Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 Meikeerthi Book Back Solution

இயல் 7.3 – மெய்க்கீர்த்தி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 7.3 ‘Meikeerthi’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 7.3 மெய்க்கீர்த்தி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 7.3 Meikeerthi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

மெய்க்கீர்த்தி பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Meikeerthi’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: ஏர் புதிதா?

நூல் வெளி

  • கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள கொண்ட இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி பாடமாக உள்ளது.
  • இம்மெய்க்கீரத்திப் பகுதியின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் ஒரு சேர உணர்த்துவதாக உள்ளது.
  • இவருடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு. அதில் ஒன்று 91 அடிகளை கொண்டது. அதில் 16-33 வரையான அடிகள் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.
  • இப்பாடப் பகுதிக்கான மூலம் தமிழ் இணையக் கல்விக் கழகத்திலிருந்து பெறப்பட்டது.
  • முதலாம் இராராசன் காலந்தொட்டு மெய்க்கீர்திகள் கல்லில் வடிவமைக்கப்பட்டன.
  • மெய்க்கீரத்திகளே கல்வெட்டின் முதல் பகுதியில் மன்னரைப் பற்றி புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகள்.
  • இவை புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை.

பலவுள் தெரிக

தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் –

  1. மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்
  2. மிகுந்த செல்வம் உடையவர்
  3. பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
  4. நெறியோடு நின்று காவல் காப்பவர்

விடை : நெறியோடு நின்று காவல் காப்பவர்

குறு வினா

மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்தும் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக புகழும் பெருமையும் அழியாத வகையில் அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் ஆகும்.

சிறு வினா

பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.

பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.

சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடை ய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன் கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை ; ஏனைய பகுதிகள் உள்ளன.எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.

மையக்கருத்து

பேரரசனது புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. இது சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சியாண்டு கூறுமிடத்தில் அமைக்கப் பெறும். மன்னனுடைய வெற்றிகளையும், வரலாறுகளையும் கூறும். முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டு தான் மெய்க்கீர்த்தி காணப்பபடுகிறது. இதன் கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படுவதில்லை. இதன் பின் வந்த மெய்க்கீர்த்திகள் வமிச பரம்பரையை விரித்துக் கூறுகின்றன.

நெடு வினா

பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்தி பாடலின் நயத்தை விளக்கு

முன்னுரை:-

நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள இரண்டாம் இராராச சோழனது மெய்க்கீர்த்தி பாடல், சோழ நாட்டின் வளத்தையும், மன்னனின் சிறப்பையும் நயமுடன் எடுத்துரைக்கிறது.

சோழ நாட்டின் வளம்:-

நாட்டு வளம் மக்கள் வளம்
யானைகள் மட்டும் பிணிக்கப்படுகின்றன. மக்கள் பிணிக்கப்படுவதில்லை
சிலம்புகள் மட்டும் புலம்பும் மக்கள புலம்புவதில்லை
ஓடைகள் மட்டும் கலக்கமடையும். மக்கள் கலக்கம் அடைவதில்லை
மாங்காய் மட்டும் வடுப்படும் மக்கள் வடுப்படுவதில்லை
மலர்கள் மட்டும் பறிக்கப்படுகின்றன மக்கள் உரிமை பறிக்கப்படுவதில்லை
காடுகள் மட்டும் (கொடியவனாய்) கொடி உடையதாய் இருக்கும். மக்கள் கொடியவராய் இல்லை
வண்டுகள் மட்டும் கள்(தேன்) உண்டு மயங்கும் மக்கள் கள் உண்பதில்லை
மலை மூங்கில் மட்டுமே வெறுமையாய் இருக்கும் மக்களிடையே வறுமை இல்லை
வயிலில் நெற்கதிர்ககள் மட்டும் பேராக எழுகின்றன சாேழநாட்டில் போர் இல்லை
நீண்ட மலைகளை இருள் சூழ்ந்திருக்கின்றன நாட்டில் வறுமை இருள் இல்லை
மான்களின் கண்கள் மருள்கின்றன மக்கள் கண்களில் மருட்சியில்லை
குளத்து மீன்கள் பிறழ்ந்து செல்கின்றன மக்கள் நிலை பிறழ்வதில்லை
செவிலியரே சினங்கொள்வார் வேறு யாரும் சினம் கொள்வதில்லை
புலவர் பாட்டில் பொருள் மறைந்து இருக்கிறது சோழ நாட்டில் யாரும் பொருளை மறைப்பதில்லை
இசைப்பாணேர தெருவில் கூடி ஆடிப் பாடுவர் மக்கள் தெருவில் ஆடுவதில்லை

மன்னனின் சிறப்பும் பெருமையும்:-

மன்னன் மக்களுக்கு காவல் தெய்வமாக, தாயாக, தந்தையாக இருக்கிறான். மகன் இல்லாதோர்க்கு மகனாக இருக்கிறான். உலக உயிர்களுக்கு உயிராக, விழியாக. மெய்யாக, புகழ் பெற்ற நூலாக புகழ் அனைத்துக்கும் தலைவனாக விளங்குகிறான்.

