Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.5 Aakapeyargal Book Back Solution

இயல் 7.5 – ஆக்கப்பெயர்கள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ‘Aakapeyargal’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 7.5 ஆக்கப்பெயர்கள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 7.5 Aakapeyargal Kavi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

ஆக்கப்பெயர்கள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Aakapeyargal’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: சிந்தனை பட்டிமன்றம்

பலவுள் தெரிக

1. அடையாறுப் பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள் இவ்வரியில் உள்ள சொற்பிழைகளின் திருத்தும்

  1. அடையாற்றுப் பாலத்தின் சுவற்றில்
  2. அடையாறுப் பாலத்தின் சுவரில்
  3. அடையாறுப் பாலத்தின் சுவற்றில்
  4. அடையாற்றுப் பாலத்தின் சுவரில்

விடை : அடையாற்றுப் பாலத்தின் சுவரில்

2. ஆக்கப்பெயர் விகுதி பெறாத சொல்லைத் தேர்க

  1. காவலாளி
  2. மேலாளர்
  3. உதவியாள்
  4. ஆசிரியர்

விடை : ஆசிரியர்

சிறு வினா

ஆக்கப்பெயர் விகுதிகள் தற்கால வாழ்வியலில் மிகுந்துள்ளன ஏன்?

  • காலச்சூழலுக்கு ஏற்றவாறு பயன்பாட்டிற்காகப் பல்வேறு பெயர்களைப் புதிதாக ஆக்கிக் கொள்கிறோம்.
  • இடுகுறியாகவும், காரணமாகவும் ஆக்கப்படும் புதிய சொல் ஆக்கப்பெயராகும்
  • பெயர், வினைச்சொற்களுடன் காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி என்னும் விகுதிகள் சேர்த்து உருவாக்கப்படும் புதுச்சொற்கள், தமிழின் சொற்களஞ்சியத்தை விரிவடையச் செய்கின்றன.

இலக்கணத் தேர்ச்சி கொள்

பயிற்சி – 1

கீழ்காணும் பத்தியில் உள்ள ஆக்கப் பெயர்களை எடுத்தெழுதுக

எங்கள் பள்ளியில் நடைபெற்ற புத்தகத் திருவிழவிற்கு காவல்துறை ஆணையாளர், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர், “மாணவர்களாகிய நீங்கள் படிப்பகங்களைப் பயன்படுத்தி விண்ணியல், மண்ணயில் போன்ற துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். நல்ல பண்பாளர்களைக் கூட்டாளி ஆக்கிக் கெண்டு உதவியாள் இல்லாமலே ஒரு நிறுவனத்தின் மேலாளராகவோ, முதலாளியாகவோ ஆகலாம்” என்று கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

ஆக்கப்பெயர்கள்

ஆணையாளர் அழைப்பாளர் விண்ணியல்
மண்ணயில் பண்பாளர் உதவியாள்
கூட்டாளி மேலாளர் முதலாளி

பயிற்சி – 2

அடைப்புக்குள் உள்ள ஆக்கபெயர் விகுதிகளைக் கொண்டு, விடுகதைக்குரிய ஆக்கப் பெயர்களை கண்டறிக.

1. வேவு பார்த்திடுவான்;  ஓசையின்றி சென்றிடுவான் (ஆளி)

விடை: உளவாளி

2. அறிவைத் தேடிப் போகுமிடம்;  உலகம் அறிய உதவுமிடம் (அகம்)

விடை: நூலகம்

3. வந்தால் மகிழ்ச்சி இது;  உழைத்தால் கிடைக்கும் இது (மானம்)

விடை: வருமானம்

4. வேட(ஷ)ம் போட்டவன்;  வேடதாரிப் பட்டம் வாங்கியவன்? (தாரி)

விடை: பட்டதாரி

5. அளந்து அளந்து கொட்டிடுவான்;  அகம் மகிழத் தந்திடுவான் (ஆள்)

