Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.3 Kurunthogai Book Back Solution

இயல் 3.3 – குறுந்தொகை

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 3.3 ‘Kurunthogai’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 3.3 குறுந்தொகை

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 3.3 Kurunthogai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

குறுந்தொகை வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kurunthogai’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: காவடிசிந்து

நூல்வெளி

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்னு
  • கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணைச் சார்ந்த 401 பாடல்களை கொண்டது.
  • “நல்ல குறுந்தொகை” என சிறபித்து உரைக்கப்படுகிறது
  • உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல். ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கபட்ட தொகை நூலாக கருதப்படுகிறது.
  • இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
  • வெள்ளிவீதியார் சங்காலப் பெண் புலவர்களுள் ஒருவர்.
  • சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.

சொல்லும் பொருளும்

  • சிதவல் – தலைப்பாகை
  • தண்டு – ஊன்றுகோல்

இலக்கணக்குறிப்பு

  • பிறந்தோர்- வினையாலணையும் பெயர்
  • நன்றுநன்று – அடுக்குத்தொடர்

பகுபத உறுப்பிலக்கணம்

பிரிந்தோர் = பிரி + த்(ந்) +த் + ஓர்

  • பிரி – பகுதி
  • த் – சந்தி
  • ந்- ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஓர் –  பலர்பால் வினைமுற்று விகுதி

புணர்ச்சி விதிகள்

தண்டுடை = தண்டு + உடை

  • “உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்” என்ற விதிப்படி தண்ட் + உடை என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி தண்டுடை  என்றாயிற்று.

குறு வினா

குறுந்தொகை குறிந்து நீங்கள் அறியும் செய்தி யாது?

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்னு
  • அகத்திணைச் சார்ந்த 401 பாடல்களை கொண்டது.
  • “நல்ல குறுந்தொகை” என சிறபித்து உரைக்கப்படுகிறது
  • உரையாசிரியர்கள் பலரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
  • இந்நூலே முதலில் தொகுக்கபட்ட தொகை நூலாக கருதப்படுகிறது.
  • இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

சிறு வினா

சங்ககாலத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வு வெள்ளவீதியார் பாடலில் காட்சிப்படுத்தப்பட்டள்ளது. இச்சங்ககாலச் சமூக நிகழ்வுகள் எழுத்தில் காட்சிபடுத்துப்படுள்ளமையை ஒப்பிட்டு விளக்குக

  • சங்ககாலத் தமிழகத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வுகளுள் ஒன்றான திருமணத்திற்கு, மணமகன் முதியர்வர்கள் மூலம் தலைவியின் இல்லத்திற்குப் பரிசுப்பொருள்களை அனுப்பித் திருமணத்தை உறுதி செய்ததை, வெள்ளிவீதியார் பாடலால் அறிய முடிகிறது.
  • அதாவது, அக்காலத்தில் பெண்ணுக்க, மணமகன் பொன்பொருள் அளித்த மணந்தமை புலப்படுகிறது. ஆனால், இக்காலத்தில் இதே சமூக நிகழ்வு, மணம் பேசுதல் எப்படி நடைபெறுகிறது என்பதைக் கவிதைகளும் சிறுகதைகளும் நாவல்களும் சுட்டிக் காட்டுகின்றன.
  • பெண்ணை மணப்பதற்கு மணமகனுக்கு மணக்கொடை அளித்தால்தான் திருமண நிச்சயம் நடைபெறும் என்ற இழிநிலை காணப்படுகிறது.
  • பொன் கொடுத்துப் பெண் கொண்டதைப் பெருமையாகக் கருதிய அதே தமிகத்தில் தான் இன்று, “பொன் கொடுத்தால்தான் பெண் கொள்வேன்” என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
  • எனினும் எங்கோ சில இடங்களில் வரதட்சணை பெறாமல் மணம்புரியும் நிகழ்வும் நடைபெறுகிறது.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “குறுந்தொகை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. தண்டு என்பதன் பொருள்

  1. நூற்கண்டு
  2. ஊன்றுகோல்
  3. துலாக்கோல்
  4. மணிக்கூண்டும

விடை : ஊன்றுகோல்

2. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து நீங்கலாக ___________ பாடல்களை கொண்டது.

