Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 Virunthu Potruthum Book Back Solution

இயல் 3.1 – விருந்து போற்றதும்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 3.1 ‘Virunthu Potruthum’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 3.1 விருந்து போற்றதும்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 3.1 Virunthu Potruthum Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

விருந்து போற்றதும் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Virunthu Potruthum’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: தொகை நிலைத் தொடர்கள்

பலவுள் தெரிக

1. பின்வருவனவற்றுள் முறையான தொடர்

  1. தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
  2. தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
  3. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
  4. தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

விடை : தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

2. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை –

  1. நிலத்திற்கேற்ற விருந்து
  2. இன்மையிலும் விருந்து
  3. அல்லிலும் விருந்து
  4. உற்றாரின் விருந்து

விடை : இன்மையிலும் விருந்து

குறு வினா

‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாகக் கருத முடியாது.

ஏனென்றால், இனிய சொற்களும், நல்ல உபசரிப்பும் இல்லாமல் செல்வத்தால் செய்யும் விருந்தோம்பலை ஏற்கமாட்டார்கள். எனேவ, செல்வத்தை விட விருந்தோம்பலுக்கு இனியச் சொற்களும் நல்ல உபசரிப்பும், மனமும் இருந்தால் போதும் என்பது என் கருத்தாகும்.

சிறு வினா

• புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.

• திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது.

இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.

  • அன்றைய காலத்தில் வழிப்போக்கர்களே விருந்தினராகப் போற்றப்பட்டனர்.
  • காலமாற்றத்தல் நாகரிகம் என்னும் பெயரால், வழிப்போக்கர்களுக்கு விருந்தளிப்பது மறைந்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கு மட்டுமே விருந்தளிக்கும் நிலையைத்தான் இன்று காண முடிகின்றது.
  • வழிப்போக்கர்களுக்கும், ஏழைகளுக்கும் கோவில் மற்றும் அன்னசத்திரங்கள் விருந்திட்டு வருகின்றன.
  • விருந்தினர் என்று சொல்லி கயவர்கள் இன்று மக்களை ஏமாற்றுவதால் புதியவர்களை விருந்தினராகப் போற்ப்படுவது இல்லை.
  • இன்றைய சமுதாயத்தில் தன்னலம் மேலோங்கியதால் விருந்தென்னும் பொதுநலம் குறைந்து வருகின்றது.

நெடு வினா

உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

முன்னுரை:-

“செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வாத் தவர்க்கு”

என்ற குறட்பா வந்த விருந்தினரைப் பேணிப் போற்றி இனிவரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவனை வானவர்கள் போற்றும் சிறப்பு விருந்தினனாவான் என்கின்றது. வந்த விருந்தையும் வரும் விருந்தையும் சிறப்புடன் செய்வது இல்லத்தார் கடமையாகும்.

இனிது வரவேற்றல்:-

வீட்டிற்கு வந்த உறவினர்களிடம் வாருங்கள், அமருங்கள், நலமா? நீர் அருந்துங்கள், குடும்பத்தினர் அனைவரும் நலமா? என சில வார்த்தைகளைக் கூறி முக மலர்ச்சியுடன் விருந்தினரை வரவேற்றேன்.

உணவு உபசரிப்பு:-

  • வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு அவர்கள் விரும்பும் அறுசுவை உணவைத் தயார் செய்து அவரை உணவு உண்ண வருமாறு இன்முகத்துடன் அழைத்து, அமர வைத்தேன்.
  • தலை வாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது மரபு. ஆகவே தமிழ்ப் பண்பாடு மறையாதிருக்க தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவிட்டேன்.
  • உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும், வலப்பக்கம் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்தேன்.
  • வாழை இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளை வைத்தேன். வாழை இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்தேன்.
  • உண்பவர் மனமறிந்து அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளை மீண்டும் மீண்டும் பரிவுடன் பரிமாறினேன்.

அன்பு வெளிப்பாடு:-

  • ஒரு குவளையில் நீரைக் கொண்டு வந்தேன். அதைக் கொண்ட அவர் அருகில் வைக்கப்பட்ட வெற்றுப்பாத்திரத்தில் அவர் கைகழுவுமாறு நீர் ஊற்றினேன்.
  • பிறகு கைகளைத் துடைப்பதற்குத் துண்டினை அளித்தேன்.
  • உணவு உண்டு எழுந்தவருக்கு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கும் சுண்ணாம்பு வைத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.
  • உணவுண்டவரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து, வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் சிலவற்றையும் கொடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்குமாறு கூறி, ஏழடி வரை அவருடன் சென்று வழியனுப்பி வைத்தேன்.

முடிவுரை:-

விருந்தினர் பேணுதன் தமிழர் மரபு ஆகும். அதனை அன்போடும், அருளோடும் செய்தல் நனி சிறப்பாகும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “விருந்து போற்றதும்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. மினசோட்டோ தமிழ்ச் சங்கம் _____________-ல் அமைந்துள்ளது

  1. மொரிசியஸ்
  2. அமெரிக்கா
  3. மலேசியா
  4. இலங்கை

விடை : அமெரிக்கா

2. விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர். 

  1. திருவள்ளுவர்
  2. ஒளவையார்
  3. இளங்கோவடிகள்
  4. மாங்குடி மருதனார்

விடை : இளங்கோவடிகள்

3. …. தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்று குறிப்பிடும் நூல் எது?

  1. சிலப்பதிகாரம்
  2. கம்பராமாயணம்
  3. நளவெண்பா
  4. சீவகசிந்தாமணி

விடை : சிலப்பதிகாரம்

4. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டவர்.

  1. திருவள்ளுவர்
  2. ஒளவையார்
  3. கம்பர்
  4. இளங்கோவடிகள்

விடை : கம்பர்

4. கலிங்கத்துப்பரணியிலும் செயங்கொண்டார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் _________________ உவமையாக்கியுள்ளார்.