விடை: கொடையாள்

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

மயிலை சீனி வேங்கடசாமி (1900 – 1980)

தமிழ் மொழியில் மறந்ததும் மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவு கடந்து உள்ளன. அவற்றை வெளிக்கொணரந்து, வீரிய உணர்வுடன் வெளியிட்டவர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார். அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் புதிய புதி செய்திகளைப் புலப்படுத்திய விந்தைப் படைப்புகள். இராமேசுவரத் தீவு, உறையூர் அழிந்த வரலாறு, மறைந்தபோன மருங்காப்பட்டினம் போன்ற தனித்தன்மை கொண்ட அவர்தம் கட்டுரைகள் வரலாற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சின. கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன் முதலிய நூல்கள் அவர் நமக்கு வழங்கியுள்ள வரலாற்றுச் செல்வங்கள். அவருடைய “களப்பிரர் காலத் தமிழகம்” என்னுமு் ஆய்வு  நூல் இருண்ட காலம் என்று ஆய்வாளர்களால் வருணிக்கப்பட்ட களப்பிரர் காலத்திற்கு ஒளியூட்டி, வரலாற்றுத் தடத்தை செப்பனிட்டது.

நகராட்சிப் பள்ளி ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றிய அவர் தன்னுணர்வால் உறுதியான உழைப்பால், தமிழ்ப்பற்றால் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மதித்துப் போற்றும் பணிகளை செய்தார். ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தவர். சிறந்த வரலாற்றாசிரியர், நடுநிலை பிறழாத ஆய்வாளர், மொழியில் அறிஞர், இலக்கியத் திறனாய்வாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்முகச் சிறப்பு கொண்டவர். அவருக்கு மதுரைப் பல்கலைக்கழகம் 1980ஆம் ஆண்டு “தமிழ்ப் பேரவைச் செம்மல்” என்னும் பட்டமளித்துப் பாராட்டியது. கிறித்துவமும் தமிழும், சமணமும் தமிழும், பெளத்தமும் தமிழும், மறைந்து போன தமிழ்நூல்கள் போன்ற பல நூல்களால் தமிழ் ஆய்வு வராற்றில் மயிலை சீனி, வேங்கடசாமி அழியாச் சிறப்பிடம் பெற்றுள்ளார்.

1. மறந்தும் மறைந்தும் இது போன்ற இரண்டு தொடர்களை உருவாக்குக

(எ.கா.) படித்ததும் படைத்ததும்

  • கண்டதும் கொண்டதும்
  • உணர்ந்தும் உவந்ததும்

2. அழிந்த வரலாறு, புதிய வெளிச்சம் – அடிக்கோடிட்ட சொற்களின் எச்ச வகைகளை எழுதுக.

அழிந்த

  • தெரிநிலைப் (இறந்தகாலப்) பெயரெச்சம்

புதிய

  • குறிப்புப் பெயரெச்சம்

3. அழியாச் சிறப்பிடம் இலக்கணக்குறிப்புத் தருக

  • அழியாச் சிறப்பிடம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம் (தொடர்)

4. முதலிய, முதலான பொருளறிந்து சொற்றொடர் அமைக்க

  • முதலிய – உப்பு, மிளகாய், புளி முதலிய மளிகைப் பொருள்ளை வாங்கினார்
  • முதலான – தமிழ், ஆங்கிலம் முதலான மொழிகளை கற்றான்.

5. பத்தியில் உள்ள உயர்வு சிறப்பு உம்மையைக் கண்டு எழுதுக 

பேராசிரியர்களும், போற்றும்

தமிழாக்கம் தருக

Balu : Hi Velu, Good evening
Velu : Hi Balu. Good evening.
Balu : Yesterday you were watching the Republic day function the whole day.
Velu : Yes. I was touched by one award ceremony.
Balu : Which award?
Velu : Param vir Chakra award, highest award for army personnel.
Balu : Why were you touched?
Velu : Most of the awards were received by the wives of soldiers posthumously
Balu : Why? What do you mean by posthumous?
Velu : It means ‘after death’. Many soldiers had laid down their lives protecting the
border of our Motherland. They have sacrificed their lives to save our Country.
So that we can be free and safe.

