Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 Thembavani Book Back Solution

இயல் 9.3 – தேம்பாவணி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 9.3 ‘Thembavani’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 9.3 தேம்பாவணி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 9.3 Thembavani Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

தேம்பாவணி வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thembavani’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: சித்தாளு

நூல் வெளி

  • தேம்பா + அணி என்பதன் பொருள்  “வாடாத மாலை” என்றும், தேன் + பா + அணி என்பதன் பொருள்  “தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு” என்றும் இந்நூலுக்கு பொருள் கொள்ப்பபடுகிறது.
  • தேம்பாவணி கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தயான சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டது.
  • இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி 3615 பாடல்களை கொண்டுள்ளது.
  • 17ஆம் நூற்றாண்டில் தேம்பாவணி படைக்கப்பட்டது
  • வீரமாமுனிவர் இயற்பெயர் கான்சுடான்சு ஜோசப் பெசுகி
  • தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலகக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குரு கதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவை வீரமாமுனிவர் படைத்த நூல்கள் ஆகும்

சொல்லும் பொருளும்

  • சேக்கை – படுக்கை
  • யாக்கை – உடல்
  • பிணித்து – கட்டி
  • வாய்ந்த – பயனுள்ள
  • இளங்கூழ் – இளம்பயிர்
  • தயங்கி – அசைந்து
  • காய்ந்தேன் – வருந்தினேன்
  • கொம்பு – கிளை
  • புழை – துளை
  • கான் – காடு
  • தேம்ப – வாட
  • அசும்பு – நிலம்
  • உய்முறை – வாழும் வழி
  • ஓர்ந்து – நினைத்து
  • கடிந்து – விலக்கி
  • உவமணி – மணமலர்
  • படலை – மாலை
  • துணர் – மலர்கள்

இலக்கணக் குறிப்பு|

  • காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
  • கணீர் – கண்ணீர் என்பதன் இடைக்குறை
  • காய்மணி, உய்முறை, செய்முறை – வினைத்தொகைகள்
  • மெய்முறை – வேற்றுமைத்தொகை
  •  கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. அறியேன் = அறி + ய் + ஆ + ஏன்

  • அறி – பகுதி
  • ய் – சந்தி
  • ஆ – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று

2. ஒலித்து = ஒலி + த் + த் + உ

  • ஒலி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று _____________, _____________ வேண்டினார்.

  1. கருணையன் எலிசபெத்துக்காக
  2. எலிசபெத் தமக்காக
  3. கருணையன் பூக்களுக்காக
  4. எலிசபெத் பூமிக்காக

விடை : கருணையன் எலிசபெத்துக்காக

குறு வினா

காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் உவமை உணர்த்தும் கருத்து யாது?

உவமை:-

இளம்பயிர் நெல்மணி காணும் முன்னே மழையின்றி வாழக் காய்தல்

உவமை உணர்த்தும் கருத்து:-

கருணையாகிய நான் என் தயார் எலிசபெத் அவர்களை இழந்து வாடுகிறேன்.

சிறு வினா

எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

  • கருணையாகிய நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
  • அறிவோடு பொருந்திய உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.
  • உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக்கொண்டு வரும் வழிவகைகளை அறியேன்.
  • காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன் என்று கூறுகிறார்.

“செய்முறை அறியேன்; கானில்
செல்வழி அறியேன்”

நெடு வினா

கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர்தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

முன்னுரை:-

தாயின்  அன்பை எழுத உலக மொழிகள் போதாது. தாயை இழந்த துயரம் சொல்ல இயலாது. தாயை இழந்த கருணையனின் கண்ணீர் சொற்களை அறிவோம்.

வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி:-

1. மலர்ப்படுக்கை:-

கருணையனின் தாய் மறைந்து விட்டாள். கருணையன் தன் கையைக் குவித்துப் “பூமித்தாயே! என் அன்னையின் உடலைக் காப்பாயாக என்று கூறி, குழியிலே மலர்படுக்கையைப் பரப்பினேன். அன்னையின் உடலை மண்ணிட்டு மூடி மலர்களையும் தன் கண்ணீரையும் பொழிந்தான்.

2. இளம்பயிர் வாட்டம்:-

என் தாயின் மார்பில் மணிமாலையென அசைந்து வாழ்ந்தேனே! இப்பொழுது, இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து காய்ந்து மணியாகு முன்பே, தூய மணி போன்ற மழைத்துளி இன்றி வாடிக் காய்ந்து விட்டது போல நானும் வாடுகிறேன். என் மனம் மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர் போல் வாடுகிறது.

3. அம்பு துளைத்த வேதனை:-

தீயையும், நஞ்சையும் தன் முனையில் கொண்ட அம்பு துளைத்தால் எற்படும் புண்ணின் வரியைப் போல் என் துயரம் வேதனை தருகிறது. துணையைப் பிரிந்த ஒரு பறவையைப் போல நான் இக்காட்டில்  அழுது வாடுகிறேன்.

4. தவிப்பு:-

சரிந்த வழக்கு நிலப்பகுதியிலே தனியே விடப்பட்டுச் செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன். நவமணிகள் பதித்த மணிமாலைகளை இணைத்தது போன்று நல்ல அறன்கள் எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன் புலம்பினான்.

5. உயிர்கள் அழுதல்:-

புலம்பலைக் கேட்டு பல்வேறு இசைகளை இயக்கியது போல் தேன் மலர்கள் தோறும் மணம் வீசும் மலர்களும், மலர்ந்த சுனைதோறும் உள்ள பறவைகளும், வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போல கூச்சலிட்டன.

முடிவுரை:-

வீரமாமுனிவர் உவமை, உருவக மலர்களால் தன் கவிதை மூலம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “தேம்பாவணி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. திருமுழுக்கு யோவான் _____________ முன் தோன்றியவர்

  1. பேதுரு
  2. ஆபிரகாம்
  3. கிறித்துவிற்கு
  4. சூசை

விடை : கிறித்துவிற்கு

2. திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்

  1. கருணாகரன்
  2. கருணையன்
  3. கருணாமூரத்தி
  4. வலின்

விடை : கருணையன்

3. எலிசபெத் ___________ தாயர்

  1. கருணாகரன்
  2. கருணையன்
  3. கருணாமூரத்தி
  4. வலின்

விடை : கருணையன்

4. தேம்பா + அணி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. தேம்பாஅணி
  2. தேம்பா அணி
  3. தேன்பாவணி
  4. தேம்பாவணி

விடை : தேம்பாவணி

5. தேம்பா + அணி என்பதன் பொருள்

  1. சூடாத மாலை
  2. பாடாத மாலை
  3. தேன் மாலை
  4. வாடாத மாலை

விடை : வாடாத மாலை

6. சூசையப்பர் ____________ வளர்ப்புத் தந்தை

  1. கருணையன்
  2. கிறிஸ்து
  3. தாவீது
  4. ஈசாக்கு

விடை : சூசையப்பர்

7. தேம்பாவணி ___________ காண்டங்கள் உள்ளன

  1. மூன்று
  2. நான்கு
  3. ஐந்து
  4. ஆறு

விடை : மூன்று

8. தேம்பாவணி __________ நூற்றாண்டில் படைக்கப்பட்டது

  1. 7ஆம்
  2. 12ஆம்
  3. 17ஆம்
  4. 19ஆம்

விடை :  17ஆம்

9. தேம்பாவணியில் __________ பாடல்கள் உள்ளன.

