[Term-3] Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 mudivil Oru Thodakkam Book Back Solution

இயல் மூன்று – முடிவில் ஒரு தொடக்கம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 3.3 ‘mudivil Oru Thodakkam’ Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 3 Lesson 3.3 முடிவில் ஒரு தொடக்கம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 6th Tamil Chapter 3.3 mudivil Oru Thodakkam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 6th Tamil Guide PDF.

முடிவில் ஒரு தொடக்கம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘mudivil Oru Thodakkam’ which is the first subject of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the mudivil Oru Thodakkam subject.

Next Lesson: மனிதநேயம்

குறுவினா

1. “முடிவில் ஒரு தொடக்கம்” என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக.

மனிதன் மற்றொரு மனிதன்பால் கொள்ளும் நேயமே மனிதநேயம். இந்த உலகம் பல உயிர்களின் தோட்டம். மனித பூக்கள் அதில் ஏராளம். பார்த்து ரசிப்பது ஒரு இனம். பறித்து சூடுவது ஒரு இனம் மலரைப் பார்ப்பதற்கு உரிமம் தேவையில்லை. பறிப்பதற்கு அந்த செடியின் சொந்தக்காரராய், அதன் பராமரிப்பாளராய், பாதுகாவலராய் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

அவ்வாறு இருக்கையில் தனது உயிரையே பிறருக்கு தானமாக அளித்த ஹிதேந்தரேயன் பெற்றோர் செயலை என்னவென்று சொல்வது தெரியவில்லை. ஆயிரம் கனவுகளோடு வளர்த்த மகனின் உடல் உறுப்புகளை பிறருக்கு கொடுக்க முன்வந்தனர். அவன் இறந்தும் வாழ வேண்டும் எனறு நினைத்தனர். அவனது முடிவு ஒரு தொடக்கமாகப் பிறருக்கு அமைய வேண்டும் என்று எண்ணினர். ஹிதேந்திரனின் இறுதி முடிபவு பல மனிதர்களுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது. அரக்ள எடுத்த முடிவு சரியானதே.

ஹிதேந்திரன் பெற்றோர் மருத்துவராக இருந்ததால் தக்க தருணத்தில் முடிவை எடுக்க முடிந்தது. ஆனால், நம்பில் பலர் இந்தச் சூழ்நிலைக்கு பல நேரங்களில் ஆட்படுகின்றோம். ஆனால் சரியான முடிவை எடுக்காமல் தவிக்கின்றோம். இதனால் பல மனிதர்களின் முடிவு முடிவாகவே அமைந்து விடுகின்றது. அவை மண்ணுக்குள்ளேயே மடிந்தும் முடிந்தும் விடுகிறது. பல உயிர்கள் வாழ வழிவகை இல்லாமல் போய்விடுகிறது.

இதனால் பல உயிர்கள் மடிந்தும் விடுகின்றது. ஒரு மனிதனின் முடிவு பல மனிதர்களின் தொடக்கத்திற்கு வழிவகை செய்கிறது. ஆகவே “முடிவில் ஒரு தொடக்கம்” என்ற தலைப்புத் தக்க காரணத்துடன் நம் பாடத்தலைப்பிற்கு பொருந்தி வந்துள்ளது.

2. இக்கதைக்குப் பொருத்தமாக மற்றொரு தலைப்பு இடுக.

இறந்தும் வாழ்வர் 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “முடிவில் ஒரு தொடக்கம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. சிறுமிக்கு இதயம் கொடுத்தவர்

  1. ஹிதேந்திரன்
  2. ஹிந்திரேயன்
  3. ஹரிகரன்
  4. அரிகரன்

விடை: ஹிதேந்திரன்

2. அசோகன் – புஷ்பாஞ்சலி என்ற _____________ தம்பதியினர்

  1. மருத்துவத்
  2. வழக்கறிஞ
  3. விவசாயத்
  4. வணிகத்

விடை: மருத்துவத்

எழுதுக 

1. எது வள்ளல் தன்மை அன்று?

பொன்னையும் பொருளையும் வாரி வழங்குவது மட்டும்
வள்ளல் தன்மை அன்று.

2. எது வள்ளல் தன்மை என்பது என்ன?

நமது இறப்பிற்குப் பின் மண்ணுக்குச் செல்லும் உடல் உறுப்புகளைப் பிறர் வாழ வழங்குவதும் வள்ளல் தன்மைேய. உறுப்புக் கொடை செய்வோம்.

3. நாம் ஏற்க வேண்டிய சூளுரை யாது?

மண்ணில் ஒருவரையாவது வாழ வைப்போம். இன்றே இந்தச் சூளுரை ஏற்போம். உறுப்புக் கொடை பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்திய நிகழ்வை அறிவோம் வாருங்கள்.

Leave a Comment