  1. உணவை
  2. நன்நடத்தயை
  3. முகமலர்ச்சியை
  4. பண்பினை

விடை : முகமலர்ச்சியை

5. பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்திவந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்து அன்றி விளைவான யாவையே என் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

  1. சிலப்பதிகாரம்
  2. நளவெண்பா
  3. சீவகசிந்தாமணி
  4. கம்பராமாயணம்

விடை : கம்பராமாயணம்

6. _____________ என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.

  1. தனித்து உண்ணாமை
  2. நாம் மட்டும் உண்பது
  3. தான் மட்டும் உண்பது
  4. தனித்து உண்பது

விடை: தனித்து உண்ணாமை

7. அல்லில் ஆயினும் விருந்து வரின்
உவக்கும் என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பினைக் கூறும் நூல்

  1. குறுந்தொகை
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. நற்றிணை

விடை : நற்றிணை

8. காலின் ஏழடிப் பின் சென்று என்ற விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்

  1. பொருநாராற்றுப்படை
  2. சிறுபாணாற்றுப்படை
  3. பெரும்பாணாற்றுப்படை
  4. கூத்தாராற்றுப்படை

விடை : பொருநாராற்றுப்படை

9. விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகமலரும் மேலார் போல இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. கலிங்கத்துப்பரணி
  2. கம்பராமாயணம்
  3. முக்கூடற்பள்ளு
  4. பெரியபுராணம்

விடை : கலிங்கத்துப்பரணி

10. இளையான்குடி மாறநாயனாரின் சிவனடியார்க்கு விருந்தளித்த தன்மையை கூறும் நூல்

  1. பெரியபுராணம்
  2. கம்பராமாயணம்
  3. கலிங்கத்துப்பரணி
  4. சீவகசிந்தாமணி

விடை : கலிங்கத்துப்பரணி

11. தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள் யாவை?

  1. பழையவாள், நெடுங்கோட்டு பெரியாழ்
  2. புதியவாள், நெடுங்கோட்டு பெரியாழ்
  3. பழையவாள், கருங்கோட்டு சீறியாழ்
  4. புதியவாள், கருங்கோட்டு சீறியாழ்

விடை : பழையவாள், கருங்கோட்டு சீறியாழ்

12. மருந்தே ஆயினும் விந்தோடு உண் என்ற பாடலின் ஆசிரியர்

  1. பரஞ்சோதி முனிவர்
  2. குமரகுரபரர்
  3. வள்ளலார்
  4. ஒளவையார்

விடை : ஒளவையார்

13. அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் கொண்டாடுகின்ற விழா

  1. இறைச்சி உணவு விருந்து விழா
  2. வேட்டி சேலை உடுத்தும் விழா
  3. வாழையிலை விருந்து விழா
  4. நவதானிய விழா

விடை : வாழையிலை விருந்து விழா

14. ___________, ___________ ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்க்காகக் கட்டப்பட்டன.

  1. நாயக்கர், பல்லவர்
  2. பல்லவர், மராட்டியர்
  3. நாயக்கர், மராட்டியர்
  4. சேரர், மராட்டியர்

விடை : நாயக்கர், மராட்டியர்

15. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்று கூறும் நூல்

  1. நற்றிணை
  2. சிறுபாணாற்றுப்படை.
  3. பெரும்பாணாற்றுப்படை
  4. கம்பராமாயணம்

விடை : சிறுபாணாற்றுப்படை.

15. பொருந்தாதவற்றை தேர்க

  1. விருந்தே புதுமை – தொல்காப்பியர்
  2. மோப்பக் குழையும் அனிச்சம் – திருவள்ளுவர்
  3. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் – மாங்குடி மருதனார்
  4. விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை – இளங்கோவடிகள்

விடை : விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை – இளங்கோவடிகள்.

குறு வினா

1. விருந்தோம்பல் என்பதன் பொருள் விளக்கம் தருக

தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, உண்ண உணவும் இடமும் கொடுத்தல், அவர்களிடம் அன்பு பாராட்டுதல் இவை விருந்தோம்பல் எனப்படும்.

2. உலகம் நிலைத்திருப்பதற்கான காரணங்களாக கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி குறிப்பிட்டும் காரணங்களை யாவை?

  • தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை
  • அமிழ்தே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுக்கும் நல்லோர் உள்ளதால் உலகம் நிலத்திருக்கிறது

3. இளையான்குடி மாறநாயனார் சிவனடியார்க்கு விருந்தளித்த நிகழ்வை எழுதுக

இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை; எனவே, அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்தார்.

4. நெய்தல் நிலத்தவர் விருந்தளிப்பு பற்றி குறிப்பிடும் நூல் எது? அந்நூலின் கூறும் கருத்தினை கூறுக

  • நெய்தல் நிலத்தவர் விருந்தளிப்பு பற்றி குறிப்பிடும் நூல் சிறுபாணாற்றுப்படை
  • நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.

5. மினசோட்டா தமிழ்ச் சங்க வாழையிலை விருந்து விழாவில் இடப்படும் உணவுகள் யாவை?

முருங்கைக்காய் சாம்பார், வெண்டக்காய் கூட்டு, மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம், தினைப்பாயாசம், அப்பளம்

6. விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ் நூல்கள் சிலவற்றை கூறுக

தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், கலிங்கத்துப்பரணி, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, கொன்றைவேந்தன்

7. விருந்து மற்றும் விருந்தோம்பல் கருத்துக்களை கூறும் புலவர்களை எழுதுக

தொல்காப்பியர், கம்பர், திருவள்ளுவர், செயங்கொண்டார், இளங்கோவடிகள், ஒளவையார்

Leave a Comment