Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 Thirukural Book Back Solution

இயல் 3.6 – திருக்குறள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 3.6 ‘Thirukural’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 3.6 திருக்குறள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 3.6 Thirukural Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

திருக்குறள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thirukural’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: தொகா நிலைத் தொடர்கள்

பலவுள் தெரிக

1. நச்சப் படாதவன் செல்வம் இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

நச்சப் படாதவன் – பிறருக்கு உதவி செய்யாதவன்

2. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம்  – இன்னிசை அளபெடைகள்

பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

  1. உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் – அ. ஒழுக்கத்தின் எய்துவர்
  2. ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது – ஆ. உயிரினும் ஓம்பப் படும்
  3. ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் – இ. நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

4. எய்துவர் எய்தாப் பழி இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பப்பாடு எது?

  1. கூவிளம் தேமா மலர்
  2. கூவிளம் புளிமா நாள்
  3. தேமா புளிமா காசு
  4. புளிமா தேமா பிறப்பு

விடை : கூவிளம் தேமா மலர்

சிறு வினா

வேலோடு நின்றான் இடஎன்றது போலும்
கோலோடு நின்றாள் இரவு இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

இப்பாடலில் உவமை அணி பயின்று வந்துள்ளது.

அணி இலக்கணம்:-

உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் ஒரு வாக்கியமாகவும், உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.

உவமை:-

வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிபறி செய்தல்

உவமேயம்:-

ஆட்சி அதிகாரத்தை கொண்டு மன்னர் வரி விதித்தல்

உவம உருபு:-

போல (வெளிப்படை)

விளக்கம்:-

ஆட்சியதிகாரத்தை கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தை கொண்டு வரி விதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது ஆகும்

திருக்குறள் பற்றிய கவிதை:

உரை(றை) ஊற்றி ஊற்றிப்
பார்த்தாலும்
புளிக்காத போல்!
தந்தை தந்த
தாய்ப்பால்
முப்பால்!

– அறிவுமதி

கற்பவை கற்றபின்…

கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.

“சின்னச்சாமி… யாரோ மரத்தோரமா நிற்கிறாங்க…. யாராய் இருக்கும்….” மாட்டு வண்டிய
ஓட்டிக்கிட்டே அப்பா கேட்டார்.

“தெரியலப்பா…”

“இறங்கி யாருன்னு பாரு….”

வாட்டசாட்டமாய், கண்ணாடியும் அலைபேசியும் கையுமாய் சாலையோரத்தில் வண்டியுடன்
ஒருவர் நின்றிருந்தார். .

“ஐயா..நீங்க…”

“வெளியூருப்பா.. வண்டி நின்னு போச்சு…!”

“அப்படியா… வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாங்க. மழை வர்ற மாதிரியிருக்கு.. ஊரு ரொம்ப தூரம்.. வேற வண்டியும் வராது…”

அவர் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்து வரலைன்னுட்டார். மூன்று நான்கு பேர்தான் வண்டியில இருந்தோம்.. சிறிது தூரம் போறதுக்குள்ள மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிருச்சு… நாங்க வீட்டுக்குப் போயிட்டோம். இரவுல தூங்கப் போறப்ப… அப்பா சொன்னார். தம்பி… அந்த சூட்டுக்காரர் மழை தாங்காம நடந்திருக்காரு. தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சு… வேற யாரோ தூக்கிட்டு வந்திருக்காங்க. நம்ம ஊரு ஆசுபத்திரியில.. கட்டுப் போட்டுக்கிட்டு இருந்தாங்க… பாவம் படிச்சவரா இருக்காரு…சூழ்நிலை புரியாம… வரமாட்டேன்னு சொன்னாரு, இப்ப வேதனைப்பட்டாரே…

அ) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
      கல்லார் அறிவிலா தார்.

ஆ) பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
       நாகரிகம் வேண்டு பவர்.

இ) ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
      தாழாது உஞற்று பவர்.

விடை:- 

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலா தார்.

காரணம்:- 

வண்டிக்காரரின் உடமையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்த சூட்டுக்காரன் உதவ வந்த அவனை ஒதுக்கித் தள்ளினான். உலகத்தானோடு பொருத்தி வாழும் தன்மையற்றவனாய் இருந்ததால் அவன் விபத்திற்குள்ளாக நேர்ந்தது. இவன் கற்றிந்தும் அறிவில்லாதவனே

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “திருக்குறள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டும்.