  1. 30
  2. 33
  3. 36
  4. 39

விடை : 39

10. வீரமாமுனிவர் இயற்றிய நூல்

  1. இரட்சண்ய மனோகரம்
  2. திருவருட்பா
  3. திருமந்திரம்
  4. தேம்பாவணி

விடை : தேம்பாவணி

11. தமிழின் முதல் அகராதி

  1. தமிழ் அகராதி
  2. சதுரகராதி
  3. தொன்மை அகராதி
  4. புதிய அகராதி

விடை : சதுரகராதி

12. இஸ்மத் சன்னியாசி என்ற பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தவர்

  1. குலோத்துங்கன்
  2. இப்ராகிம்
  3. உக்கிர பெருவழுதி
  4. சந்தாசாகிப்

விடை : சந்தாசாகிப்

13. கான்சுடான்சு ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயரினை உடையவர் 

  1. சந்தாசாகிப்
  2. கருணையன்
  3. வீரமாமுனிவர்
  4. ஈசாக்

விடை : கான்சுடான்சு ஜோசப் பெஸ்கி

14. இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள்

  1. தூயவன்
  2. புனிதன்
  3. தூயதுறவி
  4. பெரியோன்

விடை : தூயதுறவி

15. அசும்பு என்பதன் பொருள்

  1. வானம்
  2. காடு
  3. நிலம்
  4. கிளை

விடை : நிலம்

16. கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி

  1. யோவான்
  2. சூசையப்பர்
  3. வளன்
  4. இயேசு

விடை : யோவான்

17. கருணையன் என்பவர்

  1. சூசையப்பர்
  2. சந்தாசாகிப்
  3. யோசேப்
  4. அருளப்பன்

விடை : அருளப்பன்

17. பரப்பி இலக்கணக்குறிப்பு தருக

  1. பெயரெச்சம்
  2. வினையெச்சம்
  3. பண்புத்தொகை
  4. வினைத்தொகை

விடை : வினையெச்சம்

17. நல்லறம் இலக்கணக்குறிப்பு தருக

  1. பெயரெச்சம்
  2. உருவகம்
  3. உவமை
  4. பண்புத்தொகை

விடை : பண்புத்தொகை

குறுவினா

1. தேம்பாவணி என்பதன் பொருள் தருக

  • தேம்பா + அணி என்பதன் பொருள்  “வாடாத மாலை” என்பதாகும்.
  • தேன் + பா + அணி என்பதன் பொருள்  “தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு” என்பதாகும்.

2. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?

தேம்பாவணி கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை – சூசையப்பர் (யோசேப்)

3. வீரமாமுனிவர் படைத்த நூல்கள் யாவை?

சதுரகராதி, பரமார்த்தக் குரு கதைகள், தொன்னூல் விளக்கம், மொழிபெயர்ப்பு நூல்கள், சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள்

4. இஸ்த் சன்னியாசி சிறுகுறிப்பு வரைக

  • வீரமாமுனிவரின் எளிமையும் துறவையும் கண்டு வியந்த, திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னர் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டம் வழங்கினார்.
  • இஸ்மத் சன்னியாசி என்பதற்கு தூயதுறவி என்று பொருள்.
  • இஸ்மத் சன்னியாசி என்பது பாரசீகச் சொல் ஆகும்.

5. தேம்பாவணி – குறிப்பு வரைக

  • காலம் : 17ஆம் நூற்றாண்டு
  • தேம்பா + அணி =  வாடாத மாலை
  • தேன் + பா + அணி = தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு
  • பாட்டுடைத்தலைவன் : சூசையப்பர் என்னும் யோசேப் (தேம்பாவணி கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை)
  • 3 காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்கள்

6. வீரமாமுனிவர் சிறு குறிப்பு வரைக

  • வீரமாமுனிவர் இயற்பெயர் கான்சுடான்சு (கொனஸ்டான்) ஜோசப் பெஸ்கி
  • சதுரகராதி, தொன்னூல் விளக்கம், சிற்றிலகக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குரு கதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவை வீரமாமுனிவர் படைத்த நூல்கள் ஆகும்

Leave a Comment