[Term-2] Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.4 Manam Kavarum Mamallapuram Book Back Solution

இயல் 2.4 – மனம் கவரும் மாமல்லபுரம்

In this article, we have provided the answers to the questions in the lesson “மனம் கவரும் மாமல்லபுரம்” from Samacheer Kalvi 6th Tamil Chapter 2.4. The questions have been categorized into one mark, two marks, and big marks.

மனம் கவரும் மாமல்லபுரம் வினா விடைகள்

You can access the question answers for the Ninth Lesson of class 6 Tamil, called ‘Manam Kavarum Mamallapuram’, on this page.

Previous Lesson: தமிழர் பெருவிழா

சிறு வினா

1. மாமல்லபுரம் எப்படி உருவானது? அதற்கான நிகழ்வு யாது?

  • மாமல்லன் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் அவர் தந்தையுடன் மாமல்லபுரம் கடற்கரைக்குச் சென்றார்.
  • ஒரு பாறையில் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த பாறையில் நிழல் யானை போல் தரையில் விழந்தது. அதை அவர் தந்தையிடம் காட்டினார். அவர் தந்தை “ஆம் நரசிம்மா! இது யானைப் போலத்தான் தெரிகிறது.
  • அதோ அந்தக் குன்றில்  நிழலைப் பார். கோவில் போலத் தெரிகிறது” என்றார். மாமல்லான் “ஆம் அப்பா! அந்தக் குன்றை கோவிலாகவும், இந்த குன்றைக் கோவில் முன் நிற்கும் யானை போலவும் மாற்றிவிட்டால் நன்றாக இருக்குமே” என்றார். ” நல்ல சிந்தனை.
  • இவை இரண்டை மட்டும்” அல்ல. இங்குள்ள ஒவ்வொரு குன்றையும் சிற்பமாக மாற்றலாம். ஒவ்வொரு பாறையையும் நந்தி, சிங்கம், யானை என்று மாற்றுவோம்.
  • இந்தக் கடற்கரையையே சிற்பக்கலைக்கூடமாக மாற்றிவிடலம்” என்று கூறினார். இந்நிகழ்வே மாமல்லபுரம் உருவான நிகழ்வாகும்.

2. மாமல்லபுரத்தில் “அர்ச்சுனன் தபசு” பாறையில் உள்ள சிறப்பங்களைப் பற்றி எழுதுக.

  • அர்ச்சுனர் தபசு பாறையில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை உயிருள்ளவற்றை நேரில் பார்ப்பது போல அழகாக இருக்கும்.
  • அப்பாறையில் 150-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. அர்ச்சுனன் கண்களை மூடி, இரு கைகளையும் உயர்த்தி, வணங்குவது போல ஒரு சிற்பம் உள்ளது. அவரது உடல் மெலிந்து, எலும்புகளும், நரம்புகளும் வெளியே தெரிவது போல அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது.
  • ஆகாய கங்கை பூமிக்கு வருவது போல ஒரு சிற்பம் உள்ளது. சிங்கம். புலி. யானை. அன்னப்பறவை. உடும்பு. குரங்குகள் என எல்லாமே உயிருள்ளவை போலச் செதுக்கப்பட்டுள்ளன.
  • மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொறிந்து கொள்வது போன்ற சிற்பம் அது உண்மையிலேயே மான் ஒன்று இருப்பது போல தோன்றும்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் ஆறாம் வகுப்பு “மனம் கவரும் மாமல்லபுரம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஒருநாட்டின் பண்பட்ட நாகரிகத்தை உலகிற்கு உணர்த்துவன.

  1. கலைகள், இலக்கியங்கள்
  2. கலைகள், வாழ்க்கை முறை
  3. வாழ்க்கை முறை, இலக்கியங்கள்
  4. வாழ்க்கை முறை, மனிதத்துவம்

விடை : கலைகள், இலக்கியங்கள்

2. நரசிம்மன் _____________ சிறந்நதவன்.

  1. பண்புகளில்
  2. கட்டிக்கலையில
  3. மற்போரில்
  4. குதிரையேற்றத்தில்

விடை : மற்போரில்

3. ஐந்து இரதங்கள் காணப்படும் இடம்

  1. அர்ச்சுனன் தபசு
  2. கடற்கரைக் கோவில்
  3. பஞ்சபாண்டவர் இரதம்
  4. குகைக்கோவில்

விடை : பஞ்சபாண்டவர் இரதம்

4. நரசிம்மன் _______________ காலத்தவர்

  1. 6-ம் நூற்றாண்டு
  2. 7-ம் நூற்றாண்டு
  3. 8-ம் நூற்றாண்டு
  4. 9-ம் நூற்றாண்டு

விடை : 7-ம் நூற்றாண்டைச்

வினாக்கள்

1. மாமல்லபுரத்தில் உள்ள இடங்களை எழுதுக

அர்ச்சுன் தபசு, கடற்கரைக் கோவில், பஞ்ச பாண்டவர் , இரதம், ஒற்றைக்கல் யானை, குகைக்கோவில், புலிக்குகை, திருக்கடல் மல்லை, கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து, கலங்கரை விளக்கம்

2. சிற்பக்கலையின் வகைகளை எழுதுக

குடைவரைக் காேயில்கள், கட்டுமானக் கோயில்கள், ஒற்றைக் கல் கோயில்கள், புடைப்புச் சிற்பங்கள்

6th Tamil Text Books Pdf

Leave a Comment