Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 Thakurin kadithangal Book Back Solution

இயல் 8.1 – தாகூரின் கடிதங்கள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 8.1 ‘Thakurin kadithangal’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 8.1 தாகூரின் கடிதங்கள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 8.1 Thakurin kadithangal Kavi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

தாகூரின் கடிதங்கள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thakurin kadithangal’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: சிந்தனை பட்டிமன்றம்

பலவுள் தெரிக

பாடம் 8.1 தாகூரின் கடிதங்கள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 8.1 “தாகூரின் கடிதங்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 11 Tamil Text Books – Download

பலவுள் தெரிக

பூஐை, விஷயம், உபயோகம் என்பவை முறையே ………………………… என்று தமிழில் வழங்கப்படும்

  1. வழிபாடு, செய்தி, பயன்பாடு
  2. பயன்பாடு, வழிபாடு, செய்தி
  3. வழிபாடு, பயன்பாடு, செய்தி
  4. செய்தி, வழிபாடு, பயன்பாடு

விடை : வழிபாடு, செய்தி, பயன்பாடு

குறு வினா

1. நாட்டுபுறத்திலும், பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றைக் கூறுகிறார்?

  • நாட்டுப்புறங்களில் இருக்கும்போது, இயற்கையே சிறந்து விளங்கிறது.
  • பட்டணத்திலோ, மனித சமுதாயமே முக்கியமானதாகத் தலைதூக்கி நிற்கிறது.

2. பராம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என்றும் கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீக்கதரசி என்றும் அழைக்கப்பட்ட தாகூர் தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார் – நிறுத்தக்குறியிடுக

“பராம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்” என்றும். “கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீக்கதரசி” என்றும் அழைக்கப்பட்ட தாகூர், தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

சிறு வினா

தாமஸிகம் என்றால் என்ன?

  • நாகரிக வழக்கத்தில் காலத்துக்கு ஏற்றபடி சீக்கிரம் வாடிவிடும் மலர்களுடன் தொடர்பு உண்டு. தோட்டக்காரன் கைகளில் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கும். மலர்ச்செப்பினுள் வழக்கம்போல் போவதும் வருவதும் தான் அவற்றின் வேலை, இதனைத் தாமஸிகம் என்பர்.
  • ஸதூலப் பொருள்களுக்கு அப்பால் செல்ல இயலாமல், நம் மனம் திகப்படைந்து நின்றுவிடுகின்ற நிலை. அதாவது பூஜைக்கு தேவையான மலர்களைத் தவிர வேறு எந்தப் பூக்களுடன் நமக்கு அவசியம் எதுவும் இல்லை என்பதாம்.

நெடு வினா

சிதறிய கடிதங்கள் உணர்த்தும் கருத்துகளைச் சிதறாது விளக்குக

சிதறிய கடிதங்கள் உணர்த்தும் கருத்துகள்

தாகூரின் சிதறிய கடிதங்கள், ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் அரிய செய்திகளை உணர்த்துகின்றன. ஆற்று வெள்ளத்தில் இறந்து மிதந்து வந்த பறவையை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் தாகூர் அதன் இறப்பு எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை ஊகித்துத் தம் சிதறிய கடிதத்தில் கூறுகிறார்.

பறவை மரணம்

எதிர்க்கரை புலப்படாத வகையில் தளும்பிய நீரோடு பெருக்கெடுத்த “பத்மா” ஆறு ஒரு புறமாகப் புரண்டதால் சாய்ந்து, சரிந்த மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த சிறுபறவை கீழே விழுந்தது, ஆற்றில் வெற்று உடலாக மிதந்து வந்ததாகத் தாகூர் குறிப்பிடுகிறார். சிறு பறவையின் அழகு, கூட்டின் அழகு, உழைப்பின் சிறப்பு, ஓய்வு எடுக்கும் நிலை ஆகியவற்றை அந்தப் பறவையின் வரலாறாகச் சுட்டி, அந்த மரணத்தில் முடிக்கிறார்.

