Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 Thiruchaazhal Book Back Solution

இயல் 6.4 – திருச்சாழல்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 6.4 ‘Thiruchaazhal’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 6.4 திருச்சாழல்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 6.4 Thiruchaazhal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

திருச்சாழல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thiruchaazhal’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: குற்றாலக் குறவஞ்சி

நூல் வெளி

  • திருவாசகம் என்பது சிவபெருமானின் மீது மாணிக்கவாசகர் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.
  • இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்
  • இது பன்னிரு சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது.
  • திருவாசகத்தில் 51 திருப்பதிகங்களும், 658 பாடல்களும் உள்ளன; 38 சிவத்தலங்கள் குறித்துப் பாடப்பெற்றுள்ளன.
  • திருவாசகப் பாடல்கள், பக்திச் சுவையோடு, மனத்தை உருக்கும் இயல்புடையவை.
  • பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை திருவாசப் பாடல்கள் “திருவாசகத்த்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்பது முதுமொழி.
  • ஜி.யு.போப் திருவாசகம் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளளார்.
  • மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர்
  • இவர் திருவாவூரைச் சேர்ந்தவர். எனவே “திருவாதவூரார்” எனவும் அழைக்கப் பெற்றார்.
  • அரிமர்த்தனப் பாண்டியனின் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்.
  • மாணிக்கவாசகர் பாடியவை, திருவாசகமும், திருக்கோவையார் ஆகியனவாகும்.

சொல்லும் பொருளும்

  • காயில் – வெகுண்டல்
  • அந்தம் – முடிவு
  • அயன் – பிரமன்
  • மால் – விஷ்ணு
  • ஆலாலம் – நஞ்சு

இலக்கணக்குறிப்பு

  • சுடுகாடு, கெல்புலி, குரைகடல் – வினைத்தொகைகள்
  • நல்லாடை – பண்புத்தொகைகள்

பகுபத உறுப்பிலக்கணம்

உண்டான் = உண் + ட் + ஆன்

  • உண் – பகுதி
  • ட் – இறந்தகால இடைநிலை
  • ஆன் –  ஆன்பால் வினைமுற்று விகுதி

புணர்ச்சி விதிகள்

1. கற்பொடி =  கல் + பொடி

  • “லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” என்ற விதிப்படி “கற்பொடி” என்றாயிற்று.

2. உலகனைத்தும் = உலகு + அனைத்தும்

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” என்ற விதிப்படி “உலக் + அனைத்தும்” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “உலகனைத்தும்” என்றாயிற்று.

3. திருவடி = திரு + அடி

  • “ஏனை உயிர்வழி வவ்வும்” என்ற விதிப்படி “திரு + வ் + அடி” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “திருவடி” என்றாயிற்று.

பலவுள் தெரிக

பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று

  1. சாழல்
  2. சிற்றில்
  3. சிறுதேர்
  4. சிறுபறை

விடை : சாழல்

சிறு வினா

தமிழகப் பெண்கள் பாடிக்கொண்ட விளையாடும்போது, வெளிப்படுத்தும் மேன்மையான கருத்துகளாகத் திருச்சாழல் உணர்த்துவன யாவை?

சாழல் என்பது பெண்கள் விளையாடும் ஒருவகையான விளையாட்டு ஒருத்தி வினா கேட்க மற்றொருத்தி விடை கூறுவதாக அமைந்திருக்கும். இறைவன் செயல்கலைப் பழிப்பது போல் அந்த வினா இருக்கும். இறைவன் செயலை நியாயப்படுத்துவது போல் அந்த விடை இருக்கும்.

எ.கா.

  • சுடுகாட்டைக் கோயிலாகவும் புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்கு தாய் தந்தையும் இல்லை, இத்தன்மையனோ உங்கள் கடவுள்? என்பது பழிப்பா வினை
  • எங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லாவிடினும் அவன் சினத்தால் உலகம் அனைத்தும் கற்பொடியாகிவிடும் என்பது செயலை நியாயப்படுத்தும் விடை

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “திருச்சாழல்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. திருவாசகத்தினை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்தவர்

  1. உ.வே.சா
  2. சி.வை.தாமோதரனார்
  3. மறைமலையடிகள்
  4. ஜி.யு.போப்

விடை : ஜி.யு.போப்

2. சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறை __________ திருமுறையாக உள்ளது.