  1. 100
  2. 143
  3. 401
  4. 101

விடை : 401

3. உரையாசிரியர்கள்  பலராறும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்

  1. புறநானூறு
  2. அகநானூறு
  3. குறுந்தொகை
  4. பரிபாடல்

விடை : குறுந்தொகை

4. குறுந்தொகையை தொகுத்தவர்

  1. பூரிக்கோ
  2. உருத்திரசன்மனார்
  3. பெருந்தேவனார்
  4. கபிலர்

விடை : பூரிக்கோ

5. நல்ல என்னும் அடைமொழியை உடைய எட்டுத்தொகை நூல்

  1. புறநானூறு
  2. அகநானூறு
  3. குறுந்தொகை
  4. பரிபாடல்

விடை : குறுந்தொகை

6. எட்டுத்தொகை நூல்களுள் முதலில் தொகுக்கபட்ட நூல்

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. புறநானூறு
  4. அகநானூறு

விடை : குறுந்தொகை

7. குறுந்தொகை நூலிற்கான கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்

  1. பாரதம் பாடிய பெருந்தேவனார்
  2. உமறுப்புலவர்
  3. பாரதியார்
  4. பூரிக்கோ

விடை : பாரதம் பாடிய பெருந்தேவனார்

8.குறுந்தொகை __________ திணை சார்ந்த நூல்

  1. புறத்
  2. அகத்
  3. உயிர்
  4. அல்

விடை : அகத்

9. எட்டுத்தொகை நூல்களில் உள்ள புறம் சார்ந்த நூல்களின் எண்ணிக்கை

  1. 3
  2. 4
  3. 2
  4. 5

விடை : 2

10. சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவராக கருதப்படுபவர்

  1. ஆண்டாள்
  2. மணிமேகலை
  3. வெள்ளிவீதியார்
  4. காரைக்காலம்மையார்

விடை : வெள்ளிவீதியார்

11. வெள்ளிவீதியார் சங்கத்தொகை நூல்களில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை

  1. 10
  2. 13
  3. 12
  4. 11

விடை : 13

12. இருந்தனர் என்பதனை பகுபத உறுப்பிலக்கணத்தின்படி பிரித்தெழுதும் முறை

  1. இரு + த் + த் + அன் + அர்
  2. இரு + த்(ந்) + த் + அன் + அர்
  3. இரு + த்(ந்) + தன் + அர்
  4. இருந் + த் + அன் + அர்

விடை : இரு + த்(ந்) + த் + அன் + அர்

13. நம்மூர்  என்னும் சொல்லுக்குறிய விதிகள்

அ) தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்
ஆ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
இ) ஈறுபோதல்

  1. அ, ஆ சரி
  2. அ, ஆ இ சரி
  3. ஆ, இ சரி
  4. அ, இ சரி

விடை : அ, ஆ சரி

14. வெண்டலை  என்னும் சொல்லுக்குறிய விதிகள்

அ) ஈறுபோதல்
ஆ) ணளமுன் டணவும் ஆகுத் தநக்கள்
இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

  1. அ, ஆ சரி
  2. அ, ஆ இ சரி
  3. ஆ, இ சரி
  4. அ, இ சரி

விடை : அ, ஆ சரி

குறு வினா

1. குறுந்தொகை குறிப்பு வரை

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்னு
  • கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களை கொண்டது.
  • அகத்திணைச் சார்ந்த நூல்
  • நல்ல குறுந்தொகை என சிறப்பிக்கபடுகிறது.
  • உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்.
  • எட்டுத்தொகை நூல்களில் முதலில் தொகுக்கபட்ட தொகை நூல்
  • நூலினைத் தொகுத்தவர் பூரிக்கோ
  • கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்

2. வெள்ளிவீதியார் குறிப்பு வரைக

  • சங்காலப் பெண் புலவர்களுள் ஒருவர்.
  • சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்களை பாடியுள்ளார்

Leave a Comment