Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 Sanga Ilakkiyathil Aram Book Back Solution

இயல் 8.1 – சங்க இலக்கியத்தில் அறம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 8.1 ‘Sanga Ilakkiyathil Aram’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 8.1 Sanga Ilakkiyathil Aram Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

சங்க இலக்கியத்தில் அறம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Sanga Ilakkiyathil Aram’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: புறப்பொருள் இலக்கணம்

பலவுள் தெரிக

1. மேன்மை தரும் அறம் என்பது 

  1. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
  2. மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
  3. புகழ் கருதி அறம் செய்வது
  4. பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

விடை : கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

  1. உதியன்; சேரலாதன்
  2. அதியன்; பெருஞ்சாத்தன்
  3. பேகன்; கிள்ளிவளவன்
  4. நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி

விடை : அதியன்; பெருஞ்சாத்தன்

குறு வினா

குறிப்பு வரைக : அவையம்

  • அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்கு துணை புரிந்தன.
  • “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது புறநானூறு, உறையூலிருந்து அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.
  • மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.
  • மதுரை அவையம் துலாக்கோல் போல் நடுநிலைமிக்கது.

சிறு வினா

சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்குமு் தேவையானவையே என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.

சங்க இலக்கியங்ள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கும், அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவுகிறது.

அரசியல் அறம்:-

“அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”

நீர் நிலையைப் பெருக்கி நிலவளம் கண்டு, உணவுப் பெருக்கம் காண்பதும், அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசினின் அறம். இவ்வறம் இன்றைய சூழலில் காணப்படுகிறது.

வணிகத்தில் அறம்:-

“அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்”

அறம் செய்வதில் வணிகநோக்கம் இருத்தல் கூடாது, நோக்கமின்றி அறம் செய்வதே வணிக அறனின் மேன்மையாகும்.

போர் அறம்:-

தமிழர் போர் செய்வதிலும், அறநெறி உடையவர்களாக இருந்தனர். போர் அறம் என்பது வீரமற்றோர், முதியோர், சிறார் போன்றவரை எதிர்த்து போர் செய்யாமல் இருப்பது.

உதவி செய்வதி அறம்:-

  • பிறருக்கு உதவி செய்வதை அறமாகக் கருதினர். அதாவது தன்னைத் தாண்டி பிறரைப் பற்றி சிந்திக்கும் நிலை.
  • “பிழையா நன்மொழி” என்று நற்றிணையும் கூறுகிறது.
  • நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக் கூடாது. மெய் பேசும் நாவே மனிதனை உயர்த்தும்.
  • சங்க இலக்கியங்கள் காட்டும் அறம் ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குதவதற்குப் பண்பு நலனே காரணம் என்று சங்க இலக்கியம் மூலமாக அறிய முடிகிறது.
  • இறுதியாக, சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைய மனிதனுக்கு அடிப்படையாகவும் வழிகாட்டுதலாகவும் உள்ளது.

நெடு வினா

பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தையும், அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்கு கடிதம் எழுதுக

உறவினருக்கு மடல்

திருநெல்வேலி
07.07.2021

அன்புள்ள பெரியப்பாவிற்கு லிங்கம் எழுதுவது,

நலம், நலம் அறிய ஆவல்,

நான் இன்று மகிழ்ச்சியாக உள்ளேன். என்னவென்று தெரியுமா? நேற்று வகுப்பு முடித்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அப்போது பள்ளித்திடலில் ஒரு பணப்பை கிடைத்தது. அதில் அதிகமான பணம் இருந்தது. ஒரு நிமிடம் ஐயோ! இவ்வளவு பணம் இருக்கிறதே என்று பையை எடுத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்றேன். அவர் அலுவலக ஊழியர் கட்டணம் வசூலித்த பணம் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது தவற விட்டு விட்டார் என்றார்.

தலைமை ஆசிரியர் மிகவும் மகிழ்ந்தார். என் நேர்மையையும், கண்ணியமான செயலையும் பாராட்டினார்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படாத உன்னைப் பாராட்டியே தீர வேண்டும் என்று மறுநாள் காலை இறை வணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் என் நேர்மையை பாராட்டி, சன்மானத் தொகையை பரிசாகவும் வழங்கினார்.

