராமசாமி

10. தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர்

  1. திரு.வி.க
  2. மு.வ.
  3. மீ.ரா
  4. வ.ராமசாமி

விடை: திரு.வி.க

11. சொல்லின் செல்வன் எனப்படுபவர்

  1. திரு.வி.க
  2. இரா.பி.சேதுபிள்ளை
  3. நா.பார்த்தசாரதி
  4. வ.ராமசாமி

விடை: இரா.பி.சேதுபிள்ளை

12. தமிழின்பம் நூலின் ஆசிரியர்

  1. திரு.வி.க
  2. நா.பார்த்தசாரதி
  3. வ.ராமசாமி
  4. இரா.பி.சேதுபிள்ளை

விடை: இரா.பி.சேதுபிள்ளை

13. இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போல வடபுறமும் தென்புறமு் நிறைந்த கண்மாய்கள் என்று குறிஞ்சி மலர் நூலில் நா.பார்த்தசாரதி பயன்டுத்திய நயம்

  1. உவமை
  2. உருவகம்
  3. எடுத்துக்காட்டு உவமையணி
  4. பொருள் பின்வருநிலையணி

விடை : உவமை

Leave a Comment