Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 Sillapathigaram Book Back Solution

இயல் 7.4 – சிலப்பதிகாரம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 7.4 ‘Sillapathigaram’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 7.4 சிலப்பதிகாரம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 7.4 Sillapathigaram Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

சிலப்பதிகாரம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Sillapathigaram’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: மெய்க்கீர்த்தி

நூல் வெளி

  • சிலப்பதிகாரம், புகார் காண்டத்தின் இந்திரவிழா ஊரெடுத்த காதையிலிருந்து இப்பாடப்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.
  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
  • இது முத்தமிழ்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
  • மூவேந்தர் பற்றிய செய்திகளை கூறுகிறது.
  • சிலப்பதிகாரத்தில் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என் மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
  • கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது
  • மணிமேகலை காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக் காப்பியங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
  • சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள்.
  • சேர மரபினைச் சேர்ந்தவர்.
  • மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார்.
  • கோவலன் கண்ணகி கதையைக் கூறி, “அடிகள் நீரே அருளுக” என்றதால் இளங்கோவடிகளும் “நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” என இக்காப்பியம் படைத்தார் என்பர்.

சொல்லும் பொருளும்

  • சுண்ணம் – நறுமணப்பொடி
  • காருகர் – நெய்பவர் (சாலியர்)
  • தூசு – பட்டு
  • துகிர் – பவளம்
  • வெறுக்கை – செல்வம்
  • நொடை – விலை
  • பாசவர் – வெற்றிலை விற்போர்
  • ஓசுநர் – எண்ணெய் விற்போர்
  • மண்ணுள் வினைஞர் – ஓவியர்
  • மண்ணீட்டாளர் – சிற்பி
  • கிழி – துணி

இலக்கணக் குறிப்பு

  • வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை
  • பயில்தொழில் – வினைத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ

  • மயங்கு – பகுதி
  • இ(ன்) – இறந்த கால இடைநிலை
  • ‘ன்’ – புணர்ந்து கெட்டது.
  • ய் – உடம்படு மெய்
  • அ – பெயரெச்ச விகுதி

சிறு வினா

பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

  • பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்
  • வாசவர் – நறுமணப் பொருட்களை விற்பவர்
  • பல்நிண விலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
  • உமணர் – உப்பு விற்பவர்

குறு வினா

“பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?

சிலப்பதிகாரம்

ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

கர்வனர் – ட்டினும்

இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.

ட்டினும் – சுட்டு

ஈ) காருகர் – பொருள் தருக.

நெய்பவர் (நெசவாளர்)

உ) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

சந்தனமும் அகிலும்

நெடு வினா

சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக  வளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

  • மருவூர்ப்பாக்கத்து வணிகவீதிகளில் வண்ணக்குழும்பு, சுண்ணப்பொடி விற்பது போல இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் விற்கப்படுகின்றன.
  • குளிர்ச்சி பொருந்திய சந்தனம், பூ வகைகள், ஊதுவத்தி, அகில் போன்ற நறுமணப் பொருள்களும் இன்றைய வணிக வளாகத்திலும், கிடைக்கின்றன, விற்கப்படுகின்றன.
  • பொன், மணி, முத்து, பவளம், ஆகியவை மருவூர்ப்காக்க வீதிகளில் விற்பனை செய்யப்பட்டது. இன்று வணிக வளாகத்திலும் நகைக்கடைகளில் பொன், மணி, முத்து, பவளம் விற்கப்படுகிறது.
  • வணிக வீதிகளில் குவியலாகக் கிடந்து தானிய வகைகள்.
  • இன்று அங்காடிகளில் தானிய வகைகளை எடை போட்டு பொட்டலங்களில் கட்டி விற்பனை செய்கின்றனர்.
  • மரூவூர்ப்பாக்கத் தெருக்களில் உப்பு, வெற்றிலை, நறுமணப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது போல், இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகின்றது.
  • வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல, இன்றைய அங்காடிளிலும் விற்கப்படுகின்றது.
  • வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல இன்றைய அங்காடி, வணிக வளாகங்களில் கிடைப்பதோடு, கூடுதலாக பல நவீனப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள (நெகிழி) பொருள்கள் நவீன அலங்காரங்களுடன் கிடைக்கின்றன.
  • மருவூர்பாக்க வீதிகளில் பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையற்காரர், தோல் பொருள் செய்பவர், துணியாலும், கட்டையாலும் பொம்மை செய்பவர்கள் எனப் பல திறப்பட்ட கைவினைஞர்கள் இருந்தனர்.
  • அதைப்போலவே, இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் இத்தகு கைவினைக் கலைஞர்கள், நவீன தொழில் நுட்பத்துடன் தொழில் வல்லோராய் இருக்கின்றார்கள். அழகு மிளிரும் கைவினைப் பொருள்களைச் செய்து விற்பனையும் செய்கின்றனர்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “சிலப்பதிகாரம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. மூவேந்தர் பற்றி _____________ கூறுகிறது.

