Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 Malaipadukadam Book Back Solution

இயல் 3.3 – மலைபடுகடாம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 3.3 ‘Malaipadukadam’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 3.3 மலைபடுகடாம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 3.3 Malaipadukadam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

மலைபடுகடாம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Malaipadukadam’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: காசிக்காண்டம்

மலைபடுகடாம் பாடல்

அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,
கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி

அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மான விறல்வேள் வயிரியம் எனினே

நும்இல் போல நில்லாது புக்கு,
கிழவிர் போலக் கேளாது கெழீஇ
சேட் புலம்பு அகல இனிய கூறி
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்

நூல் வெளி

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று “மலைபடுகடாம்”
  • 583 அடிகளை கொண்டது.
  • “”கூத்தராற்றுப்படை” என அழைக்கப்படுகிறது.
  • மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.
  • “நன்னன்” என்ற குறுநில மன்னன் பாட்டுடைத் தலைவன் ஆவான்.
  • மலைபடுகடாம் ஆசிரியர் “இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசினார்”.

சொல்லும் பொருளும்

  • அசைஇ – இளைப்பாறி
  • அல்கி – தங்கி
  • கடும்பு – சுற்றம்
  • நரலும் – ஒலிக்கும்
  • ஆரி – அருமை
  • படுகர் – பள்ளம்
  • வயிரியம் – கூத்தர்
  • வேவை – வெந்தது
  • இறடி – திசை
  • பொம்மல் – சோறு

பகுபத உறுப்பிலக்கணம்

1.  மலைந்த = மலை + த் (ந்) + த் + அ

  • மலை – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

2. பொழிந்த = பொழி + த் (ந்) + த் + அ

  • பொழி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

இலக்கணக் குறிப்பு

  • அசைஇ, கெழீஇ – சொல்லிசை அளபெடைகள்
  • பரூஉக், குரூஉக்கண் – செய்யுளிசை அளபெடைகள்

பலவுள் தெரிக.

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி என்னும் அடியில் பாக்கம் என்பது-

  1. புத்தூர்
  2. மூதூர்
  3. பேரூர்
  4. சிற்றூர்

விடை : பேரூர்

குறு வினா

இறடிப் பொம்மல் பெறுகுவிர் – தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக

தினைச் சோற்றையும் உணவாகப் பெறவீர்கள்.

சிறு வினா

1. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவு வகைகள் யாவை?

  • முல்லை – வரகு, சாமை
  • மருதம் – செந்நெல், வெண்ணெல்

2. கூத்தனைக் கூத்தன் ஆற்றப்படுத்தலைக் கூத்தாராற்றப்படை எவ்வாறு காட்டுகிறது.

வழிகாட்டல்:-

பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள். இரவில் சேர்ந்து தங்குங்கள். எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள். சிவந்த பூக்கள் கொண்ட அசோக மூங்கில்கள் ஓசை எழுப்பும் மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையங்கள்.

நன்னின் கூத்தர்கள்:-

பகைவரே இல்லாமல் ஆட்சி செய்பவன், பகை வந்தாலும் எதிர் கொள்ளும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

இன் சொற்கள்:-

நீங்கள் உரிமையுடன் உங்கள் வீட்டிற்கு போவது போலவே அவர்களுடைய வீட்டிற்குள் நுழையுங்கள். அவர்களும் உங்களிடம், உறவினர் போலப் பழகி இனிய சொற்களைப் பேசுவார்கள்.

உணவு:-

நெய்யில் வெந்த மாசிசம், தினைச் சோறு ஆகியவற்றை உணவாக அளிப்பர். அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நெடு வினா

ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

முன்னுரை:-

அன்றைய நிலையில் பொருளுக்காக ஆற்றப்படுத்துவது நிகழ்ந்தது. ஆனால் இன்று ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து விலகி வேறுபடுகின்றது.

உணவு:-

அன்றைய பாணர்கள், கூத்தர்கள் மன்னனிடமோ, வள்ளலிடமோ ஆற்றுப்படுத்தினர். ஆனால் இன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு தரும் அன்னச் சத்திரங்கள் பற்றியும், அன்னதானம் நடைபெறும் இடங்களைப் பற்றியும் ஆற்றுப்படுத்துகின்றனர்.

கல்வி:-

கல்வி கற்க முடியாதவர்களுக்கு  கல்வி உதவித் தொகை அளிக்கும் அரசின் திட்டங்கள் பற்றியும், உதவும் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் இன்று பல் வழிகாட்டல் செய்கின்றனர்.

தொழில்:-

இன்று வேலைவாய்ப்பின்மை பெருகி வருகின்றது. அதனைப் போக்க அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் தொழிற்பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் திண்டாடுவோருக்கு அவை குறித்த வழிகாட்டல்கள் இன்று செய்யப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் ஓரவு போக்கப்படுகின்றது.

