Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 Puraporul Ilakkanam Book Back Solution

இயல் 7.6 – புறப்பொருள் இலக்கணம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 7.6 ‘Puraporul Ilakkanam’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 7.6 புறப்பொருள் இலக்கணம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 7.6 Puraporul Ilakkanam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

புறப்பொருள் இலக்கணம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Puraporul Ilakkanam’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: மங்கையராய்ப் பிறப்பதற்கே

பலவுள் தெரிக

இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்

  1. நாட்டைக் கைப்பற்றல்
  2. ஆநிரை கவர்தல்
  3. வலிமையை நிலைநாட்டல்
  4. கோட்டையை முற்றுகையிடல்

விடை : வலிமையை நிலைநாட்டல்

குறு வினா

புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

  • வெட்சித் திணை x கரந்தைத் திணை
  • வஞ்சித் திணை x காஞ்சித் திணை
  • நொச்சித் திணை x உழிஞைத் திணை

சிறு வினா

அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக

  • இந்நிகழ்வுக்கு பொருத்தமான் திணை “வஞ்சித்திணை” ஆகும்
  • மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பபற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணையாகும்.
  • அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் பகைகொண்டு போர்புரிந்து மருத நாட்டைக் கைப்பற்ற நினைப்பதால் இந்நிகழ்வு “வஞ்சித்திணைக்குப்” பொருந்து வருகிறது.

மொழியை ஆள்வோம்….

படித்தும் பார்த்தும் சுவைக்க.

ஏர்பிடிக்கும் கைகளுக்கே
வாழ்த்துக் கூறுவோம் – வறுமை
ஏகும்வரை செய்பவர்க்ககே
வாழ்த்துக் கூறுவோம்! – என்றும்
ஊர்சசெழிக்கத் தொழில்செய்யும்
உழைப்பாளிகள் – வாழ்வு
உயரும்வகை செய்பவர்க்கே
வாழ்த்துக் கூறுவோம்!

– கவி கா.மு ஷெரீப்.

மொழிபெயர்க்க

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensible by the ancient Tamils.

மருத நிலம்

பண்டைய சங்க இலக்கிய காலத்தில், பூகோள அடிப்படையில் (நில அமைப்புப்படி) தமிழ்நாடு ஐந்து வகையாகக இருந்தது. அவற்றுள் மருத நிலப்பகுதியே உழவுத் தொழிலுக்கு ஏற்றதாய் இருந்தது. அந்த நிலப்பகுதியில் விவசாயிகள் (உழவர்கள்) பயன்பெறும் வகையான தேவையா பருவ காலங்கள் சிறந்திருந்தது. தேவையா சூரிய வெப்பம், வளமான நிலம், போதுமான அளவு மழையும் இருந்தது. அதனால் விசாயம் செழித்தது. மருத நிலத்தின் இயற்கைக் கூறுகளாலும், போதுமான சூரிய வெப்பத்தினாலும் பழந்தமிழகத்தில் மருத நிலத்தில் உழவுத் தொழில் சிறந்திருந்தது.

பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

(வரப் போகிறேன், இல்லாமல் இருக்கிறது, கொஞ்சம் அதிகம், முன்னுக்குப் பின், மறக்க நினைக்கிறேன்)

1. வரப் போகிறேன்

விடை: இன்னும் சிறிது நேரத்தில் வரப் போகிறேன்

2. இல்லாமல் இருக்கிறது

விடை: எங்கள் நாடு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது

3. கொஞ்சம் அதிகம்

விடை: சங்க காலத்தில் மன்னர்களுக்கு காதலும் வீரமும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது

4. முன்னுக்குப் பின்

விடை: முன்னுக்குப் பின் முரணாக பேசுவது நன்றன்று.

5. மறக்க நினைக்கிறேன்

விடை: எனக்கு பிடிக்காதவர்களை மறக்க நினைக்கிறேன்

தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.

மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவர்க்கு அறுசுவை உணவு போல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகிறது

தொகைச் சொற்கள்

1. நாற்றிசை = நான்கு + திசை

  • நான்கு (௪) -கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு

2. முத்தமிழ் = மூன்று + தமிழ்

  • மூன்று (௩) – இயல், இசை, நாடகம்

3. இருதிணை = இரண்டு + திணை

  • இரண்டு (௨) – உயர்திணை, அஃறிணை

4. முப்பால் = மூன்று + பால்

  • மூன்று (௩) – அறத்துப்பால, பொருட்பால், இன்பத்துப்பால்

5. ஐந்திணை = ஐந்து + திணை

  • ஐந்து (௫) – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

6. அறுசுவை = ஆறு + சுவை

  • ஆறு (௬) – இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு

கவிதையை உரையாடலாக மாற்றுக

மகள் சொல்லுகிறாள்

அம்மா என் காதுக்கொரு தோடு – நீ
அவசியம் வாங்கி வந்து போடு!
சும்மா இருக்க முடியாது – நான்
சொல்லி விட்டேன் உனக்கு இப்போது!

உரையாடல்:-

அம்மா! என் காதுக்கு ஒரு தோடு வாங்கித் தாங்கம்மா! தோடு இல்லாமல் வெறுங்காதோடு என்னால் இருக்க முடியாது… சொல்லிட்டேன்

தாய் சொல்லுகிறாள்

காதுக்குக் கம்மல் அழகன்று -நான்க்ஷ
கழறுவதைக் கவனி நன்று
நீதர் மொழியை வெகுபணிவாய் – நிதம்
நீ கேட்டு வந்து காதில் அணிவாய்!

உரையாடல்:-

காதிற்குத் தங்கக் கம்மல் மட்டும் அழகு கிடையாது. நான் சொல்வதைக் கவனித்து பணிவான சொற்களையும் நல்ல கருத்துகளையும் உன் காதுக்கு அணியாக அணிந்து கொள்

மகள் மேலும் சொல்லுகிறாள்

கைக்கிரண்டு வளையல் வீதம் – நீ
கடன்பட்டுப் போட்டிடினும் போதும்!
பக்கியென் றென்னை யெல்லாரும் – என்
பாடசாலையிற் சொல்ல நேரும்!

உரையாடல்:-

கைக்கு இரண்டு வளையல்கள் கடன் வாங்கியாவது எனக்கு வாங்கித்தா அம்மா பக்கி வளையல் இல்லையா என்று பள்ளியில் என்னைக் கேலி செய்கிறார்கள்.

தாய் சொல்லும் சமாதானம்

வாரா விருந்து வந்த களையில் – அவர்
மகிழ உபசரித்தல் வளையல்!
ஆராவமுதே மதி துலங்கு – பெண்ணே
அவர் சொல்வ துன்கைகட்கு விலங்கு!

உரையாடல்:-

மகளே…. நம்மைத் தேடி வரும் விருந்தினரை மகிழ்ச்சியுடன் உபசரித்தேல் வளையல்…  அறிவார்ந்த மகளே கேள்…. அவர்கள் சொல்லும் வளையல்… உனக்கு கைவிலங்கு

பின்னும் மகள்

ஆபர ணங்கள் இல்லை யானால் – என்னை
யார் மதிப்பார் தெருவில் போனால்?
கோபமோ அம்மா இதைச் சொன்னால் – என்
குறை தவிர்க்க முடியும்

உரையாடல்:-

அணிகலன்கள் இல்லாமல் தெருவில் போனால் என்னை யார் தான் மதிப்பார்? இதைச் சொன்னால் உனக்குக் கோபம் வருகிறது. என் குறையை நீக்க மாட்டாய்…

அதற்குத் தாய்

கற்பது பெண்களுக்கா பரணம் – கெம்புக்
கல்வைத்த, நகைதீராத ரணம்!
கற்ற பெண்களை இந்த நாடு – தன்
கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு!

உரையாடல்:-

கல்வி தான் பெண்களுக்கு உண்மையான அணிகலன்; மாணிக்கக்கல் வைத்த அணிகலன் தீராத ரணத்தையே தரும் மகளே; கல்வி என்னும் அணிகலன் அணிந்த பெண்களை இந்நாடு கண்ணுக்குள் வைத்துப் போற்றும் என்பதை உணர்ந்து கொள்.