அது மட்டுமல்லாமல் என்னைப் பள்ளி மாணவர் தலைவராக்கினார். நேர்மைக்கு எப்போதும் உயர்வு உண்டு என்று கூறி, அதற்கு ராமுவே என்று என்னைப் பாராட்டினார்.

இந்நிகழ்வின் மகிழ்ச்சியை உங்களுடன், பெரியம்மா, தங்கையுடன் இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வதற்கு மகிழ்கிறேன்.

இப்படிக்கு
தங்கள் அன்புள்ள,
ராமு

உறைமேல் முகவரி

பெறுநர்:-

அ. அய்யம்பெருமாள்
5/507, திருவள்ளூவர் நகர்
சென்னை – 600 012.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “சங்க இலக்கியத்தில் அறம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. சங்க இலக்கியத்தைப் பற்றி கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று கூறியவர்

  1. ஜி.யூ.போப்
  2. ஆர்னால்டு
  3. கால்டுவெல்
  4. வீரமாமுனிவர்

விடை : ஆர்னால்டு

2. சங்க பாடலில் அறம் பற்றிய கருத்துக்கள் யாரை முதன்மைபடுத்தியே கூறப்படுகிறது?

  1. வீரர்களை
  2. மக்களை
  3. அரசர்களை
  4. அமைச்சர்களை

விடை : அரசர்களை

3. ________ செய்வதில் வணிக நோக்கம் இருக்கக்கூடாது என்பது சங்ககால மக்களின் கருத்தாக இருந்தது.

  1. வணிகம்
  2. தொழில்
  3. அறம்
  4. கடமை

விடை : அறம்

4. இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் என்ற புறநானூறு பாடல் வரிகளை எழுதியவர்

  1. மாங்குடி மருதனார்
  2.  ஆவூர் மூலங்கிழார்
  3. ஏணிச்சேரி முடமோசியார்
  4. நக்கீரனார்

விடை : ஏணிச்சேரி முடமோசியார்

5. நோக்கமின்றி ________ செய்வதே மேன்மை தருகிறது.

  1. துன்பம்
  2. இன்பம்
  3. அறம்
  4. இன்மை

விடை : அறம்

6. சங்கப்பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் ___________ முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன.

  1. புலவர்களை
  2. அமைச்சர்களை
  3. அரசர்களை
  4. மக்களை

விடை : அரசர்களை

7. மன்னர்களுடைய ___________, _____________ அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன.

  1. செங்கோலும், அறமும்
  2. வெண்கொற்றக்குடையும், அறமும்
  3. செங்கோலும், வெண்கொற்றக்குடையும்
  4. கொடையும், அறமும்

விடை : செங்கோலும், வெண்கொற்றக்குடையும்

8. குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்றவர்

  1. நல்லாதனார்
  2. ஆவூர் மூலங்கிழார்
  3. நக்கீரனார்
  4. ஊன் பொதிப் பசுங்குடையார்

விடை : ஊன் பொதிப் பசுங்குடையார்

9. நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும்
அறனும் காத்தலும் அமைச்சர் கடமை
என்று கூறிய நூல்

  1. புறநானூறு
  2. மதுரைக்காஞ்சி
  3. நான்மணிக்கடிகை
  4. அகநானூறு

விடை : மதுரைக்காஞ்சி

10. செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சர்களை போற்றியவர்

  1. நல்லாதனார்
  2. ஊன் பொதிப் பசுங்குடையார்
  3. நக்கீரனார்
  4. மாங்குடி மருதனார்

