Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 Thoga Nilai thodargal Book Back Solution

இயல் 3.5 – தொகாநிலைத் தொடர்கள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 3.5 ‘Thoga Nilai thodargal’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 3.5 தொகாநிலைத் தொடர்கள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 3.5 Thoga Nilai thodargal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

தொகாநிலைத் தொடர்கள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thoga Nilai thodargal’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: கோபல்லபுரத்து மக்கள்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது

  1. வேற்றுமை உருபு
  2. எழுவாய்
  3. உவம உருபு
  4. உரிச்சொல்

விடை : வேற்றுமை உருபு

குறு வினா

1. எழுது என்றாள் என்பது விரைவு காரணமாக ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத் தொடரானது. ‘சிரித்துப் பேசினார் ‘ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

‘சிரித்துப் பேசினார் ‘ என்பது, உவகை காரமாணக சிரித்து சிரித்து பேசினார் என அடுக்குத் தொடராகும்

2. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

  • பெயர்ப் பயனிலை –  கவிஞர்
  • வினை பயனிலை –  சென்றார்
  • வினா பயனிலை –  யார்?

சிறு வினா

கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

  • கண்ணே கண்ணுறங்கு – விளித்தொடர்
  • காலையில் நீயெழும்பு – ஐந்தாம் வேற்றுமை தொகாநிலைத் தொடர்
  • மாமழை பெய்கையிலே – உரிச்சொல் தொடர்
  • மாம்பூவே கண்ணுறங்கு – விளித்தொடர்
  • பாடினேன் தாலாட்டு – வினைமுற்றுத் தொடர்
  • ஆடி ஆடி ஓய்ந்துறங்கு – அடுக்குத் தொடர்

கற்பவை கற்றபின்…

கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.

மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவர் அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பால்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.

  • இறங்கினார் முகமது – வினைமுற்றுத்தொடர்
  • அவர் பாடகர் – எழுவாய்த்தொடர்
  • பாடுவதும் கேட்பதும் – உம்மைத்தொகை
  • கேட்ட பாடல் – உரிச்சொல்தொடர்
  • அடுக்கு அடுக்காக – அடுக்குத்தொடர்

கோடிட்ட சொற்களின் தொடர்வகைகளை  எழுதுக

1. பழகப் பழகப் பாலும் புளிக்கும்

விடை: பழகப் பழகப் – அடுக்குத் தொடர்

2. வடித்த கஞ்சியில் சீலையை அலசினேன்

விடை: வடித்த கஞ்சியில் – வினையெச்சத் தொடர்

3. மேடையில் நன்றாகப் பேசினான்.

விடை: நன்றாகப் பேசினான் – உரிச்சொல் தொடர்

4. வந்தார் அண்ணன்

விடை: வந்தார் – வினைமுற்றுத் தொடர்

5. அரிய கவிதைகளின் தொகுப்பு

விடை: கவிதைகளின் – உரிச்சொல்தொடர்

மொழியை ஆள்வோம்!

மொழிபெயர்க்க

Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should feel proud about our culture. Thank you one and all.

தமிழ்ப் பண்பாடு

மரியாதைக்குரியர்களே! என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பில் படிக்கிறேன். நான் பத்தாம் வகுப்பில் படிக்கிறேன். நான் தமிழர் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வந்திருக்கிறேன். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழரே வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி!

பழமொழிகளை நிறைவு செய்க

1. உப்பில்லாப் ______________

விடை: உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

2. ஒரு பானை ______________

விடை: ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

3. உப்பிட்டவரை ______________

விடை: உப்பிட்டவரை உள்ளளவும் நினை

4. விருந்தும் ______________

விடை: விருந்தும் மருந்தும் மூன்று வேளை

5. அளவுக்கு ______________

விடை: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுதுக.