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. குண்டலகேசி
  4. வளையாபதி

விடை : சிலப்பதிகாரம்

2. சிலப்பதிகாரம் ___________ காண்டங்களை கொண்டது

  1. 2
  2. 4
  3. 5
  4. 3

விடை : 3

3. சிலப்பதிகாரம் ___________ காதைகளை கொண்ட நூல்

  1. 10
  2. 20
  3. 30
  4. 40

விடை : 30

4. அடிகள் நீரே அருளக என்று இளங்கோவடிகளிடம் கூறியவர்

  1. கம்பர்
  2. கபிலர்
  3. திருத்தக்கத்தேவர்
  4. சீத்தலைச்சாத்தனார்

விடை : சீத்தலைச்சாத்தனார்

5. நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என்றவர்

  1. சீத்தலைச்சாத்தனார்
  2. கபிலர்
  3. திருத்தக்கத்தேவர்
  4. இளங்கோவடிகள்

விடை : சீத்தலைச்சாத்தனார்

6. சிலப்பதிகாரமும் _______________யும் தொடர்புடைய காப்பியங்கள்

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. குண்டலகேசி
  4. வளையாபதி

விடை : மணிமேகலை

7. மணிமேகலை நூலின் ஆசிரியர்

  1. சீத்தலைச்சாத்தனார்
  2. கம்பர்
  3. கபிலர்
  4. திருத்தக்கத்தேவர்

விடை : சீத்தலைச்சாத்தனார்

8. புகார்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ள விழா

  1. சித்திரை திருவிழா
  2. இந்திரவிழா
  3. பெளணர்மி திருவிழா
  4. கார்த்திகை திருவிழா

விடை : புகார்க்காண்டம்

9. சிலப்பதிகாரத்தின் பெரும்பிரிவு

  1. காண்டம்
  2. காதை
  3. பிரிவு
  4. சருக்கம்

விடை : காண்டம்

10. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு

  1. காண்டம்
  2. காதை
  3. பிரிவு
  4. சருக்கம்

விடை : காதை

11. பேசும் மொழியின் ஓட்டம்

  1. மொழி
  2. உரை
  3. காதை
  4. காட்சி

விடை : காட்சி

12. சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை

  1. உரைநடை
  2. வசன நடை
  3. செய்யுள்நடை
  4. உரைப்பாட்டு மடை

விடை : உரைப்பாட்டு மடை

13. இளங்கோவடிகள் _____________  நாட்டைச் சேர்ந்தவர்

  1. சேர
  2. சோழ
  3. பல்லவ
  4. பாண்டிய

விடை : சேர

14. அழகர்மலை என அழைக்கப்படும் ஊர்

  1. மால்குன்றம்
  2. வேலவன்குன்றம்
  3. திருமால்குன்றம்
  4. திருவரங்கம்

விடை : திருமால்குன்றம்

15. பெருங்குணத்துக் காதலாள் எனக் கூறப்படுபவள்

  1. மணிமேகலை
  2. கண்ணகி
  3. மாதவி
  4. மாதிரி

விடை : கண்ணகி

16. மருவூர்பாக்கம் _____________ நகரில் அமைந்துள்ளது.

  1. புகார்
  2. வஞ்சி
  3. மதுரை
  4. காஞ்சி

விடை : புகார்

17. கூவம் குவிந்த இதில் கூவம் என்பதன் பொருள்

  1. குப்பை
  2. தானியம்
  3. பழம்
  4. தோல்

விடை : தானியம்

18. கள் விற்பவர்

  1. பரதவர்
  2. உமணர்
  3. பாசவர்
  4. வலைச்சியர்

விடை : வலைச்சியர்

19. மண்ணுள் என்பதன் பொருள் தருக

  1. ஓவியர்
  2. சிற்பி
  3. சாலியர்
  4. செல்வம்

விடை : ஓவியர்

20. வெறுக்கை என்பதன் பொருள் தருக

  1. துணி
  2. செல்வம்
  3. பட்டு
  4. பவளம்

விடை : செல்வம்

சிறு வினா

1. சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள காண்டங்கள் யாவை?

  • புகார்க்காண்டம்
  • மதுரைக்காண்டம்
  • வஞ்சிக்காண்டம்

2. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படக் காரணம் யாது?

காலத்தாலும், கதைத்தொடர்பாலும் தொடர்புடையதாய் இருப்பதனால் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகிறது.

3. சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் சிலவற்றை கூறுக

  • முதல்காப்பியம்
  • முத்தமிழ்காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்
  • ஒற்றமைக் காப்பியம்
  • உரையிட்ட பாட்டுடைச் செய்யுள்

4. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பதன் பொருளை கூறுக

  • உரையிடையிட்ட பாட்டுடை என்பது “உரைபாட்டு மடை” என்னும் தமிழ் நடை
  • உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு என்பது பொருளாகும்.

 

Leave a Comment