[Term-1] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.1 Engal Tamil Book Back Solution

இயல் ஒன்று – எங்கள் தமிழ்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 1.1 ‘Engal Tamil’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 1.1 எங்கள் தமிழ்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 1.1 Engal Tamil Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

எங்கள் தமிழ் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Engal Tamil’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Engal Tamil subject.

எங்கள் தமிழ் பாடல்

அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்

பொருள்பெற யாரையும் புகழாது
போற்றறா தாரையும் இகழாது

கொல்லலா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே

அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்

-நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

பாடலின் பொருள்

நம் தாய்மொழியாம் தமிழ் மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது. அதுவே தமிழ்மக்களின் குரலாகவும் விளங்குகிறது. தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.

கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்; அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி ஆகும்.

நூல் வெளி

  • இப்பாடலின் ஆசிரியரை (வெ. இராமலிங்கனார்) நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர்.
  • இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
  • காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.
  • தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.
  • மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
  • நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுத்துத் தரப்பட்டுள்ளது.

சொல்லும் பொருளும்

  • ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
  • குறி – குறிக்கோள்
  • விரதம் – நோன்பு
  • பொழிகிற – தருகின்ற

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நெறி என்னும் சொல்லின் பொருள் __________________

  1. வழி
  2. குறிக்கோள்
  3. கொள்கை
  4. அறம்

விடை : வழி

2. குரலாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________

  1. குரல் + யாகும்
  2. குரல் + ஆகும்
  3. குர + லாகும்
  4. குர + ஆகும்

விடை : குரல் + ஆகும்

3. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. வான்ஒலி
  2. வானொலி
  3. வாவொலி
  4. வானெலி

விடை : வானொலி

நயம் அறிக

1. எங்கள் தமிழ் பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

  • ருள்நெறி – துவே
  • கொல்லா – கொள்கை
  • ல்லா – ன்றும்
  • ன்பும் – ச்சம்
  • ன்புறவே – சைந்திடும்

2. எங்கள் தமிழ் பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

  • ருள் – பொருள்
  • லாகும் – குலாகும்
  • ன்புறவே – அன்பறமே
  • புழாது – இழாது
  • யாரையும் – தாரையும்
  • ன்பும் – இன்பம்

3. எங்கள் தமிழ் பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

  • தரலாகும் – குரலாகும்
  • ஊக்கிவிடும் – போக்கிவிடும்
  • புகழாது – இகழாது
  • வானொலியாம்– தேன்மொழியாம்

குறுவினா

1. தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?

  • நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும்
  • கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யாமைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
  • நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தை தூண்டும். அஃது அச்சத்தை போக்கி இன்பம் தரும்.

2. தமிழ் மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.

  • தமிழ்மொழியை கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழந்து பேசமாட்டார்.
  • தம்மையும் போற்றாதவரையும் இகழந்து பேச மாட்டார்.

சிறு வினா

எங்கள் தமிழ் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

  • நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும். அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.
  • தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழந்து பேசமாட்டார். தம்மையும் போற்றாதவரையும் இகழந்து பேச மாட்டார்.
  • கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யாமைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
  • நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தை தூண்டும். அஃது அச்சத்தை போக்கி இன்பம் தரும்.

சிந்தனை வினா

கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?

தேன் இனிமையானது; தூய்மையானது; சுவைமிக்கது; இன்பம் கொடுப்பது. அதைப் போல இனிமையாது, தூய்மையானது, சுவைமிக்கது, இன்பம் கொடுப்பது தமிழ் எனவே கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “எங்கள் தமிழ்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வெ.இராமலிங்கனாரை ________________ என அழைப்பவர்

  1. உவமைக்கவிஞர்
  2. பாட்டுக்கொரு புலவன்
  3. நாமக்கல் கவிஞர்
  4. கவியுகத் தந்தை

விடை : நாமக்கல் கவிஞர்

2. காந்தியக்கவிஞர் என்ற சிறப்பு பெயருடையவர் ______________

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. கவிமணி
  4. வெ. இராமலிங்கனார்

விடை : வெ. இராமலிங்கனார்

3. நெறி என்பதன் பொருள் 

  1. பல
  2. சில
  3. வழி
  4. ஒலி

விடை : ஒலி

4. நோன்பு என்பதன் பொருள்

  1. விரதம்
  2. கொல்லா
  3. குறி
  4. நெறி

விடை : விரதம்

5. கத்தியின்றி இரத்த மின்றி
   யுத்தமொன்று வருகுது பாடல் வரிகளின் ஆசிரியர்

  1. பாரதியார்
  2. வெ. இராமலிங்கனார்
  3. பாரதிதாசன்
  4. கவிமணி

விடை : வெ. இராமலிங்கனார்

குறு வினா

1. காந்தியக் கவிஞர்-பெயர்க்காரணம் கூறுக

காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.

2. நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்களை எழுதுக

மலைக்கள்ளன், சங்கொலி, என்கதை, நாமக்கல் கவிஞர் பாடல்கள்

Leave a Comment