Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 Kalaisollakam Book Back Solution

இயல் 6.6 – கலைச்சொல்லாக்கம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 6.6 ‘Kalaisollakam’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 6.6 கலைச்சொல்லாக்கம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 6.6 Kalaisollakam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

கலைச்சொல்லாக்கம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kalaisollakam’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: இசைத்தமிழர் இருவர்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் ………………………

  1. மூதூர்
  2. வெற்றிடம்
  3. நல்லாடை
  4. பைந்தளிர்

விடை : நல்லாடை

குறு வினா

1. அயர்ந்து, எழுந்த பகுபத உறுப்பிலக்கணம் தருக

அயர்ந்து = அயர் + த்(ந்) + த் + உ

  • அயர் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

எழுந்த = எழு + த்(ந்) + த் + அ

  • எழு – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

2. தொடர் அமைத்து எழுதுக

1. அன்றொருநாள்

விடை : அன்றொருநாள் அழகிய பூவினை பார்த்தேன்

2. நிழலிருந்து

விடை : வெயில் வேளையில் நிழலிலிருந்து இளைப்பாறினேன்

சிறு வினா

கலைச்சொல்லாக்கத்திற்கும், அகராதிக்கும் உள்ள வேறுபாடு யாது?

காலத்திற்கு ஏற்ப வளரும் சில துறைகள் சார்ந்து, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழங்கும் பிறமொழிச் சொற்களுக்கு தமிழில், இணையான சொற்களை உருவாக்க வேண்டியுள்ளது. அவ்வாறு கலைச்சொல்லை உருவாக்கும் முறையில் முழு ஈடுபாடு காட்ட வேண்டும்.

பொருள் தெரியாத சொற்களுக்ககுப் பொருள் கூறுவது அகராதி. ஆனால், பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்கு தாய்மொழியல் வழக்கிலுள்ள சொற்களை அடையாளம் காட்டியும், தேவையான இடத்தில் புதிய சொற்களை உருவாக்கியும் தருவது கலைச்சொல்லாக்கம்.

நிறுத்தக்குறியீடுகள்

காற்புள்ளி ( , )

பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச்சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி வருதல் வேண்டும்.

  • அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப்பேறு நான்கு.
  • நாம் எழுதும்போது, பிழையற எழுத வேண்டும்.
  • இனியன் நன்கு படித்தான் ; அதனால், தேர்ச்சி பெற்றான்.
  • ஐயா; அம்மையீர்,
  • சிறியவன் பெரியவன், செல்வன் ஏழை.

அரைப்புள்ளி ( ; )

தொடர்நிலைத் தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி வருதல் வேண்டும்.

  • வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான் ; வீ டு திரும்பினான்.
  • சீர் – மாறுபாடு இல்லாதது; அளவு; இயல்பான தன்மை; ஒழுங்கு ; சமம் ; நேர்த்தி; அழகு; சீதனம்; செய்யுளின் உறுப்பு

முக்காற்புள்ளி ( : )

சிறுதலைப்பு, நூற்ப குதி எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் முக்காற்புள்ளி வருதல் வேண்டும்.

  • சார்பெழுத்து :
  • பத்துப்பாட்டு 2:246
  • எட்டுத்தொகை என்பன வருமாறு:

முற்றுப்புள்ளி ( . )

தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில் முற்றுப்புள்ளி வருதல் வேண்டும்.

  • உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
  • தலைமையாசிரியர், அரசு மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
  • தொல்.சொல்.58.
  • 18/02/2018.

வினாக்குறி ( ? )

ஒரு வினாத்தொடர், முற்றுத்தொடராகவும் நேர் கூற்றுத் தொடராகவும், இருப்பின் , இறுதியில் வினாக்குறி வருதல் வேண்டும்.

  • அது என்ன? (முற்று)
  • நீ வருகிறாயா? என்று கேட்டான். (நேர்கூற்றுத் தொடர்)

வியப்புக்குறி ( ! )

வியப்புக்குறி, வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பும் நேர் கூற்று வியப்புத்தொடர் இறுதியிலும் அடுக்குச் சொற்களின் பின்னும் வியப்புக்குறி வருதல் வேண்டும்.

