Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 Gnanam Book Back Solution

இயல் 8.2 – ஞானம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 8.2 ‘Gnanam’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 8.2 ஞானம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 8.2 Gnanam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

ஞானம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Gnanam’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: சங்க இலக்கியத்தில் அறம்

நூல்வெளி

  • நம்பாடப்பகுதியில் கொடுக்கப்பட்ட கவிதை தி.சு. வேணுகோபாலனின் “கோடை வயல்” என்னம் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
  • தி.சொ.வேணுகோபாலன் திருவையாற்றில் பிறந்தவர்;
  • மணிப்பால் பாெறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்;
  • எழுத்து‘ காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்.
  • இவரின் மற்றொரு கவிதைத் தாெகுப்பு மீட்சி விண்ணப்பம்.

பலவுள் தெரிக

வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் இவ்வடி குறிப்பிடுவது

  1. காலம் மாறுவதை
  2. வீட்டைத் துடைப்பதை
  3. இடையறாது அறப்பணி செய்தலை
  4. வண்ணம் பூசுவத

விடை : இடையறாது அறப்பணி செய்தலை

குறு வினா

காலக் கழுதை சுட்டெறும்பானது கவிஞர் செய்வது யாது?

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலை குறிப்பது ஆகும்.
  • வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அற்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
  • வாளித்தண்ணீர், சாயக்குவளை, துணி கந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகை கட்டையானலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

சிறு வினா

1. ‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்’ என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.

(குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)

உரைக்குறிப்புகள்:-

  • அறம் என்பதன் விளக்கம் தரல்
  • சுற்றுச்சூழல் என்றால் என்ன?
  • சுற்றுச்சூழலோடு அறத்திற்கு உள்ள தொடர்பை விளக்குதல்.
  • அறம் சார்ந்த வகையில் மாசு அடைவதைத் தவிர்க்க வழி கூறுதல்.
  • சட்டங்கள் வன்மையாக இருந்தாலும், அரசின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்.
  • நெகிழி, ஆலைக்கழிவு, நச்சுக்காற்று வாகனப்புகை இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்.
  • இக்குறிப்புகளை மையமாக வைத்து உரையாற்ற வேண்டும்.

2. வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.

  • வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப் படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் ஜன்னலையும் நன்கு கழுவ வேண்டும்.
  • பிறகு கந்தை துணியால் நன்கு துடைத்து விட வேண்டும்.
  • மூன்றாவதாக சாயக் குவளையில் உள்ள சாயத்தை கட்டைத் தூரிகை கொண்டு சாயம் பூசி புதுபிக்க வேண்டும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “ஞானம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. கோடை வயல் தொகுப்பின் ஆசிரியர்

  1. அப்துல்ரகுமான்
  2. வேணுகோபாலன்
  3. இராஜகோபாலன்
  4. இராமகோபாலன்

விடை : வேணுகோபாலன்

2. தி.ச.வேணுகோபாலினின் கவிதை நூல்

  1. எழுத்து
  2. ஞானம்
  3. இறகு
  4. சக்கரம்

விடை : ஞானம்

3. கோடை வயல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதை

  1. எழுத்து
  2. ஞானம்
  3. இறகு
  4. சக்கரம்

விடை : ஞானம்

4. எழுத்து காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்

  1. திருவள்ளுவர்
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. தி.சொ.வேணுகோபாலன்

விடை : தி.சொ.வேணுகோபாலன்

5. தி.ச.வேணுகோபாலன் ____________ -யில் பேராசிரியராகப் பணியாற்றினார்

  1. கோவை மருத்தவக் கல்லூரி
  2. மணிப்பால் பொறியில் கல்லூரி
  3. சென்னை கிண்டி கல்லூரி
  4. வேளாண்மைக் கல்லூரி

விடை : மணிப்பால் பொறியில் கல்லூரி

6. மீட்சி விண்ணப்பம் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்

  1. வேணுராம்
  2. சி.சு. செல்லப்பா
  3. வேணுகோபாலன்
  4. கபிலர்

விடை : வேணுகோபாலன்

7. ஞானம் என்ற கவிதையானது உணர்த்துகின்ற பொருள் 

  1. உலகப் பணி
  2. சமூக அறப்பணி
  3. வீட்டைப் புதுப்பித்தல்
  4. இடைவிடாத சமூக அறப்பணி

விடை : இடைவிடாத சமூக அறப்பணியை

8. காலக்கழுதை இலக்கணக்குறிப்பு தருக

  1. எண்ணும்மை
  2. முற்றுமை
  3. பண்புத்தொகை
  4. உருவகம்

விடை : உருவகம்

9. கந்தைத்துணி இலக்கணக்குறிப்பு தருக

  1. வினைத்தொகை
  2. பண்புத்தொகை
  3. உருவகம்
  4. இருபெயரொட்டு பண்புத்தொகை

விடை : இருபெயரொட்டு பண்புத்தொகை

10. சாயக்குவளை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. சாய + குவளை
  2. சாயக் + கவளை
  3. சாயம் + குவளை
  4. சாய + கூவளை

விடை : சாயம் + குவளை

11. அறப்பணி என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. அற + பணி
  2. அறப் + பணி
  3. அறம் + பணி
  4. அறம் + பிணி

விடை : அறம் + பணி

12. உலகமில்லை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. உலகம் + இல்லை
  2. உலகம் + மில்லை
  3. உலக + இல்லை
  4. உலக + மில்லை

விடை : உலகம் + இல்லை

13. ஓய்வதில்லை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. ஓய்வது + இல்லை
  2. ஓய்வது + தில்லை
  3. ஓய்வு + அது + இல்லை
  4. ஓய்வு + வது + இல்லை

விடை : ஓய்வது + இல்லை

குறு வினா

தி.சொ.வேணுகோபாலன் குறிப்பு எழுதுக

  • பிறந்த இடம்: திருவையாறு
  • பணி: பேராசிரியர் (மணிப்பால் பாெறியியல் கல்லூரி
  • சிறப்பு: எழுத்து காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்
  • கவிதைத் தாெகுப்பு: மீட்சி விண்ணப்பம், கோடைவெயில்

Leave a Comment