[Term-1] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.3 Vilangugal Ulagam Book Back Solution

இயல் இரண்டு – விலங்குகள் உலகம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 2.3 ‘ Vilangugal Ulagam’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 2.3 விலங்குகள் உலகம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 2.3 Vilangugal Ulagam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

விலங்குகள் உலகம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Vilangugal Ulagam’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Vilangugal Ulagam subject.

Next Lesson: அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது ________________

  1. காது
  2. தந்தம்
  3. கண்
  4. கால்நகம்

விடை : தந்தம்

2. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் _______.

  1. வேடந்தாங்கல்
  2. கோடியக்கரை
  3. முண்டந்துறை
  4. கூந்தன்குளம்

விடை : முண்டந்துறை

3. காட்டாறு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. காடு + ஆறு
  2. காட்டு + ஆறு
  3. காட் + ஆறு
  4. காட் + டாறு

விடை : காடு + ஆறு

4. அனைத்துண்ணி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. அனைத்து + துண்ணி
  2. அனை + உண்ணி
  3. அனைத் + துண்ணி
  4. அனைத்து + உண்ணி

விடை : அனைத்து + உண்ணி

5. நேரம் + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. நேரமாகி
  2. நேராகி
  3. நேரம்ஆகி
  4. நேர்ஆகி

விடை : நேரமாகி

6. வேட்டை + ஆடிய என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. வேட்டைஆடிய
  2. வேட்டையாடிய
  3. வேட்டாடிய
  4. வேடாடிய

விடை : வேட்டையாடிய

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படும் விலங்கு _________________

விடை : புலி

2. யானைக் கூட்டத்திற்கு ஒரு _________________ யானைதான் தலைமை தாங்கும்.

விடை : பெண்

3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் _________________

விடை : உடலைப் போர்த்தியிருக்கும் அடர்ந்த முடிகள்

குறு வினா

1. காடு வரையறுக்க.

  • மனித முயற்சியின்றி வளர்ந்த மரங்கள், செடிகள், கொடிகள், புல், புதர்கள், பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம் தான் இக்காடாகும்.
  • இடை இடையே காட்டாறுகளும், நீரோடைகளும் இருக்கும்.
  • மனிதனின் முதல் இருப்பிடம் காடு.

2. யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?

யானைகள் பொதுவாக மனிதர்க்ளைத் தாக்குவது இல்லை. அவற்றின் வழித்தடங்களில் குறுக்கிடும்போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன. மேலும் யானைக்குக் கண்பார்வை குறைவு; கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதி.

3. கரடி ஓர் அனைத்துண்ணி என அழைக்கப்படுவது ஏன்?

கரடி பழங்கள், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான்கள் என ஆகியவற்றை உண்பதால் ‘அனைத்துண்ணி’ என அழைக்கப்படுகிறது

4. மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக

புள்ளிமான், சருகுமான், மிளாமான், வெளிமான்

சிறு வினா

புலிகள் குறித்து நீங்கள் அறிந்துகொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.

  • புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை.
  • ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழு ம் . மற்ற புலிகள் அந்த எல்லைக்குள் செல்லாது.
  • கருவுற்ற புலியானது தொண்ணூறு நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும்.
  • குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும். அவை வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளையும் பிரித்துத் தனியாக அனுப்பிவிடும்.

சிந்தனை வினா

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிடுக.

  • மண் வளம் குறையும்.
  • மண் தரிசு நிலமாக மாறிவிடும்.
  • காட்டுயிரிகள் வாழ்விடம் அழியும்.
  • குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
  • உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
  • மண் வளம் சேர்க்கும் நுண்ணியிரிகள் அழியும்.
  • மண்ணரிப்பு ஏற்படும்.
  • நோய் தீர்க்கும் மூலிகைகள் அழியும்.
  • பருவநிலை மாறும்.
  • புவி வெப்பமயமாகும்.
  • நிலத்தடி நீர் குறையும்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “விலங்குகள் உலகம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தமிழ் நாட்டில் வனக் கல்லூரி அமைந்த இடம் ____________

  1.  குன்னூர்
  2. ஊட்டி
  3. கோத்தகிரி
  4. மேட்டுப்பாளையம்

விடை : மேட்டுப்பாளையம்

2. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் ____________

  1. மதுரை
  2. திருநெல்வேலி
  3. தூத்துக்குடி
  4. கோவை

விடை : கோவை

விடை :

3. முண்டந்துறை தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் ____________ ஆகும்

  1. முதலாவது
  2. நான்காவது
  3. இரண்டாவது
  4. ஐந்தாவது

விடை : இரண்டாவது

5. யானைகளுக்கு ____________, _____________ ஆற்றல்கள் மிகுதியாக உள்ளன

  1. கேட்கும், மோப்ப
  2. பார்க்கும், மோப்ப
  3. கேட்கும், பார்க்கும்
  4. உணரும், மோப்ப

விடை : கேட்கும், மோப்ப

6. ஆண், பெண் ஆகிய இரண்டுக்கும் தந்தம் கொண்ட யானை வகை

  1. ஆப்பிரிக்க யானை
  2. ஆசிய யானை
  3. ஆஸ்திரேலிய யானை
  4. அமெரிக்க யானை

விடை : ஆப்பிரிக்க யானை

7. பண்புள்ள விலங்கு விலங்கு

  1. சிங்கம்
  2. கரடி
  3. புலி
  4. சிறுத்தை

விடை : புலி

7. இரவில் மட்டும் வேட்டையாடும் தன்னமை கொண்ட விலங்கு

  1. சிங்கம்
  2. புலி
  3. கரடி
  4. சிறுத்தை

விடை : புலி

8. நினைவாற்றல் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. நினைவு + வாற்றல்
  2. நினைவு + ஆற்றல்
  3. நினைவா + ற்றல்
  4. நினைவ் + ஆற்றல்

விடை : நினைவு + ஆற்றல்

குறு வினா

1. முண்டந்துறை புலிகள் காப்பகம் – குறிப்பு வரைக

  • தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம்
  • பரப்பு – 895 ச.கி.மீட்டர் பரப்பளவு கொண்டது
  • வாழும் விலங்குகள் – யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டு மாடு

2. உலகில் காணப்படும் யானை வகைகளை கூறுக

ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை என இரணடு வகையான யானைகள் உள்ளன.

3. காட்டின் வளத்தை குறிக்கும் விலங்கு எது

காட்டின் வளத்தை குறிக்கும் புலி

4. பண்புள்ள விலங்கு என்று எதனை கூறுவர்? அவ்வாறு கூறக் காரணம் என்ன?

பண்புள்ள விலங்கு என்று புலியினை கூறுவர்.

காரணம்: புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவது இல்லை.

5. வனவியல் சார்ந்த படிப்புகள் யாவை?

  • இளநிலை வனவியல்
  • முதுநிலை வனவியல்

6. இயற்கை விஞ்ஞானிகள் புலியினை காட்டிற்கு அரசன் என  குறிப்பிடக் காரணம் என்ன?

  • நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது.
  • எனவே புலியை காட்டுக்கு அரசன் என இயற்கை விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Leave a Comment