Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.2 Kavadisindhu Book Back Solution

இயல் 3.2 – காவடிசிந்து

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 3.2 ‘Kavadisindhu’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 3.2 காவடிசிந்து

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 3.2 Kavadisindhu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

காவடிசிந்து வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kavadisindhu’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு

நூல்வெளி

  • 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னிகுளம் அண்ணாமலையார், பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம்.
  • காவடிச்சிந்து பாடலுக்குரிய மெட்டுகள், அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டவை ஆகும்.
  • தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதால் “காவடிசிந்தின் தந்தை” எனப் போற்றப் பெற்றார்.
  • 18-ம் வயதில் ஊற்றுமலைக் குறுநிலத் தலைவரான “இருதயாலய மருதப்பத்தேவர்” அரசவைப் புலவராக இருந்தார்
  • இவர் இந்நநூலைத் தவிர வீரைத் தலபுராணம், வீரைநவநீத கிருஷ்ணசாமிப் பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக் கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்

சொல்லும் பொருளும்

  • ஜகம் – உலகம்
  • புயம் – தோள்
  • வரை – மலை
  • வன்னம் – அழகு
  • கழுகாசல் – கழுகு மலை
  • த்வஜஸ்தம்பம் – கொடி மரம்
  • சலராசி – கடலில் வாழும் மீன் முதலிய உயிர்கள்
  • விலாசம் – அழகு
  • நூபுரம் – சிலம்பு
  • மாசுணம் – பாம்பு
  • இஞ்சி – மதில்
  • புயல் – மேகம்
  • கறங்கும் – சுழலும்

இலக்கணக்குறிப்பு

  • தாவி – வினையெச்சம்
  • மாதே – விளி

பகுபத உறுப்பிலக்கணம்

வருகின்ற = வா (வரு) + கின்று + அ

  • வா – பகுதி
  • வரு – வா – வரு எனத் திரிந்தது விகாரம்
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • அ –  வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

திருப்புகழ் = திரு + புகழ்

  • “இயல்பினம் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி திருப்புகழ் என்றாயிற்று.

உயர்ந்தோங்கும் = உயர்ந்து + ஓங்கும்

  • “உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்” என்ற விதிப்படி உயர்ந்த் + ஓங்கும் என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி கரையெல்லாம் என்றாயிற்று.

பலவுள் தெரிக

காவடிச் சிந்துக்குத் தந்தை என்று அழைக்கப்படுவர் யார்?

  1. பாரதிதாசன்
  2. அண்ணாமலையார்
  3. முருகன்
  4. பாரதியார்

விடை : அண்ணாமலையார்

குறு வினா

காவடிச்சிந்து என்பது யாது?

தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே “காவடிச்சிந்து எனப்படும்.

சிறு வினா

தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து என்பதை விளக்குக

  • காவடி என்பது தமிழ்ப்பண்பாடுக் கூறுகளுள் ஒன்று. உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ்மக்கள், குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகனின் கோவிலை நோக்கி வழிபடச் செல்வர்
  • அப்போது முருகப்பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருளகளைக் காவடிகளில் கொண்டு செல்வர். அப்படிச் செல்லும்போது வழிநடைக் களைப்புப் போக, முருகப் பெருமானின் புகழைச் சிந்துவகைப் பாடலாகப் பாடுவர்.

நெடு வினா

காவடிச்சிந்து ஒரு வழிநடைப்பாடல் – இக்கூற்றை அண்ணாமலையாரின் பாடல்வழி மதிப்பீடு செய்க

முருக வழிபாடு

குன்றுதோறும் கோவில் கொண்டிருக்கும் தமிழ்கடவுள் முருகன். அந்த முருகப்பெருமானை வழிபடச் செல்வோர் பால் முதலான வழிபாட்டு பொருள்களைக் காவடிகளில் வைத்துத் தோள்களில் சுமந்து செல்வர். இது தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகள் ஒன்றாகும்

காவடி எடுத்தல்

காவடி எடுத்துச் செல்வதைச் சுமையாகக் கருதாமல், சுகமாக எண்ணி, வழிநடையில் மணிகளை ஒலித்துக்கொண்டும், பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் பாதசாரிகள் செல்வர். இது, தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் “நாட்டார் வழக்கியல்” என்னும் இசைமரபோடு கூடியதாக அமைந்துள்ளது.

முருகன் பெருமை

காவடிச்சிந்தின் தந்தை எனப்போற்றப்படுபவர் சென்னிகுளம் அண்ணாமலையார். இவர் பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ் தந்த தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும்.

கழுகுமலை முருகனை வழிபடக் காவடி எடுத்துவரும் அடியவர்கள் பாடும் பாடல் முழக்கம், வானுலகத்திலுள்ள தேவர்களின் செவியைச் சென்றடையும் என்கிறார். அண்ணாமலையார் சிந்தில் கழுகுமலை முருகன் சிறப்புகள், அருள்புரியும் திறம், பக்தர்கள் வழிபடும் முறை எனப் பலவும் சிறப்பித்துக் கூறப்பெற்றள்ளன.

வழிநடைக் களைப்பின்றி, முருகன் அருள்பெற நல்வழி காட்டுவதற்காக, அண்ணாமலையார் காவடிசிந்து அமைந்துள்ளத. பயணக் களைப்பைப் போக்குவதோடு, வழி இடையே விலங்குகளின் தொல்லைகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளக் காவடிச்சிந்து

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “காவடிசிந்து” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே _____________ எனலாம்.