பாலு : வேலு! மாலை வணக்கம்

வேலு : பாலு! மாலை வணக்கம்

பாலு : நீ நேற்று முழுவதும் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளைப் பார்த்தாயா?

வேலு : ஆமாம், அவற்றுள் விரு ஒன்று வழங்கி நிகழ்ச்சியில் நெகிழ்ந்து போனேன்.

பாலு : எந்த விருது?

வேலு : இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான “பரமவீரர் சக்கர” விருதுதான் அது.

பாலு : எதனால் நெகிழந்து போனாய்?

வேலு : பெரும்பாலான விருதுகள் வீரர்களின் இறப்பிற்கு பின் மனைவியால் பெறப்பட்டது காரணம்.

பாலு : ஏன்? இறப்பிற்கு பின் என்றால்?

வேலு : அதற்கு “மரணத்திற்குபின் என்பது பொருள். நம் தாய்நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதற்காக வீரர்கள் பலர் தம் உயிரை ஈந்துள்ளனர். அவர்கள் தங்கள் உயிரை நம் நாட்டைக் காத்தத் தியாகம் செய்துள்ளனர். அதனால்தான் நாம் எல்லோரும் இவ்வளவு சுதந்திரமாகவும பாதுகாப்பாகவும் வாழ முடிகிறது.

மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

1. எதிர் நீச்சல்

விடை: வாழ்க்கையில் எத்தனை தோல்விகள் ஏற்பட்டாலும், அவற்றை கடந்து எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற வேண்டும்

2. சொந்தக்காலில்

விடை: அடுத்தவர் உதவுவார் என்று எதிர்பாக்காமல் சொந்தக்காலில் நிற்பது வாழ்க்கையின் உயர்வுக்கு வழி வகுக்கும்.

3. தாளம்போடுதல்

விடை: மற்றவர்கள் கூறுகின்ற வாதங்களைப் புரிந்து கொள்ளாமல் தாளம்போடுதல் நம்மை ஆபத்தில் தள்ளிவிடும்.

4. மதில்மேல் பூனை

விடை: மேற்படிபிற்காக என்ன பாடத்தை எடுப்பது என்று தெரியாமல் மதில்மேல் பூனையாக விழித்தான்.

5. நிறைகுடம்

விடை: சான்றோர்கள் தன்னை வியந்து பேசினாலும் நிறைகுடம் தழும்பாமல் இருப்பது போல் அமைதியாக இருப்பர்.

6. கைதூக்கிவிடுதல்

விடை: ஆதரவற்றவர்களை அரவணைத்து அன்பு காட்டி  அவர்களை கைதூக்கிவிடுதல் விடுதல் வேண்டும்

7. கண்ணாயிருத்தல்

விடை: கல்வியல் கண்ணாயிருத்தல் ஒன்றே வாழ்வின் உயர்விற்கு அடிப்படையாகும்

8. அவசரக்குடுக்கை

விடை: நிதானமுடன் முடிவெடுக்கத் தெரிந்திடாமல் அவசரக்குடுக்கையாகச் செயல்பட்டால் அது நமக்கு ஆபத்தை கொண்டு வரும்

9. முதலைக்கண்ணீர்

விடை: ஏழைகள் துன்பத்தை கண்டு வருந்துவதாக பணக்காரார்கள் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

10. கானல்நீர்

விடை: ஏழைகள் ஆனந்தமாக வாழும் வாழ்க்கை கானல்நீராகவே உள்ளது.

இலக்கிய நயம் பாராட்டுக

சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலம்
சுகம்தரும் உணர்ச்சியம் வேறுண்டோ?