நன்னடை:-

சமுதாயத்தில் இன்று வன்முறை பெருகியுள்ளது. இதற்குக் காரணம் சினம், பொறாமை, சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே! அவற்றைக் கட்டுப்படுத்த, அனைவருக்கும் மனதை ஒருநிலைப்படுத்த தியானப் பயிற்சி செய் இன்று வழிகாட்டல்கள் செய்கின்றனர்.

முடிவுரை:-

வழிகாட்டல் என்பது நெறிபிறழும் சமுதாயத்தைக் காக்க உதவும் ஒரு இன்றியமையாத கருவியாகும். வழிகாட்டலுக்கு வித்து ஆற்றப்படுத்தல் இலக்கியங்களே சான்றாகும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “மலைபடுகடாம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. மலைபடுகடாம் நூல்களுள் ஒன்று.

  1. பதினெண்கீழ்கணக்கு
  2. எட்டுத்தொகை
  3. பத்துபாட்டு
  4. நீதி

விடை : பத்துபாட்டு

2. மலைபடுகடாம் அமைந்துள்ள அடிகள் எண்ணிக்கை

  1. 283
  2. 383
  3. 483
  4. 583

விடை : 583

3. மலைபடுகடாம் ____________ எனவும் அழைக்கப்படுகிறது

  1. கூத்தராற்றுப்படை
  2. பெரும்பாணாற்றுப்படை
  3. சிறுபாணாற்றுப்படை
  4. விறலியாறற்றுப்படை

விடை : கூத்தராற்றுப்படை

4. மலைபடுகடாம் நூலிலுள்ள மலைக்கு உவமையாக கூறப்படுவது

  1. மான்
  2. யானை
  3. மேகம்
  4. வானம்

விடை : யானை

5. அசைஇ என்பதன் பொருள் கூறுக

  1. அசைவாடிய
  2. இளைப்பாறி
  3. அமைதியாகி
  4. இன்பமாகி

விடை : இளைப்பாறி

6. அசோக மரங்கள் ___________ பூக்களை கொண்டது?

  1. கரும்
  2. சிவந்த
  3. நீலநிற
  4. வெண்மையான

விடை : சிவந்த

7. அல்கி என்ற சொல்லின் பொருள்

  1. தங்கி
  2. உள்ளே
  3. வெளியே
  4. அழிந்து

விடை : தங்கி

8. மலைபடுகடாம் ___________ -யென அழைக்கப்படுகிறது

  1. பெரும்பாணாற்றுப்படை
  2. கூத்தாராற்றுப்படை
  3. சிறுபாணாற்றுப்படை
  4. விறலியாறற்றுப்படை

விடை : கூத்தாராற்றுப்படை

9. மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன்

  1. பாரி
  2. கபிலர்
  3. நன்னன்
  4. பெருங்கெளசிகனார்

விடை : நன்னன்

10. புக்கு இலக்கணக்குறிப்பு தருக

  1. பெயரெச்சம்
  2. பண்புத்தொகை
  3. வினையெச்சம்
  4. வினைத்தொகை

விடை : வினையெச்சம்

11. பொழிந்த இலக்கணக்குறிப்பு தருக

  1. பெயரெச்சம்
  2. பண்புத்தொகை
  3. வினையெச்சம்
  4. வினைத்தொகை

விடை : பொழிந்த

குறு வினா

1. ஆற்றுப்படை என்றால் என்ன?

ஆற்றப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்தல், யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை ஆகும்.

2. மலைப்படுகடாம் பெயர்க்காரணம் கூறுக

மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.

4. மலைப்படுகடாமில் கூறப்படும் பண்டையத் தமிழ் கலைஞர்கள் யாவர்?

கூத்தர், பாணர், விறலியர்

5. மலைபடுகடாம் குறிப்பு வரைக 

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
  • 583 அடிகளை கொண்டது.
  • கூத்தராற்றுப்படை என அழைக்கப்படுகிறது.
  • மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.
  • நன்னன் என்ற குறுநில மன்னன் பாட்டுடைத் தலைவன் ஆவான்.
  • மலைபடுகடாம் ஆசிரியர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசினார்.

6. பத்துப்பாட்டில் அமைந்த ஆற்றுப்படை நூல்களையும், ஆசிரியர் பெயர்களையும் எழுதுக

  • திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
  • பெரும்பாணாற்றுப்படை – கடியலூர் உருத்திரங்கண்ணணார்
  • சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்
  • பொருநாராற்றுப்படை – முடத்தாமக்கண்ணியார்
  • கூத்தராற்றுப்படை – பெருங்கெளசிகனார்

Leave a Comment