Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.2 Kasikandam Book Back Solution

இயல் 3.2 – காசிக்காண்டம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 3.2 ‘Kasikandam’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 3.2 காசிக்காண்டம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 3.2 Kasikandam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

காசிக்காண்டம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kasikandam’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: விருந்து போற்றதும்

காசிக்காண்டம் பாடல்

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே

சொல்லும் பொருளும்

  • அருகுறை – அருகில்
  • முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்

பகுபத உறுப்பிலக்கணம்

1.  உரைத்த – உரை + த் + த் +அ

  • உரை – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

2. வருக – வா(வரு) + க

  • வா – பகுதி
  • வரு – எனக் குறுகியத விகாரம்
  • க – வியங்கோள் வினைமுற்று விகுதி

இலக்கணக் குறிப்பு

  • நன்மொழி – பண்புத்தொகை
  • வியத்தல், நோக்கம், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் – தொழிற்பெயர்கள்
  • வருக – வியங்கோள் வினைமுற்று

நூல் வெளி

  • காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்
  • துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றை பாடுவதாக அமைந்துள்ளது.
  • ‘இல்லொழுக்கங்’ கூறிய பகுதியிலுள்ள பதினேழவது பாடல் பாடப்பகுதியாக இடம் பெற்றுள்ளது.
  • முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.
  • தமிழ்ப் புலவராக திகழ்ந்த இவர் இயற்றி நூல் காசிக்காண்டம்
  • இவர் இயற்றிய வெற்றி வேற்கை என்றழைக்கப்டும் நறுந்தொகை சிறந்த அறக் கருத்துகளை எடுத்துரைக்கிறது.
  • இவரின் பட்டப்பெயர்  சீவலமாறன்.
  • காசிக்காண்டம், நைடதம், லிங்கபுராணம், வாயுசம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம், வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை ஆகியவை இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.

பலவுள் தெரிக

காசிக்காண்டம் என்பது

  1. காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
  2. காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
  3. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
  4. காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

விடை : காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

குறு வினா

விருந்தினரை மகிழ்வித்து கூறும் முகமன் சொற்களை எழுதுக

  • வாருங்கள் ஐயா, வணக்கம்!
  • அமருங்கள்
  • நலமாக இருக்கிறீர்களா?
  • தங்கள் வரவு நல்வரவு.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “காசிக்காண்டம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பகுபத உறுப்பிலக்கணம்

1. பரிந்து – பரி + த்(ந்) + த் + உ

  • பரி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

2. வந்து – வா(வ) + த்(ந்) + த் + அ

  • வா – பகுதி (வ) எனக் குறுகிறது விகாரம்
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. காசிக்கண்டம் நூலின் ஆசிரியர்

  1. துளசிதாசர்
  2. ஓளவையார்
  3. பெருஞ்சித்திரனார்
  4. அதிவீரராம பாண்டியர்

விடை : அதிவீரராம பாண்டியர்

2. கொற்கையின் அரசர் _____________

  1. துளசிதாசர்
  2. அதிவீரராம பாண்டியர்
  3. ஓளவையார்
  4. பெருஞ்சித்திரனார்

விடை : அதிவீரராம பாண்டியர்

3. சீவலமாறன் பட்டப்பெயர் கொண்டவர்

  1. அதிவீரராம பாண்டியன்
  2. மாறவர்மன்
  3. கிள்ளிவளவன்
  4. மாறன்வழுதி

விடை : அதிவீரராம பாண்டியன்

4. அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்களில் பொருந்தாதது

  1. நைடதம்
  2. வாயு சம்கிதை
  3. சடகோபர் அந்தாதி
  4. திருக்கருவை அந்தாதி

விடை : சடகோபர் அந்தாதி

6. ஒப்புடன் முகம் மலர்ந்ததே
உபசரித்து உண்மை பேச என்று குறிப்பிடும் நூல்

  1. நளவெண்பா
  2. மணிமேகலை
  3. சீவக சிந்தாமணி
  4. விவேக சிந்தாமணி

விடை : விவேக சிந்தாமணி

7. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள்

  1. 6
  2. 7
  3. 8
  4. 9

விடை : 9

8. வெற்றிவேற்கை, நறுந்தொகை நூல்களை எழுதிய ஆசிரியர்

  1. துளசிதாசர்
  2. அதிவீரராம பாண்டியர்
  3. ஓளவையார்
  4. பெருஞ்சித்திரனார்

விடை : அதிவீரராம பாண்டியர்

9. வெற்றிவேற்கை என்று அழைக்கப்படும் நூல்

  1. கொன்றைவேந்தன்
  2. காசிகலம்பகம்
  3. நறுந்தொகை
  4. காசிக்காண்டம்

விடை : வெற்றிவேற்கை

10. வந்து இலக்கணக்குறிப்பு தருக

  1. பண்புத்தொகை
  2. வினையெச்சம்
  3. வினைத்தொகை
  4. எதிர்மறை பெயரெச்சம்

விடை : வினையெச்சம்

11. பொருந்த இலக்கணக்குறிப்பு தருக

  1. பண்புத்தொகை
  2. வினையெச்சம்
  3. வினைத்தொகை
  4. பெயரெச்சம்

விடை : பெயரெச்சம்

12. நன்முகமன் இலக்கணக்குறிப்பு தருக

  1. வினையெச்சம்
  2. வினைத்தொகை
  3. பண்புத்தொகை
  4. பெயரெச்சம்

விடை : பண்புத்தொகை

குறு வினா

1. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகின்ற நூலினைக் கூறுக

காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்

2. காசிக்காண்டம் – குறிப்பு வரைக

  • காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்
  • துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றை பாடுவதாக அமைந்துள்ளது

3. அதிவீராம பாண்டியர் இயற்றிய நூல்களை எழுதுக

காசிக்காண்டம், நைடதம், லிங்கபுராணம், வாயுசம்கிதை,  திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம் வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை

சிறு வினா

1. அதிவீரராம பாண்டியர் குறிப்பு வரைக

  • முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர், தமிழ்ப் புலவர்
  • நூல்கள் – காசிக்காண்டம், வெற்றி வேற்கை (நறுந்தொகை) நைடதம், லிங்கபுராணம், வாயுசம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம்
  • பட்டப்பெயர் – சீவலமாறன்.

Leave a Comment