Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 Kaatril Kalantha Peraasai Book Back Solution

இயல் 7.1 – காற்றில் கலந்த பேராேசை

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 7.1 ‘Kaatril Kalantha Peraasai’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 7.1 காற்றில் கலந்த பேராேசை

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 7.1 Kaatril Kalantha Peraasai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

காற்றில் கலந்த பேராேசை வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kaatril Kalantha Peraasai’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: இசைத்தமிழர் இருவர்

நூல்வெளி

  •  ஜீவா என்றழைக்கப்படும் ப.ஜீவானந்தம் தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிறகு சுயமரியாதை இயக்கப் போராளியாகவும் பொதுவுடைம இயக்கத் தலைவராகவும் செயல்பட்டார்.
  • சிறந்த தமிழ்ப் பற்றாளர்.
  • எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர்.
  • எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த ஜீவா, சிறந்த மேடை பேச்சாளர்
  • நாகர்கோவிலைச் சேர்ந்த சுந்தராமசாமி, நவீனத் தமிழ் எழுத்தாளர் ஒருவர்.
  • பசுவய்யா என்ற புனைப் பெயரில் கவிதைகள் எழுதியவர்
  • ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள் உள்ளிட்ட சிறுகதைகள் எழுதியிருப்பதுடன் ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகிய புதினங்களையும் எழுதியுள்ளார்.
  • செம்மீன், தோட்டியின் மகள் ஆகிய புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
  • பாடப்குதியாக உள்ள இக்கட்டுரை 1963-ல் தாமரை இதழின் ஜீவா பற்றிய சிறப்பு மலரில் வெளியானது.

பலவுள் தெரிக

ஜனப் பிரளயம் என்னும் வட மொழி சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?

  1. மக்கள் அலை
  2. உயிர் அலை
  3. மக்கள் வெள்ளம்
  4. மக்கள் அவை

விடை : மக்கள் வெள்ளம்

குறு வினா

நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல் என்னும் உவமையை ஜீவானந்ததம் வாழ்வுடன் ஒப்பிடுக

  • வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்து போல் என்னும் உவமை ஜீவானந்தத்தின் மேடைப் பேச்சின் சிறப்பை விளக்குகிறது. சில கருத்துகளை விரிவாகக் கூறிப் புரிய வைத்தால் போதும் என்பதே அவர் எண்ணம்.
  • எனவே, இரண்டு கைப்பிடி விசயத்துடன் மேடை ஏறுவார். வெடிமருந்துக்கு நெருப்பு வைத்ததும், பச்சை, மஞ்சள், சிவப்பு எனக் குடைகுடையாய் உதிர்வது போல, மாலை மாலையாய் இறங்கி வரும் கருத்து வண்ணஜாலம் அறிந்தவர் ஜீவா என்பதைத் தெளிவுப்படுத்த இவ்வுவமை கூறப்பட்பட்டுள்ளது.

சிறு வினா

ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தர ராமசாமி கூறுவன யாவை?

  • ஜீவாவின் பாணி, இரவர் பாணியோ, கற்று அறிந்ததோ அன்று! “பேச்சுக்கலை” என்பது ஜீவா பெற்ற வரம்!
  • மக்கள் தரத்தை அனுபவ அறிவை, பழக்க வழக்கஞ்களை, நம்பிக்கைகளைத் தெளிவாக அறிந்த ஒருவர் கூறவந்த செய்திகளைக் கலைநோக்கோடு அணுகி, கற்பனை கலந்த காலப்போக்கில் வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பேச்சுநடை, ஜீவாவின் பேச்சுநடை!
  • உழுது விதைத்தால் நல்ல அறுவடை காண முடியும் என்பதை உணர்ந்தவர் ஜீவா.

