[Term-1] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 Kaadu Book Back Solution

இயல் இரண்டு – காடு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 2.1 ‘Kaadu’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 2.1 காடு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 2.1 Kaadu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

காடு பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kaadu’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Kaadu subject.

Next Lesson: தமிழ்க்கும்மி

காடு பாடல்

கார்த்திகை தீபமெனக்
காடெல்லாம் பூத்திருக்கும்
பார்த்திட வேண்டுமடீ – கிளியே
பார்வை குளிருமடீ!

காடு பொருள்கொடுக்கும்
காய்கனி ஈன்றெடுக்கும்
கூடிக் களித்திடவே – கிளியே
குளிர்ந்த நிழல்கொடுக்கும்

குரங்கு குடியிருக்கும்
கொம்பில் கனிபறிக்கும்
மரங்கள் வெயில்மறைக்கும் – கிளியே
வழியில் தடையிருக்கும்

பச்சை மயில்நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சர வங்கலங்கும் – கிளியே
நரியெலாம் ஊளையிடும்

அதிமது ரத்தழையை
யானைகள் தின்றபடி
புதுநடை போடுமடீ – கிளியே
பூங்குயில் கூவுமடி!

சிங்கம் புலிகரடி
சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடீ – கிளியே
இயற்கை விடுதியிலே!

– சுரதா

பாடலின் பொருள்

கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும். அவற்றைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும். காடு பல வகையான பொருள்களைத் தரும். காய்கனிகளையும் தரும். எல்லாரும் கூடி மகிழ்ந்திடக் குளிர்ந்த நிழல் தரும். அங்கே வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள, கனிகளைப் பறித்து உண்ணும். மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும். அடர்ந்த காடு வழிச்செல்வோர்க்குத் தடையாய் இருக்கும்.

பச்சை நிறம் உடைய மயில்கள் நடனமாடும். பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். அதனைக்கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும். நரிக் கூட்டம் ஊளையிடும். மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடை போடும். பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும். இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும்.

நூல் வெளி

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் . பாரதிதாசனின் இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’. எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும். உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர். அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

இப்பாடல் தேன்மழை என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

இப்பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை ‘கிளிக்கண்ணி’ ஆகும்.

சொல்லும் பொருளும்

  • ஈன்று – தந்து
  • களித்திட – மகிழ்ந்திட
  • கொம்பு – கிளை
  • நச்சரவம் – விடமுள்ள பாம்பு
  • அதிமதுரம் – மிகுந்த சுவை
  • விடுதி – தங்கும் இடம்
  • தீபம் – ஒளி

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்

கா கால்
அடவி அரண்
பொற்றை பொழில்
அழுவம் பழவம்
வியல் வனம்
இறும்பு சுரம்
பதுக்கை முளி
அரில் கானகம்
மிளை புரவு
பொதி அறல்
கான் முதை
ஆரணி பொச்சை
தில்லம் கணையம்
முளரி இயவு
வல்லை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வாழை, கன்றை ________.

  1. ஈன்றது
  2. வழங்கியது
  3. கொடுத்தது
  4. தந்தது

விடை : ஈன்றது

2. காடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. காடு + டெல்லாம்
  2. காடு + எல்லாம்
  3. கா + டெல்லாம்
  4. கான் + எல்லாம்

விடை : காடு + எல்லாம்

3. கிழங்கு + எடுக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

  1. கிழங்குஎடுக்கும்
  2. கிழங்கெடுக்கும்
  3. கிழங்குடுக்கும்
  4. கிழங்கொடுக்கும்

விடை : கிழங்கெடுக்கும்

பாடலிலுள்ள மோனை , எதுகை , இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனைச் சொற்கள்

  • கார்த்திகை – காடெல்லாம்
  • காடு – காய்கனி
  • ச்சை – ன்றி
  • பார்த்திட – பார்வை
  • குரங்கு – குடியிருக்கும்
  • சிங்கம் – சிறுத்தை

எதுகைச் சொற்கள்

  • குங்கு – மங்கள்
  • சிங்கம் – எங்கும்
  • கார்த்திகை – பார்த்திட
  • பார்த்திட – பார்வை
  • ளித்திடவே – குளிர்ந்திடவே

இயைபுச் சொற்கள்

  • குடியிருக்கும் – ஈன்றெடுக்கும்
  • கொடுக்கும் – தடையிருக்கும் 

குறு வினா

1. காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?