  • எவ்வளவு உயரமானது!
  • என்னே தமிழின் பெருமை! என்றார் கவிஞர்
  • வா! வா! வா! போ! போ! போ!

விளிக்குறி ( ! )

அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் விளிக்குறி பயன்படுத்த வேண்டும். வியப்புக்குறியும் விளிக்குறியும் ஒரே அடையாளக்குறி உடையன.

  • அவையீர் !
  • அவைத்தலைவீர் !

மேற்கோள்குறி ( ‘ ‘ , “ “ )

ஒற்றை மேற்கோள்குறி, இரட்டை மேற்கோள்குறி என இருவகைப்படும்.

ஒற்றை மேற்கோள்குறி வரும் இடங்கள்

ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைப்பெயர், நூற்பெயர் குறிக்கும் இடம், பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் ஒற்றைக்குறி வருதல் வேண்டும்.

  • ‘ஏ‘ என்று ஏளனம் செய்தான்.
  • பேரறிஞர் அண்ணா ‘செவ்வாழை‘ என்னும் சிறுகதை எழுதினார்.
  • ‘கம்பனும் மில்டனும்’ என்னும் நூல் சிறந்த ஒப்பீட்டு நூல் ஆகும்.
  • ‘செவிச்செல்வம் சிறந்த செல்வம்‘ என்பர்.

இரட்டை மேற்கோள்குறி வரும் இடங்கள்

நேர்கூற்றுகளிலும் மேற்கோள்களிலும் இரட்டைக்குறி வருதல் வேண்டும்.

  • “நான் படிக்கிறேன்“ என்றான்.
  • “ஒழுக்கமுடைமை குடிமை“ என்றார்.

நிறுத்தக்குறிகள் எல்லாம் வெறும் அடையாளங்கள் அல்ல. அவையெல்லாம் பொருள்பொதிந்த அடிப்படையில் தோன்றியவை என்பதை மாணவர்கள் நன்குணர்ந்து அவற்றைப் பின்பற்றிப் பேசவும் எழுதவும் வேண்டும்.

இலக்கணத் தேர்ச்சி கொள்

1. கலைச்சொல்லாக்கம் பொருள் தருக

ஒரு மொழியில் காலத்திற்கேற்ப, துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்கள் கலைச்சொற்கள் எனப்படும்.

2. கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்குவதற்குரிய விதிமுறைகள் யாவை?

  • புதிதாக உருகவாக்கப்பெறும் கலைச்சொல் தமிழ்ச்சொல்லாக இருத்தல் வேண்டும்.
  • பொருள் பொருத்தமுடையதாகவும், செயலைக் குறிப்பதாகவும் அமைதல் வேண்டும்.
  • வடிவில் சிறியதாகவும், எளிமையானதாகவும் இருத்தல் வேண்டும்.
  • ஒசை நயமுடையதாகவும், தமிழ் இலக்கண மரபுக்கு உட்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
  • மொழியின் வேர்ச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு, பல சொற்களை மேலும் உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டதாகக் கலைச்சொற்களை உருவாக்கல் வேண்டும்.
  • இவ்விதிமுறைகளைக் கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்கும் முன் பின்பற்ற வேண்டும்.

3. பின்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச் சொற்களை எழுதுக?

Personality – ஆளுமை, வேறுபட்ட பண்பு Emotion – மனஉணர்ச்சி, மனக்கிளர்ச்சி
Plastic -நெகிழி Escalator – நகரும் மின்படி
Straw -நெகிழிக்குழல், உறிஞ்சுகுழல் Mass Drill – கூட்டு உடற்பயிற்சி
Horticulture – தோட்டக்கலை Despatch – நடுத்தரம், சராசரி அளவு
Apartment – அடுக்குமாடி, அடுக்ககம், தொகுப்புமனை

4. Ship என்னும் ஆங்கிலச் சொல்லின் பழந்தமிழ் இலக்கியப் பெயரைக் கூறுக

நாவாய், கலம்

5. உலக அளவில் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று வா.செ. குழந்தைசாமி கூறுகிறார்.