நெடு வினா

சுந்தர ராமசாமியின் காற்றில் கலந்த பேராசை என்னும் தலைப்பு ஜீவாவின் வாழ்க்கைக்கு எங்கனம் பொருந்தும் என்பதை விளக்குக

மக்கள் நம்பிக்கை

மக்கள் கூட்டத்தின் முன் நின்று அண்டம் முட்ட, நாற்றிசையும் அலை பரவச் சங்கநாமென முழங்கிய ஜீவாவின் மரணம், முத்திரை கொண்டதாகத்தான் இருக்கமென அனைவரும் நம்பினர். மேடையில் வாழ்ந்த மனிதன், வாழ்ந்த இடத்தில் தானே மறைந்திருக்க வேண்டுமென, மக்களின் பேதை மனம் எண்ணுகிறது. ஜீவா என்கிற தொண்டன், இறுதி மூச்சு நிற்பது வரை மேடையில் கர்ஜித்துக் காண்டு இருந்திருப்பான் என்பதில், அனைவருக்கும் அத்தனை நம்பிக்கை

மேடைப்பேச்சில் வண்ணஜாலம்

பேச்சு அவர் பெற்ற வரம். பேச்சுக்கலை குறித்து கூறும் புத்தக விதிகளை மறுத்து, தம் சொந்த பாணியில் கற்றதை வெளிப்படுத்தியவர். மக்களின் தரம், அறிவு பழக்க வழக்கம், நம்பிக்கைகளைப் புரிந்து விஷயத்தோடும், கலைநோக்கோடும் கற்பனை கலந்ததாக அவர் பேச்சுப்பாணி அமைந்தது. உழுது விதைத்து நல்ல அறுவடை காண விரும்பியவர் அவர். எனவே செய்திகளைக் குவியல் குவியலாக் கூறிக் குழப்பாமல், சில கூறிப் புரிய வைத்தவர்.

காற்றில் கலந்த பேரோசை

பேச்சுக்கலை அவர் காலடியில் விழுந்து கிடந்தது. இப்போது மேடையில் ஒரு நாற்காலி காலியாகிவிட்டது. அது இனிக் காலியாகவே கிடக்கும். ஆற்றில் விழுந்த கிளை, எதிர் நீச்சல் போட்டு கடவுளின் முன்னேற்பாடுகளைத் தகர்த்து எறிந்துவிட்டு, மலை உச்சிக்கு சென்று விட்டது. பேரோசை காற்றில் கலந்து விட்டது என்கிறார் சுந்தர ராமசாமி.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “காற்றில் கலந்த பேராேசை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. காற்றில் கலந்த பேரோசை என்பதன் ஆசிரியர்

  1. ஆத்மாநாம்
  2. சுந்தர ராமசாமி
  3. பிரபஞ்சன்
  4. பாரதி

விடை : சுந்தர ராமசாமி

2. சுந்தர ராமசாமி _________ சேர்ந்தவர்

  1. நாகர்கோவில்
  2. திருநெல்வேலி
  3. தூத்துக்குடி
  4. தென்காசி

விடை : நாகர்கோவில்

3. பசுவய்யா என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியவர்

  1. சுந்தர ராமசாமி
  2. ந.பிச்சமூர்த்தி
  3. முடியசரன்
  4. தமிழ்ஒளி

விடை : சுந்தர ராமசாமி

4. ஒரு புளியமரத்தின் கதை என்னும் நூலினை எழுதியவர்

  1. திரு.வி.கல்யாண சுந்தரனார்
  2. பாரதிதாசன்
  3. காந்தியடிகள்
  4. சுந்தர ராமசாமி

விடை : சுந்தர ராமசாமி

சிறு வினா

1. சுந்தர ராமசாமி எழுதிய நூல்கள் யாவை?

சிறுகதைகள்: ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள்

புதினங்கள்: ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

2. சுந்தரராமசாமியின் மொழிபெயர்ப்பு நூல்கள் யாவை?

  • செம்மீன், தோட்டியின் மகள்

3. சுந்தர ராமசாமி சிறு குறிப்பு வரைக

  • நாகர்கோவிலைச் சேர்ந்த சுந்தராமசாமி
  • புனைப்பெயர்: பசுவய்யா
  • சிறுகதைகள்: ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள்
  • புதினங்கள்: ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள். குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
  • மொழிபெயர்ப்பு: செம்மீன், தோட்டியின் மகள்

Leave a Comment