  1. இறை வழிபாடு
  2. காவடிச்சிந்து
  3. நாடகங்கள்
  4. இசை வழிபாடு

விடை : காவடிச்சிந்து

2. கழுகுமலைத் தலைவன் 

  1. மாயோன்
  2. முருகன்
  3. ஈசன்
  4. பிரம்மன்

விடை : முருகன்

3. அண்ணாமலையார் காவடிச்சிந்துக்கு மெட்டுகள் அமைத்தவர்

  1. அருணகிரியார்
  2. உமறுப்புலவர்
  3. பாரதியார்
  4. அண்ணாமலையார்

விடை : அண்ணாமலையார்

4. ஊற்றுமலை இருதயாலய மருதப்பத் தேவரின் அவைப்புலவராக விளங்கியவர்

  1. அருணகிரியார்
  2. உமறுப்புலவர்
  3. பாரதியார்
  4. அண்ணாமலையார்

விடை : அண்ணாமலையார்

5. காவடிச் சிந்துக்குத் தந்தை எனப் போற்றப்படுபவர்

  1. அருணகிரியார்
  2. அண்ணாமலையார்
  3. உமறுப்புலவர்
  4. பாரதியார்

விடை : அண்ணாமலையார்

6. காவடிஎடுக்கும் அடியார் பாடிய திருப்புகழ் முழக்கம் ____________ செவியை அடைகிறது.

  1. தேவர்களின்
  2. அசுரர்களின்
  3. மக்களின்
  4. அரசரின்

விடை : தேவர்களின்

7. தேவர் என்ற சொல்லினை குறிக்கும் சொல்

  1. நாபுரம்
  2. இஞ்சி
  3. உம்பர்
  4. சலராசி

விடை : உம்பர்

8. மதில் என்ற சொல்லினை குறிக்கும் சொல்

  1. அஞ்சி
  2. கஞ்சி
  3. வஞ்சி
  4. இஞ்சி

விடை : இஞ்சி

9. காவடிச்சிந்தின் பாட்டுடைத் தலைவன்

  1. சுவாமிமலை முருகன்
  2. திருச்செந்நூர் முருகன்
  3. கழுகுமலை முருகன்
  4. பழநிமலை முருகன்

விடை : கழுகுமலை முருகன்

10. கருவை மும்மணிக்கோவை என்னும் நூலின் ஆசிரியர்

  1. அருணகிரியார்
  2. அண்ணாமலையார்
  3. உமறுப்புலவர்
  4. பாரதியார்

விடை : அண்ணாமலையார்

11. அண்ணாமலையார் எழுதிய நூல்களில் பொருந்தாதது

  1. வீரைத் தலபுராணம்
  2. சங்கரன்கோவில் திரிபந்தாதி
  3. கருவை மும்மணிக்கோவை
  4. கோமதி புராணம்

விடை : கோமதி புராணம்

12. சென்னிகுளம் ______________ என்னும் ஊரில் பிறந்தவர் 

  1. அருணகிரியார்
  2. அண்ணாமலையார்
  3. உமறுப்புலவர்
  4. பாரதியார்

விடை : அண்ணாமலையார்

13. கழுகாசலம் என்ற சொல்லை குறிக்கும் பொருள்

  1. திருமால்
  2. கழுகு மலை
  3. கழுகு
  4. ஹனுமன்

விடை : கழுகு மலை

14. அண்ணாமலையார் காவடிச்சிந்து எழுத ____________  நூல் காரணமாக இருந்துள்ளது.

  1. வீரைத்தலபுராணம்
  2. மும்மணிக்கோவை
  3. திருவருட்பா
  4. திருப்புகழ்

விடை : திருப்புகழ்

15. தேவர்கள் வாழும் ஊர்

  1. நாகப்பட்டினம்
  2. அமராவதிப்பட்டிணம்
  3. சென்னிகுளம்
  4. சங்கரன்கோவில்

விடை : அமராவதிப்பட்டிணம்

16. மாதே இலக்கணக்குறிப்பு தருக

  1. வினையெச்சம்
  2. விளி
  3. பெயரெச்சம்
  4. முற்றுமை

விடை : விளி

குறு வினா

1. கழுகுமலை முருகன் கோவில் அமைப்பின் சிறப்புகளாக அண்ணாமலையார் கூற்றினை எழுதுக

கடலில் வாழும் மீன், மகரம் போன்ற உருவ அமைப்புக் கொண்ட கொடிகள் எல்லாம் சிறக்க கழுகுமலை முருகன் கோவில் திகழ்வதாக அண்ணாமலை கூறுகிறார்.

2. முருகனின் அருள்பெற்று அடியார்கள் அடையும் இன்பத்தினை கூறுக

காவடியைச் தோளில் தூக்கிக் கொண்டு, கனலில் உருகிய மெழுகென முருகனை நோக்கிப் பக்தியோடு பாடி ஆடி வரும் அன்பர்கள் அனைவரும் முருகனின் அருளைப் பெற்று இன்பம் அடைவர்

3. அண்ணாமலையார் சிறு குறிப்பு வரைக

  • சென்னிகுளம் என்ற ஊரில் பிறந்தவர்.
  • தம் 18-ம் வயதில் ஊற்றுமலைக் குறுநிலத் தலைவரான “இருதயாலய மருதப்பத்தேவர்” அரசவைப் புலவராக இருந்தார்
  • திருப்புகழின் தாக்கத்தால் காவடிச்சிந்தினை எழுதியுள்ளார்.
  • காவடிச்சிந்து பாடலுக்குரிய மெட்டுகள் அவரே அமைத்ததால் “காவடிசிந்தின் தந்தை” என அழைக்கப்பட்டார்
  • வீரைத் தலபுராணம், வீரைநவநீத கிருஷ்ணசாமிப் பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக் கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்

Leave a Comment