முடிவுரை:-

சோழ அரசனின் பெருமையும் அவன் காலத்தில் நாடு பெற்றிருந்த வளத்தையும் மெய்க்கீர்த்திப் பாடல் வழியாக நயம்பட உரைக்கிறது.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “மெய்க்கீர்த்தி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. இரண்டாம் இராசராசன் பெற்ற பட்டங்களில் பொருந்துவது

  1. சேகரகேசரி
  2. திருபுவனபாண்டியன்
  3. கேசவானந்தன்
  4. திருபுவனச்சக்கரவர்த்தி

விடை : திருபுவனச்சக்கரவர்த்தி

2. இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் ஒருசேர உணர்த்துவதாக ____________ அமைந்துள்ளது.

  1. நாட்டுப்புறப்பாடல்
  2. மெய்க்கீர்த்தி
  3. பிள்ளைத்தமிழ்
  4. சங்ககால இலக்கியம்

விடை : மெய்க்கீர்த்தி

3. இந்திரன் முதலாகத் திசைபாலகர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றது போல் ஆட்சி செய்தவன்

  1. சேரர்
  2. பாண்டியன்
  3. சோழன்
  4. பல்லவர்

விடை : சோழன்

4. ______________ காலந்தொட்டு மெய்கீர்த்தியானது கல்லில் வடிக்கப்படுகிறது

  1. பல்லவர்
  2. பாண்டியர்
  3. முதலாம் இராசராசன்
  4. இராஜேந்திர சோழன்

விடை : முதலாம் இராசராசன்

5. இரண்டாம் இராசராச சோழனின் மெய்கீர்த்தி _________ வரிகளை உடையது

  1. 81
  2. 91
  3. 101
  4. 111

விடை : 91

6. அழியாத கல் இலக்கியமாக போற்றபடும் நூல்

  1. மெய்க்கீர்த்தி
  2. சிற்பங்கள்
  3. செப்பேடு
  4. ஓவியம்

விடை : மெய்க்கீர்த்தி

7. புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை

  1. மெய்க்கீர்த்தி
  2. சிற்பங்கள்
  3. செப்பேடு
  4. ஓவியம்

விடை : மெய்க்கீர்த்தி

7. வருபுனல் இலக்கணக்குறிப்பு தருக

  1. வினையெச்சம்
  2. வினைத்தொகை
  3. பண்புத்தொகை
  4. குறிப்பு பெயரெச்சம்

விடை : வினைத்தொகை

8. நெடுவரை  இலக்கணக்குறிப்பு தருக

  1. வினையெச்சம்
  2. பண்புத்தொகை
  3. எண்ணுமை
  4. குறிப்பு பெயரெச்சம்

விடை : பண்புத்தொகை

7. மாமலர்  இலக்கணக்குறிப்பு தருக

  1. பண்புத்தொகை
  2. உருவகம்
  3. உரிச்சொல் தொடர்
  4. உவமை

விடை : உரிச்சொல் தொடர்

குறுவினா

1. இரண்டாம் இராசராசனுக்கு வழங்கப்பட்ட பட்டங்களை எழுதுக

கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி

2. மெய்க்கீர்த்தி குறிப்பு வரைக.

  • அரசர்களின் வரலாறும், பெருமையும் காலம் கடந்து நிலைத்து நிற்கச் செய்யும் சாசனம்
  • பல்லவர் கல்வெட்டுகளிலும், பாண்டியர் செப்பேடுகளிலும், முளைவிட்ட இவ்வழக்கம் சோழ காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது.
  • முதலாம் இராராசன் காலந்தொட்டு மெய்க்கீர்திகள் கல்லில் வடிவமைக்கப்பட்டன.
  • மெய்க்கீர்த்தி ஒரு மன்னரின் ஆட்சிச் சிறப்பு, நாட்டு வளம் ஆகியவற்றை ஒருசேர உணர்ந்துவதாக உள்ளது.

 

Leave a Comment