உலக அளவில் பயன்படுத்தப்படும் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் பயன்படுத்தும்போது, பழந்தமிழிலக்கிய சொல்லைத் தேரந்து பயன்படுத்துதல் (எ.கா. : வலவன் / Pilot)

பேச்சுமொழிச் சொல்லைப் பயன்படுத்துதல் (எ.கா. : அம்மை)

பிறமொழிச் சொல்லைப் கடன்பெறுதல் (எ.கா. : தசம முறை / Decimal)

புதுச்சொல் படைத்தல் (எ.கா. : மூலக்ககூறு / Molecule)

உலக வழக்கை அப்படியே ஏற்றுக் கொள்ளல் ( எ.கா. : எக்ஸ் கதிர் / X-Ray)

பிறமொழித்துறைச் சொற்களை மொழி பெயர்த்தல் (எ.கா. : ஒளிச்சேர்க்கை / Photosynthesis)

ஒலிபெயர்த்துப் பயன்படுத்துதல் (எ.கா. : மீட்டர் / Meter) (ஒளிச்சேர்க்கை / OM)

உலக அளவிலான குறியீடுகள் – சூத்திரங்கள் R√A = r, r2 H2O, Ca

அப்படியே ஏற்றல் என்னும் நெறிமுறையைக் கையாள வேண்டுமென்று வா.செ.குழந்தைசாமி கூறுகிறார்.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

நாடகத்தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்த சங்கரதாசு சுவாமிகள், நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், முதல்வராகாகவும் விளங்கினார். பெரும்புலவர்கள், சுவாமிகளின் பாடல் திறத்தையும், உரையாடல் தரத்தையும் உணர்ந்து நெஞ்சாரப் பாடியுள்ளளனர். இளமையில் புலவரேறு பழநி தண்டபாணி சுவாமிகளைத் தேடிச் சென்று, தமிழறிவைப் பெற்ற இவர் தம்முடை 16 ஆவது வயதிலேய கவியாற்றல் பெற்று, வெண்பா, கிலத்துறை, இசைப்பாடல்களை இயற்றத் தொடங்கி விட்டார். இரணியன், இராவணன், எமதருமன் ஆகிய வேடங்களில் நடித்துப் புகழடைந்தபோது அவருடைய வயது 24. வண்ணம், சந்தம் பாடுவதில் வல்லவராயிருந்த சுவாமிகள் “சந்தக்குழிப்புகளின் சொற்சிலம்பங்களைக் கண்டு அக்காலத்தில் மக்கள் வியப்புற்றனர்.

சங்கரதாஸ் சுவாமிகள் “சமரச சன்மார்க்க சபை” என்னும் நாடகக்குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவில் பயிற்சி பெற்ற எஸ்.ஜி.கிட்டப்பா நாடகத்துறையில் பெரும் புகழ் ஈட்டினார். நாடகமேடை, நாகரிகம் குன்றிய நிலையில் மதுரை வந்த சுவாமிகள் 1918-ல் “தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை” என்னும் நாடக அமைப்பை உருவாக்கி ஆசிரியர் பொறுப்பேற்றார். இங்கு உருவானவர்களே டி.கே.எஸ்.சகோதரர்கள். நாடகத்தின் மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும் தமிழின் பெருமையும் பண்பாட்டையும் தம் சுவைமிகுந்த பாடல், உரையாடல் வழியே உணர்த்திய சங்கரதாசு சுவாமிகளை நாடகத் துறைக் கலைஞர்கள் “தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்” என்று உளமகிழ்ந்து போற்றுகின்றன.

1. தமிழ்ச்சொல்லாக்கு – சன்மார்க்கம், வித்துவ பால சபை

  • சன்மார்க்கம் – நன்னெறி
  • வித்துவ பால சபை – கலை இளைஞர் மன்றம்

2. நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்தவர் சங்கரதாசு சுவாமிகள் – அடிக்கோடிட்ட வினையாலணையும் பெயரை வினைமுற்றாக்கித் தொடரை எழுதுக

நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் சங்கரதாசு சுவாமிகள் திகழ்ந்தார்.

