Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.5 Ainkurunooru Book Back Solution

இயல் 2.5 – ஐங்குறுநூறு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 2.5 ‘Ainkurunooru’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 2.5 ஐங்குறுநூறு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 2.5 Ainkurunooru Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

ஐங்குறுநூறு வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Ainkurunooru’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: திருமலை முருகன் பள்ளு காவியம்

நூல் வெளி

  • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
  • இது மூன்றடிச் சிற்றெல்லையும், ஆறடி பேரெல்லையும் கொண்டது.
  • அகவற்பாக்களால் ஆன நூல்.
  • திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது.
  • ஐந்திணை பாடிய புலவர்கள் : குறிஞ்சி – கபிலர், முல்லை – பேயனார், மருதம் – ஓரம்போகியார், நெய்தல் – அம்மூவனார், பாலை – ஓதலாந்தையார்
  • ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
  • இதனை தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
  • பேயனார் சங்ககாலப் புலர்களின் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.

சொல்லும் பொருளும்

  • காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தளவம், பிடவம் – மழைக்கால மர்கள்
  • போது – மொட்டு
  • அலர்ந்து – மலர்ந்து
  • கவினி – அழகுற

இலக்கணக் குறிப்பு

  • ஆல் – அசைநிலை
  • கண்ணி – அண்மை விளிச்சொல்
  • ஆடுகம் – தன்மைப் பன்னமை வினைமுற்று

பகுபத உறுப்பிலக்கணம்

அலர்ந்து  பகுபத உறுப்பிலக்கணம் தருக

அலர்ந்து =  அலர் + த் (ந்) + த் + உ

  • அலர் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ –  வினையெச்ச விகுதி

சிறு வினா

ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள் அட்டவணைப்படுத்துக

ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை

  • திணை – முல்லை
  • முதற்பொருள் – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
  • நிலம் – காடும் காடு சார்ந்த இடமும்
  • பெரும்பொழுது – கார்காலம்
  • சிறுபொழுது – மாலை

கருப்பொருள்

  • தெய்வம் – திருமால் (மாயோன்)
  • மக்கள் – குறும்பொறை, நாடான், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
  • பறவை – காட்டுக்கோழி
  • விலங்கு – முயல், மான்
  • ஊர் – பாடி
  • மரம் – முல்லை, தோன்றி, கொன்றை, காயா, குருத்தம்
  • நீர் – குறுஞ்சுனை, கானாறு
  • உணவு – வரகு, சாமை, முதிரை
  • பறை – ஏறுகோட்பறை
  • யாழ் – முல்லையாழ்
  • பண் – சாதரிப்பண்
  • தொழில் – சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், நெல் அரிதல், ஏறுதழுவுதல், ஆநிரை மேய்த்தல்

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “ஐங்குறுநூறு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

இலக்கணக்குறிப்பு

  • கொண்டன்றால் (ஆல்) – அசைநிலை
  • பேரமார் கண்ணி – அண்மை விளி (அழைத்தல்)
  • ஆடுகளம் விரைந்தே – தன்மை பன்மை வினைமுற்று
  • காயா கொன்றை நெய்தல் முல்லை – உம்மைத்தொகை
  • போதவிழ் தளவொடு – வினைதொகை
  • அலர்ந்து கவினி, விரைந்து – வினையெச்சங்கள்

 பகுபத உறுப்பிலக்கணம்

1. ஆடுகம் = ஆடு + க் + அம்

  • ஆடு – பகுதி
  • க் – சந்தி
  • அம் –  தன்மை பன்னமை வினையெச்ச விகுதி

2. விரைந்து = விரை + த் (ந்) + த் + உ

  • விரை – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ –  வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

1. போதவிழ் = போது + அவிழ்

  • “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி போத் + அவிழ் என்றாயிற்று
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி போதவிழ் என்றாயிற்று.

2. பிடவலர்ந்து = பிடவு + அலர்ந்து

  • “முற்றும் அற்று ஒரேவழி” என்ற விதிப்படி பிடவ் + அலர்ந்து என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பிடவலர்ந்து என்றாயிற்று.

