[Term-2] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 Kavinmigu Kappal Book Back Solution

இயல் ஒன்று – கவின்மிகு கப்பல்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 1.2 ‘Kavinmigu Kappal’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 2 Lesson 1.2 கவின்மிகு கப்பல்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 1.2 Kavinmigu Kappal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

கவின்மிகு கப்பல் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kavinmigu Kappal’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Kavinmigu Kappal subject.

Next Lesson: கலங்கரை விளக்கம்

கவின்மிகு கப்பல் பாடல்

உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்
மாட ஒள்எரி மருங்குஅறிந்து ஒய்ய

– மருதன் இளநாகனார்

நூல்வெளி

  • மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
  • கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே.
  • மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.
  • அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.
  • இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
  • இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

தெரிந்து கொள்வோம்

எட்டுத்தொகை நூல்கள்

  • நற்றிணை
  • குறுந்தொகை
  • ஐங்குறுநூறு
  • பதிற்றுப்பத்து
  • பரிபாடல்
  • கலித்தொகை
  • அகநானூறு
  • புறநானூறு

சொல்லும் பொருளும்

  1. உரு – அழகு
  2. வங்கம் – கப்பல்
  3. போழ – பிளக்க
  4. எல் – பகல்
  5. வங்கூழ் – காற்று
  6. கோடு உயர் – கடை உயர்ந்த
  7. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
  8. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. இயற்கை வங்கூழ் ஆட்ட அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் _________.

  1. நிலம்
  2. நீர்
  3. காற்று
  4. நெருப்பு

விடை : காற்று

2. மக்கள் _________ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.

  1. கடலில்
  2. காற்றில்
  3. கழனியில்
  4. வங்கத்தில்

விடை : வங்கத்தில்

3. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது _____________.

  1. காற்று
  2. நாவாய்
  3. கடல்
  4. மணல்

விடை : கடல்

4. பெருங்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

  1. பெரு + கடல்
  2. பெருமை + கடல்
  3. பெரிய + கடல்
  4. பெருங் + கடல்

விடை : பெருமை + கடல்

5. இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.

  1. இன்றுஆகி
  2. இன்றிஆகி
  3. இன்றாகி
  4. இன்றாஆகி

விடை : இன்றாகி

6. எதுகை இடம்பெறாத இணை ____________.

  1. இரவு – இயற்கை
  2. வங்கம் – சங்கம்
  3. உலகு – புலவு
  4. அசைவு – இசைவு

விடை : இரவு – இயற்கை

பொருத்துக

  1. வங்கம் – பகல்
  2. நீகான் – கப்பல்
  3. எல் – கலங்கரை விளக்கம்
  4. மாட ஒள்ளெரி – நாவாய் ஓட்டுபவன்

விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

குறு வினா

1. நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?

நாவாயின் தோற்றம் உலகம் இடம்பெயர்ந்தது போன்று இருந்ததாக அகநானூறு கூறுகிறது

2. நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணைசெய்கிறது?

இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்து நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று துணைசெய்கிறது.

சிறுவினா

கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?

  • உலகம் இடம்பெயர்ந்தது போன்று அழகிய தோற்றமுடையது நாவாய்.
  • அது புலால் நாற்றம் உடைய கடலின் நீரைப் பிரிந்து பிளந்து கொண்டு செல்லும்.
  • இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும்.
  • உயர்ந்த தரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான் என கடலின் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு விளக்குகிறது.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “கவின்மிகு கப்பல்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல் _________

  1. அகநானூறு
  2. புறநானூறு
  3. பட்டினப்பாலை
  4. பதிற்றுப்பத்து

விடை: அகநானூறு

2. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

  1. பெரும்பாணாற்றுப்படை
  2. சிறுபாணாற்றுப்படை
  3. அகநானூறு
  4. மலைப்படுகடாம்

விடை: அகநானூறு

3. மருத்திணை மருதன் இளநாகனார் _________ பாடுவதில் வல்லவர்

  1. முல்லைத்திணை
  2. குறிஞ்சித்திணை
  3. மருதத்திணை
  4. பாலைத்திணை

விடை: அகநானூறு

4. புலவுத்திரை என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. பல + திரை
  2. பழவு + திரை
  3. பலவுத்  + திரை
  4. புலவு + திரை

விடை : புலவு + திரை

5. பெருங்கடல் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. பெரு + கடல்
  2. பெருமை + கடல்
  3. பெருங் + கடல்
  4. பெரிய + கடல்

விடை : பெருமை + கடல்

6. உரு என்பதன் பொருள் தருக

  1. அழகு
  2. பகல்
  3. உருவம்
  4. கடல்

விடை : அழகு

7. வங்கூழ் என்பதன் பொருள் தருக

  1. கப்பல்
  2. பகல்
  3. காற்று
  4. இரவு

விடை : காற்று

8. எல் என்பதன் பொருள் தருக

  1. கப்பல்
  2. பகல்
  3. காற்று
  4. இரவு

விடை : பகல்

குறு வினா

1. மருதன் இளநாகனார் என பெயர் வரக் காரணம் யாது?

மருத்த்திணை பாடுவதில் வல்வர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்

2. மருதன் இளநாகனார் – குறிப்பு வரைக

  • மருதன் இளநாகனார் சங்காலப்புலவர்களுள் ஒருவர்
  • கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களை பாடியவர்.
  • மருத்த்திணை பாடுவதில் வல்வர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.

3. அகநானூறு – குறிப்பு வரைக

  • அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • புலவர் பலரால் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்டது
  • நெடுந்தொகை எனவும் அழைக்கப்படுகிறது

Leave a Comment