[Term-1] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 Ondralla Irandalla Book Back Solution

இயல் ஒன்று – ஒன்றல்ல இரண்டல்ல

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 1.2 ‘Ondralla Irandalla’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 1.2 Ondralla Irandalla Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

ஒன்றல்ல இரண்டல்ல வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Ondralla Irandalla’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Ondralla Irandalla subject.

Next Lesson: எங்கள் தமிழ்

ஒன்றல்ல இரண்டல்ல பாடல்

ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல
ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழநாட்டில்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…)

தென்றல் தரும் இனிய தேன்மண மும்கமழும்
செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நன்செய்வளம்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…)

பகைவென்ற திறம்பபாடும் பரணிவகை – செழும்
பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை – வான்
புகழ்கொண்ட குறளோோடு அகம்புறமும் – செம்
பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…)

முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி – வான்
முகிலினும் புகழ்படைத்த உபகாரி – கவிச்
சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி – இந்த
வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…)

– உடுமலை நாராயணகவி

பாடலின் பொருள்

தமிழ்நாட்டின் பெருமைகளைக் கூறினால் அவை ஒன்றிரண்டல்ல பலவாகும். அவை வேறு எவற்றோடும் இணைசொல்ல முடியாத விந்தைகளாகும். இங்கு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். அத்தோடு இசைப்பாடலான பரிபாடலும் கலம்பக நூல்களும் எட்டுத்தொகையும் வான்புகழ் கொண்ட திருக்குறளும் அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்களும் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இவர்கள்போல் புகழ் பெற்று வாழ்ந்த வள்ளல்களின் வரலாறு ஒன்றிரண்டல்ல பலவாகும்.

நூல் வெளி

  • பகுத்தறிவுக்கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி.
  • இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.
  • தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்.
  • நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.

சொல்லும் பொருளும்

  • ஒப்புமை – இணை
  • முகில் – மேகம்
  • அற்புதம் – விந்தை
  • உபகாரி – வள்ளல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ______________

  1. கலம்பகம்
  2. பரிபாடல்
  3. பரணி
  4. அந்தாதி

விடை : பரணி

2. வானில் ______________ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

  1. அகில்
  2. முகில்
  3. துகில்
  4. துயில்

விடை : முகில்

3. இரண்டல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. இரண்டு + டல்ல
  2. இரண் + அல்ல
  3. இரண்டு + இல்ல
  4. இரண்டு + அல்ல

விடை : இரண்டு + அல்ல

4. தந்துதவும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. தந்து + உதவும்
  2. தா + உதவும்
  3. தந்து + தவும்
  4. தந்த + உதவும்

விடை : தந்து + உதவும்

5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. ஒப்புமைஇல்லாத
  2. ஒப்பில்லாத
  3. ஒப்புமையில்லாத
  4. ஒப்புஇல

விடை : ஒப்புமையில்லாத

குறு வினா

1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கவழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

2. ஒன்றல்ல இரண்டல்ல பாடலில் இடம் பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.

  • முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.
  • புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.

சிறு வினா

தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை ?

  • பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.
  • பரிபாடல் கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் – ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர்  கூறுகிறார்

சிந்தனை வினா

தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?

  • சங்க காலத்தின் இறுதிப்பகுதி ஆடம்பரமும் ஆரவாரமும் மிக்கது.
  • கலை என்ற பெயரில் ஒழுக்கக்கேடுகள் தலை தூக்கின.
  • தமிழகத்தின் அகப்புற ஒழுக்கங்கள் பாதுகாக்கப்படாமல் ஒதுக்கப்பட்டன.
  • குழப்பமான அச்சூழலில் நீதியும் அறமும் தேவைப்பட்டது.
  • எனவே, தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “ஒன்றல்ல இரண்டல்ல” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பரணி என்பது ____________ வென்று பாடும் இலக்கியம்.

  1. நண்பரை
  2. பகைவரை
  3. உறவினரை
  4. புலவர்களை

விடை : பகைவரை

2. உடுமலை நாராயணகவி ____________ என புகழப்படுகிறார்

  1. பகுத்தறிவுக்கவிராயர்
  2. உவமைக்கவிஞர்
  3. பாவேந்தர்
  4. புரட்சிக்கவி

விடை : பகுத்தறிவுக்கவிராயர்

5. வேள்பாரி ______________ தேர் தந்தான்

  1. நெய்தலுக்கு
  2. முல்லைக்கு
  3. பாலைக்கு
  4. மருத்த்திற்கு

விடை : முல்லைக்கு

6. ___________ சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமணன்

  1. மன்னரின்
  2. புலவரின்
  3. நண்பரின்
  4. தளபதியின்

விடை : குமணன்

7. ஒன்றல்ல என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. ஒன்ற + அல்ல
  2. ஒன்று + அல்ல
  3. ஒன்ற + லல்ல
  4. ஒன்று + லல்ல

விடை : ஒன்று + அல்ல

7. செங்கனி என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. செங்கை + கனி
  2. செம்மை + கனி
  3. செங் + கனி
  4. செம் + கனி

விடை : செம்மை + கனி

8. பெருமை + செல்வம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. பெருஞ்செல்வம்
  2. பெருமைசெல்வம்
  3. பெருமை செல்வம்
  4. பொருஞ்செல்வம்

விடை : பெருஞ்செல்வம்

குறுவினா

1. இசைபாடல் என கவிஞர் குறிப்பிடும் நூல் எது?

பரிபாடல்

2. வான்புகழ் கொண்ட நூல் எது?

திருக்குறள்

3. சங்க இலக்கியங்கள் எவ்வாறு பாடப்பட்டள்ளன?

சங்க இலக்கியங்கள் அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.

4. தமிழகத்தில் கொடைத்திறன் மிக்கவர்களாகத் திகழ்ந்தவர்கள் யாவர்?

மன்னர்கள், வள்ளல்கள்

5. மழை மேகத்தை விட புகழ்பெற்றவன் யார்?

மழை மேகத்தை விட புகழ் பெற்றவன் வள்ளல் வேள்பாரி

6. எங்கு தேன் மணம் கமழும்?

தமிழகத்தில் வீசும் காற்றில் மணம் கமழும்

7. நன்செய் நிலப்பயிர்கள் எவை?

நெல், வாழை, கரும்பு

Leave a Comment