தம் சிந்தனைக்கான காரணம்

மனிதன் தன் சுகத்திற்குமுன், பிற உயிர்களின் சுகதுக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார். மற்றப் பிராணிகளை அற்பமாக நினைப்பதையும் காட்டுகிறார். பிற உயிர்களிடம் கருணை காட்டுவதை, நடக்க முடியாத அதிசயமாக நம் சரித்திரம் விட்டுவிடவில்லை. அதனால் ஒரு பறைவயின் சின்னஞ்சிறு வாழக்கைக் களிப்பு, எத்துணை அளவு இருக்கும் என்பதைத் தம்மால் சிந்திக்க முடிவதாகத் தாகூர் கூறுகிறார்.

அலட்சிய மனப்பான்மை:-

மரங்களில் மலரும் பூக்கள் பல, நம் நாட்டில் உள்ளன. அவற்றின் அனைத்துப் பெயர்களையும், மனிதன் அறிந்திருக்கவில்லை. இலக்கியங்களில் கூறப்பட்ட பல மலர்களின் பெயர்களை மட்டுமே அறிவோம். அவை, எவை எனத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. சில மலர்களின் பெயர்களை அறிவோம். ஆனால், ஆப்பெயருக்குரிய மமலர் எது என அறியோம். பறவைகள், மரங்கள், பூக்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவோர், ஆறுககளை மட்டும் நினைவில் கொள்கின்றனர்.

தோல்விகளுக்குக் காரணம்

நாகரிக வாழ்க்கையில் சீக்கிரம் வாடும் மலர்களுடன் மனிதனுக்குத் தொடர்பு உண்டு. நம் மனம் ஸ்தூலப் (போகப்) பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல் திகைத்து நின்று விடுகிறது. இதனைத் “தாமஸிகம்” என்பர். அதாவது “மெடீரியலிஸம்” உலகில் எத்தனையோ நேர்த்தியான புட்கள் (பறவைகள்) உள்ளன. அவற்றின் பெயர்களை அறியோம். இயற்கையிடம் அலட்சிய மனப்பான்மை வளர்வதே, நம் தோல்விகளுக்குக் காரணம். இயற்கையை அலட்சியப்படுத்தாமல், இயற்கையோடு இணைந்து வாழவும், இயற்கையே நேசித்து வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் வாழ்வில் உயரலாம் என்னும் கருத்துகளை எல்லாம் உணர்த்துவனவாகத் தாகூரின் கடிதங்கள் உள்ளன.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “தாகூரின் கடிதங்கள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. 1913ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்

  1. இரவீந்திரநாத தாகூர்
  2. த.நா.குமாரசுவாமி
  3. தேவந்திரநாத தாகூர்
  4. பூபேந்திரநாத தாகூர்

விடை : இரவீந்திரநாத தாகூர்

2. தாகூரின் கடிதங்கள் ____________ என்பர்

  1. கற்பனையானவை
  2. நகைச்சுவையானவை
  3. அறிவுரை வழங்குபவை
  4. கவித்துவ இயல்பு கொண்டவை

விடை : கவித்துவ இயல்பு கொண்டவை

3. ____________ ஆல் மனம் வருந்திய தாகூர், ஆங்கில அரசை கண்டித்து அவர்கள் வழங்கிய தாகூர் பட்டத்தை திருப்பி அளித்தார்

  1. ஒத்துழையாமை இயக்கம்
  2. ஜாலியன் வாலாபாக் படுகொலை
  3. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  4. கருப்புச் சட்டை இயக்கம்

விடை : ஜாலியன் வாலாபாக் படுகொலை

4. பாரம்பரயத்தின் வேரூன்றிய மனிதர், கிழக்கையும், மேற்கையும் இணைத்த தீர்க்கத்தரசி என்று குறிப்பிடப்படுபவர்

  1. இரவீந்திரநாத தாகூர்
  2. த.நா.குமாரசுவாமி
  3. தேவந்திரநாத தாகூர்
  4. பூபேந்திரநாத தாகூர்