3. ஈட்டினார் பகுபத உறுப்பிலக்கணம் தருக

ஈட்டினார் = ஈட்டு + இன் + ஆர்

  • ஈட்டு – பகுதி
  • இன் – இறந்தகால இடைநிலை
  • ஆர் – பலர்பால்வினைமுற்று விகுதி

4. தன்னன்ன தானேன தன்னானே இந்தச் சந்தத்தில் பொருள் பொதிந்த இரண்டு அடிகள் கொண்ட பாடல் எழுதுக

எ.கா.

இந்திய நாட்டினில் வாழ்வதையே
இன்பமாய்க் கருதிடல் வேண்டுமப்பா….
இனபமாய் என்றுமே வாழ்வதையே
இதயத்தில் இருந்திடல் வேண்டுமப்பா

5. தமிழ் நாடகத் தலைமையாசிரியர் சிறப்பு பெயருக்கான காரணத்தை அளிக்க

நாடகத்தில்ன மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும், தமிழின் பெருமையையும், பண்பாட்டையும், தம் சுவைமிகுந்த பாடல், உரையாடல் வழியே உணர்த்திய சங்கரதாசு சுவாமிகளை நாகத்துறைக் கலைஞர்கள் “தமிழ் நாடகத் தலைமையாசிரியர்” என்று உளமகிழ்ந்து போற்றுகின்றனர்.

தமிழாக்கம் தருக

The oldest documented forms of art are visual arts, which include creation of images or objects in fields including today painting, sculpture, printmaking, photography and other visual media. Music, theatre, film, dance, and other performing arts, as well as literature and other media such as interactive media, are included in a broader definition of art or the arts. Until the 17th century, art referred to any skill or mastery and was not differentiated from crafts or sciences. Art has had a great number of different functions throughout its history, making its purpose difficult to abstract or quantity to any single concept. This does not imply that the purpose of Art is “vague”, but that it has had many unique, different reasons for being created.

விடை:-

பண்டைய காலங்களில் கலையைப் பல்வேறு விதங்களில் காட்சிபடுத்தினர் அதை தற்காலத்தில் இருப்பது போல ஓவியங்களாகவும், சிலைகளாகவும், அச்சு வடிவிலும் மற்றுமு் நிழல் படங்களாகவும், இசை, நாடகம், திரைப்படம், நடனம், இலக்கியம் மற்றும் ஊடகங்களும் கலைகளில் அடங்கும். 17-ம் நூற்றாண்டு வரை கலை என்பது எந்தவொரு திறமையோ அல்லது நுட்பமோ அறிவியல் மற்றும் கைவினையில் இருந்து வேறுபடாமல் இருப்பது ஆகம். கலைக்கு வரலாற்றிடையே பல பரிமாணங்கள் உள்ளன. அதை எதுவென்று குறுகிற அளவில் இறுதியிட்டுக் காட்ட இயலாது. கலை என்பது ஏதோ ஒரு அர்த்தமற்ற பொருளாகக் கொள்ள முடியாது. அதற்கான தனித்தன்மையும் அது உருவானதற்கான காரணமும் இருக்குமும்.

தொடர் மாற்றம்

1. மூன்று நாள்கள் கல்லூரிக்கு விடுமுறை, மாணவர்கள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்குச் சென்றனர். சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர் (கலவைத் தொடராக மாற்றுக)

விடை : மூன்று நாள்கள் கல்லூரிக்கு விடுமுறையென்பதனால் மாணவர்கள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்குச் சென்று சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.

2. தஞ்சைக் கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப் பாணியாகும் (வினாத் தொடராக மாற்றுக)

விடை : தஞ்சைக் கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப் பாணியாலானதா?

3. என்னே! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக்கலை (செய்தித் தொடராக மாற்றுக)

விடை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக்கலை அழகானது.

4. நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்குச் செல்வேன் (வினாத் தொடராக மாற்றுக)

விடை : நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்குச் செல்லாமல் இரேன்.

மெய்ப்புத் திருத்துநர் பணிவேண்டி நாளிதழ் தன்மையாசிரியருக்குக் கீழ்க்காணும் விவரங்களுடன் தன்விவரக்குறிப்பு ஒன்று எழுதுக.