பழையசோறு பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம்வரை சுவைத்தவள் நான். அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகு முன் கைநிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்தக் காலையில் அதன் பெயர் பழையசோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம்போல் குடிப்பது ஒருவகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்துகொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்டவைத்த முதல்நாள் குழம்பு இன்னும் உச்சம்! நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம். பழைய சோறு- அது கிராமத்து உன்னதம்.

“மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து” ……முக்கூடற்பள்ளு.

விடை:-

நெல்லை அவித்து காய வைத்து எடுக்கும் புழங்கல் அரிசியைச் சோறாக்கி, அதனை இரவெல்லாம் நீரில் ஊற வைத்து, கிடைக்கும் பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வடுமாங்காய், உப்பு நார்த்தங்காய் மற்றும் சுண்ட வைத்த குழம்பு இவற்றில் ஒன்றைக் கூட்டாக வைத்து சாப்பிடுவது கிராமத்து உன்னதம்.

கதையாக்குக

மனித வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம்; புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகிற கருப்பொருள்களைத் திரட்டி, கற்பனை நயம் கூட்டிக் கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம். புதினமாக இருக்கலாம். அன்பை எதிர்பார்த்திருப்பவராக, யாருமற்றவராக…. இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.

விடை :-

அந்திமாலைப் பொழுதில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது பாலத்தின் கீழிருந்து சத்தம் கேட்டு பாலத்தின் அடியில் எட்டிப் பார்த்தன். பசி மயக்கத்தில் சுருண்டு கிடந்தாள் ஒரு பெண். குளர் தாங்க முடியாமல் சத்தம். அரை குறை ஆடையில் இருந்தாள். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் எனக் கண்டுபிடித்தேன். உடனே, வீட்டிற்கு வந்து உணவை ஒரு பாத்திரத்திலும், ஆடை மற்றும் ஒரு போர்வையை ஒரு பையிலும் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தேன்.

அவ்வுணவை எடுத்து சாப்பிடுவதற்குக் கூட அவளிடம் பலமில்லை. பாதி சாப்பிட்டு விட்டு உட்கார முடியாமல் அவ்வுணவின் மீதே சரிந்து விழுந்தாள். உடனே அருகில் இருந்த மருத்துவரை அழைத்து வந்து மருத்துவனம் பாரத்து, அவளை மருத்துவரின் உதவியுன் மனநலக் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தேன. அவள் மனதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி தென்பட்டது.

மொழியோடு விளையாடு

விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க.

1. இ __ கு (பறவையிடம் இருப்பது)

விடை: இகு

2. கு __ தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)

விடை: குருதி

3. வா __ (மன்னரிடம் இருப்பது)

விடை: வாள்

4. அ __ கா (தங்கைக்கு மூத்தவள்)

விடை: அக்கா

5. ம __(அறிவின் மறுபெயர்)

விடை: மதி

6. பட __ (நீரில் செல்வது)

விடை: படகு

ஒளிந்துள்ள நூலின் பெயர் – திருக்குறள்

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

1. சிலை – சீலை

விடை: சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருக்கிறார்கள்.

2. தொடு – தோடு

விடை: தொடு உணர்வின் மூலம் தோடு காதில் உள்ளதை தெரிந்துகொள்ளலாம் .

3. மடு – மாடு

விடை: மாடு மடுவில் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தது

4. மலை – மாலை

விடை: மலை மீது இருக்கும் கோவிலுக்கு மாலை நேரத்தில் சென்றேன் .

5. வளி – வாளி

விடை: வளிமண்டல காற்று பெற மரம் நட்டு வாளி நிறைய தண்ணீர் ஊற்றுவோம் .

6. விடு – வீடு

விடை: தீய பழக்கங்களை விட்டு விடு; வீடு சென்று மகிழ்ச்சியாக இரு

அகராதியில் கண்டு பொருள் எழுதுக.