பதம்தரும் பெருமையும் பணம்தரும் போகமும்
பார்த்தால் அதைவிடக் கீழன்றோ?

இதம்தரும் அறங்களும் இசையுடன் வாழ்தலும்
எல்லாம் சுதந்திரம் இருந்தால்தான்

நிழல்தரும் துயர்களை நிமிர்ந்துநின் றெதிர்த்திட
நிச்சயம் சுதந்திரம் அதுவேண்டும்.

– நாமக்கல் கவிஞர்

ஆசிரியர் குறிப்பு:-

ஈரோடு மாவட்டம் நாமக்கல் என்னும் ஊரில் வாழ்ந்தமையால் நாமக்கல் கவிஞர் என அழைக்கப்பெற்றார். இவர் சிறந்த கவிஞர், ஓவியர், கதையாசிரியர், தேசப்பற்றும் மொழிப் பற்றும் உடையவர். சுதந்திரப் போராட்ட களத்தில் பங்கு பெற்றவர். தேசியத்தையும் தமிழையும் தமிழ் இனத்தையும் போற்றி வாழ்ந்தவர். சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்தவர்.

பாடலின் பொருள்:-

உலகில் சுதந்திரம் தருகின்ற மகிழ்ச்சியை விட இனிய சுகம் தரும் உணர்வு வேறு ஏதேனும் இருக்கிறதா? வகிக்கின்ற பதவி கொடுக்கின்ற பெருமையையும், சேர்த்த செல்வத்தால் அனபவிக்குமும் இன்பமும் சுதந்திரத்திடன் ஒப்பிடும்போது தாழந்தவைதாமே? வாழ்வுக்கு இதம் தரும் அறச்செயல்களும், புகழுடன் வாழ்வது ஆகிய எல்லாம், சுதந்திரம் இருப்பதால் தானே நம்மால் அனுபவிக்க முடிகிறது? தினமும் நம்மை வருந்தும் துன்பங்களை நிமிர்ந்து நின்று எதிர்த்து விரட்ட, நிச்சயமாக நமக்கு சுதந்திரம் வேண்டும் அல்லவா?

மையக்கருத்து:-

சுதந்திரம் இல்லை என்றால், வாழ்வில் நாம் எந்தச் சுகத்தையும் பெறவோ, அனபிக்கவோ முடியாது. எதையும் சாதித்து இன்பம் துய்க்கச் சுத்நதிரமே இன்றியமையாததது என்னும் மையக்கருத்தைக் கவிஞர் வலியுறுத்துகிறார்.

நயம்:-

எளிய சொற்களில், அரிய கருத்தைச் சந்த நயம் அமையக் கவிஞர் கூறியுள்ளது நயம் பயக்கிறது.

இச்செய்யுள், எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகும். இச்செய்யுளில் சுதந்திரத்தின் சிறப்புகள் இயல்பாகக் கூறப்பட்டுள்ளன. எனவே “இயல்பு நவிற்சி அணி” அமைந்துள்ளது.

தொடை நயம்:-

அடிதோறும் முதல் சீர்களில் (சுந்திரம், பம்தரும், இம்தரும், நிம்தரும் என்பவற்றில்) இரண்டாம் எழுத்து ஒன்றிவந்து அடி எதுகை அமைந்துள்ளது.

சீர்தோறும் முதலெழுத்து ஒன்றிவருவது சீர்மோனை (தம்தரும் – ணம்தரும், தம்தரும் – சையுடன், நிதம்தரும் – நிமிர்ந்துநின்)

இறுதிச்சீர் ஒன்றுவது இயைபுத்தொடை ஆகும். வேறுண்டா? கீழன்றோ? என்னும் சீர்களில் ஓசை இன்றி, இயையபுத் தொடை அமைந்துள்ளது. அவற்றின் ஓ என்னும் ஓசை படிப்பதற்கு இன்பளிக்கிறது.

