[Term-1] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.4 Indhiya Vanamagan Book Back Solution

இயல் இரண்டு – இந்திய வனமகன்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 2.4 ‘Indhiya Vanamagan’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 2.4 இந்திய வனமகன்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 2.4 Indhiya Vanamagan Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

இந்திய வனமகன் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Indhiya Vanamagan’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Indhiya Vanamagan subject.

Next Lesson: விலங்குகள் உலகம்

ஜாதவ்பயேங் காட்டை எவ்வாறு உருவாக்கினார்?

முன்னுரை

அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதவ்பயேங். இந்திய வனமகன் என்று இவர் அழைக்கப்படுகிறார். பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மிகப்பெரிய தீவில் முப்பது ஆண்டுகள் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கினார். அதனை எப்படி உருவாக்கினார்? என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

மரம் வளர்க்கும் எண்ணம்

1979 ஆம் ஆண்டும் அது போன்று ஒரு பெருவெள்ளம் ஏற்பட்டது. மரங்கள் இல்லாத தீவில் ஏராளமான பாம்புகள் கரை ஒதுங்கின. அவற்றுள் சில பாம்புகள் இறந்தன. பல பாம்புகள் வெப்பம் தாங்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இந்தக்காட்சி அவரை மிகவும் பாதித்தது. ஊருக்குள் சென்று பெரியவர்களிடம் இதைப் பற்றிப் பேசினார். ‘தீவில் மரங்கள் இல்லாததுதான் காரணம் என்றனர். அப்பொழுதே இந்தத்தீவு முழுவதும் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் ஆழப்பதிந்து விட்டது. ஊர் மக்களிடம் தீவில் மரங்கள் வளர்க்கலாம் என்று கூறியபோது, அதனை யாரும் ஏற்கவில்லை.

மரம் வளர்க்கும் எண்ணம்

ஜாதவ்பயேங் தீவில் விதைகளை விதைத்து நாள்தோறும் தண்ணீர் ஊற்றி வந்தார். ஆயினும் ஒரு விதைகூட முளைக்கவில்லை. பிறகு வனத்துறையினரை அறிவுறுத்தலால் மூங்கில் மரங்களை வளர்க்கத் தொடங்கினார். அவை விரிந்து வளரத் தொடங்கின. மூங்கிலைத் தவிர வேறு எந்த மரமு் இத்தீவில் வளரவில்லை. அசாம் வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாதுநாத் அவர்களின் அறிவுறுத்தலின் படி மண்புழுவுடன் சிவப்பு கட்டெறும்பை அத்தீவு மண்ணில் விட்டார். சிறிது சிறிதாக மண்ணின் தன்னமை மாறி பசும்புல்லும் மரங்களம் வளரத் தொடங்கின.

புதிய காடு உருவானது

மரங்களில் விளைந்த பழங்களை உண்டு, அதன் கொட்டைகளை விதையாக சேமித்து வைத்து விதைத்தார். கால்நடைகளை வளர்த்து அதன் சாணங்களை மரங்களுக்கு உரமாக்கினார். மழை பெய்யாத காலங்களி் பானை பெரிய மூங்கில் துணை கொண்டு சொட்டு சொட்டாக நீரினை மரங்களுககு விட்டார். மரங்கள் பெருகி வளர்ந்து, அத் தீவு பெருங்காடானது. யானைகள், பாம்புகள், கழுகுகள், காண்டாமிருகங்கள், புலிகள் முதலிய காட்டு விலங்குகள் வரத் தொடங்கின.

முடிவுரை

ஜாதவ்பயேங்போல நாமும் காட்டை உருவாக்க முயல்வோம். அதற்கு அடையாளமாக நம் வீட்டைச் சுற்றி மரங்களை நட்டு, அவை நன்கு வளரும் வரை காக்க வேண்டும். இந்திய வனமகன் வழியில் நாமும் செல்வோம்.

மரங்கள் வளர்ப்போம்! மழை பெறுவோம்!

காட்டினை உருவாக்குவோம்!

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “இந்திய வனமகன்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஜாதவ்பயேங் பிறந்த இடம்

  1. அஸ்ஸாம், ஜோர்விராட் மாவட்டம்
  2. சதிஸ்கர், ராய்கர் மாவட்டம்
  3. ஜார்க்கண்ட், ராஞ்சி மாவட்டம்
  4. கர்நாடகா, பெங்களூர் மாவட்டம்

விடை: அஸ்ஸாம், ஜோர்விராட் மாவட்டம்

2. இந்திய வனமகன் என அழைக்கப்படுபவர்

  1. ஹந்திரேலியா
  2. பாடலியா
  3. ஜாதவ்பயேங்
  4. ஜாதவ்மயேங்

விடை: ஜாதவ்பயேங்

3. அசாம் வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்

  1. ஹந்திரேலியா
  2. பாடலியா
  3. ஜாதுநாத்
  4. ஜாதவ்பயேங்

விடை: ஜாதுநாத்

4. ஜாதவ்பயேங்க்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்த ஆண்டு

  1. 2015
  2. 2014
  3. 2012
  4. 2013

விடை: 2015

4. ஜாதவ்பயேங்க்கு காட்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பிரம்மபுத்திரா ஆற்றில் _________ ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது ஏற்பட்டது.

  1. 1979
  2. 1978
  3. 1997
  4. 1987

விடை: 1979

5. வானாளாவி என்ற சொல்லினை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. வான் + அளாவிய
  2. வான் + ளாவிய
  3. வானம் + அளாவிய
  4. வானம் + ளாவிய

விடை: வான் + அளாவிய

குறுவினா

1. ஜாதவ்பயேங்க்கு இந்திய வனமகன் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது?

  • ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவ்பயேங்க்கு இந்திய வனமகன் என்னும் பட்டத்தை 2012-ல் வழங்கியுள்ளது.

2. ஜாதவ்பயேங்க்கு மதிப்புறு முனைவர் வழங்கிய பல்கலைக்கழகம் எது?

  • கெளகாத்தி பல்கலைக்கழகம்

Leave a Comment