1. ஊண் – ஊன்

  • ஊண் – உணவு
  • ஊன் – மாமிசம்

2. திணை – தினை

  • திணை – உயர்திணை, அஃறிணை போன்ற இலக்கண பாகுபாடு
  • தினை – சிறு தானிய வகை

3. அண்ணம் – அன்னம்

  • அண்ணம் – உள் நாக்கு
  • அன்னம் – சோறு

4. வெல்லம் – வெள்ளம்

  • வெல்லம் – கரும்பு சாற்றினால் தயாரிக்கப்படும் இனிப்பு பொருள்
  • வெள்ளம் – ஆற்றில் கரைபுரண்டு ஓடுவது வெள்ளம்

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்

  • செவ்விலக்கியம் – Classical literature
  • காப்பிய இலக்கியம் – Epic literature
  • பக்தி இலக்கியம் – Devotional literature
  • பண்டைய இலக்கியம் – Ancient literature
  • வட்டார இலக்கியம் – Regional literature
  • நாட்டுப்புற இலக்கியம் – Folk literature
  • நவீன இலக்கியம் – Modern literature

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “தொகாநிலைத் தொடர்கள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. தொகாநிலைத் தொடர் ________ வகைப்படும்

  1. 6
  2. 9
  3. 8
  4. 12

விடை: 9

2. எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது ____________ தொடர் ஆகும்.

  1. விளித்தொடர்
  2. வினைமுற்றுத்தொடர்
  3. எழுவாய்த்தொடர்
  4. வேற்றுமைத்தொடர்

விடை: எழுவாய்த்தொடர்

3. நண்பா எழுது! – அமைந்துள்ள தொடர் வகை

  1. எழுவாய்த்தொடர்
  2. வினாத்தொடர்
  3. விளித்தொடர்
  4. வேற்றுமைத்தொடர்

விடை: விளித்தொடர்

3. பாடினாள் கண்ணகி – அமைந்துள்ள தொடர் வகை

  1. எழுவாய்த்தொடர்
  2. வினாத்தொடர்
  3. வினைமுற்றுத்தொடர்
  4. வேற்றுமைத்தொடர்

விடை: வினைமுற்றுத்தொடர்

4. பெயரெச்சத்தொடர் வகைக்கு சான்று தருக

  1. கேட்ட பாடல்
  2. பாடி மகிழ்ந்தனர்
  3. கட்டுரையைப் படித்தாள்
  4. இனியன் கவிஞர்

விடை: கேட்ட பாடல்

5. இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது _____________ தொடர் ஆகும்.

  1. எழுவாய்த்தொடர்
  2. வினாத்தொடர்
  3. வினைமுற்றுத்தொடர்
  4. இடைச்சொல் தொடர்

விடை: இடைச்சொல் தொடர்

6. சாலச் சிறந்தது இடம்பெற்றுள்ள தொடர் வகை

  1. எழுவாய்த்தொடர்
  2. இடைச்சொல் தொடர்
  3. உரிச்சொல் தொடர்
  4. வினைமுற்றுத்தொடர்

விடை: உரிச்சொல் தொடர்

7. ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.

  1. அடுக்குத் தொடர்
  2. உரிச்சொல் தொடர்
  3. இடைச்சொல் தொடர்
  4. வினைமுற்றுத்தொடர்

விடை: அடுக்குத் தொடர்

குறுவினா

1. தொகாநிலைத்தொடர் வகைகளை கூறுக

  • எழுவாய்த்தொடர்
  • விளித்தொடர்
  • வினைமுற்றுத்தொடர்
  • பெயரெச்சத்தொடர்
  • வினையெச்சத்தொடர்
  • வேற்றுமைத்தொடர்
  • இடைச்சொல் தொடர்
  • உரிச்சொல் தொடர்
  • அடுக்குத் தொடர்

2. வேற்றுமைத்தொடர் என்றால் என்ன?

வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.

3. கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் எவ்வாறு உருவாகின்றன?

  • ஒன்றிற்கு மேற்பட்ட வினையெச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடியும் கூட்டுநிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம்.
  • வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.

எ.கா. கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி

Leave a Comment