  1. திருநாவுக்கரசர்
  2. திருஞான சம்பந்தர்
  3. மாணிக்க வாசகர்
  4. சுந்தரர்

விடை : மாணிக்க வாசகர்

3. சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள நூல்

  1. நாச்சியார் திருமொழி
  2. திருத்தொண்டர் புராணம்
  3. திருவாசகம்
  4. பெரியபுராணம்

விடை : திருவாசகம்

4. முதலாழ்வார்களில் பொருந்தாதவர்

  1. திருநாவுக்கரசர்
  2. திருஞான சம்பந்தர்
  3. மாணிக்க வாசகர்
  4. சுந்தரர்

விடை : மாணிக்க வாசகர்

5. சமயக்குரவர்கள் பொருந்தாதவர்கள்

  1. திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர்
  2. சுந்தரர், மாணிக்கவாசகர்
  3. சேக்கிழார், திருமூலர்

விடை : சேக்கிழார், திருமூலர்

6. பெரிய திருமொழியினை பாடியவர்

  1. திருநாவுக்கரசர்
  2. திருஞான சம்பந்தர்
  3. திருமங்கையாழ்வார்
  4. சேக்கிழார்

விடை : திருமங்கையாழ்வார்

7. திருவாசகத்தில் ________ திருப்பதிகங்கள் இடம் பெற்றுள்ளன

  1. 65
  2. 12
  3. 14
  4. 51

விடை : 51

7. திருவாசகத்தில் ________  சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன.

  1. 38
  2. 83
  3. 63
  4. 36

விடை : 38

8. சாழல் வடிவத்தை _____________ ஆழ்வார் கையாண்டுள்ளார்

  1. திருமங்கையாழ்வார்
  2. பெரியாழ்வார்
  3. ஆண்டாள்
  4. திருப்பாணாழ்வார்

விடை : திருமங்கையாழ்வார்

9. மாணிக்கவாசகர் _____________, _____________ நூல்களை இயற்றியுள்ளார்.

  1. திருவாசகம்,பெரியபுராணம்
  2. திருப்பாவை, பெரியாபுராணம்
  3. திருவாசம், திருக்கோவையார்
  4. திருவாசகம், திருப்புகழ்

விடை : திருவாசம், திருக்கோவையார்

10. மாணிக்கவாசகர் _______ திருச்சாழல் பாடல்களினை பாடியுள்ளார்.

  1. 40
  2. 30
  3. 20
  4. 10

விடை : 20

11. மால் என்பதை _________ குறிக்கிறது.

  1. சிவன்
  2. பிரமன்
  3. முருகன்
  4. திருமால்

விடை : திருமால்

12. நல்லாடை இலக்கணக்குறிப்பு

  1. வினைத்தொகை.
  2. வினையெச்சம்
  3. பெயரெச்சம்
  4. பண்புத்தொகை

விடை : பண்புத்தொகை

13. சுடுகாடு இலக்கணக்குறிப்பு

  1. பண்புத்தொகை
  2. வினையெச்சம்
  3. வினைத்தொகை
  4. பெயரெச்சம்

விடை : வினைத்தொகை

குறு வினா

1. சாழல் என்பதற்கான விளக்கம் தருக

  • சாழல் என்பது பெண்கள் விளையாடும் ஒருவகையான விளையாட்டு
  • இது ஒரு மொழி விளையாட்டு
  • ஒருத்தி வினா கேட்க மற்றொருத்தி விடை கூறுவதாக அமைந்திருக்கும்.
  • விடையைக் கூறும்போது இறைவன் செயல்களையும், அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது போல் அமைந்திருத்தலால் “திருச்சாழல்” எனப்பட்டது.

2. சாழல் என்பதை பயன்படுத்தியவர்கள் யாவர்?

  • மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில் திருச்சாழல் இடம் பெற்றுள்ளது.
  • திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில் இவ்வடியை பயன்படுத்தியுள்ளார்.

சிறு வினா

1. திருவாசகம் – குறிப்பு தருக

  • சிவபெருமானின் மீது மாணிக்கவாசகர் பாடிய பாடல்களின் தொகுப்பு
  • பன்னிரு சைவத் திருமுறைகளில் 8-ம் திருமுறையாக உள்ளது.
  • திருவாசகத்தில் 51 திருப்பதிகங்களும், 658 பாடல்களும் உள்ளன
  • 38 சிவத்தலங்கள் குறித்துப் பாடப்பெற்றுள்ளன.
  • திருவாசகப் பாடல்கள், பக்திச் சுவையோடு, மனத்தை உருக்கும் இயல்புடையவை.
  • “திருவாசகத்த்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்னும் மூதுரை வழக்கைப் பெற்றுள்ளது.
  • ஜி.யு.போப் திருவாசகம் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளளார்.

2. மாணிக்கவாசகர் – குறிப்பு வரைக

  • மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர்
  • இவர் திருவாவூரைச் சேர்ந்தவர். எனவே “திருவாதவூரார்” எனவும் அழைக்கப் பெற்றார்.
  • அரிமர்த்தனப் பாண்டியனின் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்.
  • மாணிக்கவாசகர் திருவாசகமும், திருக்கோவை போன்றவற்றை பாடியுள்ளார்.

 

Leave a Comment