விடை : மாங்குடி மருதனார்

11. மதுரையின் அவையம் பற்றிக் குறிப்பிடும் நூல்

  1. மதுரை மும்மணிக்கோவை
  2. பரிபாடல்
  3. சிலப்பதிகாரம்
  4. மதுரைக்காஞ்சி

விடை : மதுரைக்காஞ்சி

12. உதவி செய்தலை உதவியாண்மை எனக் குறிப்பிட்டவர்

  1. ஈழத்துப் பூதன் தேவனார்
  2. திருமுடிக்காரி
  3. நக்கீரர்
  4. கபிலர்

விடை : ஈழத்துப் பூதன் தேவனார்

13. இரப்போருக்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. பரிபாடல்
  2. குறுந்தொகை
  3. கலித்தொகை
  4. ஐங்குறுநூறு

விடை : கலித்தொகை

14. வீரத்தைப் போலவே _________ம் தமிழர்களால் விரும்பப்பட்டது.

  1. அறம்
  2. நன்மை
  3. கொடை
  4. தீமை

விடை : கொடை

14. செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே என்ற பாடல் வரிகளின் ஆசிரியர்

  1. மாங்குடி மருதனார்
  2. நல்லாதனார்
  3. நக்கீரனார்
  4. ஊன் பொதிப் பசுங்குடையார்

விடை : நக்கீரனார்

15. பேகன், மறுமை நோக்கி கொடுக்காதவர் என்று பாராட்டியவர்

  1. கபிலர்
  2. ஒளவையார்
  3. நக்கீரர்
  4. பரணர்

விடை : பரணர்

16. வள்ளலின் பொருள், இரவலின் பொருள் என்று பாராட்டியவர்

  1. கபிலர்
  2. பெரும்பதுமனார்
  3. நல்வேட்டனார்
  4. நக்கீரர்

விடை : பெரும்பதுமனார்

17. சேர அரசர்களின் கொடையினை பற்றிக் கூறும் நூல்

  1. பரிபாடல்
  2. குறுந்தொகை
  3. பதிற்றுப்பத்து
  4. ஐங்குறுநூறு

விடை : பதிற்றுப்பத்து

18. ஜப்பானியர் _______________ கோயில் கட்டியவர்கள்

  1. குலாய்கன்
  2. போதி தர்மர்
  3. குப்லாய்கான்
  4. நல்வேட்டனார்

விடை : போதி தர்மர்

19. தனிச் சிறப்புப் பெற்றிருந்த அற அவையம் அமைந்திருந்த இடம்

  1. உறையூர்
  2. மதுரை
  3. திருநெல்வேலி
  4. மாமல்லபுரம்

விடை : உறையூர்

20. உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் நீக்குவது எனக் கூறியவர் 

  1. கபிலர்
  2. ஒளவையார்
  3. நக்கீரர்
  4. நல்வேட்டனார்

விடை : நல்வேட்டனார்

21. செல்வத்துப் பயனே ஈதல் என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. பரிபாடல்
  2. குறுந்தொகை
  3. ஐங்குறுநூறு
  4. புறநானூறு

விடை : புறநானூறு

22. ஈதல் தொடர்பான செய்திகளைக் கூறுகின்ற அக இலக்கியம்

  1. பரிபாடல்
  2. குறுந்தொகை
  3. கலித்தொகை
  4. ஐங்குறுநூறு

விடை : கலித்தொகை

23. பொருத்தாததை தேர்க

  1. நச்செள்ளையார் – ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
  2. ஒளவையார் – அதியன்
  3. நக்கீரர் – பாரி
  4. கபிலர் – திருமுடிக்காரி

விடை : நக்கீரர் – பாரி

24. பொருத்தாததை தேர்க

  1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அதியன்
  2. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி அழைக்கும் இயல்பு – ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
  3. மறுமை நோக்கி கொடுக்காதவன் – பேகன்
  4. எல்லாவற்றையும் கொடுப்பவன் – மலையமான் திரு முடிக்காரி

விடை : எதுவுமில்லை

25. கொடைவள்ளல் எழுவரின் கொடைப் பெருமைகளை குறிப்பிடும் நூல்

  1. பெருநாராற்றுப்படை
  2. பதிற்றுப்பத்து
  3. பட்டினப்பாலை
  4. சிறுபாணாற்றுப்படை

விடை : சிறுபாணாற்றுப்படை

Leave a Comment