மொழியோடு விளையாடு…

ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக

ஊர்ப் பெயர் மரூஉ
புதுக்கோட்டை புதுகை
தஞ்சாவூர் தஞ்சை
திருச்சிராப்பள்ளி திருச்சி
உதகமண்டலம் உதகை
கோயம்புத்தூர் கோவை
நாகப்பட்டினம் நாகை
புதுச்சேரி புதுவை
கும்பகோணம் குடந்தை
திருநெல்வேலி நெல்லை
மன்னார்குடி மன்னை
மயிலாப்பூர் மயிலை
சைதாப்பேட்டை சைதை

அகராதியில் காண்க

1. மிரியல்

விடை: மிளகு

2. வருத்தனை

விடை: பிழைப்பு, தொழில், பெருகுதல், மானிய உரிமை, சம்பளம்

3. அதசி 

விடை: சணல்

4. துரிஞ்சில் 

விடை: வெளவால் வகை, சீக்கரி மரம்

கலைச்சொல் அறிவாேம்

  • Consulate – துணைத்தூதரகம்
  • Patent – காப்புரிமை
  • Document – ஆவணம்
  • Guild – வணிகக் குழு
  • Irrigation – பாசனம்
  • Territory – நிலப்பகுதி

அறிவை விரிவு செய்

  • என்கதை – நாம்க்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
  • வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணன்
  • நாற்காலிகாரர் – ந. முத்துசாமி

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “புறப்பொருள் இலக்கணம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. புறத்திணைகள் ___________ வகைப்படும்

  1. 10
  2. 12
  3. 14
  4. 8

விடை: 12

2. மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில் ________________ சொத்தாகக் கருதினர்.

  1. சொந்தங்களை
  2. தானியங்களை
  3. ஆநிரைகளைச்
  4. நிலங்களை

விடை: ஆநிரைகளை

3. ஆநிரை கவர்தல் _______________ திணை எனப்பட்டது.

  1. கரந்தைத்
  2. காஞ்சித்
  3. நொச்சித்
  4. வெட்சித்

விடை: வெட்சித்

4. கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மீட்கச்செல்வது

  1. கரந்தைத் திணை
  2. காஞ்சித் திணை
  3. நொச்சித் திணை
  4. வெட்சித் திணை

விடை: கரந்தைத் திணை

5. தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடல்

  1. காஞ்சித் திணை
  2. கரந்தைத் திணை
  3. நொச்சித் திணை
  4. வெட்சித் திணை

விடை: கரந்தைத் திணை

6. நொச்சித் திணை என்பது

  1. கோட்டையை கைப்பற்றுதல்
  2. கோட்டைகளை காத்தல்
  3. ஆநிரை கவர்தல்
  4. ஆநிரை மீட்டல்வெட்சித் திணை

விடை: கோட்டைகளை காத்தல்

7. பாடாண் திணை பிரித்தெழுதுக

  1. பாடான் + திணை
  2. பாடு + ஆண் + திணை
  3. பாடாண் + இணை
  4. பாடு + ஆன் + திணை

விடை : பாடு +ஆண் + திணை

7. பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீ ரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது

  1. பாடாண் திணை
  2. கரந்தைத் திணை
  3. நொச்சித் திணை
  4. வெட்சித் திணை

விடை: கரந்தைத் திணை

8. கைக்கிளை என்பதுஒருதலைக் காமம்.

  1. கைக்கிளை
  2. பெருந்திணை
  3. கரந்தைத் திணை
  4. நொச்சித் திணை

விடை: கைக்கிளை

9. பொருந்தாக் காமத்தைக் குறிக்கும் திணை

  1. கைக்கிளை
  2. கரந்தைத் திணை
  3. நொச்சித் திணை
  4. பெருந்திணை

விடை: பெருந்திணை

குறுவினை

1. வஞ்சித்திணை என்பது என்ன?

மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணை ஆகும்.

2. உழிஞைத்திணை என்பது என்ன?

மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் அதனைச் சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை ஆகும்.

3. தும்பைத் திணை என்பது என்ன?

பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச்சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத் திணை ஆகும்.

4. வாகைத்திணை என்பது என்ன?

போரிலே வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது, வாகைத்திணை ஆகும். வாகை என்றாலே வெற்றி பொருள் ஆகும்.

5. பொதுவியல் திணை என்ன்பது என்ன?

வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது, பொதுவியல் திணை ஆகும்.

Leave a Comment