[Term-2] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.4 Palli Maruthirapu Book Back Solution

இயல் இரண்டு – பள்ளி மறுதிறப்பு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 2.3 ‘Palli Maruthirapu’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 2 Lesson 2.4 பள்ளி மறுதிறப்பு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 2.4 Palli Maruthirapu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

பள்ளி மறுதிறப்பு வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Palli Maruthirapu’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Palli Maruthirapu subject.

Next Lesson: வாழ்விக்கும் கல்வி

நூல் வெளி

  • பள்ளி மறுதிறப்பு கதையை எழுதியவர் சுப்ரபாரதிமணியன்.
  • இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார்;
  • “கனவு” என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார்.
  • பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

மதிப்பீடு

மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.

முன்னுரை

சுப்ரபாரதிமணியன் இயற்றிய “பள்ளி மறுதிறப்பு” சிறுகதையில் மதிவாணன் பள்ளிக்கு செல் முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கமாகக் காண்போம்.

மதிவாணனம் கவினும்

மதிவாணனம் கவினும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். கோடை விடுமுறையில் ஒன்றரை மாதம் இருவரும் பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றனர். பள்ளி மறுதிறப்புக்கு இரண்டு நாட்கள் தான் இருந்தது. வேலைக்குச் செல்வதற்காக இருவரும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தனர். கவின் தான் மீண்டும் பள்ளிக்கு போவதில்லை. வாராவாரம் சம்பளம், திரைப்படம் பார்க்க காசு, பரோட்டா, போண்டோ வீட்டில் யாரும் திட்டுவதில்லை. இந்த மகிழ்ச்சி போதும் என்றான். மதிவாணனும் சற்றே குழம்பினான்.

மதிவாணனின் சிந்தனை

படிக்கின்ற வயதில் வேலை தேவையா? மருத்துவர், பொறியாளர், வெளிநாட்டு வேலை என்று மதிவாணன் உள்ளும் கனவுகள் இருந்தன. தொழிலாளியாகவே கடைசி வரைக்கும் இருக்க வேண்டுமா என்பதை நன்கு சிந்தித்தான். எதிரில் இருந்த விளம்பரப் பலகையில் அம்பேத்கரும், அப்துல்கலாமும் தென்பட்டனர். இவரைப் போல் உயர வேண்டும் என்றால் படிப்பு தேவை என்பதை நன்கு உணர்ந்தான்.

படிக்காதவரின் நிலை

பேருந்து நிறுத்தத்தில் முதியவர் ஒருவர் அங்கிருந்த சிறுவர்களிடம், இந்தபேருந்து நல்லூர் செல்லுமா? எனக் கேட்டார். அதற்கு அவர்கள் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் அந்தப் பெரியவர் கேட்டார். சிறுவர்கள் எங்களுக்குப் படிக்கத் தெரியாது என்றனர். இது கூடப் படிக்கத் தெரியாது என்றார் பெரியவர். அதற்கு ஒருவன் உங்களுக்குப் படிக்கத் தெரியாதா என்று கேட்டு, அனைவரும் சிரித்தனர். மதிவாணன் அவரிடம் நல்லூர் இது போகாது. போகும் பேருந்து வரும் போது சொல்கிறேன் என்றான். இதையெல்லாம் பாரத்து கல்வி தான் தலைநிமிரச் செய்யும் என்பதை உணர்ந்து, பள்ளியை நோக்கி நடந்தான் மதிவாணன்.

முடிவுரை

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பதை புரிந்து கொண்டு இளமையில் மதிவாணன் கல்வி கற்க விருப்பம் கொண்டான். இன்று கிடைக்கும் பணத்தை விட நாளை கிடைக்கும் மதிப்புக்காக இன்றே கல்வி கற்க வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “பள்ளி மறுதிறப்பு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. சுப்ரபாரதிமணியன் எழுதிய கதை _____________

  1. பள்ளி மறுதிறப்பு
  2. பள்ளி நேரம்
  3. பள்ளிக்கூடம்
  4. பள்ளி பாடங்கள்

விடை: பள்ளி மறுதிறப்பு

2. சுப்ரபாரதிமணியன் எழுதிய கதை _____________

  1. கதை சொல்லும் காலை
  2. பின்னல், வேட்டை
  3. தண்ணீர் யுத்தம்
  4. புத்துமண்

விடை: கதை சொல்லும் காலை

2. சுப்ரபாரதிமணியன் நடத்தி வரும் இதழ் _____________

  1. கனவு
  2. விடுதலை
  3. வெள்ளி

விடை: கனவு

4. இளமையில் கல் என்று கூறியவர்

  1. திருவள்ளுவர்
  2. பாரதியார்
  3. ஒளவையார்
  4. பாரதிதாசன்

விடை: ஒளவையார்

5. உடையெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. உடை + எல்லாம்
  2. உடை + யெல்லாம்
  3. உடை + யெலாம்
  4. உடை + எலாம்

விடை: உடை + எல்லாம்

6. யாருமில்லாத என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. யாரும் + மிலாத
  2. யாரும் + இலாத
  3. யாரும் + இல்லாத
  4. யாரும் + மில்லாத

விடை: யாரும் + இல்லாத

7. பின்னலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. பின்னல் + லாடை
  2. பின்னல் + வாடை
  3. பின்னல் + அடை
  4. பின்னல் + ஆடை

விடை: பின்னல் + ஆடை

குறு வினா

1. சுப்ரபாரதிமணியன் எழுதி சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றில் எவற்றையெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார்?

சுப்ரபாரதிமணியன் எழுதி சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்

2. சுப்ரபாரதிமணியன் – சிறுகுறிப்பு வரைக

  • பள்ளி மறுதிறப்பு கதையின் ஆசிரியர்
  • இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்தியவர்
  • இதழ் – கனவு என்னும் இலக்கிய இதழ்
  • நூல்கள் – பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை

Leave a Comment