விடை : இரவீந்திரநாத தாகூர்

5. தாகூர் நிறுவிய பல்கலைக்கழகம் ____________

  1. கல்கத்தா பல்கலைக்கழகம்
  2. சாந்திநிகேதன் பல்கலைக்கழகம்
  3. விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
  4. வங்க பல்கலைக்கழகம்

விடை : விஸ்வபாரதி பல்கலைக்கழகம்

6. குருதேவ் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்  

  1. த.நா.குமாரசுவாமி
  2. தேவந்திரநாத தாகூர்
  3. இரவீந்திரநாத தாகூர்
  4. பூபேந்திரநாத தாகூர்

விடை : இரவீந்திரநாத தாகூர்

7. த.நா. குமாரசுவாமிக்கு வங்க அரசு செய்த சிறப்பு ____________

  1. தாகூர் இலக்கிய விருது
  2. நேரு இலக்கிய விருது
  3. நேதாஜி இலக்கிய விருது
  4. ஜோதிபாசு இலக்கிய விருது

விடை : நேதாஜி இலக்கிய விருது

8. பத்மா என்பது ____________

  1. கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி
  2. இறந்துபோன பறவையின் பெயர்
  3. பெள – கதா – கேவா என்னும் புறா இனம்
  4. ஒரு வகையின் மலரின் பெயர்

விடை : கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி

9. தாமஸிகம் என்பது ____________

  1. ஒருவகைப் பறவை
  2. ஒரு புறா இனம்
  3. மெடீரியலிஸம்
  4. ஒரு நதி

விடை : மெடீரியலிஸம்

10. விருப்புடைவள் என்பதைக் குறிக்கும் சொல் ____________

  1. ஸேவுந்தி
  2. இச்சாமதி
  3. கபோதாக்ஷி
  4. மயூராக்ஷி

விடை : இச்சாமதி

11. பெள  – கதா – கவோ என்பது ____________

  1. ஒரு புறா இனம்
  2. ஒரு வகை மலர்
  3. ஒரு நதி
  4. மைனா

விடை : ஒரு புறா இனம்

12. சாந்தி நிகேதனத்திலுள்ள காவியப் புகழ்பெற்ற மரம் ____________

  1. ஸேவுந்தி
  2. தாமஸிகம்
  3. பெள-கதா-கவோ
  4. பியால

விடை : பியால

குறு வினா

1. ஒரு பறவையின் வாழ்க்கை பற்றித் தம்மால் எதனால் சிந்திக்காமல் இருக்க முடிவதில்லை எனத் தாகூர் கூறுகிறார்?

ஒரு பறவையின் சின்னஞ்சிறு இதயத்துக்குள்ளும் வாழ்க்கையின் களிப்பு. எத்துணை அதிகமா இருக்கு என்பது பற்றி தம்மால் சிந்திக்காமல் இருக்க முடிவதில்லை எனத் தாகூர் குறிப்பிடுகிறார்.

2. அலட்சிய மனப்பான்மை குறித்து தாகூர் கூறியுள்ளதென்ன?

நம் தோல்விகள் அனைத்திற்கும் மூலகாரணம், இயற்கையிடம் நாம் காட்டும் அலட்சிய மனப்பான்மை தான். இந்தச் சுபாவம் காரணமாகத்தான், நம் அலட்சிய மனப்பான்மை நாட்டு மக்களிடமும்தீவிரமாகத் தலை தூக்குகிறது எனத் தாகூர், அலட்சிய மனப்பான்மை குறித்து கூறுகிறார்

3. விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தை நிறுவியர் யார்?

விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தை நிறுவியர் தாகூர்

3. விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தை ஏன் தாகூர் நிறுவினார்?

  • குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும்.
  • தங்கள் வேலைகளைத் தாங்களே கவனித்துக் கொண்டு, மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தைத் தாகூர் நிறுவினார்.

Leave a Comment