Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.4 Puyalae oru thoni Book Back Solution

இயல் 2.4 – புயலிலே ஒரு தோணி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 2.4 ‘Puyalae oru thoni’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 2.4 புயலிலே ஒரு தோணி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 2.4 Puyalae oru thoni Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

புயலிலே ஒரு தோணி வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Puyalae oru thoni’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Puyalae oru thoni Subject.

Previous Lesson: முல்லைப்பாட்டு

பாட நூல் மதிப்பீட்டு வினா

குறு வினா

மழைநின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.

குறிப்பு: இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் ‘சளப் தளப்’ என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்

  • தேனடையிலிருந்து விழும் தேன் துளியைப் போல மணித்துளிகளுக்கு ஒரு முறை நீர் “சொட் சொட்” என விழுந்தது.
  • விரும்பத்தக்க தென்றலைப் போலவும் மயிலிறகின் வருடல் போலவும் மெல்லிய குளிர் உடலில் ஓடும்.
  • நீர் உள்ள தடாகத்திலே பல வகையான மீன்களும், தவளைகளும் தாவிக்குதிக்கும் போது எற்படும் ஓசையை ஒத்த “சளப் தளப்” என்ற சத்தத்துடன் தேங்கி கிடந்த நீர்க் குட்டையில் குழந்தைகள் குதித்து விளையாடி மகிழ்ந்தனர்.
  • அமைதியான நீரோட்டம் கொண்ட நதியானது இழுத்து வரும் சிறுசிறு கட்டை மற்றும் இதர பொருட்கள் போல குழந்தைகள் ஓடும் நீரில் காகிதக் கப்பல்களை விட்டு மகிழ்ந்தனர்.

நெடு வினா

புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

முன்னுரை:-

மனித வாழ்க்கை போல இயற்கையும் இன்பம் துன்பம் நிறைந்தது. அந்த வகையில் “புயலில் ஒரு தோணி” என்ற புதினத்தில், பா.சிங்காரம் எழுதியுள்ள வருணணை, அடுக்குத்தொடர் மற்றும் ஒலிக்குறிப்பும் பற்றிக் இக்கட்டுரையில் காண்போம்.

புயல் வருணணை:-

கொளுத்தும் வெயில் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டது. பாண்டியன் அண்ணாந்து பார்த்தான். மேகங்கள் கும்மிருட்டு ஆனது. காற்றில்லாமல் ஒரே இறுக்குமானது. இடிமுழக்கத்துடன் மின்னல் வானத்தைப் பிளந்தது. வானம் உடைந்தன. வெள்ளம் கொட்டியது. சூறாவளி ஆடிக் குதித்தது. வானுடன் கடல் கலந்துவிட்டது. மழை தெரியவில்லை. கடல் வெறிக் கூத்தாட்டத்தால் தொங்கான் மூழ்கி சிப்பங்கள் கடலில் நீந்துகின்றன. வானம், கடல், காற்று, மழை ஒன்று சேர்ந்து கூக்குரலிட்டது. வானம் பிளந்து நெருப்பை கக்கியது.

அடுக்குத்தொடர்:-

தொங்கான் நடுங்கித் தாவி தாவி குதிகுதித்தது. பிறகு தொங்கான் குதித்து விழுந்தது நொறுநொறு என்று நொறுங்கியது. சுழன்று கிறுகிறுத்துக் கூத்தாடியது.

ஒலிக்குறிப்பு:-

தொங்கான் தாவி விழுந்தது. சுழல்கின்றது. கடலில் சிலுசிலு மரமரப்பு ஙொய்க் புய்வ், ஙொய்க் புய்வ் என இடி முழக்கம் செய்ய சீனப் பிசாசுகள் தாவி வீசுகின்றன. பகல் இரவாகி உப்புக்காற்று உடலை வருடியது.