(பெயர், வயது, பாலினம், பிறந்த நாள், பெற்றோர், முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, அறிந்த மொழிகள், எடை, உயரம், குருதிவகை, கல்வித்தகுதி)

அனுப்புநர்:-

அ.சங்கரலிங்கம்
7/507, காந்திநகர் தெரு
வெங்கேடஸ்வரபுரம்
தென்காசி – 627 854

பெறுநர்:-

ஆசிரியர்
“தினமலர்” நாளிதழ்
தென்காசி – 627 811

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : மெய்ப்புத் திருத்துநர் பணி வேண்டி விண்ணப்பம்.

வணக்கம். நான் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழில் தட்டச்சு செய்வேன். பத்திரிக்கைகளின் மெய்ப்புத் திருத்தும் பணியையும் செய்த அனுபவம் உண்டு. பணி அளித்தால் சிறப்பாக செய்வேன் என உறுதி அளிக்கிறேன்.

நன்றி

உங்கள் உண்மையுள்ள
அ.சங்கரலிங்கம்

பெயர் அ.சங்கரலிங்கம்
வயது 24
பாலினம் ஆண்
பிறந்த நாள் 12.07.1998
பெற்றோர் அருணாசலம் – காளியம்மாள்
முகவரி 7/507, காந்திநகர் தெரு, வெங்கேடஸ்வரபுரம் தென்காசி – 627 854
அலைபேசி எண் 96770 74899
மின்னஞ்சல் முகவரி ralingam27@yahoo.in
அறிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம்
எடை 75 கிலோ
உயரம் 5′ 3″
குருதிவகை O+
கல்வித்தகுதி +2

இலக்கிய நயம் பாராட்டுக

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம்
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளைகள் விழித்து நோக்க,
தெண்திரை எழினி காட்ட, தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, மருதம் வீற் றிருக்கும் மாதோ

– கம்பர்

ஆசிரியர் குறிப்பு:-

“கல்வியில் பெரியவர் கம்பர்”, கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்னும் வழக்குகள், கம்பரின் கல்விப் பெருமையை விளக்கும். வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழ் மரபுக்கு ஏற்ற, இக்காப்பியத்தைப் பாடியுள்ளது சிறப்பாகும். இங்கு கம்பரின் பாடலொன்று, நயம் பாராட்டக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கம்பராமாயணத்திலிருந்து தேர்வு செய்ப்பட்டதாகும்.

நயம்:-

மருதநிலம் தலைவன்போல் கொலுவீற்றிருக்க, மயில் ஆடுமகளாகவும், தாமரை அரும்பு விளக்காகவும், மேக முழுக்கம் மத்தள ஒசையாகவும், குவளை மலர்கள் கண்விழிநத்து நோக்கும் மக்களாவும், வண்டுகளின் ரீங்காரம் மகர யாழிசையாகவும், தெளிந்த நீர்பரப்பு எழினியாகவும் உருவகம் செய்துள்ளார். கம்பரின் கற்பனை வளத்திற்கு இது மிகச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு

எதுகை நயம்:-

அடிதோறும் முதல்சீரில் முதலெழுத்து அளவு ஒத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வந்த – தண்டலை, கொண்டல்கண், தெண்திரை, வண்டுகள் – அடி எதுகைத் தொடை அமைந்துள்ளது.

பாடல் அடியின் சீர்களில் முதலெழுத்து ஒன்றி வந்து – தண்டலை, தாமரை, தாங்க – கொண்டல், குவளை, கண் – தெண்டிரை, தேம்பிழி – சீர்மோனை அமைந்துள்ளது

ஆட, தாங்க, ஏங்க, நோக்க, காட்ட, பாட என இனிய ஓசை தரும் சொற்கள் கையாளப்பட்டுள்ளன

அணி நயம்:-

மருதநிலக் காட்சி, இயல்பாக உள்ளது உள்ளபடி வருணித்துக்க கூறப்பட்டிரிருந்தாலும், புலவரின் கற்பனை இணைந்து, தற்குறிப்பேற்ற அணியை உள்ளடக்கியதாகவும் செய்யுள் திகழ்கிறது. உவமை, உருவகம், கற்பனை எனப் பலவும் நிறைந்த பாடலாக உள்ளது.