3. பூவணி = பூ + அணி

  • “ஏனைய உயிர்வரின் வவ்வும்” என்ற விதிப்படி பூ + வ் + அணி என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பூவணி என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. இல்லறத்தில் சிறக்க வேண்டியவை

  1. அன்பும் அறனும்
  2. பகையும் நட்பும்
  3. விருப்பும் வெறுப்பும்
  4. அழுகையும் நகைப்பும்

விடை : அன்பும் அறனும்

2. முல்லைத்திணை பாடுவதில் வல்லவராக திகழ்பவர்

  1. பேயனார்
  2. ஓரம்போகியார்
  3. கபிலர்
  4. அம்மூவனார்

விடை : பேயனார்

3. ஐங்குறுநூறு என்னும் சொல்லினை பிரித்தெழுதக் கிடைப்பது

  1. ஐங் + குறுநூறு
  2. ஐந்து + குறுநூறு
  3. ஐங்குறுமை + நூறு
  4. ஐந்து + குறுமை + நூறு

விடை : ஐந்து + குறுமை + நூறு

4. ஐங்குறுநூறற்றின் அடிவரையறை

  1. 13 – 31
  2. 9 – 12
  3. 3 – 6
  4. 4 – 8

விடை : 3 – 6

5. ஓதலாந்தையார் பாடிய திணை

  1. குறிஞ்சி
  2. மருதம்
  3. பாலை
  4. நெய்தல்

விடை : பாலை

6. ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை  ____________ பாடியுள்ளார்

  1. பேயனார்
  2. கபிலர்
  3. பெருந்தேவனார்
  4. அம்மூவனார்

விடை : பெருந்தேவனார்

7. ஐங்குறுநூறை __________ தொகுத்துள்ளார்

  1. பேயனார்
  2. புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
  3. கபிலர்
  4. அம்மூவனார்

விடை : புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்

8. ஐங்குறுநூறை தொகுப்பித்தவர்

  1. மாந்தரஞ் சேரலிரும்பொறை
  2. புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
  3. பாண்டியன் பெருவழுதி
  4. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

விடை : மாந்தரஞ்சோல் இளம்பொறை

9. தவறான இணையக் கூறுக

  1. குறிஞ்சி  – கபிலர்
  2. முல்லை – பேயனார்
  3. மருதம் – ஓதலாந்தையார்
  4. நெய்தல் – அம்மூவனார்

விடை : மருதம் – ஓதலாந்தையார்

10. சங்ககால புலவர்களில் ஒருவர்

  1. சேக்கிழார்
  2. கணிதமேதாவியார்
  3. பேயனார்
  4. பூதஞ்சேந்தனார்

விடை : பேயனார்

11. சங்க கால இலக்கியத்தில் பேயனார் பாடியுள்ள பாடல்களின் எண்ணிக்கை

  1. 100
  2. 102
  3. 105
  4. 107

விடை : 105

12. போது என்னும் சொல்லின் பொருள்

  1. மலர்
  2. காம்பு
  3. இலை
  4. மொட்டு

விடை : மொட்டு

குறு வினா

1. முல்லைத் திணைக்குரிய பொழுதுகள் கூறுக

  • பெரும்பொழுது – கார்காலம்
  • சிறுபொழுது – மாலை

2. ஐங்குறுநூற்றில் ஐந்திணைகளை பாடிய புலவர்களை கூறுக.

  • குறிஞ்சி – கபிலர்
  • முல்லை – பேயனார்
  • மருதம் – ஓரம்போகியார்
  • நெய்தல் – அம்மூவனார்
  • பாலை – ஓதலாந்தையார்

3. பேயனார் குறிப்பு வரைக

  • இவர் சங்ககாலப் புலர்களின் ஒருவர்
  • ஐங்குறுநூறு பாடலில் முல்லைத் திணை பாடியவர்
  • இவர் எழுதிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.

சிறு வினா

ஐங்குறுநூறு நூற்குறிப்பு எழுதுக

  • ஐங்குறுநூறு = ஐந்து + குறுமை + நூறு
  • அடி எல்லை: 3 – 6
  • பா: அகவற்பா
  • பாடல் எண்ணிக்கை: 500 பாடல்கள (திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள்)
  • கடவுள் வாழ்த்து: பாரதம் பாடிய பெருந்தேவரனார்
  • தொகுத்தவர்: புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
  • தொகுப்பித்தவர்: யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
  • குறிஞ்சி  – கபிலர், முல்லை – பேயனார், மருதம் – ஓரம்போகியார், நெய்தல் – அம்மூவனார், பாலை – ஓதலாந்தையார்

Leave a Comment