நிற்க அதற்கு தக…

கலைச்சொல் அறிவோம்

  • உத்திகள் – Strategies
  • பட்டிமன்றம் – Debate
  • பன்முக ஆளுமை – Multiple Personality
  • புனைபெயர் – Pseudonym
  • சமத்துவம் – Equality
  • தொழிற்சங்கம் – Trade Union

அறிவை விரிவு செய்

  • ஜீவா – வாழ்க்கை வரலாறு – கே. பால தண்டாயுதம்.
  • சொல்லாக்கம் – இ. மறைமலை

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “ஆக்கப்பெயர்கள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் _____________ எனப்படும்.

  1. தொழிற்பெயர்கள்
  2. உரிச்சொற்கள்
  3. ஆக்கப் பெயர்கள்
  4. திரிசொற்கள்

விடை : ஆக்கப் பெயர்கள்

2. உறவுப்பொருளில் வந்துள்ள ஆக்கப்பெயர்

  1. தோட்டக்காரன்
  2. உறவுக்காரர்
  3. வீட்டுக்காரன்
  4. நாட்டுக்காரி

விடை : உறவுக்காரர்

3. புதியதாக ஆக்கப்படும் சொல்லினை ___________ என்று கூறுவர்

  1. பொருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. ஆக்கப்பெயர்
  4. வினைப்பெயர்

விடை : ஆக்கப்பெயர்

5. பெயர்சொற்களை ஆக்கப் பயன்படும் விகுதிகளை _________ என அழைப்பர்

  1. பொருட்பெயர் விகுதிகள்
  2. இடப்பெயர் விகுதிகள்
  3. வினைப்பெயர் விகுதிகள்
  4. ஆக்கப்பெயர் விகுதிகள்

விடை : ஆக்கப்பெயர் விகுதிகள்

6. பின்வருவனவற்றுள் ஆக்கப்பெயர்களில் தனிச் சிறப்புடையவை

  1. விகுதி
  2. இடைநிலை
  3. பகுதி
  4. சந்தி

விடை : பகுதிகள்

பொருத்துக

1. உயர்நிலை பணிவோர் அ. ,ஆளி
2. கடைநிலை பணிவோர் ஆ. ஆளர்
3. இருபால் பொதுப்பெயர் இ. ஆள்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

குறு வினா

1. பொருளுக்கு முன்னோர் பெயரிட்டு வழங்கிய முறைகளை எழுதுக?

உலகப்பொருள் அனைத்தும் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. சில பொருள்களுக்கு காரணம் கருதியும் (காரணப்பெயர்), சில பொருள்களுக்கு காரணம் இன்றியும் (இடுகுறிப்பெயர்கள்) முன்னோர் பெயரிட்டு வழங்கினர்

சான்று

  • நாற்காலி, காற்றாடி (காரணப்பெயர்)
  • இலை, கல், மண் (இடுகுறிப்பெயர்கள்)

3. காரணப்பெயர்கள் எவ்வாறு இடுகுறிப்பெயராகிறது

காலப்போக்கில், பொருளின் மாற்றத்தால், அவை பயன்படும் நிலைக்கு ஏற்றவாறு சில நேரங்களில் காரணப்பெயர் இடுகுறிப்பெயராகி விடுகிறது.

சான்று : நாற்காலி

4. ஆக்கப்பெயர் விகுதிகளின் தனிச்சிறப்புகளை எழுதுக

  • தமிழ்ச்சொற்களோடு ஆக்கப்பெயர் விகுதிகள் சேரும்போது, எண்ணற்ற புதுச்சொற்கள் உருவாகின்றன.
  • அவை தமிழ்மொழியின் சொற்களஞ்சியத்தை விரிவடையச் செய்கின்றன.
  • தமிழ்மொழியில் பேச்சு வழக்கில் ஆக்கப்பெயர்கள் மிகுதியாக வழங்குவதினைக் காணலாம்.

Leave a Comment