காட்டுப்பூக்களுக்கு கார்த்திகை விளக்கை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்

2. காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?

  • காட்டில் உள்ள மலர்களைக் காணும் போது கண்கள் குளிர்ச்சி பெறும்.
  • காடு பலவகையான பொருள்களையும் காய்கனிகளையும் தரும்.
  • எல்லோரும் சேர்ந்து மகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும்.
  • காட்டு விலங்குகளுக்கு உணவாக கனி தரும்.

சிறு வினா

காடு பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.

  • பன்றிகள் காட்டிலுள்ள கிழங்கை தோண்டி உண்ணும்.
  • நரிக்கூட்டம் ஊளையிடும்.
  • மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்.
  • இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்.

சிந்தனை வினா

காட்டை இயற்கை விடுதி என்று கவிஞர் கூறக் காரணம் என்ன?

பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அஃறிணை உயிர்களுக்குத் தேவையான உறையுள் (தங்குமிடம்) – உணவு ஆகியன காட்டில் இயற்கையாகவே உள்ளன.

மரங்கள், செடி கொடிகள் ஆகியன பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிற்குத் தங்குமிடம் உணவை இயற்கை அன்னையே வழங்குவதால் காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறுகிறார். 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “காடு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. சுரதாவின் இயற்பெயர் __________________

  1. இராதாகிருஷ்ணன்
  2. இராஜகிருண்ணன்
  3. இராசகோபாலன்
  4. இராதாகோபாலன்

விடை : இராசகோபாலன்

2. ஈன்று என்பதன் பொருள்

  1. வந்து
  2. தந்து
  3. சென்று
  4. கொடுத்து

விடை : தந்து

3. கொம்பு என்ற சொல்லின் பொருள்

  1. கிளை
  2. சுவை
  3. சுவடு
  4. விடுதி

விடை : கிளை

4. கழித்திட என்ற சொல்லின் பொருள்

  1. இசைந்திட
  2. உடன்பட
  3. மகிழ்ந்திட
  4. சென்றிட

விடை : மகிழ்ந்திட

எதிர்ச்சொல் பொருத்துக

  1. மகிழ்ந்திட – கொடுத்து
  2. தந்து – துன்பப்பட
  3. தோண்டி – பழைய
  4. புதிய – மூடி

விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. கிளிக்கண்ணி என்பது என்ன?

கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை ‘கிளிக்கண்ணி’ ஆகும்.

2. ஒரு நாட்டின் வளம் எதனை பொறுத்து மதிப்பிடப்படுகிறது?

ஒரு நாட்டின் வளம், அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது.

3. சுரதாவின் இயற்பெயர் என்ன?

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.

3. பாரதிதாசன் மீது பற்று கொண்ட காரணத்தினால் தன் பெயரை மாற்றிக் கொண்டவர்?

சுரதா

4. உவமைக் கவிஞர் – பெயர்க்காரணம்

உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் எனறும் அழைப்பர்.ம்.

5. இயற்கைத் தங்குமிடம் எது?

இயற்கைத் தங்குமிடம் காடு

6. காட்டில் அலைந்து திரிந்த விலங்கினங்கள் யாவை?

சிங்கம், புலி, கரடி, சிறுத்தை

சிறு வினா

1. கவிஞர் சுரதா பற்றி குறிப்பு எழுதுக

  • சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
  • இவர் பாரதிதாசனின் மீது பற்று கொண்டவர்.
  • பாரதிதாசனின இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’. எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்காெண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.
  • உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் எனறும் அழைப்பர்.
  • அமுதும் தேனும், தேன் மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

Leave a Comment