மொழியோடு விளையாடு

விடுபட்ட இடத்தில் அடுத்து வரவேண்டிய சொற்களை கண்டறிந்து எழுதுக

1. தனிமொழி – அறிவு; …………….. – வண்ணமயில்; பொதுமொழி – ……………..

விடை : தொடர்மொழி, பலகை (பலகை / பல கை)

2. கார்காலம் – …………….; குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை; – ……………… மார்கழி, தை

விடை : ஆவணி, புரட்டாசி; முன்பனிக்காலம்

3. எழுத்து, சொல், ……………. , யாப்பு, ……………… தொடை

விடை : பொருள், அணி

4. எழுத்து, ……………. , சீர், தளை, ……………… தொடை

விடை : அசை, அடி

5. சேரன் – வில்; சோழன் – ……………. ; ……………… – மீன்

விடை : புலி, பாண்டியன்

நிற்க அதற்குத் தக

கலைச்சொல் அறிவோம்

  • நுண்கலை – Fine Arts
  • ஆவணப்படம் – Documentary
  • கல்வெட்டு – Inscription / Epigraph
  • தானியக் கிடங்கு – Grain Warehouse
  • பேரழிவு – Disaster
  • தொன்மம் – Myth

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “கலைச்சொல்லாக்கம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. cellphone என்னும் ஆங்கிலச் சொல்லின் பயன்பாட்டில் பொருந்தாது.

  1. கைபேசி
  2. செல்லிடப்பேசி
  3. வலைபேசி
  4. அலைபேசி

விடை : வலைபேசி

2. CLINIC என்னும் ஆங்கிலச் சொல்லின் கலைச்சொல்லினை எழுதுக

  1. குருதிப்பிரிவு
  2. மருத்துவமனை
  3. மருந்தாளுநர்
  4. ஊடுகதிர்
  5. களிம்பு

விடை : மருத்துவமனை

3. விளக்கச்சுவடி என்ற கலைச்சொல்லின் ஆங்கிலச் சொல்

  1. OINTMENT
  2. PROSPECTUS
  3. ANSWER BOOK
  4. PHARMACIST

விடை : PROSPECTUS

4. பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவது

  1. அகராதி
  2. கலைச்சொல்
  3. இணையம்
  4. வலைப்பூ

விடை : அகராதி

5. மக்கள் பயன்பாட்டிற்குக் கலைச்சொற்களைக் கொண்டு சேர்க்கத் துணை நிற்பவை

  1. பொதுமக்களும் இதழ்களும்
  2. பள்ளிகளும் இதழ்களும்
  3. இதழ்களும் ஊடகங்களும்
  4. மாணர்வர்களும் ஊடகங்களும்

விடை : இதழ்களும் ஊடகங்களும்

4. தென் ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை கட்டுரையின் ஆசிரியர்

  1. கண்ணதாசன்
  2. பாரதிதாசன்
  3. பாரதியார்
  4. வாணிதாசன்

விடை : பாரதியார்

குறு வினா

1. கலைச்சொல் என்றால் என்ன?

ஒரு மொழியில் காலத்திற்கேற்ப, துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக, உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்களைக் கலைச்சொற்கள் என்கிறோம்.

2. அகராதியின் நோக்கம் யாது?

பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவதே அகராதியின் நோக்கம் ஆகும்.

3. கலைச்சொல் பயன்படும் துறைகள் சிலவற்றை கூறுக

வேளாண்மை, மருத்துவம், பொறியியல், தகவல் தொடர்பியல்

4. மருத்துவம் சார்ந்த சில கலைச்சொற்களை கூறுக

  • Clinic – மருத்துவமனை
  • Compounder – மருந்தாளுநர்
  • Typhoid – குடல் காய்ச்சல்
  • Blood Group – குருதிப்பிரிவு
  • X – ray – ஊடுகதிர்
  • Ointment – களிம்பு

3. கல்வித்துறை சார்ந்த சில கலைச்சொற்களை கூறுக

  • Note Book – எழுதுசுவடி
  • Rough Note book – பொதுக்குறிப்பு சுவடி
  • Answer Book – விடைச்சுவடி
  • Prospectus – விளக்கச் சுவடி

Leave a Comment