முடிவுரை:-

புயலுக்கப் பின்னால்  ஐந்தாம் நாள் கரை தென்பட்டது. அடுத்தநாள் முற்பகல் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள். பிலவானிலிருந்து சும்தா வரை புயல் இப்படிப் பயமுறுத்தியது. இத்தகைய வருணனையோடு புயலில் தோணி படும்பாட்டை அழகாய் விவரிக்கின்றார் பா.சிங்காரம்

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “புயலிலே ஒரு தோணி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. புயலிலே ஒரு தோணி என்ற புதினத்தினை எழுதியவர்

  1. மு.வ.
  2. அகிலன்
  3. திரு.வி.க.
  4. பா.சிங்காரம்

விடை : பா.சிங்காரம்

2. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறையானது ____________ ஆண்டு முதல் தொடங்கப்பட்டது

  1. 2000
  2. 1999
  3. 1998
  4. 1997

விடை : 2000

3. கஜா என்ற பெயரினை புயலுக்கு தந்த நாடு

  1. தாய்லாந்து
  2. மலேசியா
  3. இலங்கை
  4. இந்தியா

விடை : இலங்கை

4. தலைமை மாலுமி __________ என குறிப்பர்

  1. வங்கம்
  2. கப்பித்தான்
  3. தொங்கான்
  4. பிலவான்

விடை : கப்பித்தான்

5. புலம் பெயர்ந்த தமிழர்களை பற்றி எழுதப்பட்ட முதல் புதினம்

  1. புயலிலே ஒரு தோணி
  2. தோணி வருகிறது
  3. கள்ளத் தோணி
  4. அகல்விளக்கு

விடை : புயலிலே ஒரு தோணி

6. தென்கிழக்காசியப் போர் மூண்டதில் மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனை படைப்பு

  1. தோணி வருகிறது
  2. கள்ளத் தோணி
  3. புயலிலே ஒரு தோணி
  4. அகல்விளக்கு

விடை : புயலிலே ஒரு தோணி

7. ப.சிங்காரம் வாழ்ந்த காலம்

  1. 1921-1998
  2. 1920-1997
  3. 1930-1997
  4. 1931-1998

விடை : 1920-1997

7. ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டம், ___________யைச் சேர்ந்தவர்.

  1. சென்பகத்தான்புதூர்
  2. சிங்கம்புணரி
  3. சென்பகத்தான்காடு
  4. சிங்கான்நத்தம்புதூர்

விடை : சிங்கம்புணரி

8. கொல்லிமலை _________ மாவட்டத்தில் அமைந்துள்ளது

  1. நாமக்கல்
  2. திண்டுக்கல்
  3. சேலம்
  4. தர்மபுரி

விடை : நாமக்கல்

9.தாய்லாந்து புயலுக்கு இட்ட பெயர்

  1. கஜா
  2. பெய்ட்டி
  3. மழை
  4. கதே

விடை : பெய்ட்டி

10. புயலுக்கு இந்தியா தந்துள்ள பெயர்களில் நான்கு பூதங்களை கண்டறி

  1. அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல்
  2. மேக், ஆகாஷ், பிஜ்லி, ஜல்
  3. மேக், சாகர், பிஜ்லி, ஜல்
  4. மேக், சாகர், பிஜ்லி, கஜா

விடை : அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல்

சிறுவினா

1. இடம்புரிப் புயல்கள் தாக்கும் பகுதிகளாக குறிப்பிடப்படுபவையை கூறுக

அமெரிக்கா, ஜப்பான், சீனா

2. வலம்புரிப் புயல்கள் தாக்கும் பகுதிகளாககுறிப்பிடப்படுபவையை கூறுக

ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும்

3. கொரியாலிஸ் விளைவு கண்டுபிக்கப்பட்ட ஆண்டினை கூறுக

1835

4. கொரியாலிஸ் விளைவு என்றால் என்ன?

புயலின் வலம்புரிப் புயல்கள், இடம்புரிப் புயல்கள் என்ற இருவகை சுழற்சிக்குக் கொரியாலிஸ் விளைவு என்று பெயர்.

5. உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது?

உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் புதுதில்லியில் அமைந்துள்ளது.

6 நாமக்கல் மாவட்டத்தின் கொல்லி மலையை குறிக்கும் அகநானூறு அடிகள் பற்றி எழுதுக

“பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி”

அகநானூறு 208 : 22

Leave a Comment