  1. இன்பம்
  2. பெருமை
  3. அறிவு
  4. ஒழுக்கம்

விடை : ஒழுக்கம்

2. ஒழுக்கமாக வாழும் எல்லாரும் மேன்மை அடைவர்

  1. இன்பம்
  2. பெருமை
  3. மேன்மை
  4. துன்பம்

விடை : மேன்மை

3. ஆசை, சினம், அறியாமை என்ற மூன்றும் அழிந்ததால் அவற்றால் வரும் துன்பமும்
அழியும்.

  1. ஆணவம்
  2. பெருமை
  3. துன்பம்
  4. ஒழுக்கம்

விடை : துன்பம்

4. கிடைத்தற்கரிய பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு ______________ போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும்.

  1. சிறியோரை
  2. பெரியோரைப்
  3. நண்பரை
  4. பகைவரை

விடை : துன்பம்

5. பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்
 பாடல் வரிகளில் இடம் பெற்றுள்ள அணி

  1. உருவக அணி
  2. எடுத்துக்காட்டு உவமை அணி
  3. உருவக அணி
  4. பிறிது மொழிதல் அணி

விடை : எடுத்துக்காட்டு உவமை அணி

6. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு பாடல் வரிகளில் இடம் பெற்றுள்ள அணி

  1. உருவக அணி
  2. உவமை அணி
  3. ஏகதேச உருவக அணி
  4. பிறிது மொழிதல் அணி

விடை : உவமை அணி

8. ____________ என்ற உயர் பண்பு  கொண்டவர்களால் தான் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்.

  1. வலிமை
  2. விடாமுயற்சி
  3. பொறுமை
  4. பொறாமை

விடை : விடாமுயற்சி

9. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று
பாடல் வரிகளில் இடம் பெற்றுள்ள அணி

  1. உருவக அணி
  2. ஏகதேச உருவக அணி
  3. உவமை அணி
  4. பிறிது மொழிதல் அணி

விடை : உவமை அணி

10. தமர் என்ற சொல்லின் பொருள்

  1. நூல்
  2. பேறு
  3. துணை
  4. அரிய

விடை : துணை

10. இன்மை என்ற சொல்லின் பொருள்

  1. இல்லை
  2. முயற்சி
  3. வறுமை
  4. இல்லை

விடை : வறுமை

குறு வினா

1. உயிரினும் மேலாக ஓம்பப்படுவது எது? அதற்கான காரணம் யாது?

உயிரினும் ஓம்பப்படுவது ஒழுக்கம். காரணம் ஒழுக்கமானது அனைத்து சிறப்புகளையும் தருகிறது.

2. ஒழுக்கத்தினாலும், இழுக்கத்தினாலும் கிடைப்பது யாது?

  • ஒழுக்கத்தினால் கிடைப்பது மேன்மை
  • இழுக்கத்தினால் கிடைப்பது அடையக்கூடாது பழிகள்

3. உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் எவ்வாறு கருதப்படுகிறார்?

உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் பல நூல்களை கற்றிருந்தாலும் கல்லாதவராகக் கருதப்படுபவர்.

4. பெரும்பேறு என்பது யாது?

பெரியோரைப் போற்றி துணையாக்கி கொள்ளுதலே கிடைத்தற்கரிய பெரும்பேறாகும்.

5. பகைவறின்றி தானே கெடுபவர் யார்?

குற்றங்களை கண்டபோது இடித்துத் திருத்தும் பெரியாரின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளாத மன்னன் தன்னைக் கெடுக்க பகைவர் இன்றி தானே கெடுவான்.

6. நல்லார் தொடர்பை கைவிடல் எதைப் போன்றது?

தான் ஒருவனாக நின்று பலரோடு பகை மேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தரும். ஆகவே நல்லோர் நட்பைக் கைவிடல் கூடாது.

7. மன்னன் தன் நாட்டை இழக்க வள்ளுவர் கூறும் காரணத்தை கூறுக

தன் நாட்டில் நிகழும் நன்மை, தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் தன் நாட்டை நாள்தோறும் இழக்க நேரிடும்

8. எது இல்லாத கண்கள் பயனற்றதென வள்ளுவர் கூறுகிறார்?

  • பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை.
  • அதைப் போல இரக்கம் இல்லாத கண்களினாலும் பயனில்லை

9. யாருக்கு உலகமே உரிமை உடையதாகுமென வள்ளுவர் கூறுகிறார்?

நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.

10. முயற்சி பற்றி வள்ளுவர் கூறுவனற்றை எழுதுக

  • முயற்சி செய்தால் ஒருவர்க்குச் செல்வம் பெருகும்.
  • முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்.

Leave a Comment